Wednesday, June 27, 2012

சூஃபித்துவ தரீக்காக்கள் அன்றும் இன்றும்.. (eBook)

எழுதியவர் மௌலவி முஹம்மத் ஜலீல் மதனீ




தரீக்காக்களின் வரலாறு என்பது மிக நீண்ட காலம் தொட்டே முஸ்லிம் மக்களின் மனதிலே புரையோடிப் போய் தவறானதொரு கணிப்பில் பவனி வந்து கொண்டிருக்கின்றதென்றால் அது மிகையாகாது. இந்தத் தரீக்காக்களின் சுயரூபம் பற்றி அறிவதற்கு முன் இதன் ஸ்தாபகர்களும் இயக்குனர்களுமான சூஃபிகள் பற்றி – இவர்களது கொள்கை கோற்பாடுகள் பற்றி அறிவது இன்றியமையாததாகும்.
:
 

Download PDF format eBook 104 Pages


===========================================================================


©2012, copyright Dharulhuda

மூன்று செய்திகள்


-
அல்லாஹ்வின் தூதர் மனித சமூகத்திற்கு வழங்கிய நற்போதனைகள் ஏராளம் ஏராளம். அவைகளில் மூன்று விடயங்களாக இடம்பெற்ற செய்திகளுல் சில செய்திகளை மாத்திரம் இங்கு தொகுத்துள்ளேன். இதிலுள்ள செய்திகளை அனைவரும் படித்து பயன்பெற வேண்டுமென்பதையே நான் வல்ல நாயனிடம் பிரார்த்திக்கின்றேன்.
ஈமானின் உண்மையான சுவையை கண்டுகொண்டவர்:
“எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை)
  1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது,
  2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது,
  3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புஹாரி).
இவரல்லவோ முஃமின்!
  1. எவர் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புகின்றாரோ அவர் அண்டை வீட்டாரை நோவிக்காமல் இருக்கட்டும்.
  2. எவர் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புகின்றாரோ அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்.
  3. எவர் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புகின்றாரோ அவர் நல்லதை பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள், ஆதாரம்: புஹாரி).
மார்கக் கல்வியின் சபைகளை தேடிச் செல்வோம்:
“நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார். அவ்விருவரும் நபி(ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர்:
  1. வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார்.
  2. மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு (கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டான்.
  3. மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தினான்”
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூவாகிதில்லைஸி (ரலி), ஆதாரம்: புஹாரி).
இரண்டு விதமான கூலிகளை பெறுபவர்கள்:
மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடம்) இரண்டு விதமான கூலிகள் உள்ளன.
  1. ஒருவர் வேதக்காரர்களில் உள்ளவர். இவர் தம் (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும், முஹம்மதையும் நம்பியவர்.
  2. மற்றொருவர் தம் இறைவனின் கடமைகளையும், தம் எஜமானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை.
  3. மூன்றாமவர் தம்மிடத்திலுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவர்.
இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புஹாரி).
நன்மையை நாடி பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட மஸ்ஜிதுகள் மூன்றாகும்:
  1. ‘மஸ்ஜிதுல் ஹராம் (மக்காவில் அமைந்துள்ளது).
  2. மஸ்ஜிதுன் நபவி (மதீனாவில் அமைந்துள்ளது).
  3. மஸ்ஜிதுல் அக்ஸா (பஃலஸ்தீனில் அமைந்துள்ளது) ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர நன்மையை எதிர்பார்த்துப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், ஆதாரம்: புஹாரி)
உண்மையான இறைத்தூதர்:
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைதூதர் மட்டுமே அறிவார்” என்று கறினார்கள். பிறகு:
  1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?
  2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?
  3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்?) அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?”
என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “சற்று முன்பு தான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்” என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), “வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!” என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள்,
  1. “இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடைளாயம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திரைசயில் ஒன்று திரட்டும்.
  2. சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும்.
  3. குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்கு காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது” என்று பதிலளித்தார்கள்.
(உடனே) அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி), “தாங்கள் இறைத்தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு, “இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்” என்று கூறினார்கள்.
அப்போது யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வீட்டினுள் புகுந்(து மறைந்)தார்கள். இறைத்தூதர்(ஸல்) (யூதர்களிடம்), “உங்களில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தைகைய மனிதர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அவர் எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்” என்று பதிலளித்தார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் இப்னு ஸலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!” என்று கூறினார்கள்.
உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வெளியே வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்” என்று கூறினார்கள். உடனே யூதர்கள், “இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்” என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புஹாரி).
வஹியுடன் நேர்பட்ட மூன்று விடயங்கள்:
“மூன்று விஷயங்களில் இறைவன் என் கருத்துக்கேற்ப “வஹி” அருளியுள்ளான். அவை:
“இறைத்தூதர் அவர்களே! மகாமு இப்ராஹீம் என்ற இடத்தில் தொழுமிடத்தை நாம் ஆக்கிக் கொள்ளலாமே!” என்று நான் கூறியபோது, “மகாமு இப்ராஹீமில் நீங்கள் தொழுமிடத்தை ஆக்கிக் கொள்ளுங்கள்!” (திருக்குர்ஆன் 02:125) என்ற வசனம் அருளப்பட்டது.
  1. “இறைத்தூதர் அவர்களே! தங்களின் மனைவியருடன் உரையாட வருபவர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் உள்ளனர். எனவே தங்களை அன்னிய ஆண்களிடமிருந்து மறைத்துக் கொள்ளுமாறு தங்களின் மனைவியருக்கு தாங்கள் உத்திரவிடலாமே!” என்றேன். அப்போது ஹிஜாப் (பர்தா) பற்றிய வசனம் அருளப்பட்டது.
  2. நபி (ஸல்) அவர்களின் மனைவியர் அனைவரும் சேர்ந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஆத்திரமூட்டும் விதமாக நடந்தபோது நபி(ஸல்) அவர்கள் “உங்களை விவாகரத்துச் செய்தால் உங்களை விடச் சிறந்த மனைவியரை உங்களுக்குப் பதிலாக இறைவன் அவர்களுக்கு ஆக்கிவிடுவான்” என்று கூறினேன். நான் கூறியவாறே (திருக்குர்ஆன் 66:05) வசனம் அருளப்பட்டது” என உமர்(ரலி) அறிவித்தார்.

மூன்று பெறும் பாவங்கள்:
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,
  1. அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று கூறினார்கள். நான், “நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்” என்று சொல்லிவிட்டு, “பிறகு எது?” என்று கேட்டேன்.
  2. “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது” என்று கூறினார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்க, அவர்கள்,
  3. “உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது” என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுமஸ்ஊத் (ரலி) முஸ்லிம்)
மூன்று விடயங்களில் மிகப் பெரிய பொய்யன்:
மஸ்ரூக் இப்னு அஜ்த (ரஹ்) அறிவித்தார், நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் “அன்னையே முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஅராஜ் – விண்ணுலகப் பயணத்தின்போது நேரில்) பார்த்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்துவிட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின?) அவற்றை உங்களிடம் தெரிவிக்கிறவர் பொய்யுரைத்துவிட்டார்.
  1. முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் கூறுகிறவர் பொய் சொல்லிவிட்டார்” என்று கூறிவிட்டு, பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக), “கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்” எனும் (திருக்குர்ஆன் 06:103 வது) வசனத்தையும், “எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பிவைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகிறவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை” எனும் (திருக்குர்ஆன் 42:51 வது) வசனத்தையும் ஒதினார்கள்.
  2. “உங்களிடம் முஹம்மது(ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்” என்று சொல்கிறவரும் பொய்யே கூறினார்” என்று கூறிவிட்டு, பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக,) “எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை” எனும் (திருக்குர்ஆன் 31:34 வது) வசனத்தை ஓதினார்கள்.
  3. “உங்களிடம் முஹம்மத்(ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்துவிடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்துவிட்டார்கள்” என்று சொன்னவரும் பொய்யே கூறினார்” என்று கூறிவிட்டு, பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக) “தூதரே! உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களின் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுங்கள்…” (எனும் 5:67 வது) வசனத்தை ஓதினார்கள். “மாறாக, முஹம்மத்(ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்களையே அவரின் (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள்” என்று கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி).
நிறைவான கூலியை பெறும் சமுதாயம்!:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்து உரையாற்றியபோது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்வது அஸ்ர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையிலான (குறுகிய) கால அளவேயாகும்.
  1. “தவ்ராத்” வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பட்டது. அவர்கள் “நண்பகல் வரை அதன்படி செயல்பட்டார்கள்; பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். (கூலியாக) ஒவ்வொருவருக்கும் ஒரு “கீராத்” வழங்கப்பெற்றது.
  2. பின்னர் “இன்ஜீல்” வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் அஸ்ர் தொழுகை வரை அதன்படி செயல்பட்டுவிட்டுப் பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். (கூலியாக) அவர்களுக்கும் ஒவ்வொரு “கீராத்” வழங்கப்பெற்றது.
  3. நீங்கள் சூரியன் மறையும் வரை அதன்படி செயல்புரிந்தீர்கள். உங்களுக்கு இரண்டிரண்டு கீராத்துகள் (கூலியாக) வழங்கப்பட்டன.
(அப்போது) “தவ்ராத்” வேதக்காரர்கள் “எங்கள் இறைவா! இவர்கள் வேலை செய்தோ குறைந்த நேரம். கூலியோ அதிகம்!” என்றார்கள். அல்லாஹ், “நான் உங்களுக்குரிய கூலியில் சிறிதேனும் (குறைத்து) அநீதியிழைத்தேனா?” என்று கேட்க, அவர்கள் “இல்லை” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ் “அ(வ்வாறு முஸ்லிம்களுக்கு அதிகமாகக் கொடுத்த)து என் அருளாகும். நான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறேன்” என்று சொன்னான். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), புஹாரி).

மூவரின் பிரார்த்தனைகள் சந்தேகத்திற்கிடமின்றி அல்லாஹ்விடம் ஒப்புக்கொள்ளப்படுகின்றன:
  1. தந்தையின் பிரார்த்தனை,
  2. பிரயாணியின் பிரார்த்தனை,
  3. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத்).
நமது ரப்பிடம் உறுதியுடன் பிரார்த்திப்போம்!

ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் கேட்கும் பிரார்த்தனையில் பாவமான விடயமோ, உறவுகளை துண்டிக்கும் விடயங்களோ இல்லாமல் இருக்கும் போது அவனது பிரார்த்தனைக்கு இம் மூன்றில் ஏதாவது ஒன்றை அல்லாஹ் வழங்காமல் இருக்கமாட்டான்:
  1. அவனது பிரார்த்தனையை ஏற்று அவன் கேட்டதையே வழங்கிவிடுவான்.
  2. அல்லது அவனது பிரார்த்தனையை பாதுகாத்து நாளை மறுமையில் அதற்கு கூலி வழங்குவான்.
  3. அல்லது அவனுக்கு வரவிருக்கும் ஏதவாது ஒரு துன்பத்தை தடுத்துவிடுவான்.
அப்போது நபித்தோழர்கள் அப்படியெனில் நாம் அதிகம் அதிகம் அல்லாஹ்வை பிரார்த்திப்போம் என கூறினர், அதற்கு அல்லாஹ்வின் தூதர் அல்லாஹ் அதை விட அதிகம் வழங்குபவனாகவே இருக்கின்றான் என்றார்கள்.
(அறிவிப்பவர்: அபூ ஸஈத் (ரலி), ஆதாரம்: அஹ்மத்).
ஈமான் எப்போது பயனளிக்காது!
மூன்று விடயங்கள் வெளிப்பட்டு விட்டால் எவரது ஈமானும் அதன் பின் பயனளிக்கமாட்டாது (ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது).
  1. சூரியன் மேற்கில் உதிக்க ஆரம்பித்துவிடல்.
  2. தஜ்ஜால் வெளிப்படுதல்.
  3. அதிசயப்பிரானி வெளிப்படுதல்.
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).
தடுக்கப்பட்ட நேரங்கள்:
அல்லாஹ்வின் தூதர் மூன்று நேரங்களில் தொழுவதையும், ஜனாஸாக்களை அடக்குவதையும் எமக்கு தடை செய்தார்கள்:
  1. சூரியன் உதித்து அது உயரும் வரை,
  2. சூரியன் உச்சிக்கு வந்து அது சாயும் வரை,
  3. சூரியன் செம்மையடைந்து அது மரையும் வரை.
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: உக்பதிப்னு ஆமிருல் ஜுஹனி (ரலி), ஆதாரம்;: முஸ்லிம்).
மூன்று விடயங்களுக்காக பொய் சொல்பவன் பொய்யனாகக் கருதப்படமாட்டான்:
  1. மக்களிடம் நல்லினக்கத்தை ஏற்படுத்துவதற்காக பொய் சொன்னவன்.
  2. ஒரு கணவன், மனைவி தங்களுக்குள் பேசும் பேச்சுக்களில்.
  3. எதிரிகளுடன் நடைபெறும் போர்களத்தில்.
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: உக்பதிப்னு அபீ முஈத் (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).
உண்மையில் உமது பொருள் எது?
அடியான் எனது பொருள், எனது பொருள் என கூறுகின்றான். அவனது பொருள்:
  1. அவன் உண்டு கழித்தவைகளும்,
  2. அவன் உடுத்தி கிளித்தவைகளும்,
  3. அவன் முன் கூட்டி (அல்லாஹ்விற்காக) செய்த தர்மங்களும்.
அதைத் தவிர அவன் பாதுகாக்கும் மற்றவைகள் அனைத்தும் ஏனையவர்களுக்கு விட்டுச் செல்பவைகளே” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).
இறுதி வரை தொடரும் ஒரே உறவு! :
மையித்தை மூன்று விடயங்கள் பின்தொடர்கின்றன. அவைகளில் இரண்டு மீண்டு விடுகின்றன. ஒன்று அவரோடு தங்கி விடுகின்றது. திரும்பி விடும் இரண்டு:
  • 1- அவரது குடும்பம்,
  • 2- அவரது சொத்து செல்வம்,
அவருடன் தங்கி விடுவது:
  • 3- அவர் செய்த நற்கிரியைகள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
(அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம்: புஹாரி).
மண்ணறை வாழ்விலும் தொடரும் நன்மைகள்!:
ஒரு மனிதன் மரணித்துவிடும் போது அவனது அனைத்து செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. மூன்று காரியங்களைத் தவிர அவைகள்:
  1. அவன் செய்த நிலையான தர்மம்,
  2. அவனது கல்வியின் மூலம் பிறர் பயனடைந்தது,
  3. அவனது ஸாலிஹான குழந்தை அவனுக்காக கேட்கும் பிரார்த்தனை.
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)இ ஆதாரம்: முஸ்லிம்).
எண்ணங்களை தூய்மையாக்குவோம்!
  1. மக்களின் புகழை விரும்பி அல்லாஹ்வின் பாதையில் போர் செய்து உயிர் நீத்த ஷஹீத்.
  2. மக்களின் புகழை விரும்பி அல்லாஹ்வின் பாதையில் வாரி வழங்கிய கொடைவள்ளல்.
  3. மக்களின் புகழை விரும்பி பிறருக்கு மார்கத்தைப் போதித்த ஆலிம்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் எனது முழங்காலின் மீது அடித்தவர்களாக அபூஹுரைராவே! இந்த மூவரைக்கொண்டு தான் நரகம் எறிக்கப்பட ஆரம்பிக்கும் எனக்கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: திர்மிதி).
அன்பின் சிகரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்:
அல்லாஹ் உங்களை மூன்று விடயங்களை விட்டும் பாதுகாத்து இருக்கின்றான். அவைகள்:
  1. நீங்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக அழிக்கப்படுவதற்கு உங்கள் நபி உங்களுக்கெதிராக பிரார்த்திப்பதை விட்டும்,
  2. சத்தியவாதிகளை அசத்தியவாதிகள் (முழு வடிவில்) மேலோங்குவதை விட்டும்,
  3. நீங்கள் அனைவரும் வழிகேட்டில் ஒன்றுபடுவதை விட்டும்
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூ மாலிக் அல்அஷ்ரிய் (ரலி), ஆதாரம்: அபூதாவுத்).
எவர் மூன்று விடயங்களை விட்டு நீங்கியவராக மரணிக்கின்றாரோ அவர் சுவனம் நுழைந்துவிட்டார். அவைகள்:
  1. பெறுமை (ஆணவம்),
  2. திருட்டு (மோசடி),
  3. கடன்
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிபிட்டார்கள் (அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி), ஆதாரம்: திர்மிதி).
உறுதி மொழி வாங்கிய மூன்று காரியங்கள்!:
  1. தொழுகையை நிலை நாட்டுவதாகவும்,
  2. ஸகாத்தை கொடுத்து வருவதாகவும்,
  3. பிற முஸ்லிம்களுக்கு நன்மையை நாடுவதாகவும்
நான் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதி மொழி செய்து கொடுத்தேன்”
(அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி), ஆதாரம்: புஹாரி).
அல்லாஹ் உங்களிடமிருந்து விரும்பும் மூன்று விடயங்கள்:
  1. அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காது அவனை மாத்திரிம் வணங்குவது.
  2. நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் கயிற்றை (அவனது மார்கத்தை) பலமாக பற்றிப்பிடித்துக்கொள்வது.
  3. உங்களுக்கு மத்தியில் பிழவு படாமல் இருப்பது.
அல்லாஹ் உங்களிடமிருந்து வெறுக்கும் மூன்று விடயங்கள்:
  1. அவர் சொன்னார், இப்படி சொல்லப்பட்டது என்று எந்த உறுதியுமில்லாமல் பேசுவது.
  2. அதிகம் கேள்வி கேட்பது.
  3. பணத்தை வீண் விரயம் செய்வது.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).
உயரிய மூன்று உபதேசங்கள்!
அபூதர் (ரலி) அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் செய்த மூன்று உபதேசங்கள்:
  1. நீங்கள் எங்கிருந்த போதும் அல்லாஹ்வை பயந்து கொள்கொள்வீராக.
  2. நீர் ஒரு தவறை செய்துவிட்டால் உடனே ஒரு நன்மையை செய்துவிடுவீராக. அது அந்த பாவத்தை அழித்து விடும்.
  3. மக்களுடன் உயரிய பண்புடையவராக நடந்துகொள்வீராக
(அறிவிப்பவர்: அபூதர் (ரலி), ஆதாரம்: திர்மிதி).
உயரிய மூன்று உபதேசங்கள்!
அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் செய்த மூன்று உபதேசங்கள்:
  1. ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் நோற்று வாருங்கள்.
  2. இரண்டு ரக்அத் லுஹாவைத் தொழுது வருவீராக.
  3. இரவில் தூங்க செல்ல முன் வித்ரைத் தொழுது கொள்வீராக.
நான் மரணிக்கின்ற வரை ஊரில் இருக்கும் போதும், பிரயாணத்தில் இருக்கின்ற போதும் இந்த மூன்று விடயங்களை விடவே இல்லை.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).
ஈடேற்றத்துடன் சுவர்க்கத்தில் நுழையும் காரியங்கள்!:
அல்லாஹ்வின் தூதர் வரலாற்று சிறப்பு மிக்க ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டு மதீனா வந்தவுடன் மக்களை பார்த்து முதலில் செய்த மூன்று உபதேசங்கள்:
  1. உங்களுக்கு மத்தியில் அதிகம் ஸலாம் சொல்லுங்கள்.
  2. ஏழைகளுக்கு உணவளியுங்கள்.
  3. மக்கள் இரவில் உறக்கத்தில் இருக்கின்ற போது நீங்கள் எழுந்து அல்லாஹ்வைத் தொழுங்கள்.
நீங்கள் ஈடேற்றம் பெற்றவர்களாக சுவர்க்கம் நுழைவீர்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி), ஆதாரம்: திர்மிதி).
உறுதி மிக்க காரியங்கள்!:
ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் தனது தொழர்களிடம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற (நாளை மறுமையில்) உங்கள் பதவிகள் உயர்த்தப்படுகின்ற விடயங்களை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? எனக்கேட்ட போது, அறிவியுங்கள் அல்லாஹ்வின் தூதரே! என்றனர்.
  1. குளிரான காலங்களில் வுழூவை நிறைவாக செய்வது.
  2. மஸ்ஜிதுக்கு அதிக எட்டுக்கள் எடுத்து வைத்து நடப்பது.
  3. ஒரு தொழுகையை நிறைவு செய்து மற்றொரு தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பது.
இவைகள் உங்களை உறுதிப்படுத்துகின்ற காரியங்களாகும் என கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).
இந்த சிறப்புகளை நழுவவிடுவதா?
  1. கூட்டுத் தொழுகைக்கு நேர காலத்துடன் சமூகளிப்பதின் சிறப்பை மக்கள் அறிந்து கொள்வார்களானால் அதற்கு போட்டி போட்டு கலந்து கொள்வார்கள்.
  2. பஃஜ்ர் மற்றும் இஷா தொழுகையின் சிறப்பை அறிந்துகொள்வார்களானால் அத்தொழுகைகளில் தவழ்ந்த நிலையிலாவது கலந்துகொள்வார்கள்.
  3. முன் வரிசையின் சிறப்பை அறிந்து கொள்வார்களானால் சீட்டுக் குலுக்கியே தவிர அந்த சந்தர்பத்தை பிறருக்கு விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).
நாளை மறுமையில் இழிவடையும் மூவர்:
அல்லாஹ் மறுமைநாளில் மூன்று பேரிடம் பேசமாட்டான்; அவர்களை தூய்மைப் படுத்த மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான், அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு:
  1. முதிய வயதில் விபச்சராத்தில் ஈடுபட்டவர்.
  2. (நீதி செலுத்தாத) பொய்யான ஆட்சியாளன்.
  3. கர்வத்தோடு செயல்படும் ஏழை.
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
அல்லாஹ் மறுமைநாளில் மூன்று பேரிடம் பேசமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்:
  1. ஒருவர் (தம்) விற்பனைப் பொருளுக்கு (அதைக் கொள்முதல் செய்தபோது உண்மையில்) தாம் கொடுத்த விலையை விட அதிக விலை கொடுத்ததாகப் பொய்ச் சத்தியம் செய்கிறார்.
  2. ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரிப்பதற்காக அஸ்ர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் ஒன்று கூடும் நேரத்தில்) பொய்ச் சத்தியம் செய்கிறார்.
  3. தம் தேவைக்குப் போக மிஞ்சிய தண்ணீரை (வழிப்போக்கருக்குத் தராமல்) தடுக்கிறார். (அவரிடம்) அல்லாஹ் மறுமைநாளில் “நீ தேடிச் சம்பாதிக்காத பெருளை (-நீரை) நீ தர மறுத்ததைப் போன்று இன்று என் அருளை உனக்கு வழங்க மறுக்கிறேன்” என்று கூறுவான்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று பேருடன் அல்லாஹ் நாளை மறுமையில் பேச மாட்டான், அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு:
  1. மக்களின் பயணப்) பாதையில், தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டவன்.
  2. தன் (ஆட்சித்) தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்தவன்; அவர் கொடுத்தால் (மட்டுமே) திருப்தியடைந்து, கொடுக்காமல்விட்டால் கோபம் கொள்பவன்.
  3. அஸர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் கடைவீதியில் திரளும் போது) தன் வியாபாரப் பொருளைக் காட்டி, “எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அவன் மீது சத்தியமாக! இந்தப் பொருளுக்காக (இதைக் கொள்முதல் செய்யும்போது) நான் இன்ன (அதிக) விலையைத் தந்தேன். என்று கூறி, அதை ஒருவர் உண்மையென நம்பும்படி செய்வதன் (இப்படி வாடிக்கையாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றி, சொன்ன விலைக்கு அதை விற்றவன்) ஆவான்.
இதைக் கூறிவிட்டு, “அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகிறவர்கள்…” என்னும் இந்த (திருக்குர்ஆன் 03:77 ஆம்) இறைவசனத்தை ஓதினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று பேருடன் அல்லாஹ் நாளை மறுமையில் பேச மாட்டான், அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் மூன்று முறை குறிப்பிட்ட போது, உறுதியாகவே அவர்கள் நஷ்டத்தையும், தோல்வியையும் அடைந்துவிட்டனர் என்று கூறிய அபூதர் (ரலி) அவர்கள், யார் அவர்கள்? அல்லாஹ்வின் தூதரே! என வினவினார்கள்.
  1. கரண்டைக்குக் கீழ் தனது ஆடையை தொங்கவிடுபவர்
  2. வழங்கிய தர்மத்தை சொல்லிக்காட்டுபவர்.
  3. பொய் சத்தியம் செய்து தனது பொருளை விற்றவர்
என நபிகள்ய நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).
நயவஞ்சகனின் அடையாளங்கள்:
“நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று:
  1. பேசினால் பொய்யே பேசுவான்,
  2. வாக்களித்தால் மீறுவான்,
  3. நம்பினால் துரோகம் செய்வான்.
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).
ஷைத்தான் போடும் மூன்று முடிச்சுகள்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது, உறங்கு என்று கூறுகிறான்.
  1. அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது.
  2. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது.
  3. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது.
அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).
கொல்லப்படவேண்டிய மூவர்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்” என உறுதி மொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.
(அவை:)
  1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது.
  2. திருமணமானவன் விபச்சாரம் செய்வது.
  3. “ஜமாஅத்” எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறி விடுவது.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி), ஆதாரம்: புஹாரி).
பெரும் பாவங்கள்!:
அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்: (ஒரு முறை) “பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி(ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், “ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)” என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள்
  1. “அல்லாஹ்வுக்கு இணைவைப்பது,
  2. பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)” என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, “அறிந்துக் கொள்ளுங்கள்;
  3. பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்) தான்” என்று கூறினார்கள். “நிறுத்திக் கொள்ளக் கூடாதா” என்று நாங்கள் சொல்கிற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள்.
நாளை மறுமையில் மூவருக்கெதிராக வழக்குத்தொடரப்படும்!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்” என்று அல்லாஹ் கூறினான்.
  1. என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்,
  2. சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்,
  3. ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!”
(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் .  ஆதாரம்: புஹாரி)


எழுதியவர்:  மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி 

ரமழானை வரவேற்கும் ஷஃபான்

ரமழானை வரவேற்கும் ஷஃபான்

நபி ஸல் அவர்களால் கண்ணியப்படுத்தப்பட்ட மாதாம் ஷஃபான் மாதமாகும். இந்த மாதத்தில் உபரியான நோன்புகளை நோற்றார்கள். அதன் சிறப்பினையும் எடுத்துரைத்தார்கள்.  ஆயிரம் மாதங்களைவிட சிறப்புமிக்க “லைலத்துல்கத்ர்” இரவைக்கொண்ட தொடரும் ரமழான் மாதத்தை வரவேற்கும் வழிமுறைகளை வகுத்தளித்தார்கள்.  ஷஃபான் மாதத்தின் சிறப்புகளை கூறினார்களேயன்றி அம்மாதத்தின் ஒரு குறிப்பிட்ட நாளுக்கோ இரவுக்கோ மகிமையிருப்பதாக கூறவில்லை. அதற்கான உண்மையான ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இல்லை. ஷஃபே பராஅத் அரபி சொல்லல்ல இது உருது சொல்லாகும்.
அடுத்து ஷஃபான் பிறை 15ன் இரவைப்பற்றி “நிஸ்ஃப் ஷஃபான்” என இப்னு மாஜ்ஜாவில் வரும் நான்கு ஹதீஸ்களும் திர்மிதியில் இடம்பெற்றுள்ள ஹதீஸும் இவ்விரு நூல்களிலிருந்து அறிவிப்பாளர் வரிசையின்றி மிஷ்காத் ஹதீஸும் ஆதாரப்பூர்வமானவையல்ல. எனவே உண்மையான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் வெளிச்சத்தில் காண்போம்.
உஸாமா பிப் ஜைது (ரலி) அறிவிக்கிறார்கள்.
ரமழானைத்தவிர வேறு எந்த மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் அதிகமாக நோன்பு வைத்தார்கள் என்பதை அறிய ஆசைப்பட்டேன். ஷஃபான் மாதத்தில் அம்மாதத்தின் சிறப்பை விளக்கும் விதமாக நோன்பு வைத்தார்கள் என்பதை அறிந்தேன். ஷஃபான் மாதத்தின் சிறப்பை குறிப்பிட்ட நபி (ஸல்) அவர்கள் இம்மாதத்தில் அனைவரின் செயல்(அமல்)கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனது செயல்கள் நான் நோன்பு வைத்த நிலையில் சமர்ப்பிக்கப்படுவதை ஆசிக்கிறேன் (எனவே நோன்பு வைக்கிறேன்) எனக்கூறினார்கள். (ஆதாரம்: அபூதாவூத் நஸயீ, அஹ்மத்)
இதனை உண்மைப்படுத்தும் விதமாக நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவி உம்மு சலமா(ரலி) தெரிவிக்கிறார்கள்.
ஷஃபான், ரமழான் என்ற இரு மாதங்களைத்தவிர வேறு இரு மாதங்களில் தொடர்ந்து நோன்பு வைத்ததை நான் கண்டதேயில்லை. (ஆதாரம்: ஆபூதாவூத், நஸயீ)
உஸாமதிப்னு ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்களிடம்: அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது நபியவர்கள்: மனிதர்கள் ரஜப் ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் என கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ அஹ்மத்)
மேற்கண்ட நபிமொழிகள் மூலம் ஷஃபான் மாதத்தில் நமது அமல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுவதாக அறிகிறோம்.  நபி (ஸல்) அவர்கள் தனது அமல்கள் நோன்பு வைத்த நிலையில் சமர்ப்பிக்கப்படுவதை விரும்பியுள்ளார்கள். அதற்காக நோன்பு வைத்துள்ளார்கள். மேலும் இம்மாதத்தில் ஒரு குறிப்பிட்ட பகலையோ இரவையோ சிறப்பித்து நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதற்கு நம்பகமான ஹதீஸ்கள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை (மட்டும் சிறப்பான நாளென) நோன்பு வைக்கவேண்டாம். (அப்படி வெள்ளியன்று நோன்பு வைக்க நாடினால்) அதற்கு முந்திய பிந்திய (சனிக்கிழமை) நாளிலும் நோன்பு வைக்கவும். (அபூஹுரைரா ரலி நூல்: முஸ்லிம், அஹமத்)
மேற்படி நபிமொழியை நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்வில் செயல்படுத்தியுள்ளதை கீழ்காணும் நிகழ்ச்சி உண்மைப்படுத்துகிறது.
நபி (ஸல்) மனவியரில் ஒருவரான ஜுவைரியா ரலி அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை (சிறப்பென) நோன்பு வைத்திருந்தார்கள். இதனையறிந்த நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது மனைவிக்கும் நடந்த உரையாடலைப் பாரீர்.
நபி(ஸல்):       நீ நேற்று (வியாழன்) நோன்பு நோற்றாயா?
ஜுவைரியா (ரலி):  இல்லை
நபி(ஸல்):   நாளை (சனிக்கிழமை) நோன்பு வைக்கும் நாட்டமுண்டா?
ஜுவைரியா (ரலி): இல்லை
நபி(ஸல்):   அப்படியானால் இன்றைய நோன்பை விட்டு விடுவாயாக!
(அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: நஸயீ, முஸ்னத் அஹ்மத்)
ஒரு குறிப்பிட்ட நாளுக்கோ பகலுக்கோ இரவுக்கோ அல்லாஹ்வும் அவனது தூதரும் முக்கியத்துவம் கொடுத்திருந்தாலேயொழிய நாமாக கொடுக்க நமக்கு உரிமையில்லை.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33:36)
தொடர் நோன்பு வைத்து வந்த அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களை, அவ்விதம் வைக்க வேண்டாம்; மாதத்தில் மூன்று நாட்கள் வை, அது முழு மாதம் வைப்பதற்குச் சமம் என அறிவுரை கூறினார்கள். (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)
மாதா மாதம் மூன்று நோன்புகள் வைப்பது நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையாகும். (அறிவிப்பு: இப்னு மஸ்வூது ரலி நூல்: அபூதவூத் நஸயீ
எந்தெந்த நாட்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தின் பிறை 13,14,15 வைப்பதே மிகைத்து காணப்படுகிறது.
இவ்விதம் மாதா மாதம் நோன்புகளை வைப்பதற்கு வழிகாட்டித்தந்த நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தின் மத்தியில் (பிறை 15ல்) நோன்பு வைக்காதீர்கள் என தடுக்கவும் செய்தார்கள்.  (ஆனால் வழக்கமாக மாதா மாதம் அந்நாட்களில் நோன்பு வைப்பவர்களைத் தவிர)  ஆதாரம்: அபூஹுரைரா (ரலி) நூல்: அபூதாவூத், தாரமி, இப்னுமாஜ்ஜா, அஹமத்.
இந்த உண்மையான நபிமொழிக்கு மாற்றமாகவே இன்று நம்மிடையே பலர் “ஷபே பராஅத்” என்ற பெயரில் பிறை 15ல் நோன்பு வைக்கிறார்கள்.
ரமழானின் ஆரம்பத்தை அறிந்துகொள்ள ஷஃபான் முதல் பிறையிலிருந்து கணக்கிடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதி, அஹ்மத்.
‘ரமளானுக்காக ஷஃபான் பிறையைக் கணக்கிட்டு வாருங்கள்’ என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதி)
‘ரமளானுக்கு முதல் நாளும், அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது. அந்நாட்களில் வழக்கமாக நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால் அந்நாட்களில் நோன்பு நோற்கலாம்!’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி, திர்மிதி)
ஷஃபான் மாதத்தை நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்ததுபோல் நாமும் சிறப்பித்து நபி (ஸல்) அவர்கள் அங்கீகரிக்காத காட்டித்தராத வழியிலோ பலஹீனமான இட்டுக்கட்டப்பட்ட கதைகளின் அடிப்படையிலோ மார்க்கத்தில் புதுமைகளை (பித்அத்) புகுத்தாமல் நபி வழி வாழும் உம்மத்தாக (சமுதாயமாக) அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக! ஆமீன்.
பேராசிரியர் முஹம்மது அலி திருச்சி

நற்செயல்களால் நம்மை அலங்கரிப்போம்!

நற்செயல்களால் நம்மை அலங்கரிப்போம்!

Post image for நற்செயல்களால் நம்மை அலங்கரிப்போம்!நீங்கள் உடலால் பேரழகனா, இல்லை பேரழகியா என்று அல்லாஹ் பார்க்க மாட்டான். மாறாக  நீங்கள் உள்ளத்தால் அழகானவரா என்பதை மட்டுமே அல்லாஹ் பார்ப்பான். எனவே, நீங்கள் உங்கள் உள்ளங்களை அழகு படுத்திக்கொள்ளுங்கள்.
சமூகத்தில் நீங்கள் எந்த தரம் என்பதை அல்லாஹ் பார்க்கமாட்டான்.  நீங்கள் சமூகத்தில் எந்த தரத்தில் நடந்து கொண்டீர்கள் என்பதையே அல்லாஹ் பார்ப்பான். எனவே நற்பண்புகளால் உங்கள் தரத்தை உயர்த்திக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு எத்தனை வீடுகள், பங்களாக்கள் இருந்தன என்று அல்லாஹ் பார்க்க மாட்டான். அவைகளில் எத்தனை அனாதைகளுக்கு அடைக்கலம் தந்தீர்கள் என்றே பார்ப்பான்.  எனவே, உங்கள் இல்லங்களில் ஆதரவற்ற அனாதைகளுக்கு அடைக்கலம் கொடுங்கள்.
நீங்கள் என்னென்ன உணவு உண்டீர்கள் என்பதை அல்லாஹ் பட்டியல் கேட்க மாட்டான்.  பசியோடு வந்த எத்தனை ஏழைகளின் பசியை போக்கினீர்கள் என்றுதான் அல்லாஹ் கேட்பான். எனவே, பசித்தோருக்கு உணவளியுங்கள்.
உங்களது அலமாரி மற்றும் பீரோக்களில் நீங்கள் எத்தனை டிசைன்களில் எத்தனை ஆடைகள் அடுக்கி வைத்திருக்கிறீர்கள் என்பதை அல்லாஹ் கேட்கமாட்டான்.  ஆடையற்ற ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் அவற்றிலிருந்து தந்து உதவினீர்களா என்று மட்டுமே கேட்பான். எனவே, ஆடையற்ற ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் ஆடைகளை தந்து உதவிடுங்கள்.
நீங்கள் சினிமா தொலைக்காட்சித் தொடர்களை கண்டு எத்தனை முறை அழுதீர்கள் என்று அல்லாஹ் கேட்க மாட்டான். நீங்கள் எத்தனை முறை சமூகத்திற்காகவும் அல்லாஹ்விற்கு அஞ்சியும் அழுதீர்கள் என்றே கேட்பான்.  எனவே உங்கள் அழுகைகளை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ளுங்கள்.
நீங்கள் எத்தனை முறை சிரித்து மகிழ்ந்தீர்கள் என்பதை அல்லாஹ் கேட்கமாட்டான். நீங்கள் பிறருக்கு உதவியதின் மூலம் எத்தனை முறை அவர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள் என்றே அல்லாஹ் உங்களிடம் கேட்பான். எனவே, பிறருக்கு உதவிகள் புரிந்து அவர்களை சிரிக்கவும், மகிழவும் வையுங்கள்.
சமூகத்தில் உங்களது மதிப்பெண் என்ன என்பதை அல்லாஹ் ஒருபோதும் பார்க்கமாட்டான். வீட்டில் உங்கள் மனைவியிடம், அண்டை வீட்டாரிடம் உங்கள் மதிப்பெண் என்ன என்பதையே அல்லாஹ் பார்ப்பான். எனவே மனைவியிடமும், அண்டை வீட்டாரிடமும் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள்.
நீங்கள் எத்தனை பிள்ளைகளை பெற்றீர்கள் என்பதைவிட  உங்கள் பிள்ளைகளுக்கு  சிறந்த கல்வியையும் ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தீர்களா என்பதையே அல்லாஹ் பார்ப்பான். எனவே உங்களது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும், நல்ல ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுங்கள்.
நீங்கள் குர்ஆனை எத்தனை முறை ஓதினீர்கள் என்பதைவிட அதிலிருந்து எத்தனை விஷயங்களை உங்கள் வாழ்வில் கடை பிடித்தீர்கள் என்பதையே அல்லாஹ் கேட்பான். எனவே, குர்ஆனை பொருளறிந்து ஓதுவதோடு அதை கடைபிடிக்கவும் செய்யுங்கள்.
நற்செயல் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் நற்செயல் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே நற்செயல்களாகும்). அல்குர்ஆன் 2:177
மதரஸா தாருல் இல்ம்-சிங்கப்பூர்

ෂඃබාන් මස තුළ කළ යුතු හා නොකළ යුතු ක්‍රියාවන්!




ෂඃබාන් මස ඉස්ලාමීය දින දර්ශනයේ 8 වැනි මාසයයි. චන්ද්‍ර මාස අනූව 8 වැනි මාසය වන ෂඃබාන් රමළාන් මාසයට පෙරවූ මාසයයි.

ෂඃබාන් මස අධික වශයෙන් වෛකල්පිත උපවාසයන් ඉටු කිරීම
නබි (සල්) තුමන්ගේ උතුම් වූ ආදර්ශ අතුරින් වේ:


 ආයිෂා (රලි) තුමිය මෙසේ විස්තර කරයි: “ශාස්තෘවරයානන් උපවාසයෙන් තොර සිටියේ නැත යනු සිතන තරමට අඛණ්ඩව උපවාසයෙන් පසුවූ අවස්ථාද විය. උපවාසය ඉටු නොකළා යනු සිතන තරමට උපවාසයෙන් තොර සිටී අවස්ථාද විය. රමලාන් මස හැර නබි (සල්) තුමන් පුරා (මසක්) උපවාසයෙහි යෙදුනු තවත් මාසයක් නොවීය. නබි (සල්) තුමන් අධිකව උපවාසයෙහි යෙදුනු මාසය ෂඃබාන් මාසයයි” (මූලාශ්‍රයන්: මුත්තෆකුන් අලෙයිහි).

“නබි (සල්) තුමන් උපවාසයෙහි නිරතවීමට ප‍්‍රිය කළ මාසයන් ෂඃබාන් හා ඉන් පසු උදාවන රමලාන් මස වේ” යනුවෙන් ආයිෂා (රලි) තුමිය විස්තර කරයි. (මූලාශ්‍රයන්: අබූදාවුද්, නසායි, අහ්මද්).

නබි (සල්) තුමන් රමලාන් හැර අධිකව උපවාසයෙහි යෙදුනු මාසයක් පවතී නම් එය ෂඃබාන් මාසයයි. එබැවින් කාන්තා පිරිමි බේදයකින් තොර සෑම මුස්ලිමෙකුම ෂඃබාන් මස මෙම යාඥාව කිරීම කෙරෙහි වැඩි උනන්දුවක් දැක්විය යුතුයි. පහත සඳහන් ප්‍රකාශය එහි සුවිශේෂත්වය පිළිබඳ මොනවට තහවුරු කරයි:

උසාමතිබ්නු සෙයිද් (රලි) විස්තර කරයි: “මා නබි (සල්) තුමන්ගෙන් ෂඃබාන් මස මෙන් ඔබ උපවාසයෙහි නිරත වූ වෙනත් මාසයක් නොදුටුවෙමි යනුවෙන් ප්‍රශ්න කළෙමි. එයට එතුමන් රජබ් හා රමලාන් අතර මාසයක් පවති, එම මාසය සම්බන්ධව ජනයා අතර පවතින්නේ නොසැළකිලිමත් බවකි, නමුත් එය සර්ව බලධාරි අල්ලාහ් වෙතට යාඥාවන් ඉදිරිපත් කරනු ලබන (වැදගත්) මාසයකි, මාගේ යාඥාවන් අල්ලාහ් වෙතට ඉදිරිපත් කරනු ලබන විට මා උපවාසයෙන් පසුවීම ප්‍රිය කරමි” යනුවෙන් නබි (සල්) තුමන් පිළිතුරු දුන්හ. (මූලාශ්‍රයන්: අහ්මද්, නසායි).

අල්ලාහ් අභියසට යාඥාවන් ඉදිරිපත් කරනු ලබන මාසය යනුවෙන් නබි (සල්) තුමන් ෂඃබාන් මස සඳහන් කළහ, මා උපවාසයෙහි පසුවන තත්ත්වයක මාගේ යාඥාවන් අල්ලාහ් වෙතට ඉදිරිපත් කරනු ලැබීම මා ප‍්‍රිය කරමි. යනුවෙන්ද එතුමන් පැවසූහ. අපි කොයි කවුරුත් මෙම කරුණ සැළකිල්ලට ගෙන ක්‍රියා කළ යුතුයි.

මග හැරුනු උපවාසයන් ඉටු කිරීම:

ආයිෂා (රලි) තුමිය පවසයි: “මට රමලාන් මස මග හැරුනු උපවාසයන් ෂඃබාන්හි හැර ඉටු කිරීමට නොහැකි වන්නේය”. (මූලාශ්‍රයන්: මුත්තෆකුන් අෙලෙහි).

මෙම පුවතෙන් ප්‍රත්‍යක‍ෂ වන කරුණ නම් රමලාන් මස මග හැරුනු අනිවාර්්‍ය උපවාසයන් ෂඃබාන් මස තෙක් කෙනෙකුට ප්‍රමාද කරීමට අවසර පවතින බවයි. ඔසප්වූ කාන්තාවන්, දරු ප්‍රසූතය සමග රුධිරය වහනය වන කාන්තාවන්, රෝගීන්, මගීන් මෙවැනි විවිධ හේතූන් මත ගෙවි ගිය රමළාන් මස තුළ උපවාසය මග හැරුනු පිරිස් ෂඃබාන් මස උදාවත් සමග එය ඉටු කිරීමට යුහුසුළු විය යුතුය.

රමලාන් මසට දිනක් හෝ දින දෙකක් ඉතිරිව
පවතින විට උපවාසය ඉටු කිරීමට පවතින තහනම:

“රමලාන් මසට දිනක් හෝ දින දෙකක් ඉතිරිව පවතින විට උපවාසයන් ඉටු නොකරන්න. නමුත් කෙනෙකු හැර: ඔහු උපවාසයෙහි යෙදීමට පුරුදුවී සිටින දිනයක් නම් ඔහුට එම දිනයෙහි උපවාසයෙහි යෙදිය හැක” යනුවෙන් නබි (සල්) තුමන් පැවසූහ. වාර්තාකරන්නේ: අබූහුරෙයිරා (රලි). (මූලාශ්‍රයන්: බුහාරි, මුස්ලිම්).

ඉහත සඳහන් ප්‍රකාශයෙන් අදහස් කෙරෙන්නේ, උදාහරණයට: සෑම මසකම සඳුදා, බ්‍රහස්පතින්දා දිනවල උපවාසයෙහි යෙදීමට පුරුදුවී සිටින කෙනෙකු ෂඃබාන් මස අවසන් දින දෙක සඳුදා නැතහොත් බ්‍රහස්පතින්දා දිනයක් නම් ඔහුට එම දිනයෙහි උපවාසයෙහි නිරත වීමට අනුමැතිය ඇත. තවද අනිවාර්්‍ය උපවාසයන් මග හැරුනු පුද්ගලයාට ද එය ඉටු කිරීමට අනුමැතිය ඇත. ඒ හැර වෙන කිසිවෙකුට අවසර නැත.

ෂඃබාන් මස සුවිශේෂත්වයන් පිළිබඳ පවතින දුර්වල පුවත්:


රජබ් මස උදාවත් සමග නබි (සල්) තුමන් මෙසේ ප්‍රාර්ථනා කරයි:

اللهم بارك لنا في رجب وشعبان وبارك لنا في رمضان

“හිමියනි! රජබ්, ෂඃබාන් හා රමළාන් මාසයන්හි අප වෙත සෞභාග්‍යය පහළ කරනු මැනව!”
 අනස් (රලි) තුමන් විස්තර කරන මෙම පුවත මුස්නද් අහ්මද් වැනි මූලාශ්‍රවල සඳහන්වූවද මෙහි වාර්තාකරුවන් පෙළේ “සාඉදා ඉබ්නු අබ්ර්රුකාද්” පැමිණෙන බැවින් මෙම පුවත දුර්වලය.

“ෂඃබාන් මස හරි අඩක් ගතවූයේ නම් ඔබලා උපවාසය ඉටු නොකරන්න” යනුවෙන් නබි (සල්) තුමන් පැවසූහ. විස්තර කරන්නේ: අබූහුරෙයිරා (රලි). (මූලාශ්‍රයන්: අහ්මද්, අබූදාවූද්, තිර්මිදි).

නමුත් මෙම පුවත පිළිබඳ හදීස් කලාවේ ප්‍රවීන විද්වතුන් වන අබ්දුර්රහ්මාන් ඉබ්නු මහ්දී, ඉමාම් අහ්මද්, අබූසර්ආ අර්රාසි, අල්අස්රම් වාර්තාකරුවන් පෙළේ පවතින දුර්වලතාවය නිසා ප්‍රතිෙක‍ෂ්ප කරති.

අනස් (රලි) තුමන් විස්තර කරයි: “රමළාන් උපවාසයෙන් පසු ශ්‍රේෂ්ඨවූ උපවාසය කුමක්දැයි නබි (සල්) තුමන්ගෙන් ප්‍රශ්න කරන ලදි, එවිට එතුමන් රමළාන් මස මහඟු කිරීමක් වශයෙන් ෂඃබාන් මස උපවාසය වේ යනුවෙන් පිළිතුරු දුන්හ, යළි උසස් දන් දීම කුමක්දැයි එතුමන්ගෙන් ප්‍රශ්න කරන ලදී, එවිට රමළාන් මස කරන දානය” යනුවෙන් පිළිතුරු දුන්හ. (මූලාශ්‍රය: තිර්මිදි).

මෙම පුවත වාර්තා කරන වාර්තා කරුවන් පෙළේ සඳහන් “සදකතිබ්නු මූසා” සාධකයට ගැනීමට තරම් බලවත් නොමැති බව ඉමාම් තිර්මිදි (රහ්) පවසයි. යහියා ඉබ්නු මුඊන් (රහ්) ඔහු පිළිබඳව: ඔහු කිසිවක් නැත යනුවෙන් විවේචනය කරයි. අෂ්ෂෙයික් අල්බානි (රහ්) මෙය දුර්වලවූ පුවතක් බව සඳහන් කරයි.  මුස්ලිම් වැනි මූල්‍රාශ්‍රයන්හි අබූ හුරෙයිරා (රලි) විස්තර කරන පුවතක “රමළාන් මස උපවාසයෙන් පසු ශ්‍රේෂ්ඨවූ උපවාසය මුහර්රම් මස උපවාසය බව” සඳහන් වන නබි (සල්) තුමන්ගේ ප්‍රකාශයට ද මෙය පරස් පර වෙයි.

ෂඃබාන් මස පහළොස් වැනි දින හා
එම රාත්‍රිය සුවිශේෂි බව සඳහන් නබි වදන් හි
සැබෑ තත්ත්වය පිළිබඳ දැන් අපි සාකච්ඡා කරමු:


“ෂඃබාන් මස පහළොස් වැනි දින රාත්‍රිය උදාවීමත් සමග එම රාත‍්‍රියෙහි නැගිට යාඥා කරන්න, එදින උපවාසයෙන් පසුවෙන්න, එදින හිරු බැසයාමත් සමග අල්ලාහ් මෙලොවට දිස්වන අහසට බැස පැමිණ මාගෙන් සමාව අයදින්නන් සිටිනවා ද? ඔවුන්ගේ පාපයන් මා සමා කරමි, මාගෙන් ආහාර ඉල්ලන්නන් සිටිවාද? ඔවුන්ට මා ආහාර පිරිනමමි, පීඩාවට පත්වූවන් සිටින්නේ ද? ඔවුන්ගේ පීඩාවෙන් මා ඔවුන් මුදවමි හිරු උදාවන තෙක් අල්ලාහ් මෙසේ පවසන බව” නබි (සල්) තුමන් පැවසූහ. (විස්තර කරන්නේ: අලි (රලි) තුමන්, මූලාශ්‍රය: ඉබ්නු මාජා).

මෙම පුවත වාර්තා කරන වාර්තා කරුවන් පෙළේ “ඉබ්නු අබී සබ්රා” සඳහන් වෙයි. මොහු දුර්වල වාර්තාකරුවෙකි. මොහු සාවද්‍ය හදීස් ගොතන්නා යනුවෙන් ඉමාම් අහ්මද් (රහ්), ඉමාම් ඉබ්නු මුයීන් (රහ්) පවසති. එබැවින් මෙය සාධක වශයෙන් ගෙන ක‍්‍රියා කළ නොහැක.

ආයිෂා (රලි) තුමිය මෙසේ විස්තර කරයි: “මා රාත‍්‍රියක නබි (සල්) තුමන් නිදියහනේ නොවීම නිසා එතුමන් සොයා පිටත්වූයේමි, එවිට එතුමන් බකීඃ සුසාන භූමියෙහි වූ අතර “ෂඃබාන් මස පහළොස් වැනි දින රාත්‍රියෙහි හරි අඩක් ගෙවී යාමත් සමග අල්ලාහ් ලෝකයට දිස්වන අහස වෙත බැස පැමිණ බැටළුවාගේ රෝමයන්ටත් වඩා අධිකව සමාව පිරිනමන බව පැවසූහ”. (මූලාශ්‍රය: තිර්මිදි).

මෙම පුවත වාර්තා කරන වාර්තාකරුවන් පෙළේ සඳහන් වන “හජ්ජාජ් බින් අර්තාත්˜ සෙසු වාර්තා කරුවා වන යහියා ඉබ්නු අබී කසීර්ගෙන් කිසිවක් ශ්‍රවණය කළේ නැත. මෙය දුර්වලවූ පුවතක් බව ඉමාම් බුහාරි (රහ්) කරන විවේචනය ඉමාම් තිර්මිදී (රහ්) සඳහන් කරයි. මේ පුවත මුල්කොට ගෙන ද කෙනෙකුට ක‍්‍රියා කළ නොහැක.

“ෂඃබාන් මස පහළොස් වැනි දින රාති්‍රයෙහි (අල්ලාහ්ට) ආදේශ කරන්නා හා සතුරුකම් පවත්වන්නා හැර අල්ලාහ් තම සියළු නිර්මාණයන්ට සමාව පිරිනමන්නේය” යනුවෙන් නබි (සල්) තුමන් පැවසූහ. (විස්තර කරන්නේ: අබූමූසා අල් අෂ්අරියි (රලි) තුමන්, මූලාශ්‍රය: ඉබ්නු මාජා).

මෙම පුවත වාර්තා කරන වාර්තාකරුවන් පෙළේ “අබ්දුල්ලාහ් ඉබ්නු ලහීආ” දුර්වල වාර්තාකරුවෙකු වන අතර, වලීද් ඉබ්නු මුස්ලිම් පුවත් වසංකරන බව හදීස් කලාවේ විද්වතුන් විවේචනය කරන බැවින් මෙය ද සාධක වශයෙන් ගෙන ක්‍රියා කළ නොහැක.

ෂඃබාන් මස පහළොස් වැනි දින රාත‍්‍රියෙහි වැදගත්කම පිළිබඳ සඳහන් වන කිසිදු පුවතක් නිවැරදි (සහීහ්) නොවන බව හදීස් කලාවේ ප්‍රවීන විද්වතුන් සඳහන් කරති. තත්ත්වය මෙසේ පවතින විට දුර්වල පුවත් පදනම් කොට කෙසේ නම් එය ශ්‍රේශ්ඨ දිනයක් ලෙස සළකා ක‍්‍රියා කළ හැකිද? යනු කොයි කවුරුත් මදක් විමසා බැලීම වටී.

“බරාඅත්” යන නාමය කිසිදු පුවතක සඳහන් නොවූ පසුබිමක කෙසේ නම් එම නාමය යෙදුවා ද? යනු ලොකු ප්‍රෙහේළිකාවක් වශයෙන් පවති.

ඉමාම් නවවි (රහ්): රජබ් හා ෂඃබාන් මාසයෙහි විශේෂයෙන් ඉටු කරන සලාතය ප්‍රතික්ෂේප කළ යුතු බිද්අත් ක‍්‍රියාවකි. (මෙයට ආගමෙහි කිසිදු අවසරයක් නොමැත) යනුවෙන් පැවසූහ. (ග්‍රන්ථය: අස්සුනන් වල් මුබ්දතිආත්).

 සයීද් බින් මුසයියබ් (රහ්) අසර් සලාතයෙන් පසු වැඩි වශයෙන් සලාතය කරන පුද්ගලයකු දුටුවේය. ඔහුට දැන්විය යුතු දේ දන්වා සිටියේය. එයට එම පුද්ගයා අබූ මුහම්මද්! මා සලාතය කිරීම නිසා අල්ලාහ් මට දඬුවම් කරයිද? යනුවෙන් ඔහු ප්‍රශ්න කළේය. එයට එතුමන්, නැත. නමුත් ඔබ සුන්නාවට (නබි තුමන්ගේ මඟ පෙන්වීමට) විරුද්ධව කිරීම නිසා ඔබව ඔහු දඬුවම් කරයි යනුවෙන් පිළිතුරු දුන්හ. (දාරමි).

ෂඃබාන් මස සුවිශේෂත්වයන් පිළිබඳ නබි (සල්) තුමන්ගේ
නාමයෙන් සාවද්‍ය ලෙස ගොතන ලද පුවත්:


ඉමාම් ඉබ්නුල් ජව්සි සිය “මව්ලූආත්” යන කෘතියෙහි මෙය සඳහන් කරයි:

“රජබ් අල්ලාහ්ගේ මාසයයි, ෂඃබාන් මාගේ මාසයයි, රමළාන් මාගේ සමාජයට අයත් මාසයයි.” යනුවෙන් නබි (සල්) තුමන් පැවසූහ.

“අලි (රලි) අමතා, කවුරුන් ෂඃබාන් මස පහළොස් වැනි දින රාත්‍රියෙහි රක්අත් 100 ක් සලාතය ඉටු කර, (එම සලාතයෙහි) සෑම රක්අතයකම අල්ෆාතිහා පරිච්ඡේදය හා කුල්හුවල්ලාහු අහද් පරිච්ඡේදය 10 වරක් පාරායනය කරයිද, ඔහුගේ සියළු අපේක‍ෂාවන් එදින රාත‍්‍රියෙහි අල්ලාහ් ඉටු කර දෙනු ඇත” යනුවෙන් නබි (සල්) තුමන් පැවසූහ.

“කවුරුන් ෂඃබාන් මස පහළොස් වැනි දින රාත්‍රියෙහි රක්අත් දොළහක් සලාතය ඉටු කර, සෑම රක්අතයකම අල්ෆාතිහා පරිච්ඡේදය හා කුල්හුවල්ලාහු අහද් පරිච්ඡේදය 30 වරක් පාරායනය කරයිද, ඔහු ස්වර්ගයෙහි සිය නවාතැන නොදැක එම ස්ථානයෙන් පිටත් නොවනු ඇත” යනුවෙන් නබි (සල්) තුමන් පැවසූහ.

කවුරුන් හෝ මෙවැනි පුවත් සාධක ලෙස ඉදිරිපත් කරන විට අපි ඉතා විමසිල්ලෙන් සිටීම සඳහායි මෙම පුවත් මෙහි සඳහන් කළ ඇත්තේ. අපි සැම විටම සහීහ් යන නිවැරදි තත්ත්වයේ පවතින වාර්තාවන් අනූව පමණක් ක්‍රියා කිරීමට වෙර දැරිය යුතුය.

බරාඅත් දිනය සුවිශේෂි දිනයක් බවට පත්කර එම දිනයෙහි උපවාසයෙන් පසුවීම, විශේෂ ආහාර පිළියෙල කිරීම, යාසීන් පරිච්ඡේදය තුන් වරක් පාරායනය කිරීම, එම රාති‍්‍රයෙහි විශේෂ යාඥාවන් ඉටු කිරීම නබි තුමන්ගේ කිසිදු ආදර්ශයක් නොමැති නොමග යවන බිද්අත් කි්‍රයාවන් වේ. මා උපවාසය ඉටු කිරීම තුළින්, යාසීන් තුන් වරක් පාරායනය කිරීම තුළින් මට අල්ලාහ්ගේ කෝපය ලැබෙයි ද? යනුවෙන් කෙනෙකු ප්‍රශ්න කරයි නම් ඔහුට ඉහත සඳහන් සයීද් ඉබ්නු මුසයියබ් (රහ්) තුමන්ගේ පිළිතුර යළි වරක් කියවා බලන ලෙස ඉතා කාරුණිකව ඉල්ලා සිටිමු.

මුළු මහත් විශ්වයටම දූතවරයාවූ නබි (සල්) තුමන්ගේ මඟ ඔස්සේ ගමන් කර දෙලොව ජය ලබාගමු.



කතුවරයා : අබූ අස්මා  

 

Views of the Reverts in brief about Islam




In the Name of Allah The Most Gracious, the Most Merciful
"Truly, the religion with Allah is Islam. Those who Were given the Scripture (Jews and Christians) did not differ except, out of mutual jealousy, after knowledge had come to them. And whoever disbelieves in the Ayat (proofs, evidences, verses, signs, revelations, etc.) of Allah, then surely, Allah is Swift in calling to account.
(Al Imran, 3: 19)




Views of the Reverts in brief about Islam

Moderation and temperance are keynote of Islam

The simplicity of Islam, the powerful appeal and compelling atmosphere of its mosques, the earnestness of its faithful adherents, the confidence inspiring realization of the millions throughout the world who answer the five daily calls to prayer -these factors attracted me from the first.
The broad-minded tolerance of Islam for other religions recommends it to all lovers of liberty. Muhammad admonished his followers to treat well the believers in the Old And New Testament; and Abraham, Moses, Jesus are acknowledged as co-Prophets of the One God. Surely this is generous and far in advance of the attitude of other religions.
Moderation and temperance in all things, keynote of Islam, Won my unqualified approbation.

 Col. Donald S. Rockwell
U.S.A.

Islam alone can satisfy the needs of every member of the human family

Christianity must go the way of all things, and henceforth perish and forever to make room for the True Religion of God To mankind, and that is Islam, which is Truth, sincerity, toleration, looking to the interests of man and pointing him to the Right Way. Islam alone can satisfy the needs of every member of the human family, and Muslims are the only people among whom can be found the "True Book of Brotherhood" in reality and not mere "make-belief' as in Christianity .

Sir Jalaluddin Lauder Brunton
England

Islam alone offers the solution of present-day problems

To the Western mind, the chief appeal of Islam must be its simplicity. Admittedly, there are one or two other faiths which are as easy of approach but they sadly lack the vitality of the Faith of the Prophet (may Allah bless him), and the spiritual and moral elevation which it offers.
 Islam must also appeal by virtue of its tolerance ... Strangely Christian intolerance awakened my first interest in Islam.
The Churches are utterly incapable of grappling with present-day problems. Islam alone, offers the solution.

John Fisher
Newcastle

Islam has always attracted me both By its simplicity and by the devotion of its followers

Since adopting Islam as my faith I feel that I have come to a turning point in my life, and to account for this, to give you some idea as to why I have become a Muslim. I have subjected myself to what I might call a self-psychological analysis.
Islam Had always attracted me both by its simplicity and by the devotion of its followers ... I was taught to regard all religions other than Christianity as blasphemous and their adherents as heathens.
Islam Has given me a very practical method of breaking down the barrier of materialism in one of the Five Pillars of Faith, namely 'Prayer.' The Muslim prayer keeps me constantly aware of my duty to Allah, to my soul, and to my fellow creatures.

Khalid D'Larnger Remraf

The purity and simplicity of the Islamic Faith And its obvious Truth Made a special appeal to me!

The purity and simplicity of the Islamic Faith, its freedom from dogma and sacredotalism and its obvious Truth made a special appeal to me. The honesty and sincerity of the Muslims, too, are greater than anything I have seen in Christians.
Another beauty of Islam is its equality. It is only Islam that Has real equality maintained between man and man and no other religion has anything like it. The Faith of Islam generates unity.
The Deen of Islam is also the cleanest religion in the world because Muslims have to wash the exposed parts of the body five times a day, a practice not found in any other religion of the world.


A.W.L. Van Kuylenburg
(Known As M.A. Rahman)

In Islam I have found the true Faith for which I had been seeking so long

I devoted a considerable amount of my spare time to a thorough study of an English translation of the Holy Qur' an, and as I read over and over again, certain of the words of the Prophet Muhammad (may Allah exalt his mention), I could not help but see that here, at last, in Islam I had found the true faith for which I had been seeking so long.
I would like to say that I feel confident, that if only people in this and other Western countries can be brought to appreciate the full meaning of Islam, and what it stands for, the ranks of Islam will be daily swelled, only unfortunately there is a vast amount of misapprehension in the minds of many 'Free Thinkers' and others who still cling to their old creed simply because they require the moral courage to abandon a faith, with the principles of which they are, at variance, and to embrace Islam.

Walker H. Williams

I have accepted Islam because it fits in so well with my own ideas

A man becomes a truer Christian or a Jew by way of lslam, than by any way advocated by the Christian or Jewish people to-day.
In Islam, there is tolerance and an acknowledgement of universal brotherhood. So, I may say, that I have accepted Islam because it fits in so well with my own ideas about Allah and His beautiful plan. It is the only Faith I really can understand. Indeed, such is its simplicity and beauty that even a little child can understand it.

Amina Le Fleming

Islam Is the religion I have been seeking for

Islam Is the religion I have been seeking for since my school days. My Mind was dissatisfied all along with the Christian teachings till I was old enough to have independence of Thought to shake them off. I came in touch with the true Religion of Islam. I became interested in Islam, whose keynote is simplicity - for instance, belief in the Unity[(('Unity' is not the proper word to use, instead the word 'Oneness' describes Monotheism in real sense ))] of Allah. This Is why it appeals to me.
The religion of Islam has given me peace and happiness such as I never had before.

Miss Joan Fatima

If Britain and Europe were converted to Islam, they would again be powerful Forces for good

There Is no version of Christianity which is really satisfactory. Christians believe that because of the fall of Adam And Eve, All human beings are born in a state of original. sin, and are unable by their own actions to merit Heaven. Muslims, however, do not believe that people are punished for the sin of Adam and Eve. They believe that all human beings are born of innocence, and can only lose their hope of Heaven by their own sins when they are old enough to be guilty of deliberate wrong-doing. If Britain and Europe were converted to Islam, they would again be powerful forces for good. British and European Muslims are some of the best.

Khadija F.R. Fezoui
England



Views of the Reverts in brief about the Noble Qur'an


The Noble Qur'an contains what every soul mostly requires

Since My youth, I have been greatly impressed by Islamic Civilization in all its aspects, its poetry and architecture; and very often I have told myself that a people who could give to The world so vast a treasure of beauty and significance in every branch of culture, must also have attained to the highest levels both in philosophy and religion.
In My enthusiasm for Islam, I began to study all religions, from the most ancient to those of the present day, comparing each with the other, and subjecting them to very close criticism; and little by little, I became convinced that the Muslim worship is the True Religion, and that the Noble Qur'an contained what every soul mostly requires for its spiritual elevation.

Count Eduardo Gioja
Italy

I studied a Muslim translation of the Noble Qur' an and was astounded to read such noble precepts and inspiring passages!

I studied a Muslim translation of the Noble Qur'an, and was astounded to read such noble precepts and inspiring passages, such wise and practical advice for everyday life. It made me wonder why I had been taught that Muhammad was a false prophet, and how I had not heard the truth about this wonderful religion earlier.
Islam, if sincerely followed, must bring that peace to the mind and body which the world itself needs, and create a perfect social order.

Hasan V. Mathews

The Noble Qur'an is full of truths, and its teachings are so practical and free from dogmatic tenets and mysteries!

As a Roman Catholic, I had the opportunity of studying the Catholic faith to a great extent. I was doing my best to convince myself that Catholicism was the only true faith, but allah! its mysteries, dogmas and the compulsory 'must believes' did not permit  me to remain quiet. I started my search for the Truth and remained engaged in this for many years quite silently.
In Hinduism and Buddhism, I found such 'vacant spots' that the only alternative left to me was to study Islam. At one time, I really held Islam in abhorrence. I had no Muslim friends, for Islam was so repulsive to me that I did not want even to associate with its adherents. Little did I dream that ... books on Islam would make a new man of me. I was gradually becoming so observed in the lovely teachings of Islam that it did not take me long to go earnestly further into it. I began to love Islam because of its straight and non-mysterious path. It is clean and simple, yet so full of deep studies that I soon felt the inevitable was drawing nigh.
The Noble Qur'an, some passages of which I read, simply Struck me with wonder, for I had the idea that there was Nothing to rival the Bible. I found, however, that I was Hopelessly mistaken in this. Indeed, The Noble Qur'an, is so Full of truths, and its teachings so practical and free from dogmatic tenets and mysteries, that I was daily being drifted Into the religion of 'Peace and Love' which Islam certainly is.

Mumin Abdur-Razzaque
Selliah, Ceylon

ஸுரா யூசுப் தரும் சில படிப்பினைகள்



வெள்ளி மேடை
தலைப்பு :ஸுரா  யூசுப் தரும் சில படிப்பினைகள்
உரை நிகழ்த்துபவர்: அஷ்  ஷேய்க்  முர்ஷித் அப்பாஸி
காலம்  : 15.06.2012
இடம்:  தக்வா ஜும்மா  மஸ்ஜித் காலி

  
Jum'aa Bayan by Ash-Shaikh M.S.M. Murshid (Abbasi)
on 15th. June, 2012
at Ath-Thaqwa Jum'aa Masjid, Moragoda, Galle, Sri Lanka
Subject: 'Sura Yousuf Tharum Shila Padippinaikal'




©2012, copyright Dharulhuda

நேர்காணல் ஐ.எல்.எம்.ஸுஐப் ஆசிரியர் – தர்ஹா நகர்


ஐ.எல்.எம்.ஸுஐப் ஆசிரியர் – தர்ஹா நகர்


Suhai Teacher* அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதன் பிறகு என்ன செய்தீர்கள்?
அதன் பிறகு ஓய்வாக இருக்க மனது விரும்பவில்லை. பொது வேலைகளில் ஈடுபட்டேன். ஊரில் ஜமாஅத் கவுன்சில் என்ற ஒரு சங்கத்தை ஆரம்பித்தார்கள். அதில் செயலாளராக நான் நிய மிக்கப்பட்டேன். ஜமாஅத் கவுன் சில் மூலம் அஹதியா பாடசாலை ஒன்றை ஆரம்பித்தோம் இன்று தர்கா நகரில் அஹதியா பாட சாலை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

1979ல் நாங்கள் அநாதை இல்லம் ஒன்றை ஆரம்பித்தோம். அதில் பொருளாளராகவும் செய லாளராகவும் கடமையாற்றி தற் போது அதன் அங்கத்தவர்களுள் ஒருவராக கடமையாற்றி வருகி றேன். மேலும் அக்காலத்தில் இரவுப் பாடசாலைகளை நடத்தி னோம். வெளிஊர்களிலிருந்து ஆலிம்களை, அறிஞர்களை அழைத்து வந்து மக்களுக்கு உரை கள் நிகழ்த்த ஏற்பாடு செய்தோம். இமாம் ஹஸனுல் பன்னாவின் மருமகன் ஸஈத் ரமழான் அவர் கள் இலங்கை வந்திருந்தபோது அவரும் இங்கு உரை நிகழ்த்தி னார் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.
* ஜமாஅத் கவுன்சிலின் பணி களைப் பற்றி ....
இது எமது பிரதேசத்தில் எல்லாப் பள்ளிவாயல்களையும் அதன் நிர்வாகிகளையும் உள்ள டக்கிய ஒரு அமைப்பாகும் இதன் மூலம் ஸக்காத் பணத்தை திரட்டி வருகிறோம். சென்ற வரு டம் 25 இலட்சம் ரூபாய் சேகரிக்க முடியுமாக இருந்தது. மேலும் க.பொ.த. சாதரண தர மற்றும் உயர் தரத்தில் சித்தியடையும் மாணவர்களுக்கு வருடாந்தம் பரிசளிப்பு விழாக்களை ஏற்பாடு செய்கிறோம். அ/ஃ, ˆ/ஃ வகுப்புக் கள் நடாத்துகிறோம். ஊர் வழக்கு களை விசாரிக்க ஒரு சமாதானக் குழுவை அமைத்திருக்கின்றோம். அவர்கள் ஜமாஅத் கவுன்சிலோடு ஆலோசித்து முடிவுகளை எடுப் பார்கள்.
* அன்மையில் நடைபெற்ற அறபுப் புரட்சியை தொடர்ச்சி யாக அவதானித்தவர் என்ற வகையில் அந்தப் புரட்சி பற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
இந்தப் புரட்சி முழுமையாக வெற்றி பெறுமாக இருந்தால் அறபு நாடுகளில் வெளிநாட்டுச் செல்வாக்கு குறைந்துவிடும். இஸ்லாமிய முறையில் மாற்றங் கள் வந்துவிடும். வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுபடக் கூடிய சந்தர்ப்பம் அறபு நாடு களுக்குக் கிடைக்கும். இந்தப் புரட்சி வெற்றிகரமாக முடிவடை யுமென்றால் மேற்கு நாடுகள் தான் இதில் நஷ்டம் அடையப் போகின்றன. இப்புரட்சியில் இஹ் வானுல் முஸ்லிமூன் அமைப்பி னரின் பங்களிப்பை நினைக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.



Thanks to meelpaarvai.net

நான் நல்லது செய்தால் ஒத்துழையுங்கள், தவறு செய்தால் திருத்துங்கள்

நான் நல்லது செய்தால் ஒத்துழையுங்கள், தவறு செய்தால் திருத்துங்கள் – ஜனாதிபதி முர்ஸி


mursiii
நான் அனைத்து எகிப்தியர்களுக்குமான ஜனாதிபதி, யாருக்கும் பாரபட்சம் காட்ட மாட்டேன். மதம், இனம் தாண்டி எகிப்தில் முழு அமைதியை ஏற்படுத்துவதே எனது இலட்சியம், அதற்கேற்றவாறு அமைச்சரவை பணியை தொடங்கி விட்டேன் என்று எகிப்தின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி முர்ஸி மக்களிடையே முதன் முதலாக உரையாற்றும்போது தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், நான் நல்லதைச் செய்தால் எனக்கு ஒத்துழைப்பாகவும் எகிப்தின் முன்னேற்றத்திற்காகவும் ஒத்துழையுங்கள், நான் தவறு செய்தால் என்னைத் திருத்துங்கள், நேரான பாதைக்கு அழைத்து வாருங்கள் என்றார்.
எகிப்தில் 30 ஆண்டுகளாக ஜனாதிபதி பதவி வகித்து வந்த ஹுஸ்னி முபாரக், மக்கள் போராட்டத்தின் மூலமாக பதவி விலக்கப்பட்டார்.
தனைத் தொடர்ந்து முபாரக் மீது போராட்டக்காரர்களை கொன்று குவித்தது, ஊழல் போன்ற வழக்குகள் தொடரப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது முபாரக் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் எகிப்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில், கலாநிதி முஹம்மது முர்ஸி எகிப்தின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




Meelpaarvai.net

நாட்டின் பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு இனவாதம் ஒரு கருவியாக உபயோகிக்கப்படுகிறது



Sritharanபிரச்சினைகளின் நதிமூலம் குறித்து ஈ.பி.ஆர்.எல்.எப். செயலாளர் தோழர் சுகு சிறீதரன்
இலங்கையின் முன்னேற்றம் அல்லது சுபிட்சம், பிரகாசமான எதிர்காலம் என்பதெல்லாம் இலங்கையர்களின் வாழ்வு ஜனநாயக மயப்படுத்தலிலேயே தங்கியுள்ளது. இலங்கையில் வாழும் ஒரு பகுதி மக்கள் தாம் இலங்கையர்கள் என்று மானசீகமாக சிந்திக்காத நிலை காணப்படுகிறது. இது மிகவும் அவலமானதாகும்.
பேரினவாத மேலாதிக்க மனோபாவமே மக்களில் ஒரு பகுதியினரை அவ்வாறு சிந்திக்க விடாமல் தடுக்கிறது. இது இலங்கையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் ஜனநாயக விரோதப் போக்காகும். தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதே இதன் போக்காக இருந்தது.
இந்தப் போக்கின் எதிர்வினையாகவே தமிழர்கள் மத்தியில் அகிம்சைப் போராட்டம் காலாவதியாகி ஆயுதம் தாங்கிய எழுச்சி உருவானது. அது பின்னர் தமிழ்ப் பாசிசமாக மாறி, பெருநாசத்தை தமிழ் சமூகத்திற்கும், சகோதர சமூகங்களுக்கும் விளைவித்தது என்பது வேறு கதை.
ஆனால் இந்த நாட்டில் புலிப் பயங்கரவாதம்தான் இருந்தது இங்கு வேறொன்றும் இருக்கவில்லை. அந்தப் பயங்கரவாதப் பிரச்சினை யுத்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்டு விட்டது என்று ஆட்சியாளர்கள் திரும்பத் திரும்ப கூறிவருகிறார்கள்.
ஆனால், இந்த நாட்டில் தொடர்ச்சியாக அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. மாறி மாறி வந்த அரசுகள் வெவ்வேறு அளவில் இதனை செய்திருக்கின்றன என்பது வரலாறு.
கிளிப்பிள்ளை போல் திரும்பத் திரும்ப இதனை கூற முடியாது. எனினும், சில விடயங்களை நாம் தொடாமல் செல்ல முடியாது. இலங்கை சுதந்திரம் பெற்றது என்று சொல்லப்பட்ட நாட்களின் மறுகணங்களிலேயே மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமை, பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தனிச் சிங்கள சட்டமானது, தனிச் சிங்கள சட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது ரவுடிகளை ஏவி தாக்குதல் புரிந்தது. இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக போடப்பட்ட பண்டா-செல்வா, டட்லி-செல்வா ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. 1960 களின் முற்பகுதியில் அகிம்சை வழியில் காட்டப்பட்ட எதிர்ப்பு இயக்கம் இராணுவ, பொலிஸ் பலம் கொண்டு வன்முறை வழியில் அடக்கப்பட்டது.
1958, 1977, 1981, 1983 என திட்டமிட்ட இனக்கலவரங்களை உருவாக்கி தமிழ் மக்கள் மீது தாக்குதல் தொடுத்தது. 1978, 1979 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் போராடும் தமிழ் மக்களை கொல்வதற்கும் காணாமல் செய்வதற்குமான அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டது.
கலவரங்களின்போது பிற சந்தர்ப்பங்களிலும் சகட்டு மேனிக்கு தமிழ் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகமும், ஏனைய வன்முறைத் தாக்குதல்களையும் மேற்கொண்டு பல உயிரழிவுகளுக்கு காரணமாக இருந்தது.
வடக்கிலும், தெற்கிலும் மலையகத்திலும் மக்களைத் தாக்கி துன்புறுத்தி தீ வைத்து தாக்குதல்களை அவ்வப்போது நடத்தியது. சிறைப்படுகொலைகள் என்பனவெல்லாம் இங்கு எளிதில் மறந்துவிடக் கூடிய சங்கதிகள் அல்ல.
எனவே, புலிப் பயங்கரவாதம் எதோ திடீரென்று ஒரு காரணமும் இல்லாமல் அசரீரியாக தோன்றியது என்ற புலுடா கதைகளை ஆட்சியாளர்கள் அவிழ்த்து வருகிறார்கள்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு தேவையில்லை, நாட்டை அபிவிருத்தி செய்தால் போதும் அதிகாரங்கள் மாகாண மட்டத்தில் பகிரப்பட முடியாது, நிலத்தின் மீதான அதிகாரம், நிதி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்பன பகிரப்பட முடியாது என்ற 60 ஆண்டுகால அனுபவம், யதார்த்தம், நீதி, நியாயம் இவற்றுக்குப் புறம்பான கதைகளையே ஆட்சியாளர்கள் அவிழ்த்து வருகிறார்கள்.
வடக்கு, கிழக்கில் இராணுவத்தை நிரந்தரமாக வைத்திருப்பதும், திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொண்டு வருவதும் மிக வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எமது விவசாயிகளதும், மீனவர்களினதும் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இது மலையக மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் விதிவிலக்கல்ல.
கிழக்கில் மக்கள் மத்தியில் பேதங்களை தோற்றுவிப்பது, மோதல்களை ஏற்படுத்துவது என்ற நிலமைகள் காணப்படுகின்றன. காந்தியடிகள், சுவாமி விபுலானந்தர், பேடன் பவல் சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இது இப்போது மாத்திரமல்ல கடந்த 30 ஆண்டுகளில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் காணப்பட்டது.
பேரினவாத சக்திகள் பலவீனப்பட்டதாகவோ தெற்கின் ஆட்சியாளர்களின் சிந்தனைப் போக்கு மாறியதாகவோ எந்த அறிகுறியும் இல்லை. நிர்வாகத்துறையில் தமிழர்கள் எவரும் பதவி நிலைகளில் இல்லை. ஒன்று இரண்டு பேர் இருக்கலாம். இராணுவம், மத்தியப்பட்ட அதிகார மையம் என்பவற்றைக் கொண்டு ஒரு அகங்கார ஆட்சியை நாட்டில் ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எரிபொருள் விலையேற்றம், மின்சாரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, உயர் கல்வி தனியார் மயமாக்கம் என்பன மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆட்கடத்தல், காணாமல் போதல் இன நல்லுறவுகளை சீர்குலைக்கும் பேச்சுக்கள் என்பன மக்களை விரக்தியடைய வைத்துள்ளன.
சமகால உலகில் ஜனநாயக விழுமியங்களுக்கு மிகுந்த சிறப்பிடம் காணப்படுகிறது. எகிப்து, மியன்மார் போன்ற நாடுகளில் அவை உணர்த்தப்பட்டு வருகின்றன. ஆனால் இலங்கை ஆட்சியாளர்கள், காலாவதியானவற்றை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்பட வேண்டிய வற்றை காவித் திரிகிறார்கள்.

Monday, June 25, 2012

இந்த இழிநிலைக்கு காரணம் யார்?

இந்த இழிநிலைக்கு காரணம் யார

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

தாயின் காலடியில் சுவனம்
, குடும்பத்தின் தலைவி, சொத்துரிமை, பேச்சு உரிமை, கல்வியில் உரிமை, திருமணத்தில் உரிமை என்று பலவற்றிலும் பெண்களுக்கு கண்ணியமான உரிமையை வழங்கி, மேன்மைபடுத்திய மார்க்கம் இஸ்லாமே தவிர வேறு மார்க்கமே இல்லை என்பதில் எந்த ஐயமுமில்லை.

இத்தகைய சிறப்பை வழங்கிய இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தவில்லை என்றாலும் அவனுக்கு மாறு செய்யாமல் இருப்பது உகந்தது.

ஆனால் இன்று பெண்களின் நிலையோ???!!! தவறான பழக்க வழக்கத்தாலும், ஊடகங்களின் ஈர்ப்பாலும், உலக வாழ்வின் ஆக்கிரமிப்பாலும், போதைப் பொருளாக, சுகம் கொடுக்கும் கருவியாக, விளம்பர பொருளாக, பெற்ற பெண் மக்களை பணத்திற்காகவும், வறுமையை நீக்கவும் கொடுங்கிழார்களுக்கு பெற்றோர்களாலேயே விற்கப்படும் பொருளாக, இது போன்ற இன்னும் பிற இழிநிலைகளில் வாழ்கின்றனர் என்று சிந்திக்கும் போது நெஞ்சம் பதறுகிறது.

இதற்கு, ஒரு புறம் உலக வாழ்வும், மேலை நாட்டு மோகமும், கூடா நட்பும் காரணமாக இருந்தாலும் மறுபுறம் பெற்றோரும் இவர்களின் தவறான வழிக்கு முக்கிய காரணமாகின்றனர் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.
ஒரு பிள்ளையை பெற்றெடுத்து அதை திருமண பந்தத்தில் இணைக்கும் வரை தாய்க்கும் தந்தைக்கும் பொறுப்புகள் பல இருந்தாலும், இதில் அதிக பொறுப்பும், அக்கறையும் தாய்க்கே உள்ளது என்பதை அனைவராலும் ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்று. இதையே நபி(ஸல்) பின்வருமாறு தெரிவிக்கிறார்கள்...
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், "யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும் வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்" என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) - நூல்:முஸ்லிம்
இப்படி பட்ட சூழ்நிலையில், இன்று பெண் குழந்தை என்றாலே வயிற்றில் நெருப்பைக் கொண்டு வாழும் விதமாக நம் கலாச்சாரமும், சூழ்நிலையும் மாறி உள்ள இந்த காலத்தில், அவர்களை சரியான முறையில் ஒரு சிறந்த மூமீனாக (இறையச்சம் கொண்டவராக) வளர்க்க முதலில் பெற்றோர்கள் தங்களது இஸ்லாமிய அறிவை பலப்படுத்திக் கொள்வதும், அதன் படி தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதும் மிக முக்கியமான ஒன்று.
இதையே நபி (ஸல்) பின்வருமாறு அறிவிக்கிறார்கள்:-
ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாம் என்ற இனிய மார்க்கத்திலே பிறக்கிறது. அதன் பெற்றோர்கள் அந்த குழந்தையை யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக அல்லது நெருப்பை வணங்குபவர்களாக மாற்றி விடுகிறார்கள். அறிவிப்பாளர் அபூ ஹுரைரா (ரலி) நூல்:புஹாரி
ஆனால் இன்று எத்தனையோ பெற்றோர்கள் தன் பிள்ளையை சுதந்திரத்துடனும், வசதியுடனும் வளர்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொள்கின்றனரே தவிர ஈமான் நிறைந்தவர்களாக வளர்க்க தவறிவிடுகின்றனர். மேலும் இதற்காகவே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
ஒரு குழந்தை ஏழு வயதை அடைந்தவுடன் தொழுமாறு ஏவுங்கள், பத்து வயதை அடைந்ததும் தொழுகையை தவறவிட்டால் அடியுங்கள். (அறிவிப்பாளர் அபூ ஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம்)
ஆனால் இன்று எத்தனை பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு மானக்கேடான செயலில் இருந்து தன்னை காக்கும் மிகப் பெரிய கருவியான தொழுகையை ஏவுகிறார்கள்??

அதை தவிர்த்துவிட்டு, கட்டுப்பாடும் வரைமுரையுமின்றி தன் பெண்பிள்ளைகளுக்கு அர்த்தமற்ற சுதந்திரத்தை அனுமதிக்கும் பெற்றோர்கள் இஸ்லாத்தையும், அதன் அழகிய வழி முறையையும் எடுத்து சொல்ல தவறிவிடுகிறார்கள். இதன் விளைவு இன்று எங்கு பார்த்தாலும், பள்ளி படிக்கும் மாணவி முதல் திருமணம் முடித்த பெண் வரை "காதலனுடன் ஓட்டம்" என்று செய்திகள் வெளியாவது கேட்பவர் நெஞ்சை பதை பதைக்கிறது.

இதுபோன்ற செயல்களுக்கு
இஸ்லாமிய அறிவை பெறாத பெற்றோரும் எப்படி காரணமாகிறார்கள் என்பதற்கும் பெண் பிள்ளைகளும் எப்படி பலியாகிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்துடன் அடுத்த பாகத்தில் சந்திப்போம்.. இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ்....

உங்கள் சகோதரி
யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன்