Wednesday, May 30, 2012

Sawthul Furqan: தொழிலில் உள்ள அக்கறை தொழுகையில் உள்ளதா?

Sawthul Furqan: தொழிலில் உள்ள அக்கறை தொழுகையில் உள்ளதா?:

இலங்கை மண்ணில் எத்தனையோ முஸ்லிம் ஊர்கள் உள்ளன. இவ்வூர்கள் அனைத்திலும் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள், தொழிற்சாலைகள் என வருமானத்தை ஈட்டித் தரும் இடங்கள் உள்ளன. இதே ஊர்களில் ஐவேளைத் தொழுகைகளுக்காக பள்ளிவாசல்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. தொழில் புரியும் இவர்களிடம் உரிய நேரத்தில் பள்ளிக்குச் சென்று தொழும் வழக்கம் மிகக் குறைவாகவே உள்ளது. பெரும்பாலானவர்கள் வெள்ளிக் கிழமை தினங்களிலும் கடைசி நேரத்தில் தான் வந்து சேருகின்றனர்.

அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக தொழுகை விசுவாசிகள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகும்.” (4:103)

எமது சமூகத்தில் உள்ளவர்களில் உரிய நேரத்தில் ஐவேளைத் தொழுகைகளை பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்கள் எத்தனை பேர்? தொழுகைக்காக அதான் கூறப்பட்டால் அதானுக்கு பதில் கூறி, அதானுக்குப் பின்னால் நபியவர்கள் கற்றுத் தந்த துஆவை ஓதுபவர்கள் எத்தனை பேர்? ‘தொழுகையின் பக்கம் விரைந்து வாருங்கள்’, ‘வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்’ என்று அழைப்பு விடுக்கப்பட்டதும் கடைகளை மூடிவிட்டு பள்ளிக்கு விரைபவர்கள் எத்தனை பேர்?
தொழுகை ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை அல்லவா? தொழுவதற்குரிய நேரத்தை ஊழியர்களுக்கு வழங்குவது, கடை உரிமையாளர்களின் பொறுப்பு அல்லவா?

அல்லாஹ்வுக்கு சுஜூத் செய்வதற்கு இம்மையில் போன்றே மறுமையிலும் மனிதர்கள் அழைக்கப்படுவர். இம்மையின் அழைப்புக்கு பதிலளிக்காதவர்கள், மறுமையின் அழைப்புக்கு பதிலளிக்கவும் சுஜூது செய்யவும் சக்தி பெற மாட்டார்கள் என்பதை பின்வரும் குர்ஆனிய வசனங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அல்லாஹ் கூறுகிறான்:
கெண்டைக்காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் அவர்களோ சிரம்பணிவதின் பால் அழைக்கப்படுவர். ஆனால், அவர்கள் சக்தி பெற மாட்டார்கள்.
அவர்களுடைய பார்வைகளெல்லாம் கீழ் நோக்கியவைகளாக இருக்கின்ற நிலையில் இழிவு அவர்களை சூழ்ந்து கொள்ளும். (இம்மையில்) சுகமானவர்களாக இருந்த சமயத்தில் சிரம்பணிந்து வணங்க நிச்சயமாக அவர்கள் அழைக்கப்படுபவர்களாக இருந்தனர்.” (68:42,43)


இந்நாடு முஸ்லிம் அல்லாதவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடாக இருந்தும் கூட சுதந்திரமாக அல்லாஹ்வுக்கு சுஜூத் செய்ய இடம் தரப்பட்டுள்ளது. முஸ்லிம் அல்லாத ஊர்களிலும் தொழுகையை நிறைவேற்ற அரசாங்கம் அங்கீகாரம் தந்துள்ளது. நிச்சயம் அல்லாஹ் இந்த அருட்கொடை பற்றியும் நம்மிடம் வினவாமல் விட மாட்டான் என்பதை மறந்து விடக் கூடாது.

பணம், பணம் என்று பணத்திலேயே நோக்கம் உள்ளவர்கள் தன் மரணத்தைப் பற்றி ஒரு கனம் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளனர். இம்மைக்காக சம்பாதித்தவை மரணத்தோடு முடிவடைந்து விடும். ஆனால், மறுமைக்காக சம்பாதிப்பவை மரணத்திற்கு பின்னாலும் நம்மோடு வரும்.
நாம் நமது தாயின் வயிற்றில் இருக்கும் போதே நமது ‘ரிஸ்கை’ அல்லாஹ் எழுதி விட்டான். அவன் தர இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. அவன் தடுப்பதை யாராலும் தரவும் முடியாது.

எனவே, பணத்தின் பக்கம் நெருங்குவதை விட பணத்தை தருகின்ற அல்லாஹ்வின் பக்கம் நெருங்குவோம். தொழிலை விட தொழுகையில் அக்கறை காட்டுவோம்.
அல்லாஹ்வின் பேரருளால் சில நல்ல மனிதர்கள் அதான் சொன்னவுடன் கடைகளை அடைத்து விட்டு பள்ளிக்கு விரைந்து விடுகின்றனர். இன்னும் சிலர் ‘CLOSED FOR PRAYER’  ‘தொழுகைக்காக மூடப்பட்டுள்ளது’ என போட் போடுகின்றனர். இவர்களது தொழிலில் அல்லாஹ் மெம்மேலும் அபிவிருத்தியை ஏற்படுத்துவானாக!

இப்படியானவர்களின் ஈமான் நிச்சயம் உயரத்தில் தான் இருக்கிறது. இவ்வாறான நல்ல மனிதர்களாக நாமும் மாற வேண்டும். பிறரையும் மாற்ற வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:
 ‘நிச்சயமாக அல்லாஹ் எந்தவொரு சமுதாயத்திற்குரியதையும் அவர்கள் தங்களுக்குரியதை மாற்றிக் கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ் (அதனை) மாற்றுவதில்லை.” (13:11)

நஸ்ரி ஜிப்ரி (ஸலபி), திஹாரிய.
njsrilanki@yahoo.com

Wednesday, May 30, 2012

இஸ்லாத்தை புரிந்துகொள்ளாத முஸ்லிம்கள்




தலைப்பு :இஸ்லாத்தை புரிந்துகொள்ளாத  முஸ்லிம்கள்
உரை நிகழ்த்துபவர் : அச் ஷேஹ் இஸ்ஹாக்  அப்பாஸி
திகதி : 18-05-2012
இடம்: மஸ்ஜிதுத்  தக்வா  பள்ளிவாயல் ,   காலி 
Jum'aa Bayan by M. Ishaq (Abbasi) on 18th. May, 2012 at Ath-Thaqwa Jum'aa Masjid, Moragoda, Galle
Subject: Islaaththai Purinthukollaatha Muslimkal



©2012, copyright Dharulhuda

Tuesday, May 29, 2012

ஈமானுக்கெதிரான ஷீஆவின் ஊடுறுவல்






காலத்திற்கு காலம் முஸ்லிம் சமூகத்திற்குள் வழிகெட்ட கொள்கைகள் ஊடுறுவது போல் இக்காலப்பகுதியில் ராபிளா என்னும் ஷீஆவின் வழி கெட்டகொள்கைகள் பரவி வருகின்ற அபாயத்தை காண்கிறோம்.

நம்நாட்டில் பல்வேறு இயக்கங்கள் ஜமாஅத்கள் உள்ளன. இந்த ஜமாஅத்களுக்கிடையில் இயக்கரீதியான வேறுபாடுகள் காணப்பட்டாலும் ஒரே அல்லாஹ் ஒரே குர்ஆன் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் என்பதில் எக்கருத்துவேறுபாடும் கிடையாது. முழு முஸ்லிம் உலகமும் ஏற்றிருக்கின்ற ஹதீஸ் கிரதங்கள் ஒன்றே என்பதிலும் முரண்பாடுகளில்லை. சஹாபாக்கள் சுவனவாசிகள் என்பதிலும் சந்தேகங்கள் இல்லை. ஆனால் ராபிளா ஷீஆவை பொருத்தவரை இக்கோட்பாடுகளை மொத்தமாகவே நிராகரிக்கின்றனர். இஸ்லாம் என்ற பெயரில் ஷீஆ என்ற மதப் பிரிவை உண்டு பண்ணி அந்த மதத்தை ஏற்றுக் கொண்டவர்களே உண்மையான முஸ்லிம்கள் என்றும் ராபிளிகளான ஷீஆ அல்லாதவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்றும் கூறுகின்றனர்.

இப்புனித மார்க்கத்தை கட்டிகாப்பதற்கும் வளர்ப்பதற்கும் மண்ணில் நிலைநாட்டுவதற்கும் தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் தங்களது பொருளாதாரத்தையும் அர்ப்பணித்தவர்கள் தான் சஹாபாக்கள். அல்லாஹ்வையும் அவனது இறுதித்தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்களையும் ஈமான் கொண்ட ஒரே காரணத்திற்காக காபிர்களின் நிந்தனைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாகி உயிர்களை இழந்தவர்கள் உடமைகளை துறந்தவர்கள். உடுத்த ஆடைகளுடன் மேடுபள்ளங்களை கடந்து இரவு பகலாக பயணித்து அகதிகளாக அநாதைகளாக மதீனாவில் தஞ்சம் புகுந்து தூய மார்க்கத்தை வளர்த்தவர்கள் சஹாபாக்கள்.

இந்த உத்தமர்களின் செயற்பாடுகளை அல்லாஹ் பொருந்திக் கொண்டு அவர்கள்தான் உண்மையான முஃமின்கள் வெற்றியாளர்கள் சுவனத்தின் வாரிசுகள் என்று போற்றி புகழ்கிறான். தியாகத்தின் செம்மல்களான இந்த சஹாபாக்களை முனாபிக்குகள் நயவஞ்சகர்கள் அனியாயக்காரர்கள் முர்தத்கள் என்று இந்த ராபிளா ஷீஆக்கள் தூற்றுகிறார்கள் சபிக்கிறார்கள். “ராபிளாகள்” என்று அழைக்கப்படுவதற்கு பிரதான காரணமே அவர்கள் சஹாபாக்களை முஃமின்கள் என்று அழைக்க மறுத்ததேயாகும். இந்த உம்மத்தில் சஹாபாக்களை முஃமின்கள் என்று அழைக்காது விட்டால் வேறுயாரைத்தான் அழைப்பது? ஷீஆவின் உண்மையான கொள்கைகள் என்ன என்பதை அறியாத அப்பாவிமக்களும் படித்தவர்களும் ஊடகவியலாளர்களும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

ஷீஆவின் தோற்றம்
நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி சுமார் 30 வருடங்களுக்கு பின் உருவானதுதான் இந்த ராபிளா எனும் ஷீஆ பிரிவாகும். சன்ஆ எனும் பகுதியில் வாழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஸபா என்பவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக கூறி முஸ்லிம்களுக்குள் ஊடுருறுவினான். பிறப்பின் அடிப்படையில் இவன் ஒரு யஹூதி. இவனால் தோற்று விக்கப்பட்ட பிரிவு தான் ஷீஆவாகும். அரசியல் லாபம் தேடி ஒற்றுமையாக ஒரே உம்மத்தாக உஸ்மான்(ரலி) அவர்களது தலையின் கீழ் ஒன்றுபட்டிருந்த இஸ்லாமிய சமூகத்தை பிளவுப்படுத்தி கலவரத்தை உண்டுபண்ணி இரத்தத்தை ஓட்டி பிரித்தாளும் சூழ்ச்சியை நடைமுறைப்படுத்தியவனாவான். இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அன்று உருவாக்கிய இரத்தக் களரி இன்றுவரை ஷீஆ சுன்னி என்று ஓடிக்கொண்டிருக்கிறது.

ஷீஆக்கள் (அலி) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஆதரவு தெரிவிப்பதாகவே அரசியல் பிரவேசம் செய்தனர். அதாவது நபி (ஸல்) அவர்களுக்கு பின் அலி (ரலி) அவர்கள்தான கிலாபத் (இமாமியத்) பொறுப்புக்குரியவர். அதனை அபூபக்கர் உமர் தட்டிப்பறித்து விட்டனர். இவர்கள் அலி(ரலி)க்கு அநீதி இழைத்து விட்டு அலியிடம் மன்னிப்புக் கோராமலே மரணித்து விட்டனர். எனவே அவர்கள் இருவரும் மீதும் அல்லாஹ்வினதும் மக்களினதும் சாபம் உண்டாகட்டும் என சபிக்கின்றனர் (நூல்.அல்காபி:8-245)

ஷீஆக்களின் இந்த பிரச்சாரத்திற்கும் அலி(ரலி) அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வில்லை. சஹாபாக்களான அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) உஸ்மான் (ரலி)ஆகிய யாருக்கு எதிராக குறைகூறி வசைப்பாடுகின்ற பணியை ஆரம்பித்து வைத்து பித்னாவை உண்டுபண்ணிய யூதனான அப்துல்லாஹ் இப்னு ஸபாவை அலி(ரலி) அவர்கள் பிடித்து மரணதண்டனை வழங்கியபோது அவனுக்காக சிலர் பரிந்து பேசிய போது மதாஇன் எனும் பகுதிக்கு நாடு கடத்தினார்கள்.

அலி(ரலி) மரணித்து விட்டார்கள் என கூறிய போது இல்லை இல்லை அலி மரணிக்கவில்லை. அவர் மரணித்து விட்டார் எனக் கூறி அவருடைய மூளையை கொண்டுவந்து 70 பேர் சாட்சி சொன்னாலும் ஏற்க மாட்டேன்.அவர் மேகத்தில் இருக்கிறார். இடி அவரது ஓசை. மின்னல்அவரது பார்வையாகும். என இந்தஅப்துல்லாஹ் இப்னு ஸபா கூறினான். ஷீஆக்களின் இக் கொள்கையை ஸபஈய்யா என அழைக்கப்படும்.

அலி(ரலி) அவர்களுக்கும் அபூபக்கர்ரலி) உமர் (ரலி) மற்றும் ஏனைய சஹாபாக்களுக்குமிடையில் சிநேகபூர்வமான நட்பும் நேசமும் இருந்ததே தவிர யூத ஷீஆக்கள் கூறுவது போல் பகைமை இருந்ததில்லை.

உமர் (ரலி) வபாத்தாகி அவர்களுடைய ஜனாஸாவை சுமப்பதற்கு தயாரான போது அவ்விடத்தில் அலி(ரலி)அவர்கள் கூறிய வார்த்தைகள் உள்ளத்தை உருகச்செய்கிறது. “உமரே!அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக. உமரே, உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வை சந்திப்பதற்கு முன்மாதிரியாக நான் விரும்பி ஏற்கத்தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்களான (நபி(ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்கர் (ரலி) ஆகிய இருவருடனும் தான் (அவர்களின் மண்ணறைக்கு அருகில்) அடங்கச் செய்வான் என்று எண்ணியிருந்தேன். ஏனெனில் நபி (ஸல்)அவர்கள் நானும் அபூபக்கர் உமரும் சென்றோம் என்றும் நானும் அபூபக்கரும் உமரும் புறப்பட்டோம் என்றும் சொல்வதை நான் நிறையச் செவியுற்றிருக்கின்றேன். என்றார்கள். (நூல்:புகாரி 3685) அலி (ரலி) அவர்களின் இவ்வார்த்தைகளை ஷீஆக்கள் மறைத்து விட்டு அபாண்டங்களையே அள்ளி வீசுகிறார்கள்.

சஹாபாக்கள் மதம் மாறியவர்களாக சித்தரிக்கும் ஷீஆக்கள்

இந்த உம்மத்தின் அதி சிறந்த உத்தமர்களான சஹாபாக்களை நாம் மதிக்கிறோம். ஆனால் இலட்சக்கணக்கான சஹாபாக்களை குறைகூறியதுமட்டுமல்லாமல் அவர்களில் ஸல்மான் பாரிஸி (ரலி) மிக்தாத் இப்னு அஸ்வத் (ரலி) அபூதர்கிபாரி (ரலி) ஆகிய மூவரைத்தவிர மற்ற அனைத்து சஹாபாக்களும் நபி(ஸல்) அவர்களின் வபாத்திற்குப்பின் மதம் மாறிவிட்டார்கள் (நூல்:ரிஜாலுல் கிஷ்ஷி பக்கம் 37. உசூலுல் காபி பாகம் 2. பக்கம் 243 பிஹாருல் அன்வார்.

ஆண்களில் நான்கு சிலைகளும் பெண்களில் நான்கு சிலைகளும் உள்ளன.அபூபக்கர் உமர் உஸ்மான் முஆவியாஆகியோர் ஆண் சிலைகளாவர். ஆயிஷா ஹப்ஸா ஹிந்து உம்முல்ஹகம் ஆகியோர் பெண் சிலைகளாவர். நிச்சயமாக இந்த பூமியின் மேல் அல்லாஹ்வின் படைப்புக்களில் இவர்களே மிகவும் மோசமானவர்கள். அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் (ஷீஆ) இமாம்களையும் நம்பக்கூடியவர் இவர்களை தங்களுடைய எதிரிகளாக நம்பாத வரை ஈமான் பூர்த்தியடையாது என்பது எங்களது (ஷீஆ) கொள்கைகளில் உள்ளதாகும்.(நூல்:ஹக்குல் யகீன் பக்கம்.519) ஆயிஷாவும் ஹப்ஸாவும் மோசமான நடத்தைக் கெட்ட பெண்களாவர் (நூல்: தப்ஸீருல் கும்மி பாகம்2.பக்கம்.377) நபி(ஸல்)அவர்களின் மனைவிமார்கள் முஷ்ரிக்குகளாவர். அவர்களுடன் இணைந்ததற்காக நபியின் அபம் நரகம் நுழையும் ;(நூல்:பஷ்புல் அஸ்ரார் பக்கம் 24 உமர்(ரலி) அவர்களை கொலை செய்த இறை நிராகரப்பாளரான மஜூஸி அபூலுஃலுஃ என்பவனை “இஸ்லாத்தின் வீரன்” என புகழுhரம் சூட்டுகின்றனர்.(நூல் :ஹக்துல்துரர் பீ பத்னி பக்ரி உமர் பக்கம்107

நீங்கள் ஸஹாபாக்கள் என கூறும் அவர்கள் நயவஞ்சகர்கள் முனாபிக்குகள். ஏன ஆயதுல்லாஹ் குமைனி கூறுகிறார்.(நூல்:உகூமதுல் இஸ்லாமிய்யா பக்கம் 69)

இஸ்லாத்தின் தூண்களாக நின்று சுவனத்து சொந்தங்களாக வாழ்ந்த சஹாக்களையும் நபிகளாரின் மனைவிமார்களையும் படுமோசமாக விமர்சிக்கின்றனர். நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் முஃமின்களின் தாய்மார்கள் என குர்ஆன் கூறுகிறது. (33:6) இதற்குமாற்றமான கருத்துக்கள் யூதனுடைய உள்ளத்தில் தோன்றுமே தவிர நல்லவர்களின் சிந்தனையில் ஒருபோதும் உதிக்காது.

சஹாபாக்களை காபிர்களாக்கிய பிறகு இஸ்லாத்தின் நம்பகத்தன்மை எங்கே நிற்கப்போகிறது.?யாரிடமிருந்து இஸ்லாத்தை ஏற்பது? எல்லாமே புஸ்வனமாகிவிடும். அல்குர்ஆன் அல்ஹதீஸ் அனைத்தும் போலியானதாக மாறிவிடும்.புதிதாக மார்க்கத்தை உருவாகிட வேண்டும். இந்த விஷமத்தனத்தைத்தான் இவர்கள் செய்தார்கள்.

புதிய மாரக்கம் -கலிமா
இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை நாசப்படுத்தி விட்டு ஷீஆக்கள் புதிய கொள்கை பிரச்சாரத்தை உருவாக்கினர். இன்னுமொருவார்த்தையில் கூறினால் நபிகளார்(ஸல்) அவர்கள் போதித்த மார்க்கத்தின் அத்திவாரத்தையே பிடுங்கி எறிந்து விட்டு புதிய மார்க்க போதனைகளையும் அடிப்படைகளையும் தோற்றுவித்தனர்

இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. 1கலிமா 2.தொழுகை 3.நோன்பு 4.ஜகாத் 5..ஹஜ்.இது தான் முஸ்லிம்களின் அடிப்படை கொள்கை இதனை அப்படியே மாற்றிவிட்டு இஸ்லாம் ஐந்து விடயங்ளின் மீது நிறுவப்பட்டுள்ளது. 1.தொழுகை 2.நோன்பு 3.ஜகாத் 4..ஹஜ் 5.விலாயத் அலி. (அலியின் தலைமைத்துவத்தை ஏற்பது) இந்த ஐந்தில் விலாயத்து அலியே மிகச் சிறந்தது என்கிறார்கள்.(நூல் அல்காபி)

கலிமாவுக்கு மாற்றமாக அலி(ரலி) அவ்களின் கிலாபத் (ஆட்சி) பொறுப்பே ஈமானின் முதல் அம்சம் என்று மாற்றியதன் மூலம் சஹாபாக்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களையும் காபிர்களாக்கிவிட்டனர். நபி(ஸல்) அவர்கள போதித்த கலிமாவை ஓரம்கட்டிவிட்டார்ககள்.

அல்குர்ஆனில் மாற்றம்:
உலக முஸ்லிம்களிடம் காணப்படும் குர்ஆனில் உண்மை இல்லை என்றும் அதில் சஹாபாக்கள் கூட்டல் குறைவுகள் செய்து திரிபுபடுத்தி விட்டனர் என்றும் 17ஆயிரம் வசனங்களை கொண்ட குர்ஆனை ஜிப்ரீல் நபியவர்களுக்கு இறக்கிவைத்தார்கள் (நூல் அல்காபி. பாகம்2 பக்கம்234) என்றும்ஷீஆக்கள் கூறுகின்றனர். “நம்மிடம் முஸ்ஹஃப் பாத்திமா என்ற குர்ஆன் இருக்கின்றது. அது உங்களின் குர்ஆனை விட மூன்று மடங்iகுயுடையது. அதில் உங்கள் குர்ஆனில் உள்ள ஒரு எழுத்துக்கூட இல்லை என்கிறார்கள் .(நூல்: அல்காபி பாகம்.2 பக்கம் 597)

முஸ்லிம்களுடைய குர்ஆனை விட வித்தியாசமான ஆயிரக்கணக்கான வசனங்களைக் கொண்ட குர்ஆனை வைத்துள்ளார்கள் என ஒப்குதல் வாக்குமூலம் தருகிறார்கள். அக் குர்ஆனுக்கான தப்ஸீர்களையும் இவர்களே எழுதிவைத்துள்ளனர். சஹாபாக்கள் குர்ஆனில் மோசடி செய்த பாவிகள் என்கிறார்கள்.

ஹதீஸ்களை நிராகரித்தல்:
நபி(ஸல்) அவர்கள் மூலமாக சஹாபாக்கள் அறிவித்த ஹதீஸ்களையோ முஸ்லிம்உம்மத ஏற்றுக் கொண்டுள்ள சஹீஹூல் புகாரி முஸ்லிம் இப்னுமாஜா திர்மிதி அபூதாவுத் நஸாயீ முஅத்தா முஸ்னத் அஹ்மத் போனற் ஹதீஸ் நூற்களையோ அவைகளை எழுதிய இமாம்களையோ ஷீஆக்கள் ஏற்கமாட்டார்கள். இந்த உம்மத் ஏற்று மதிக்கின்ற இமாம்களான மாலிக்(ரஹ்) அபூஹனீபா ஷாபி(ரஹ்) அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்)போன்ற எந்தவொரு இமாமையும் அங்கீகரிக்கமாட்டார்கள். இதற்கு மாற்றமாக ஷீஆவின் பரம்பரையில் வந்த பெரியார்களையே இமாம்களாகவும் அவர்கள் சொன்ன செய்திகளையே ஹதீஸ்களாகவும் ஏற்று பின்பற்றுவார்கள். முஸ்லிம்கள் மதிக்கின்ற அஹ்லுல்பைத்கள் சம்பந்தமாக வரக்கூடிய ஹதீஸ்களை மட்டும் எமது ஹதீஸ் நூற்களிலிருந்து எடுத்துக் காட்டி அலி(ரலி) பாதிமா (ரலி) ஹஸன்(ரலி) ஹூசைன் (ரலி) ஆகியோரை நாமும் மதிக்கிறோம் ஷீஆவும் சுன்னியும் ஒரே விடயத்தைத்தான் பேசிவருகிறோம் என மழுப்புவார்கள். ஆனால் அந்த ஹதீஸ்களை அறிவித்த சஹாபாக்களை “ரலியல்லாஹூ அன்ஹூ” என கூறவும்மாட்டார்கள்.நபிகளாரின் குடும்ப அங்கத்தினரை-மனைவிமார்களை- அஹ்லுல்பைத் களாக ஏற்கமாட்டார்கள்.

12 இமாம்களை நம்புதல்:
அலி(ரலி) அவர்களின் குடும்பத்தின் பரம்பரையில் வந்ததாக கூறப்படும்12 பேர்களை மட்டுமே இமாம்களாக மதிப்பர். இந்த இமாம்கள் பாவத்தை விட்டும் பரிசுத்தமானவரக்ள தவறு மறதியை விட்டும் அப்பாற்பட்டவர்கள். மறைவான ஞானம் பெற்றவர்ககள். இந்த உலகத்தில் நடந்துமுடிந்தவை நடந்து கொண்டிருப்பவை இனி நடக்க போகின்றவை பற்றிய ஞானம் உடையவர்கள். “ஒருவர் ஒரு திர்ஹத்தை கையில்வைத்து புறட்டுவது போல் இமாம் இப்பரபஞ்சத்தை புறட்டுகிறார்கள் என்றும் வாரத்தின் இருமுறை படைப்பினங்களின் அமல்களை மலக்குகள் இமாமிடத்தில் எடுத்துக் காட்டுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

ஷீஆ புரட்சியின் சிற்பி என வர்ணிக்கப்படும் ஆயதுல்லாஹ் குமைனி இவ்வாறு கூறுகிறார்: “நமது இமாம்களுக்கு இருக்கும் அந்தஸ்து அல்லாஹ்வின் நெருக்கத்திற்குரிய மலக்கோ அல்லது அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட நபிக்கோ கிடையாது என்பது நமது கொள்கையில் (ஷீஆ மத்ஹபில்) அவசியம் அறிந்திருக்க வேண்டியதாகும் (நூல்:ஹூகூமதுல் இஸ்லாமிய்யா பக்கம் 52.) மலக்குகள் மற்றும் நபிமார்கள் அடைந்து கொள்ளாத சிறப்புகளை ஷீஆஇமாம்களுக்கு உண்டு என்று கூறுவதன் மூலம் ஈமானை பால்படுத்துகின்ற கொள்கையுடையவர்கள் என்பது மிகவும் தெளிவானது.அல்லாஹ்விடத்தில் அமல்களை காண்பிப்பதை விட இமாம்களிடத்தில் காண்பிக்கப்படுகிறது என்றால் அல்லாஹ்வுக்கு எந்த வேளையுமில்லை. மதிப்பும் இல்லை என்கிறார்கள்.

மேலும் குமைனி கூறுவதை கேளுங்கள்: “நபிமார்கள் அனைவரும் நீதியை நிலைநாட்டுவதற்காகவே வந்தனர். ஆனால் அதில் அவர்கள் வெற்றிப் பெறவில்லை.(தோழ்வி கண்டனர்.) மனித குலத்தை சீர்திருத்த வந்த இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூட தோல்வியைத்தான் சந்தித்தார்கள்”

எல்லா நபிமார்கள் தோழ்விஅடைந்து விட்டார்கள் இஸ்லாத்தை நிலை நாட்டி எத்திவைப்பதில் நபி(ஸல்) அவர்களும் தோழ்வி அடைந்து விட்டார்கள் என்றால் இந்த இஸ்லாம் பூரணத்துவமற்ற நீதியை நிலை நாட்டதவறிய மார்க்கம் அல்லாஹ் இம்மார்க்கத்தை குறைவுள்ளதாக ஆக்கியுள்ளான் என சாடுகிறார் குமைனி;. இவர்கள் உருவாக்கிய மார்க்கத்தை பார்த்தீர்களா? இப்போது சொல்லுங்கள் இவர் ஈரானில் ஏற்படுத்தியது இஸ்லாமிய புரட்சியா? ஷீஆ புரட்சியா? இவரையா “இமாம்” என்று அழைப்பது?

இமாம்களின் மறு பிறப்பு:
இந்த உலகத்தில் மரணிக்கின்ற எவரும் திரும்பி வரபோவதில்லை என்பது தான் இஸ்லாத்தின் கொள்கையாகும். ஆனால் ஷீஆக்கள் மரணித்துப் போன தங்களுடைய இமாம்கள் திரும்பி வந்து நீதியை நிலை நாட்டுவார்கள் என கூறி “மறு பிறப்பு” சிந்தனையை தோற்றுவித்தனர். அவர்களது 12வது இமாமாக கருதும் அல்மஹ்தி எனப்படும் முஹம்மத் இப்னு ஹஸன் அல்அஸ்கரி என்பவர் ஹிஜ்ரி 256-ல் பிறந்து ஐந்தாம் வயதில் ஒரு குகையில் மறைந்து விட்டார். இவர் திரும்பி வந்து நீதியை நாட்டுவதுடன் அபூபக்ர் (ரலி) உமர்(ரலி) ஆயிஷா (ரலி) ஆகியோரை எழுப்பி தண்டிப்பதுடன் மேலும் பலசஹாபாக்களுக்கெதிராக பழி தீர்ப்பார்கள் என் கூறுகிறார்கள்.(நூல்:இய்காலு மினல் ஹஜ்இதி)

ஷீஆக்களில் முப்தி ஒருவர் பேசும் போது “நாங்களும் (சுன்னிகளாகிய) நீங்களும்; ஒரே உம்மத்தாக இருக்கிறோம். இது எதுவரை என்றால் (எதிர்பாரக்கப்படும் மஹ்தியான ஹஸன் இப்னு ஹஸ்கரி) இமாம் வரும் வரையாகும். அவர் வாளுடன் வந்து விட்டால் நீங்கள் ஒரு சமூகமாவும் நாங்கள் வேறொரு சமூகமாகவும் ஆகிவிடுவோம் எனறார் (ஆதாரம்:. அல்புர்ஆன் . தொலைக்காட்சி நிகழ்ச்சி)

வெளிப்படையில் ஒற்றுமையைப்பற்றி கோஷம் எழுப்புகின்றவர் உள்ளுக்குள் எந்தளவு குரோதத்துடனும் வைராக்கியத்துடனும் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

அல்லாஹ் அறிவுடையவன் அல்ல. அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்த ஞானமுள்ளவன் என்பது முஸ்லிம்களாகிய எங்களது விசுவாசமாகும். ஆனால் ஷீஆவின நம்பிக்கை அதற்கு மாற்றமானது. “உலகில் நடைப்பெறுகின்ற எந்தவொரு நிகழ்வும் நடைப்பெற்ற பின்புதான் அல்லாஹ்வுக்கு தெரியவரும். அதற்கு முன்பு அவனுக்கு தெரியாது இதனை “அல்பதா” என அழைக்கப்படும் என கூறுகின்றனர். “மதுபானம் அருந்துதல் ஹறாம் என்றும் அல்லாஹ்வுக்கு “பதா” ஏற்படுதல் நிச்சயம் உண்டு என்றும் சொல்லாத எந்த நபியையும் அல்லாஹ் அனுப்பவில்லை. (நூல்:அல்காபி பாகம் 1 பக்கம்148)

அதாவது அல்லாஹ் அனைத்தும் அறிந்த ஞானமுள்ளவன் அல்ல என்று அறிவிப்பதற்கு நபிமார்களை அனுப்பிவைத்தானாம். நஊது பில்லாஹ்!

முத்ஆ (விபச்சாரம்):
ஒரு பெண்ணை குறிப்பிட்ட காலம் வாடகைக்கு அமர்த்தி இன்பம் அனுபவிப்பதை முத்ஆ எனப்படும். இந்த முத்ஆவை நபி(ஸல்)அவர்கள் கைபர் யுத்தத்தின் போது அல்லது பத்ஹூ மக்காவின்போது தடைசெய்தார்கள்.(நூல் முஸ்லிம்)

ஆனால் ஷீஆக்கள் முத்ஆ (விபச்சாரத்தை) வாழ்கையில் ஒரு முறையேனும் செய்யவேண்டும் என ஊக்குவிக்கிறார்கள். முத்ஆ செய்யாமல் மரணிப்பவன் மறுமையில் ஊன முற்றவனாக பிறப்பான் என்றும் முத்ஆ செயதவன் குளிக்கும் போது அவனுடைய உடலிலிருந்து சொட்டுகின்ற ஒவ்வொரு நீர் துளிக்கும் 70 மலக்குகள பாவமன்னிப்புக் கோருவதுடன் முத்ஆசெய்யாதவனுக்கு மறுமைநாள் வரை சபிக்கின்றனர் என்கின்றனர். (நூல்:முன்தஹல்ஆமால்:2-341) விபச்சாரத்தை கூட இவர்கள் விட்டுவைக்கவில்லை. ஹராமான பிறப்பில் குழந்தைகளை உற்பத்திசெய்வதில் எத்துனை அக்கறை இவர்களுக்கு!

தனிமனித வழிபாடு:
இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ள தனிமனித வாழிபாடு மற்றும் கப்ருவணக்கத்தை ஷீஆக்கள் ஆகுமாக்கினர். குமைனியுடைய கப்ரை புனித கஃபதுல்லாஹ் போன்று கட்டி புனிதப்படுத்தி வணங்குவதும் கர்பலா எனும்பகுதியில் ஹூசைன்(ரலி) அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மண்ணை புனிதமாகக் கருதி அந்த மண்ணால் செய்யப்பட்ட உருண்டையின் மீது சுஜூது செய்தும் வழிபடுவர். ஆஷூராவுடைய தினத்தை துக்கதினமாக பிரகடனப்படுத்தி அன்றைய நாளில் கர்பலாவில் ஒன்றுதிரள்வதை ஹஜ் செய்வதை விட உயர்ந்த கிரிகையாக கூறுவர்.

“யார் ஹூசைன் (ரலி)யின் கப்றை தரிசிக்கிறாரோ அவருக்கு 20 ஹஜ் உம்ரா செய்வதை விட சிறப்பானதாகும்.(நூல்: நூருல் ஐன் பக்கம் 253)

அந்த நாளில் சஹாபாக்களை திட்டி சபிப்பதுடன் கூரிய ஆயுதங்களாலும் சவக்கையினாலும் தங்களை அடித்து கீறிக் கிழித்துக் கொண்டு இரத்தத்தை ஓட்டி காட்டுமிராண்டித்தனமாக நடப்பர்.



தக்யா:
ஷீஆவின் மதகொள்கைகளை சுன்னி முஸ்லிம்களிடமோ ஏனையவர்களிடமோ வெளிக்காட்டாது வெளிப்படையில் தங்களையும் முஸ்லிம்களாக காட்டிக் கொண்டு நடிப்பதற்கே தக்யா எனப்படும். இதனை ஒவ்வொரு ஷீஆவும் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும். “தக்யா இல்லாதவனுக்கு (ஷீஆ) மாரக்கம் இல்லை. (நூல்: உசூலுல் காபி 2-220.) இது தெளிவான நயவஞ்சக்தை தவிர வேறு ஒன்றுமில்லை. இந்த நயவஞ்சகத்துடன் தான் அன்றும இன்றும் முஸ்லிம்களுக்குள் ஊடுறுவி ஈமானை நாசப்படுத்தி கூறுபோடுகிறார்கள்.

1980-ம் ஆண்டுகளில் (ஈரானிய புரட்சிக்குப்பின்) இலங்கை நாட்டில் ஷீஆவை ஜஃபர் சாதிக் என்ற பெயரில் 5-வது மத்ஹபாக அங்கீகரிக்க வேண்டுமென கோரியபோது அதனை அன்றிருந்த உலமாக்கள் மனதுணிவுடன் பலமாக கண்டித்ததுடன் ஷீஆவின் சீர்கேடுகளை விளக்கப்படுத்தி துண்டுபிரசுரங்கள் மற்றும் நூற்கள் வெளியிட்டனர். மர்ஹூம் றுஹூல் ஹக் மவ்லவி அவர்கள் ஷீஆவும் சுன்னாவும் எனும் நூலை மொழிப்பெயர்த்து இலங்கை வாழ்முஸ்லிம்களுக்கு கிடைக்கக்கூடியதாக செய்தார்கள். இந்நூலில் ஷீஆவின் விபரீதங்கள் மற்றும் சீர்கேடுகள் மிகவும் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளன. இந்நூலை பாகிஸ்தனை சேர்ந்த மர்ஹூம் இஹ்ஸான் இலாஹி அவர்கள் அரபியில் எழுதிய போது ஷீஆக்கள் அவரை அணுகி வாபஸ் பெறுமாறு கோரினர். அவர்மறுத்து விடவே குண்டு வைத்து கொன்றனர். இந்த நாட்டில் ஷீஆக்களுக்கு கிடைத்திருக்கின்ற அரசியல் ரீதியான நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டு பொதுபணிகள் ஊடாக முஸ்லிம்களை அணுகுகின்றனர். வீடமைப்புத்திட்டம் வழங்குதல் மீலாத்விழாக்களில் பங்குபற்றுதல் ஈரானுக்கு புலமைப்பரிசில் வழங்குதல் சுற்றுலா அழைத்துச் செல்லுதல் ஹஜ் உம்ரா கருத்தரங்குகளை நடாத்துதல் மத்ரஸாக்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு உதவி புரிதல் சஞ்சிகைகள் வெளியிடுதல் போன்ற காரியங்களை செய்து முஸ்லிம்களின் நம்பிக்கைகளை பெற முயல்கின்றனர்.

ஷீஆவின் ஆபாயத்தையும் ஈமானுக்குவேட்வைக்கும் கொள்கையைப்பற்றியும் மக்கள் முன் வைக்கும் போது அதிலிருந்து திசைதிருப்பும் முகமாக ஷீஆ சுன்னி பற்றி பேசுகின்ற நேரமா இது. முஸ்லிம்களுக்கெதிராக எதிரிகள் ஒன்றுதிரளும் போது வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவோம் என கோஷம் எழுப்புவார்கள். இஸ்லாம் இருக்கும் வரை இஸ்லாத்தின் எதிரிகள் இருக்கவே செய்வர். அதனை முறியடிக்க தூய்மையான ஈமான்தாரிகளும் தயாராகவே இருப்பர். எங்கள் உயிரினும் மேலான நபி(ஸல்) அவர்களையும் அவர்களது அருமைத் தோழர்களையும் மனைவிமார்களையும் துச்சமாக மதித்து கொச்சைப்படுத்துகின்றவர்களுடன் இஸ்லாத்தை பணயம் வைத்து கைகுலுக்க வேண்டிய தேவை எமக்கில்லை. வெளிப்படையான எதிரிகளை விட உள்ளே இருந்து குறிபறிக்கும் இந்த எதிரிகளே எப்போதும் ஆபத்தானவர்கள்.

கடைசியாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தற்போதைய தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்லி முப்தி அவர்கள் “ஷீஆயிஸம் அதன் கொள்கைகளும் உட்பிரிவுகளும்” எனும் நூலுக்கு வழங்கிய அணிந்துறையில் ஷீஆ பற்றி குறிப்பிட்டதை முன்வைக்கிறேன்.: ஷீஆ-அப்துல்லாஹ் இப்னு சபா என்ற யூத அறிஞனால் உருவானது. அவன் முஸ்லிம் சமூகத்தை பிரித்தாள சதி செய்தான் என்றும், இஸ்லாத்திற்கு முரண்பட்ட பல கோட்பாடுகளை கொண்டு ஷீஆக்கள் இயங்கி வருகிறனர் அவர்கள் எங்களிடம் உள்ள குர்ஆனை நிராகரித்து வேறொரு குர்ஆனை வைத்துக் கொண்டு அதுதான் உண்மையானது என வாதிடுவது ஸஹாபாக்களை தூற்றி வசைப்பாடுவதும் அடங்குகிறது. எனவே இத்தகைய வழிகெட்ட கொள்கைகளைக் பற்றி பலரும் கிதாபுகளை எழுதி உம்மத்தை அந்த வழிகேட்டிலிருந்து பாதுகாக்கின்றார்கள் என்றும் எழுதியுள்ளார்கள். அல்லாஹ் அவருக்கு அருள்புரிவானாக!

அன்புக்குரிய முஸ்லிம்களே!

சொல்லிவைப்பது எமது கடமை. புரிந்து கொள்வது உங்கள் கடமை.



 எழுதியவர்மௌலவி M.S.M. இம்தியாஸ் ஸலஃபி 

Tuesday, May 29, 2012

மனிதகுல வெற்றி மனுநீதியில் உண்டா?

இன்று மனித குலம் அழிவின் விளிம்பில் நிற்கிறது. மனித குலத்தைச் சீரழிவில் சிக்க வைக்கும் அனைத்துச் சீர்கேடுகளும் இன்று மனிதர்களிடம் நீக்கமறக் காணப்படுகின்றன. நான்கு கால் மிருகங்களிடம் காணப்படாத ஒழுக்கக் கேடுகள் இன்று இந்த இரண்டு கால் மிருகங்களிடம் காணப்படுகின்றன. மிருகங்களில் எந்த மிருக இனமாவது ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அல்லது நீங்கள் கேள்விப்பட்டாவது இருக்கிறீர்களா? இருக்கவே முடியாது.

ஐயறிவு மிருகங்களை விட இழி நிலை!
ஐயறிவுள்ள மிருக இனங்களே செய்யத் துணியாத ஒரு மிகமிக ஈனச் செயலை ஆறு அறிவு மனிதன் செய்கிறான் என்றால், அதுவும் அரசுகளும், நீதி மன்றங்களும் அது தனி மனித உரிமை(?) என்று கூறி அதைச் சட்டமாக்குகிறார்கள் என்றால், மனித இனம் மிருக இனத்தைவிட மிகவும் கேடுகெட்ட இனமாக ஆகி விட்டது என்பதில் சந்தேகமுண்டா?

ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும், நீதியை நிலைநாட்டக் கடமைப்பட்ட நீதிபதிகளும் எந்த அளவு ஒழுக்கக் கேடுகளிலும், ஊழல்களிலும், லஞ்ச லாவண்யங்களிலும் முங்கிக் குளிக்கிறார்கள் என்பதற்கு இந்த ஒழுக்கக்கேடான ஓரினப் புணர்ச்சியை சட்டமாக்கி நடைமுறைக்குக் கொண்டு வந்ததே போதிய ஆதாரமாக இருக்கிறது. மனித இனம் இதற்கு மேலும் சீரழிவதற்கு ஒன்றுமே இல்லை என்று துணிந்து கூறிவிட முடியும். ஆக மனித இனம் அழிவின் விளிம்பில் அதாவது நரக விளிம்பில் நிற்கிறது என்பதில் அணுவளவும் சந்தேகமே இல்லை. மனிதன் மிருகத்திலும் கேடுகெட்ட ஒரு நிலைக்கு கீழ் இறங்குவதற்குக் காரணம் என்ன?

பகுத்தறிவாளர்கள் கடமை!
சிந்தித்துச் சீர்திருந்த சீர்திருத்த உண்மையான பகுத்தறிவாளர்கள் கடமைப்பட்டிருக்கிறார்களா? இல்லையா? அல்லது அவர்களும் பகுத்தறிவாளர்கள் என்று பீற்றிக்கொண்டு பகுத்தறிவான ஆறாவது அறிவைப் பறிகொடுத்துவிட்டு, ஐயறிவு மிருக வாழ்விலும் கேடுகெட்ட ஒரு வாழ்க்கையை வாழத் துணிந்து விட்டார்களா?

மனுநீதி!
மனிதன் தனக்குத்தானே சட்டம் வகுத்து அதன் படி நடப்பதால்தான் இந்த இழிநிலையை அடைந்துள்ளான். திருடனும், கொலைகாரனும் அவன் செய்த குற்றச்செயல்களுக்குச் சட்டம் இயற்றித் தீர்ப்பளித்தால், பரீட்சை எழுதியவனே, தான் எழுதியதைத் தானே திருத்தி வெற்றி தோல்வியை முடிவு செய்தால் அவை எப்படி உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பானவையாக இருக்குமோ, அதை விட மிகமிக அதிகமாகவே உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பாகவே மனுநீதி இருக்கும் என்பதில் சந்தேகமுண்டா?

இந்துக்களிடமுள்ள மனுநீதி!
இதற்கு இன்று இந்து மக்களிடையே அமுலில் இருக்கும் மனுநீதியே போதிய சான்றாகும். இறைவன் கொடுத்த நேர்வழி மனுநீதியாக இந்து மதப் புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அதன் கெடுதியை-கோர முகத்தை இன்று திட்டமாக, தெளிவாக உணர முடிகிறது. மனிதர்களை மேல் சாதி, கீழ்சாதி, தீண்டக்கூடாத சாதி எனப் பிரித்துக் கொடுமைப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. மனுநீதி என்றால் அது மனிதன் அமைத்தச் சட்டம் என்பதே பொருளாகும். இந்து மனுநீதி என்ற மனிதச் சட்டம் கற்பனை செய்யப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டதால் அதன் கெடுதியை செமி பகுத்தறிவாளர்களால் பகுத்தறிய முடிகிறது.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிறித்தவ மதப் புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்டு, இறைத் தூதர் ஈசா(அலை)வுக்கு அருளப்பட்ட இறை நீதியான இன்ஜீலில் நுழைக்கப்பட்ட மனுநீதி (பைபிள்)யின் கெடுதியை-கோரமுகத்தை பகுத்தறிவாளர்கள் உணர்கிறார்கள். சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் மதப்புரோகிதர்கள் “பிக்ஹு’ என்ற பெயரால் கற்பனை செய்துள்ள மனு நீதியின் கெடுதியை-கோரமுகத்தை இன்று ஓரளவு பகுத்தறிவாளர்களால் உணர முடிகிறது.

சமீப கால மனுநீதிகள்!
அதற்கு மாறாக சுமார் 400 ஆண்டுகளுக்குள் மனிதக் கற்பனையில் உருவான மனுநீதிகளை இவர்களால் பகுத்தறிய முடியவில்லை. டார்வின் கற்பனையில் உதித்த மனுநீதி, காரல் மார்க்ஸ் கற்பனையில் உதித்த மனுநீதி, ஈ.வே.ரா. கற்பனையில் உதித்த மனுநீதி, அம்பேத்கர் கற்பனையில் உதித்த மனு நீதி, இப்படி இன்றைய மக்களால் பேரறிஞர்கள், சீர்திருத்தச் செம்மல்கள் என ஏற்றிப் போற்றிப் புகழப்படும் எண்ணற்றவர்களின் கற்பனையில் உருவான மனு நீதிகள், சனநாயகத்தின் பெயரால் மனிதன் கற்பனை செய்த மனுநீதி, கம்யூனிசத்தின் பெயரால் மனிதன் கற்பனை செய்த மனுநீதி, இப்படி வகை வகையான பெயர்களால் மனிதர்கள் கற்பனை செய்த மனு நீதிகள் இப்படி எண்ணற்ற மனுநீதிகளை மனிதகுலம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஆரம்ப கால மனுநீதி!
இந்துக்களிடம் நடைமுறையிலிருக்கும் மனுநீதி கற்பனை செய்யப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டதால், அதன் பரிணாம வளர்ச்சி கொண்டு அதன் மெகா கெடுதிகளை மனிதன் உணர்வது போல், கிறித்தவ, முஸ்லிம் மனுநீதிகளின் கெடுதியை உணர்வது போல் மிகச் சமீபத்தில் மனித இனம் கற்பனை செய்த மேலே நாம் விவரித்துள்ள மனுநீதிகளின் கெடுதிகளை இப்போதைக்கு முழுமையாக உணர வழியில்லை. இறைவனை மறுக்கும் நாத்திகர்கள் நாடெல்லாம் நினைவு கூறுகிறோம், மரியாதை செய்கிறோம் என்ற பெயரால் நிறுவி வரும் கற்சிலைகள் உலகம் அழியாமல் இன்னும் ஓரிரு ஆயிரம் ஆண்டுகள் இருந்தால் இச்சிலைகள் அனைத்தும் தெய்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடும். இன்று தெய்வங்களாக வணங்கப்படும் கற்சிலைகள் அனைத்தும் நினைவு கூறவும், மரியாதை செலுத்தும் நோக்கத்துடனும் செதுக்கப்பட்டவை தான்.

மதகுருமார்களின் மனுநீதி!
முஸ்லிம் மதகுருமார்கள் உட்பட அனைத்து மதகுருமார்களும் கடவுளின் பெயரைச் சொல்லி நடைமுறைப்படுத்தும் அனைத்தும் அந்தந்த மதகுருமார்களின் முன்னோர்கள் மூதாதையர்களின் கற்பனைகளில் உருவான அனைத்தும் மனுநீதிச் சட்டங்களே அல்லாமல் இறைவன் அளித்த இறைநீதிச் சட்டங்கள் அல்ல.

முஸ்லிம் நாடுகளிலும் மனுநீதி!
இன்று முஸ்லிம் நாடுகள் அனைத்திலும் நடை முறையில் கடைபிடிக்கப்படுபவை இறைவன் அளித்த இறைநீதிச் சட்டங்கள் அல்ல. அவர்களின் மூதாதையர்களின், அல்லது இன்றைய தலைவர்களின், ஆட்சியாளர்களின் கற்பனையில் உருவான மனுநீதிச் சட்டங்களே. இந்த மனுநீதிச் சட்டங்களைக் கொண்டு மனித குலம் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. எனவேதான் அனைத்து நாடுகளிலும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு ஆர்ப்பாட்டம், போராட்டம், வன்முறை, தீவிரவாதம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குடி, விபச்சாரம், சூதாட்டம் என அனைத்து வகைத் தீமைகளும், நாட்டு வெறி, பிரதேச வெறி, இன வெறி, மொழி வெறி, மாநில வெறி, சாதி வெறி, மதவெறி என அனைத்து வகை வெறிகளும் நிறைந்து காணப்படுகின்றன. மனித குலம் அமைதி இழந்து, நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அவலநிலை.

இறைநீதி இறுதியாகக் கொடுக்கப்பட்ட குர்ஆன் மட்டுமே!
இறைவனால் இறுதியாக இறைநீதியாகக் கொடுக்கப்பட்ட அல்குர்ஆன் மட்டுமே உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டிருப்பதுடன், இறைவனாலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது (15:9). எனவே மனித குல நலனில் சுயநலத்தைத் துறந்து உண்மையிலேயே அக்கறை கொண்ட நல்லுள்ளங்கள், மனு நீதிகள் அனைத்தையும் முற்றிலுமாக ஒழித்துக் கட்டி இறைநீதி குர்ஆன் சட்டங்களை நடை முறைப்படுத்த முன்வந்தால் மட்டுமே மனிதகுலத்தின் அமைதி நிறைந்த வளமான வாழ்க்கைக்கு வழி ஏற்படும். அறிவுஜீவிகளே, அறிஞர் பெருமக்களே முறையாக நடுநிலையோடு சிந்தியுங்கள்.

பகுத்தறிவாளர்களே பகுத்தறிவை இழந்து நரகம் புகாதீர்கள்!
இந்தச் சந்தர்ப்பத்தில், “”சாதி அரக்கனை ஒழிக்காமல் அரசியல் சீர்திருத்தத்தையோ, பொருளாதார சீர்திருத்தத்தையோ ஒருபோதும் அடைய முடியவே முடியாது” என்று பொருளாதார மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சொன்னதையும், “”இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து” என்று பெரியார் ஈ.வே.ரா.சொன்னதையும் மனித குலம் நலம் நாடும் நல்லுள்ளங்கள் அவசியம் பரிசீலிக்க வேண்டுகிறோம்.

மனிதர்களின், சுயநல அரசியல்வாதிகளின், சுய நல மதகுருமார்களின் கற்பனைகளில் உருவான மனுநீதிகள் அனைத்தையும் தீவைத்துக் கொளுத்தி விட்டு, மனிதனைப் படைத்தாளும் இறைவன் கொடுத்த இறைநீதி நிறைந்த அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து எவ்வித சுய விளக்கமும் இல்லாமல் அதன் வழிகாட்டலில் மனித இனம் வாழ முற்படாதவரை அதற்கு இவ்வுலகிலும் வெற்றி இல்லை; மறு உலகிலும் வெற்றி இல்லை. பகுத்தறிவாளர்களே ஆறாம் அறிவான பகுத்தறிவை இழந்து மோசம் போகாதீர்கள்; நிரந்தர நரகை அடையாதீர்கள்! எச்சரிக்கை!!

அந்நஜாத்

Tuesday, May 29, 2012

මහාචාර්ය Arthur Alison!





ශුද්ධවූ අල්කුර්ආනයෙහි එක් පාඨයකින් සිය ජීවිතයට ආලෝකය ලබාගත් වෛද්‍ය විද්‍යාඥයෙකුගේ ඉස්ලාම් දහම වැළඳගත් අත්දැකීමයි මේ: 1985 වසරේ ඊජිප්තුවේ ප‍්‍රධාන නගරය වූ කෙයිරොවෙහි “අල්කුර්ආන් ආලෝකයෙන් වෛද්‍ය ප‍්‍රාතිහාර්්‍යයන්” යන මෑයෙන් පැවැත්වූ විද්‍යාඥයින්ගේ සම්මන්ත‍්‍රණයකට සහභාගිවූ Arthur Alison එම සම්මන්ත‍්‍රණයේම “අෂ්හදු අන්ලාඉලාහ ඉල්ලල්ලාහ් වඅෂ්හදු මුහම්මදර් රසූලූල්ලාහ්” (නැමදීමට එකම සුදුස්සා අල්ලාහ් හැර වෙනත් දෙවියෙකු නොමැත, මුහම්මද් අල්ලාහ්ගේ දූතවරයාය) යනුවෙන් පවසා ඉස්ලාම් දහම වැළඳගනිමින් “ආතර් ඇලිසන්, අබ්දුල්ලාහ් ඇලිසන්” බවට පරිවර්තනය වී නව මාවතක් ඔස්සේ සිය ගමන ආරම්භ කරන්නට විය.

එංගලන්තයෙහි එක් විශ්ව විද්‍යාලයක (Electrical) හා (Electronic) විද්යුත් හා විදුලි ඉන්ජිනේරු පීඨයෙහි කුලපති වශයෙන් කටයුතු කරන ”අබ්දුල්ලා ඇලිසන්” (ඉස්ලාම් දහම පිළිගැනීමෙන් පසු) නුවණට හා හැඟීම්වලට පිළිතුරු සපයන ඉස්ලාම් දහම හඳුනාගන්නා ලෙස බටහිර හා මුළු ලෝකයේම වෙසෙන විද්‍යාඥයින්ට ඇරයුම් කළේය. දැනුම සොයා යන ගමනෙහි අල්කුර්ආනය හදාරන්නට අවස්ථාව උදා කරගත් කිසිදු විද්‍යාඥයෙක්, මුළුමනින් විද්‍යාත්මක කරුණු සමග බැඳී පවතින, ඒ වගේම එයට ගැලපෙන ඉස්ලාම් දහම හෘදපූර්වක පිළිගැනීමෙන් තොර නොවුහ යනුවෙන් ඔහු අවධාරනය කළේය.

නින්ද හා මරණය අතර ඇති සම්බන්ධය ගවේශණය කිරීම සඳහා තම (Electric) හා (Electronics) නවිනත උපකරණ ආධාරයෙන් කළ ගවේශණය තුළින් එක් පිරිමියෙක් හෝ කාන්තාවක් නිඳන විට යමක් එම සිරුරෙන් පිටවන බවත්, එය කුමන අවස්ථාවේදි යළි හැරෙයිද (යළි පැමිණෙයිද) ඒ සැනින් ඔහු ඇහැරෙන බවත්, එනමුත් මරණයට පත්වූ විට එය හැරි නොඑන බවත් ඔහු තම ගවේෂණය අවසානයේදි කියයි. මෙම සොයාගැනීමත් සමග ඉහත සඳහන් සමුළුවට පත‍්‍රිකා සකස් කරමින් සිටින විට, අල් කුර්ආනයෙහි පහත සඳහන් වැකිය ඔහුගේ නෙත්වලට ගැටුනේය. එයත් සමග ඔහු විශ්මයට පත්විය. ඔහුගේ ජීවිතය නව මාවතකට යොමු කිරීමට තරම් එම ශුද්ධවූ අල්කුර්ආනයේ වැකිය බලවත් විය. එම වාක්‍ය ඔහුගේ සොයාගැනීම මුළුමනින්ම සත්‍ය කරන (අනුමත කරන) එකක් විය.

ශුද්ධවූ අල්කුර්ආනයෙහි අස්සුමර් නම් පරිච්චේදයෙහි අල්ලාහ් මෙසේ පවසයි: “මිනිසුන් මරණයට පත්වන විටද, මරණයට පත්නොවී නින්දෙන් පසුවන විටද ඔවුන්ගේ ප‍්‍රාණය අත්පත් කරගන්නේ අල්ලාහ්ය. පසුව කව්රුන් වෙත මරණය නියමවූයේද ඔවුන්ගේ ප‍්‍රාණය (තමන් වෙතම) රඳවා ගන්නා අතර. සෙසු අයගේ (ප‍්‍රාණය) නියමිත කාලයකට ජීවත් වීම සඳහා ඔවුන් වෙතම හරවා යවයි. මැනවින් කල්පනා කරන ජනයාට සැබවින්ම මෙහි (විවිධ) සාක්‍ෂීන් ඇත්තේය” (ශු කුර්ආනය 39: 42).

මෙය තව තවත් තහවුරු කරන ආකාරයට Oxford විශ්ව විද්‍යාලයෙහි මනෝ වෛද්‍ය පීඨයේ වෛද්‍යවරයෙකු වන “යහියා අල් මුෂ්රිෆි”ගේ සහය ඇතුව නින්ද හා මරණය එකම මගට අයත් වූවකි යනු විද්‍යානූකුලව ඉහත සඳහන් අල් කුර්ආන් වාක්‍ය පැවසූ ආකාරයට ඔප්පු කරයි.

ඉස්ලාම්හි මෙවැනි විද්‍යාත්මක අදහස් බටහිර හා සෙසු ලෝකයෙහි රටවල් නොදැන සිටීම පිළිබඳ බොහෝ සේ දුක්වෙන වෛද්‍ය ඇලිසන්, මීට පෙර මම අල් කුර්ආනයෙහි මෙවැනි වටිනා කරුණු අන්තර්ගතවී පවතින බව නොදැන සිටී බවත්, මෙම අසම සම ග‍්‍රන්ථය පවසන විද්‍යාත්මක සත්‍යතාවයන් ලෝකයට මුස්ලිම්වරු පැවසීමේ වගකීම පැහැර හැරිය බවත් ඔහු චෝදනා කරයි. මිථ්‍යා විශ්වාසයන්, අන්ධ භක්තීන් මිනිසුන් තුළ රජකරන තත්ත්වයක් තුළ අල්කුර්ආනයෙහි පවතින විද්‍යාත්මක සත්‍යයන් සමාජය අතරට ගෙන යෑම මුස්ලිම්වරුන් ප‍්‍රමාද වීම පුදුමයට පත්විය යුතු කරුණකි.

අනේක සිතුවිලි හා අදහස්වලින් පෙලෙනා දස දහස් සංඛ්‍යාවක් ජනයා එංගලන්තයෙහි වෙසෙන බව පවසන වෛද්‍ය ඇලිසන්, ඉස්ලාම් නුවණට පිළිතුරු සපයන දහමක් බැවින් මුස්ලිමෙකු අත්විඳින සම්පූර්ණ තෘප්තිය හා සැනසීම අන් අයගෙන් ලබා ගත නොහැකි බව තරයේ ප‍්‍රකාශ කර සිටි. බුද්ධිමත් අදහස්වලට ඇහුම් කන්දෙන බටහිර ජනතාව, නිසි අයුරින් ශුද්ධවූ අල්කුර්ආනය අධ්‍යයනය කරයි නම් සැබවින්ම ඔවුන් කිසිදු පැකිලීමකින් තොරව ඉස්ලාම් දහම පිළිගනු ඇත.

Tuesday, May 29, 2012

“லாயிலாஹ இல்லல்லாஹ்”வின் பொருள்

“லாயிலாஹ இல்லல்லாஹ்”வின் பொருள்


(கப்று வணங்கிகளுக்காகவும், பாத்தியா மொளலூது என்று இறந்தவர்களுக்காகவும் அவுலியாக்கள், வலியுல்லாக்களுக்கும் ஓதுவதால் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நம்பி இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை அறியாமல் செய்து வரும் மக்களுக்காக ஒரு சிறப்புப் பார்வை)

லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை வாயால் மட்டும் மொழிந்து விட்டால் போதுமானது என்று நினைத்து அதை செயல் வடிவத்தில் கடை பிடிக்காமல். இறைவனுக்கு இணைவைக்கும் செயலாக தர்ஹாக்களில் சென்று வலியுல்லாக்களிடம் உதவி தேடுவதும். நாம் செய்த நன்மை தீமைகளினால் மட்டுமே சொர்க்கம், நரகம் தீர்மானிக்கப்படும் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையையே நம்பாமல். பாத்தியா, மொளலூது ஓதி எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என்று நினைத்து செய்தும். இறைவனோ, ரசூல் (ஸல்) அவர்களோ அறிவித்துக் கொடுக்காத ஒன்றை, எந்த வித ஆதாரமும் இல்லாத ஒன்றை கடைபிடித்து இறைவனால் மன்னிக்கப்பட முடியாத குற்றமான இணை வைத்தலில் மூழ்கி கிடக்கும் நம் சமுதாயத்தில் யாரேனும் ஒருவரேனும் இக்கட்டுரையை படித்து திருந்தினார்கள் என்றால். இறைவன் அவர்களுக்கும் எமக்கும் இம்மையிலும், மறுமையிலும் நற்கூலி அளிப்பானாக ஆமீன்.

லாயிலாஹ இல்லல்லாஹ்வின் பொருள் யாதெனில் பூமியிலோ, வானத்திலோ உண்மையாக வணங்கப்படுவதற்க்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன். இணை துணையற்றவன் அவனுக்கு நிகராக எதுவுமில்லை ஏனெனில் பாதிலா(பொய்யா)ன கடவுள்கள் அதிகமுள்ளது என்றாலும். உண்மையாக வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ் மாத்திரம்தான். அவன் தனித்தவன். யாதொரு இணை துணையுமற்றவன் என்பதாகும் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:

‘இரவைப் பகலிலும் பகலை இரவிலும் நுழைவிக்கும் மாபெரிய ஆற்றலாகிய, அது ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் அவன்தான் உண்மையானவன். மற்றும் நிச்சயமாக அவனையன்றி (வேறு) எதை அவர்கள் பிரார்த்திக்கின்றார்களோ அதுவே பொய்யானதாகும். இன்னும் நிச்சயமாக அல்லாஹ் அவன்தான் மிக உயர்ந்தவன் மிகப்பெரியவன். (திருமறை குர்ஆன் 22:62)

இக்கலிமா (லாயிலாஹ இல்லல்லாஹ்)வின் பொருள் ‘அல்லாஹ்வைத்தவிர வேறு படைக்கக்கூடியவன் யாருமில்லை” என்பது மட்டும் பொருளல்ல. முக்கியப் பொருளாக ஏகத்துவத்தை மிகவும் வலியுறுத்தக் கூடியதாக இருக்கிறது. ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எந்தக் குறைஷிக் காஃபிர்களுக்கு மத்தியில் நபியாக அனுப்பப்பட்டாரோ அந்தக் குறைஷிக் காஃபிர்கள் கூட படைக்கக்கூடியவன் நிர்வகிக்கக் கூடியவன் எல்லாமே அல்லாஹ்தான் என ஏற்றுக் கொண்டிருந்தார்கள். என்றாலும் வணக்கங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு இணை துணையின்றி அவனுக்கு மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்ற (ஓரிரைக்) கொள்கையை அவர்கள் நிராகரித்து விட்டார்கள். அல்லாஹ் அவர்களைப்பற்றி தனது திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:

‘(என்ன) இவர் (நம்முடைய வணக்கத்திற்குறிய) தெய்வங்களை (நிராகரித்து விட்டு) ஒரே ஒரு வணக்கத்திற்குறியவனாக ஆக்கிவிட்டாரா ? நிச்சயமாக இது ஓர் ஆச்சர்யமான விஷயம் தான் (என்றும் கூறினர்)” (திருமறை குர்ஆன் 38:5)

இக்கலிமா (லாயிலாஹ இல்லல்லாஹ்) வின் மூலம் அல்லாஹ் அல்லாத எந்தவொன்றை வணங்கினாலும் அது பாதிலா(பொய்யா)க்கிவிடும் என்பதையும், வணக்கம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் தனித்ததாக இருக்க வேண்டும் என்பதையும் அக்காபிர்கள் விளங்கியிருந்தார்கள். அதனால் அதை அவர்கள் விரும்பவில்லை. எனவேதான் நாயகம் (ஸல்) அவர்கள், வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று அவர்கள் சாட்சி கூறி, அக்கலிமாவில் கூறப்படும் உண்மை அம்சங்களை ஏற்று நடக்கும் வரை அவர்களுடன் போர் புரிந்தார்கள் . அதுதான் அல்லாஹ்வை தனித்தவனாக, இணை துணையின்றி வணக்கத்தின் மூலம் அவனை ஒருமைப் படுத்துவதாகும். அதுதான் உண்மையான ஏகத்துவம்.

இக்கலிமா ( மேற் கூறப்பட்ட அதனுடைய சரியான பொருளின் பிரகாரம்) லாயிலாஹ இல்லல்லாஹ்வின் பொருள் அல்லாஹ் இருக்கிறான் அல்லது அல்லாஹ் படைக்க்கூடியவன், புதிதாக ஒன்றை உண்டாக்கும் சக்தி பெற்றவன் என்று மாத்திரம் ஏற்றுக் கொண்டிருக்கிற தற்காலத்தில் உள்ள கப்று வணங்கிகளின் கொள்கைகளை முறியடித்து விடுகின்றது. ஏனெனில் அவர்கள் இவ்வாறு ஒரு விதத்தில் தௌஹீதுர் ருபூபிய்யாவை ஏற்றிருந்தாலும் அவர்கள் அல்லாஹ் அல்லாதவைகளை வணங்குவதிலும் மரணித்தவர்களிடத்தில் உதவி தேடுவதிலும். நேர்ச்சைகளின் மூலம் அவர்களிடத்தில் நெருங்குவதிலும் அவர்களுடைய கப்றுகளைச் சுற்றி வணங்குவதிலும், அவர்களுடைய கப்றின் மண்கள் மூலம் பரக்கத் தேடுவதிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

‘லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமா அல்லாஹ் அல்லாத அனைத்தையும் வணங்குவதை விட்டு விடுவதையும் வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மாத்திரம் ஒருமைப்படுத்தி வணங்க வேண்டும் என்பதையும் அறவிக்கின்றது என்பதை இதற்கு முதல் குறைஷிக் காபிர்கள் நன்றாக அறிந்திருந்தனர். அதனால் அவர்கள் இதை மொழியவில்லை. அவர்கள் இக்கலிமாவை மொழிந்திருந்தால் அல்லாஹ்வுக்கு இணை வைத்திருக்க மாட்டார்கள் . ஏனெனில் இதன் பொருள் நன்றாகத் தெரியும். ஆனால் தற்காலத்தில் உள்ள கப்று வணங்கிகள் லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவை மொழிந்து அதன் பொருளை சரியாக அறிந்திருந்தும், மரணித்துவிட்ட அல்லாஹ்வின் நேசர்கள், ஸாலிஹீன்கள், அவ்லியாக்கள், வலியுல்லாக்கள் ஆகியோரிடம் பிரார்த்திப்பது கொண்டு இக்கலிமாவை முறித்து விடுகின்றனர்.

லாயிலாஹ இல்லல்லாஹ்வின் பொருள், அல்லாஹ் அல்லாத அனைத்தயும் வணங்குவதை விட்டு விட்டு, வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மாத்திரம் ஒருமைப்படுத்தி வணங்குவதைத்தான் அறிவிக்கின்றது என்று ஏராளமான ஹதீஸ்கள் வந்துள்ளன. இதுதான் நேர்வழி. அல்லாஹ் தூதர்களை எந்த உண்மையான மார்க்கத்தைக் கொண்டு அனுப்பி வைத்தானோ, மேலும் எந்த உண்மையைக் கொண்டு அவனுடைய வேதங்களில் இறக்கி வைத்தானோ அந்த உண்மையான மார்க்கமும் இதுதான். ஒரு மனிதன் லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவின் சரியான பொருளை அறியாமலும் மேலும் அக்கலிமா எதைக் கூறுகின்றதோ அதனடிப்படையில் அமல் செய்யாமலும் இதனை மொழிவது, அல்லது ஏகத்துவத்தைப் பற்றித் தெரியாமல் அல்லாஹ் அல்லாதவைகளுக்கு வணக்கத்தைச் செலுத்திக் கொண்டு, தன்னை ஒரு ஏகத்துவவாதி என வாதிடுவது ஏகத்துவத்தை அப்படியே முறித்து விடுகின்றது. இந்நிலையில் அவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவன் ஆகி விடுகின்றான்.

ஏகத்துவக் கலிமாவின் சிறப்புகள்

லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் ஏகத்துவக் கலிமாவை ஒருவன் நாவால் மொழிவதால் மாத்திரம் இதன் சிறப்புகளால் பிரயோஜனம் அடையமாட்டான். யார் இக்கலிமாவை மொழிந்து சரியான முறையில் விசுவாசம் கொண்டு இக்கலிமா கூறும் முறைப்படி அமலும் செய்கின்றாரோ அவருக்கே தவிர வேறு யாருக்கும் இது உண்மையான பிரயோஜனத்தை அளிக்காது. இக்கலிமாவின் மிகச் சிறந்த சிறப்புகளில் ஒன்று யாதெனில் அல்லாஹ்வின் திருப்தியை நாடி யார் இக்கலிமாவை மொழிகின்றாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கி விடுகின்றான்.

உத்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவை அதன் மூலம் அல்லாஹ்வின் திருப்தியை நாடி யார் மொழிகின்றார்களோ அல்லாஹ் அவர்களுக்கு நரகத்தை ஹராமாக்கி விடுகின்றான். (ஆதாரம் புகாரி,முஸ்லிம்)

ஏகத்துவக் கலிமாவின் கடமைகள்

ஷஹாதாஹ்(ஏகத்துவக்)கலிமாவிற்கு இரண்டு கடமைகள் உண்டு அவை.

1. ‘லாயிலாஹ” எனும் இச் சொல்லில் வணங்கப்படுவதற்கு தகுதியானவன் யாருமில்லை என்று மறுத்துரைப்பது.

2. ‘இல்லல்லாஹ்” எனும் இச்சொல்லில் அல்லாஹ்வைத் தவிர என்று தனிப்படுத்துவது.

அல்லாஹ்வுக்கன்றி வேறு யாருக்கும் அல்லது வேறு எதற்கும் தெய்வீகத்தன்மை கிடையாது என்பதை ‘லாயிலாஹ” எனும் வாசகமும் அல்லாஹ்வை மாத்திரமே விசுவாசித்து அவனுக்கு மாத்திரமே வணக்க வழிபாடுகளை செய்ய வேண்டும் என்பதையும் ‘இல்லல்லாஹ்” எனும் வாசகமும் தெளிவுபடுத்துகின்றது.

லாலிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவின் நிபந்தனைகள்

ஏகத்துவக்கலிமாவிற்கு ஏழு நிபந்தனைகளை உலமாக்கள் கூறியுள்ளனர். அந்த ஏழு நிபந்தனைகளும் அதில் ஒன்ற சேர்ந்து அவற்றை ஒரு அடியான் பூரணப்படுத்தி அவற்றிட்கு மாற்றமானவைகள் எதையும் செய்யாமல் அவற்றைக் கடைப்பிடித்தாலே தவிர இக்கலிமா அவனிடத்திலிருந்து நிறைவேறாது. அந்த நிபந்தனைகள் பின் வருமாறு:

1-அறிவு.

வணங்கப்படுவதற்கு தகுதியான ஒரே இறைவன் அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுக்கே சகல வணக்க வழிபாடுகளும் உரியன என்பதையும் அறிவதும், அல்லாஹ்வை அன்றி வணங்கப்படும் ஏனையவைகள் நன்மையோ தீமையோ செய்ய எவ்வித சக்தியுமற்றவை என்பதனால் அப்படிப்பட்ட பிழையான வழிபாடுகளை விட்டும் நீங்க வேண்டும் என்ற அறிவு. அறிவுக்கு மாற்றமானது அறியாமை. அறிவின்மையின் காரணமாக ஒருவன் அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டிய வணக்கத்தை அல்லாஹ் அல்லாதவைகளுக்கும் செய்து விடுவான். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:

‘ ஆகவே (நபியே) நிச்சயமாக அல்லாஹ்வைத்தவிர (வணக்கத்திற்குறிய வேறு) நாயன் இல்லை என்பதை நீர் அறிந்து கொள்வீராக” (திருமறை குர்ஆன் 47: 19)

மேலும் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:

‘ஆயினும் அவர்கள் அறிந்தோராக இருக்க சத்தியத்தைக் கொண்டு சாட்சியம் கூறினார்களோ அவர்களைத் தவிர (வேறு எவரும் பரிந்துரை செய்பவர்களல்லர்)” (திருமறை குர்ஆன் 43:86).

2.அல்லாஹ்வின் மீது எல்லா சந்தேகங்களையும் விட்டும் நீங்கிய உறுதி.

இக்கலிமா எதை அறிவிக்கின்றதோ அவைகளை செயலில் காட்டுவதாக உறுதியாக நம்பிக்கைக் கொள்ள வேண்டும் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்

‘(உண்மையான) விசுவாசிகள் எததகையோரென்றால், அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசம் கொண்டு பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளாது இருந்தார்களே அத்தகையோர்தாம்” ( திருமறை குர்ஆன் 49:15).

3. கலிமாவின் எல்லா நிபந்தனைகளையும் நாவாலும் உள்ளத்தாலும் ஏற்றுக்கொள்ளுதல். அல்லாஹ்விடத்திலிருந்தும் அவனுடைய தூதரிடத்திலிருந்தும் எது நமக்கு கிடைத்ததோ அவைகள் அனைத்தையும் ஈமான் கொண்டு ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றிற்கு சிறிதேனும் மாற்றுக் கருத்துக்கள் கொடுக்காமலும், புது அர்த்தங்களை கொடுக்காமலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:

‘ அல்லாஹ்வையும், எங்கள்பால் இறக்கப்பட்ட (இவ்வேதத்) தையும் நாங்கள் விசுவாசிக்கின்றோம் என (விசுவாசம் கொண்டோரே) நீங்களும் கூறுங்கள்” (திருமறை குர்ஆன் 2:136)

4. அல்லாஹ் மாத்திரமே ஒரே இறைவன் எனும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கடைசி நபியும், தூதரும் ஆவார்கள் என்பதையும் மனமுவந்து விரும்பி ஏற்றுக் கொள்ளுதலும் அவற்றை எவ்வித கூடுதல் குறைவின்றி அப்படியே அமல் செய்து கொள்வதுமாகும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:

‘ இன்னும் (மனிதர்களே) உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக உங்கள் இரட்சகன் பால் (தவ்பாச் செய்து) நீங்கள் திரும்பி விடுங்கள். அவனுக்கு முற்றிலும் நீங்கள் கீழ் படிந்தும் விடுங்கள் ” (திருமறை குர்ஆன் 39:54)

5. கலிமாவின் அவசியங்களை நேர்மையுடன் அவற்றை உண்மைப் படுத்தி நிறைவேற்றுதல். தனது ஈமானில் ஒருவன் உண்மையாளனாக எப்போது இருக்கின்றானோ அப்போதுதான் அவன் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுபவைகளையும் அவனுடைய தூதரின் வழி முறைகளையும் உண்மைப் படுத்துவான். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:

‘ விசுவாசம் கொண்டோரே நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். (சொல்லாலும், செயலாலும்) உண்மையாளர்களுடனும் ஆகிவிடுங்கள்” (திருமறை குர்ஆன் 9:119)

6. சகல வணக்க வழிபாடுகளையும் தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மாத்திரம் நிறைவேற்றுதல். ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக்கூடிய அனைத்த விடயங்களிலிருந்தும் தன்னை தூரப்படுத்தி தன்னிடத்தில் மனத்தூய்மை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:

‘தூய மார்க்கம் (வழிபாடு) அல்லாஹ்வுக்கே உரித்தானது என்பதை அறிந்து கொள்வீராக (39:3) மேலும் அல்லாஹ் கூறுகின்றான் : ‘இன்னும் அல்லாஹ்வை அவனுக்காகவே வணக்கத்தை கலப்பற்றதாக ஆக்கியவர்களாக (அணைத்து தீய வழிகளை விட்டும் நீங்கி இஸ்லாத்தின்பால் சாய்ந்தவர்களாக அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காகவே தவிர (வேறெதையும்) அவர்கள் (அதில்) கட்டளையிடப்படவில்லை” (திருமறை குர்ஆன் 98:5)

இணை வைத்தவனாக, அல்லது முகஸ்துதிக்காக ஒருவன் எந்த அமலைச் செய்தாலும் அது அவனுக்கு எந்த பலனையும் அளிக்காது. ஏனைனில் அடிப்படை அம்சமாகிய மனத்தூய்மையை அவன் இழந்து விட்டான். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:

‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான் இதனைத்தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாக கற்பனை செய்து விட்டார் ” (திருமறை குர்ஆன் 4:48)

7. ஷஹாதாக் கலிமாவின் மீது பற்றுதல் (நேசம்) வைத்தல்.

உயரந்த அல்லாஹ்விடம் பற்றுதல், அவனுடைய தூதரிடம் பற்றுதல் அவனுக்கு வணக்கம் புரியும் உண்மை அடியார்களிடம் பற்றுதல் வைத்தல். இக்கலிமாவின் மூலம் ஒருவன் அனைவரையும் விட அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அன்பு வைப்பதில் முற்படுத்த வேண்டும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்

‘(நபியே மனிதர்களிடம்) நீர் கூறுவீராக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை நீங்கள் பின் பற்றுங்கள். (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவன். மிகக்கிருபையுடையவன்” (திருமறை குர்ஆன் 3:31)

முஹம்மது ரசூலுல்லாஹ்வின் பொருள்

‘ஷஹாதத்து அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” என்பதன் பொருள் யாதெனில்: முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய உண்மைத் தூதராவார் என உள்ளத்தால் உறுதி கொண்டு நாவால் மொழிந்து சாட்சி கூறுவதும் ஆகும். அல்லாஹ்விpன் கட்டளைக்குப் பின் மனிதர்கள் அனைவரும் பின் பற்றுதற்குறியவர் அல்லாஹ்வின் கடைசித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைத்தவிர வேறு யாருமில்லை என உறுதியாக சாட்சியம் கூற வேண்டும். எதைச் செய்யுமாறு அவர்கள் கட்டளையிட்டார்களோ அதைச் செய்வதில் அவர்களைப் பின்பற்ற வேண்டும். எதைத்தடுத்தார்களோ அதைச்செய்யாமல் முற்றிலும் தவிர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் அறிவித்த அனைத்தும் சரியானது என அவர்களை உண்மைப் படுத்த வேண்டும். அவர்கள் எதை மார்க்கமாக எமக்கு காட்டி தந்தார்களோ, எவ்வாறு அல்லாஹ்வை வணங்க வேண்டுமென அறிவத்து தந்தார்களோ அவ்வாறே அதில் கூடுதல் குறைவின்றி நாம் அல்லாஹ்வை வணங்க வேண்டும். முஹம்மத் (ஸல்) அவர்களை எல்லா விஷயங்களிலும் நாம் முழுமையாக பின் பற்ற வேண்டும். நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் (எனது வழிமுறைகளை பின் பற்றி) என் வழி நடக்கிககின்றார்களோ அவர் அல்லாஹ்வுக்கு வழிபட்டவர் ஆவார். யார் (எனது வழி முறைகளை பின் பற்றாமல்) எனக்கு மாறு செய்கின்றானோ அவன் அல்லாஹ்வுக்கு மாறு செயதவனாகின்றான் (ஆதாரம் புகாரி, முஸ்லிம்)

இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை நுழைக்க முடியாது. நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்” (ஆதாரம் புகாரி, முஸ்லிம்)

கடைசியாக நாம் இங்கே ஒரு முக்கிய விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் அதாவது நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைத்தன்மை உண்டு, அவர்கள் அனைத்திற்கும் சக்தி பெற்றவர்கள், அவர்களையும் நாம் வணங்கலாம் என்ற கொள்ளை இஸ்லாத்தில் கிடையாது. வணங்கப்பதுவதற்கு தகுதியான நாயன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே. நாயகம் (ஸல்) அவர்களுக்கு எவ்வித சக்தியுமில்லை. அவர்களை யாரும் வணங்க முடியாது. அவர்களும் அல்லாஹ்வைத்தான் வணங்கினார்கள். அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும் ஆவாரெனவும், அவர்கள் அல்லாஹ் நாடியதைத்தவிர தாமாகவே தனக்கோ, அல்லது வேறு யாருக்காவதோ எப்பிரயோஜனத்தையோ, எக் கெடுதலையும் செய்யவோ அவர்கள் சக்தி பெற மாட்டார்கள் எனவும் நாம் உறுதியாக விசுவாசம் கொள்ள வேண்டும்.

ரசூல் (ஸல்) மட்டுமல்ல வேறு எந்த நபிமார்களும், வலியுல்லாக்களும், அவ்லியாக்களும், அன்பியாக்களும் வணங்குவதற்கும், வேறு எதற்கும் தகுதி பெற மாட்டார்கள்.அவர்களும் நம்மைப் போல மனிதர்கள்தான். அவர்களுக்கு பாத்தியா, மொளலூது என்று ஓதி இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை கடைபிடித்து வரும் எல்லோரும் நிச்சயம் வழிகேட்டில் இருக்கிறார்கள். நிச்சயம் இறைவனால் மன்னிக்கப்படாத குற்றத்தை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

Tuesday, May 29, 2012

චන්ද්‍රයෙහි ඇතිවූ පැල්ම!




මෙම රූපය තුළින් දිස්වන්නේ ‘Belt of Rocks’ චන්ද්‍රයාගේ බෙදුනු ස්ථානයයි. මෙය චන්ද්‍රයෙහි ඇති වී තිබෙන බෙදීම වේ. එවකට මක්කාවෙහි නබි (සල්) තුමන්ව ප‍්‍රතික්‍ෂෙප කරමින් සිටියවුන් පැමිණ ඔබ සත්‍යවූ ශාස්තෘවරයකු නම් චන්ද්‍රයා දෙකට බෙදා පෙන්වන්න, ඔබ එසේ කළේ නම් අපි ඔබව ශාස්තෘවරයකු වශයෙන් පිළිගන්නෙමු යනුවෙන් ඔවුන් පැවසූහ. එදින පුරහඳ පෑයූ දිනයක් විය එකී කාරණය ඉටු වීම සඳහා මුහම්මද් (සල්) තුමන් අල්ලාහ් යැදීය, එම යැදීම සර්ව බලධාරි අල්ලාහ් පිළිගත්තේය. ඒ සැනින්ම මහා හාස්කමක් සිදුවිය. එනම් චන්ද්‍රයා කොටස් දෙකකට බෙදී වෙන්විය එයින් එක් කොටසක් ”සෆා ”පර්වතයට ඉහලින් හා අනිත් කොටස ”කායිකන්” පර්වතයට ඉහළින් ද දිස්විය එනමුත් පසුව එම ප‍්‍රතික්‍ෂෙපකයින් මෙය මුහම්ද්ගේ හූණියමක්, මුහම්මද් අපට කෙසේ හෝ මායාවක් පාන්නට ඇත යනුවෙන් පැවසූහ. නමුත් මෙම හූණියම ලෝකයේ සිටින සියළු අය ඉදිරියේ ඵල රහිතය, ගම් වැසියන් එන තෙක් අපි ඉවසා සිටිමු ඔවුන්ගෙන් මේ පිළිබඳ විමසා බලමු, එවිට ඔවුන්ද එය දිස්වූයේ නම් අපි එයි පිළිගමු එසේ නොවූවොත් එය මුහම්මද්ගේ හුදු මායාවක් පමණි යනුවෙන් අබූ ජහ්ල් පැවසූවේය. ගම්වැසියන් පැමිණ ඔවුන්ද එය දුටු බව සනාථ කළ විට පවා මක්කා ප‍්‍රතික්‍ෂෙපකයින් ”මුහම්මද්ගේ හූණියම කෙතරම් බලවත්ද” යනුවෙන් පමණයි පැවසුවේ.

පසුව අල්ලාහ් ”අල්කමර් ” (චන්ද්‍රයා) නම් පරිච්ඡේදය අනාවරණය කළේය “අවසන් දිනය ළං විය, චන්ද්‍රයාද පැලී වෙන්විය, නමුත් ඔවුන් යම් හාස්කමක් දුටු විට (එය) ප‍්‍රතික්‍ෂෙප කරති. සෑම විටම සිදුවන්නාක් මෙන් මෙය ද (තවත් එක්) හුණියමක් වේ යනුවෙන්ද ඔවුන් කියති. නියත වශයෙන්ම අවවාද කරන බොහෝ පුවත් ඔවුන්ට පැමිණ ඇත” (ශුද්ධවූ අල්කුර්ආනය 54: 1- 4). මෙය නබි (සල්) තුමන්ගේ ජීවිත සමයේ සිදුවූ ප‍්‍රාතිහාර්යයකි.

Dr. Zaghlool Al-Najaar’s වරක් තම දේශණයකදී, බි‍්‍රතාන්‍ය විශ්ව විද්‍යාල අතුරින් එක් විශ්ව විද්‍යාලයක් මෙම මතය දරයි, චන්ද්‍රයාහි ඇති වී තිබෙන පැලීම මෑතකදී තහවුරු කළ බව ඉස්ලාම් දහම කෙරෙහි බොහෝ ඇල්මක් දක්වන ”දාවූද් මූසා” මොහු බි‍්‍රතාන්‍යයෙහි ඇති මුස්ලිම් පෙරමුණේ වත්මන් නායකයා වශයෙන් හා එහි නුදුරේදි පැවැත්වීමට නියමිත මැතිවරණයේ ඉස්ලාමීය ධජය යටතේ තරඟ කිරීමටද තීරණය කරමින් සිටි. බටහිර ලෝකය තුළ ඉතා සීඝ‍්‍රයෙන් ව්‍යාප්ත වන දහම ඉස්ලාම් යනුවෙන් ද ඔහු කියයි. ඔහුගේ මෙම වෙනසට පෙර ආගම් පිළිබඳ අධ්‍යයනය කරමින් සිටී අවදියේ ඔහුගේ මිත‍්‍රයා ශුද්ධවූ අල්කුර්ආනයේ ඉංග‍්‍රීසි පරිවර්තනයක් ඔහුට පිරිනැමුවේය. අල්කුර්ආනය විවෘත කර එය කියවන විට අල්කමර් (චන්ද්‍රයා) පරිච්ඡේදය ඔහු කියවුවේය ”අවසන් දිනය ළං විය චන්ද්‍රයාද පැළුනි මෙය නෙත ගැටුනු විගසම ඔහු ශුද්ධවූ අල්කුර්ආනය පසක දැමුවේය.

ඉනික්බිතිව එක් දවසක් ඔහු අහම්බෙන් BBC නාලිකාවෙහි විකාශය වෙමින් තිබුනු වැඩසටහනක් නරඹන්නට විය. එය විද්‍යාඥයන් තිදෙනෙකු සමග වූ පිළිසඳරකි, එම පිළිසඳර පවත්වන්නා, අභ්‍යවකාශ ඉදිරි සැලැස්මට බිලියන් ගණන් මුදල් වැය කිරීම පිළිබඳව ඇමෙරිකාව විවේචනය කරන්නට විය. ලෝකයේ ලක්‍ෂ සංඛ්‍යාත ජනතාව දිළින්දන් වශයෙන් කල් ගෙවති, විද්‍යාඥයින් අභ්‍යවකාශ ගවේශණයේ වැදගත්කම පිළිබඳ කරුණු ගෙනහැර පෑමේ ප‍්‍රයත්නයක යෙදී සිටියහ.

මෑත කාලයේ විශාල මුදල් සම්භාරයක් වැය කරමින් සිදුකළ අභ්‍යවකාශ ගමන පිළිබඳ සාකච්ඡා කරමින් සිටියේය. එම ගමනට බිලියන් 100 ක් වැය විය. හුදෙක්ම ඇමෙරිකානු ධජය හඳෙහි සිටවන්නද මෙතරම් මුදල් කන්දරාවක් වැය කළේ ද යන්න ඔහු ප‍්‍රශ්න කළේය. එයට විද්‍යාඥයින් චන්ද්‍රයාගේ අභ්‍යන්තර හැඩය අධ්‍යයනය කිරීමෙන් එය පෘථිවියට සමානකමක් දක්වයි, ‘Belt of Rocks’ (චන්ද්‍රයාගේ පැළුනු) තීරුව සොයාගැනීමෙන් අනතුරුව ඔවුන් විස්මිතවූවා. එය චන්ද්‍රයාගේ මතු පිට සිට සෘජුවම අභ්‍යන්තර පත්ල දක්වාම ඇත. කුතුහලය දණවන කරුණ නම් ඔවුන් ගෙනහැර දැක්වූ තොරතුරු ඔවුන්ගේ භූ විද්‍යාඥයින්ව පවා විශ්මයට පත්කළ බව පවසමින් ඔවුන් සමාප්ත කළේය.

මෙය නරඹමින් සිටී ”දාවූද් මූසා” තම ආසනයෙන් පැන කෑ ගැසුවා, මෙය මුහම්මද් (සල්) තුමන්ගේ ආශ්චර්්‍යයකි. අවුරුදු 1400 කට පෙර සිදුවූ ප‍්‍රාතිහාර්්‍යය ඔප්පු කිරීමට ඇමෙරිකානු විද්‍යාඥයින්ට බිලියන් ගණන් මුදල් වියදම් කරන්නට සිදුවිය. නමුත් විශ්ව හිමියන්ගේ පුස්තකය එය ශත වර්ෂ 14 කට පෙරම සඳහන් කරන ඇත. සැබවින්ම සත්‍යයවූ එකම දහම ඉස්ලාම් බව මුස්ලිම්වරුන් ඉදිරියේ දැඩි විශ්වාසයකින් යුතුව ඔහු පවසයි. මුලින් කුමන අල්කමර් (චන්ද්‍රයා) පරිච්ඡේදය ඔහු ඉස්ලාම් දහම ප‍්‍රතික්ෂේප කිරීමට හේතුවූවාද යළිත් වරක් එම පරිච්ඡේදයම ඔහු ඉස්ලාම් දහම වැළඳ ගැනීමට හේතු සාධක විය.

ශුද්ධවූ අල්කුර්ආනය මෙසේ සඳහන් වෙයි: “කවුරුන් අල්ලාහ් නිවැරදි මාවත ඔස්සේ යොමු කිරීමට සිතයිද ඔහුගේ සිත ඉස්ලාම් වෙනුවෙන් පුළුල්කරයි.” (ශු අල්කුර්ආනය 6: 125).



කතුවරයාඉබ්නු යූසුප් on 19th May 2012

Tuesday, May 29, 2012

மனிதர்கள் சிந்திக்கின்றனரா?

மனிதர்கள் சிந்திக்கின்றனரா?


‘மனிதன் சிந்திக்கக்கூடியவன்’ இது நியதி. ஆனால் எல்லோரும் சிந்திக்கின்றனரா? இது விடை காண முடியாத வினா!

இறைப்படைப்புகள் ஒவ்வொன்றிலிருந்தும் பாடம் பெறக்கூடியவனே. சிந்தனைவாதி! இந்த அடிப்படையில் எல்லாம் வல்ல அல்லாஹ், மனித இனத்தவராகிய நம்மைப் பார்த்து சில வினாக்கள் தொடுக்கின்றான்.

நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா? அன்றியும், நீங்கள் குடிக்கும் நிரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா? (56:57-72)

மரம் செடி கொடிகள் நீர் தீ புழு பூச்சிகள் பறவைகள் விலங்கினங்கள், மனிதர்கள் முதலிய அத்தனைப் படைப்பினங்களிலும் நமக்குப் போதனைகள் உண்டு. படைப்பினங்கள் அனைத்திலும் அழகிய படைப்பாக மனிதனையே படைத்திருப்பதாக அல்லாஹ் அருள்மறையில் தெளிவாக்கியுள்ளான்.

திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (95:4)

இவ்வாறு தெளிவாக அறிக்கை விட்ட அல்லாஹ், அடுத்தடுத்த வசனங்களில் அவனுடைய நடத்தை காரணமாக ஏற்படுகின்ற விளைவுகளையும் எச்சரிக்கை அறிவுரைகளையும் கூறுகின்றான்.

பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம். எவர்கள் ஈமான் கொண்டு )ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு. (95:6)

நற்கருமங்களை செய்தவர்களுக்குக் கிடைக்கக் கூடிய நற்கூலியைப் பற்றித் தெளிவாக்கிய எல்லாம் வல்ல அல்லாஹ், மனிதர்களுக்குரிய பொறுப்புணர்வுகளைப் பற்றியும் தெளிவாக்குகிறான்.

நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், அப்போது அதைச் சுமந்து கொள்வதிலிருந்து அவை விலகிக்கொண்டன, இன்னும் அதைச் சுமப்பதிலிருந்து அவை பயந்தன, (ஆனால்) மனிதனோ அதனைச்சுமந்து கொண்டான், நிச்சயமாக அவன் (அமானிதத்தை நிறைவேற்றும் விஷயத்தில்) பெரும் அநியாயக்காரனாக (அதன் கடமையை) அறியாதவனாக இருக்கின்றான். (33:72)

(அத்தகைய அமானிதத்தை ஏற்றுக்கொண்டு அதற்க்கு மாறாக நடக்கும்) முனாஃபிக்கான (வேஷதாரிகளான) ஆண்;களையும்; முனாஃபிக்கான பெண்களையும்; முஷ்ரிக்கான (இணைவைப்பவர்களான) ஆண்களையும், முஷ்ரிக்கான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்; (ஆனால் இவ்வமானிதத்தை மதித்து நடக்கும்) முஃமினான (விசுவாசிகளான) ஆண்களையும், முஃமினான பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான். அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன். (33:73)

அல்லாஹ் நம்மீது விதித்த பொறுப்பு மகத்தானது. 1.அல்லாஹ் விதித்த கட்டளைகளுக்குச் சற்றும் மாறுபடாமல் உலகில் வாழ்வது, 2.எக்காரணம் கொண்டும் அவனுக்கு எவ்விதத்திலும் யாதொரு தன்மையிலும் இணை வைக்காமல் வாழ்வது. இவ்விரண்டிலுமே அவனுடைய பொறுப்புகள் நம்மீது சுமத்தப்படுகின்றன. அமானிதத்தை எவ்விதம் மோசடி செய்யாமல் காப்பாற்ற வேண்டுமோ வாக்குறுதியை எவ்வாறு மீறாமல் நடந்து மனிதத் தன்மையோடு வாழ வேண்டுமோ, அவ்வாறே அல்லாஹ் நம்மீது சுமத்திய பொறுப்புகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் வாழ்ந்து சிறக்க வேண்டும். இதுவே மனித நியதியாகும். இத்தகைய மனிதர்களையே அல்லாஹ் அருள்கொண்டு நோக்குவதாக தன் திருமறையில் அறிவிக்கின்றான். அவன் அருளுக்குப் பாத்திரமானவர்களாக நாம் நடக்க வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற்ற மனிதர்களாக நாம் திகழ இயலும்.

இறைவனைப்பற்றி மனிதனின் வாக்குமூலம்:
உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து ”நான் உங்களுடைய இறைவன் அல்லவா?”" என்று கேட்டதற்கு, அவர்கள் ”மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்”" என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக (ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும். (7:172)

அல்லது, ”இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?” என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.) அவர்கள் (பாவங்களிலிருந்து) விடுபட்டு (நம்மிடம்) திரும்புவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விளக்கிக் கூறுகின்றோம். (7:173,174)

சமுதாயத்தினர்கள்! இவ்வாறாக திருமறை தெளிவாக்கிய பின்னரும் கூட நம்முள் பலர் பாராமுகமானவர்களாக உள்ளோம். நம்முடைய செயலற்ற தன்மைகளுக்கு காரணம் கூறி தப்பிவிடலாம் என்று இனியும் எள்ளளவும் எண்ணாதீர்கள்! நம்மை நாமே ஏமாற்றி கொள்ளலாமே தவிர, படைத்தவனை ஏமாற்றி விட்டதாக எண்ணாதீர். இறும்பூது எய்தாதீர்! மறுமை உண்டு! அல்லாஹ்விடம் நாம் பதில் கூறியே தீர வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் நம்முடைய பாவங்களைப் பொறுத்தருளப் போதுமானவன்!

புலவர் செ. ஜ·பர் அலி பி. லிட்

Thursday, May 24, 2012

அழிந்து போகுமா முஸ்லிம்களின் வியாபாரம்

அழிந்து போகுமா முஸ்லிம்களின் வியாபாரம்

 எழுதியவர்/ மௌலவி M.S.M. இம்தியாஸ் ஸலஃபி

- M.S.M. இம்தியாஸ் ஸலபி
 மக்களின் அன்றாட வாழ்வில் வியாபாரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. வியாபாரம் முஸ்லிம்களின் பரம்பரை தொழிலாகவும் இருந்து வருகிறது. வியாபாரத்தின் மூலம் கொடிகட்டி பரந்தவர்களும் உண்டு. நடை இழந்து முடமாகிப் போனவர்களும் உண்டு.

இலங்கையைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் வியாபார ரீதியாக வருகைத் தந்தவர்கள். மக்களின் மதிப்பைப் பெற்றவர்கள். அன்று முஸ்லிம்களிடம் நம்பிக்கை, நாணயம் பரந்து காணப்பட்டதால் இந்நாட்டு சிங்கள அரசர்களின் நன்மதிப்பைப் பெற்று சிறந்து விளங்கினார்கள். சிங்கள பெண்மணிகளை மணம் முடித்து பல பகுதிகளிலும் குடியமர்ந்தார்கள்.

இன்று முஸ்லிம் வியாபாரிகள் என்றால் எட்டி நின்று பார்கிறார்கள். கொடுக்கல் வாங்கல் செய்யப் பயப்படுகிறார்கள். வாக்களித்தால் மாறுசெய்கிறார்கள். நம்பினால் மோசடி செய்கிறார்கள். பேசுகின்ற பிரகாரம் நம்பிக்கையுடன் நடப்பதில்லை. சில்லறை வியாபாரம் முதல் பெரும் வர்த்தக நிறுவனங்கள் வரை ஏமாற்று வியாபாரம் தான்! நாணயம் மறைந்து மோசடி நிறைந்து காணப்படுகின்றது என்ற ஆதங்கம் பரவலாக காணப்படுகின்றது.

வங்கியில் பணம் இல்லை என்று தெரிந்து கொண்டே காசோலையை எழுதி கொடுப்பார்கள். போலியான ஒரு காசோலையை கொடுத்து ஆயிரக்கணக்கில் வியாபாரம் செய்வார்கள். ஏன் ஹஜ்ஜுக்கு கூட செல்வார்கள். உரிய திகதியில் திருப்பித் தருவதாக கூறி பணத்தை எடுத்துச் செல்வார்கள். பிறகு அந்தப் பக்கமே திரும்பி பார்க்க மாட்டார்கள்.

250கிராம் எடையுள்ளதாக கூறி ஒரு பொருளை அளந்து விற்பார்கள். மறுபடியும் அளந்து பார்த்தால் அதில் 25கிராம் குறைவுள்ளதாக இருக்கும். அழுகிப்போன பொருளை அழகு படுத்தியும், குறையுள்ள பொருளை மூடி மறைத்தும் பேரம் பேசுவார்கள்.

ஜனக்கூட்டம் அதிகமாக இருந்தால் மக்களை அவசரப்படுத்தி வியாபாரம் ஓகோ என்று நடப்பது போல் பாவனை செய்து, பணத்தை கூடுதலாக சுருட்டி விடுவார்கள். ஒரு பொருளை பார்த்து அதனை வாங்காது விட்டால், அசிங்கமாக திட்டுவார்கள். அல்லது எவனது தலையிலாவது கட்டிவிடுவார்கள்.

எடுத்த பொருட்களுக்கோ அல்லது சாப்பிட்ட பொருட்களுக்கோ உரிய விலையை எடுக்காமல் கூடுதலாக “பில்” போடுவார்கள். நுகர்வோரிடம் பொருளை காட்டி விலைபேசி, போலியான பொருளை கொடுத்து பணம் வாங்குவார்கள்.

இப்படி ஆயிரமாயிரம் குறைபாடுகள், மோசடிகள் நிறைந்து காணப்படுகின்றன. முஸ்லிம்களிடம் மாத்திரமல்லாமல் முஸ்லிமல்லாதவரிடத்திலும் காணப்படுகிறது.

ஆனாலும் முஸ்லிம்களிடம் மோசடி கூடுதலாக காணப்படுகிறது என்று பரவலான குற்றச்சாட்டு முஸ்லிம்களாலேயே முன் வைக்கப்படுகிறது. அதிகமான முஸ்லிம்கள் கூட தங்களது வியாபாரங்களை, கொடுக்கல் வாங்கலை முஸ்லிமல்லாத சகோதரர்களுடன் வைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள். முஸ்லிம்களது தவறான நடவடிக்கைகளை பார்த்து அடுத்த சமுதாயத்தினரும் விலகிப்போகின்ற நிலையை உருவாக்கின்றது.

எந்தவொரு நல்ல விஷயத்தையும் யாருடனும் மேற்கொள்ளலாம். இதில் இன, மத, பேதம் பார்க்கக்கூடாது. மாற்றுமத சகோதரர் கூட நாணயமாக வியாபாரம் செய்வாரேயானால் அவருடன் கொடுக்கல் வாங்கல் செய்வதை இஸ்லாம் ஒருபோதும் தடுக்கவில்லை. இந்த நாணயமும் நம்பிக்கையும் முஸ்லிமிடம் இருக்க வேண்டியவை. அது இறை நம்பிக்கையின் ஓர் அம்சம் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. எனவே முஸ்லிம்களை பொறுத்தவரை வியாபாரங்கள் உட்பட தங்களது எல்லா காரியங்களையும் இஸ்லாம் சொல்லுகின்ற பிரகாரம் அமைத்துக் கொள்ளவேண்டும். அப்படி அவர்கள் செய்வார்களேயானால் முஸ்லிம்கள் பற்றி இந்நாட்டில் இனவாதிகளால் பரப்பப்பட்டு வரும் தவறான குற்றச்சாட்டுக்களை முறியடிக்கக் கூடியதாக அமையும்.

முஸ்லிம்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டாம். அவர்களது வியாபாரத்தை வளர்க்க வேண்டாம். அவர்களை அன்னியப்படுத்தி வையுங்கள் என்ற தீய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களுக்கு போட்டியாக பெரும் பெரும் வியாபாரக் கடைகள், நிறுவனங்கள், சந்தைகள் உருவாக்கப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்த பரகசியம். முஸ்லிம்கள் பெரும்பான்மைகளாக இருந்து வியாபாரம் செய்த இடங்கள் இன்று கைநழுவிப் போயுள்ளன. இதற்கு பல்வேறு காரணங்கள் காணப்பட்டாலும் முஸ்லிம்களுடைய தவறான அணுகுமுறைகள் மற்றும் வியாபார ரீதியான யுக்திகள் நவீன கல்விமுறைகளுடன் சார்ந்த அறிவு (சந்தைப்படுத்தும் முறைமைகள்) அறியாமையும் காரணமாகும்.

இவ்வேளையில், முஸ்லிம்கள் விழிப்பாக இருந்து நீதமாக செயல்பட வேண்டும். முஸ்லிம்கள் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

எந்த செயற்பாட்டினால் முஸ்லிம்கள் இந்த நாட்டு மக்களிடம் நன்மதிப்பை பெற்றார்களோ, அதே செயற்பாட்டினை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். வியாபார ரீதியில் முஸ்லிம்கள் ஓரம் கட்டப்பட்டால் எதிர்காலம் ஆபத்தானதாக அமையும். எனவே வியாபார முறைப்பற்றி இஸ்லாம் எமக்கு போதிக்கின்ற கட்டளைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். பொருளீட்டும் போது அடுத்தவனின் பொருளாதாரத்தை சுரண்டாமலும், ஏமாற்று மோசடிகளில் ஈடுபடாமலும் நேர்மையாக சம்பாதிக்குமாறு இஸ்லாம் கண்டிப்பான கட்டளையை இடுகிறது.

அளவை நிறுவையில் மோசடி
 அல்லாஹ் கூறுகிறான்:

அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்குகின்றனர். மற்றவர்களுக்கு அளந்து கொடுத்தாலோ அல்லது நிறுத்து கொடுத்தாலோ குறைவு செய்கின்றனர். மகத்தான நாளில் (மறுமை நாளில்) அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 83:1-3)

அளக்கும்போது நிறைவாக அளவுங்கள். நேரான தராசைக் கொண்டு எடை போடுங்கள். இதுவே மிக சிறந்ததும் அழகிய முடிவுமாகும். (அல்குர்ஆன் 17:35 6:152)

அளவையை பூர்த்தியாக அளந்து நிறுவையை சரியாக நிறுங்கள். மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். (அல்குர்ஆன் 7:85 11:84,85 26:181, 55:8,9)

பொய்ச் சத்தியம்
 மக்களை ஏமாற்றி கள்ள தரகர்களை வைத்து அதிக பணம் சம்பாதிக்கலாம். உலகத்தில் அதிக இலாபத்தை தந்தாலும் மறுமையில் நரக நெருப்பை சந்திக்க வரும் என்பதை மறக்கக் கூடாது.

அல்லாஹ்வின் கோபத்திற்குறிய மூன்று நபர்களை பற்றி நபி (ஸல்) பின்வருமாறு கூறினார்கள். மறுமை நாளில் அல்லாஹ் மூன்று நபர்களை பார்க்க மாட்டான். அவர்களை பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு கடுமையான தண்டனையுமுண்டு என்று கூறினார்கள். நஷ்டமடைந்த அம்மூவரும் யார்? என கேட்டபோது செய்த உதவிகளை சொல்லிக் காட்டுபவன். தனது வேட்டியை தரையில் படுமாறு அணிபவன். தனது வியாபார பொருட்களை பொய் சத்தியம் செய்து விற்பவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:- அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்களுக்கிடையில் திருப்தியுடன் சம்மதத்தின் பெயரில் செய்யும் வியாபாரத்தை தவிர உங்களுக்கிடையே உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)

பொய் சத்தியம் செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி அழுகிய பொருட்களை தரமிழந்த பொருட்களை விற்பவர்கள், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை விட்டும் மறுமையில் தூரப்படுத்தப்படுவார்கள். கடுமையான தண்டனையை அனுபவிப்பார்கள்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கடை வீதிக்குச் சென்றபோது ஒரு வியாபாரியின் தானியக் குவியலுக்கருகே வந்து தனது கையை அந்த தானியக் குவியலில் விட்டபோது விரல்களில் ஈரம் பட்டது. அப்போது உணவு வியாபாரியே! இது என்ன என்று கேட்டார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் தூதரே! மழையில் நனைந்து விட்டது என்றார். அதற்கு நபியவர்கள் மக்கள் பார்க்கும் விதமாக உணவுக்கு மேல் பகுதியில் அதைப் போட்டிருக்கக் கூடாதா என்று கூறிவிட்டு யார் மோசடி செய்கிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல என்று கூறினார்கள். (அறிவிப்பவர் :- அபூஹுரைரா (ரலி), நூல்:- முஸ்லிம்)

விற்கப்படுகின்ற ஒரு பொருளில் ஏதாவது குறைகள் இருக்குமாயின் அதனை எடுத்துக்காட்டி விற்க வேண்டும். மாறாக அந்தக் குறையை மறைத்து விற்பதாயின் அவர் முஹம்மது நபியை பின்பற்றக்கூடிய ஒருவராக இருக்கமாட்டார் என நபியவர்கள் கண்டிப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பதுக்கல்
 சிலர் வியாபார பொருட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது போல் காட்டிக்கொண்டு பொருட்களை பதுக்கிவிட்டு கொள்ளை இலாபமிட விலையை ஏற்றி விடுவார்கள். இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகி விடுகிறார்கள். இந்த மோசடி வியாபாரத்தையும் நபியவர்கள் கண்டித்தார்கள்.

”பாவிகளைத் தவிர மற்றவர்கள் பதுக்க மாட்டார்கள் என நபி (ஸல்) கூறினார்கள்” (நூல் – திர்மிதி)

இடைத் தரகர்களின் மோசடி
 மக்கள் வியாபாரியிடம் ஒன்று கூடும்போது, அந்த வியாபாரி தனது இடைத் தரகர்களை ஏவிவிட்டு குறித்த பொருளின் விலையை ஏற்றிவிட்டு நழுவி விடுவார்கள். எதையும் அறியாத அப்பாவி மக்கள் இந்த மோசடியில் மாட்டிக் கொண்டு கூடுதல் விலை கொடுத்து அற்பமான ஒரு பொருளை தரம் வாய்ந்த பொருள் என நம்பி வாங்கிச் செல்வார்கள்.

(வாங்கும் எண்ணமின்றி) விலையை அதிகம் கேட்க வேண்டாம் என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் :- அபூ ஹுரைரா (ரலி) நூல்:- புகாரி)

இருவருக்கிடையில் வியாபாரம் நடக்கும்போது மூன்றாம் நபர் குறுக்கிட்டு விலை பேசுவதையும் அடுத்தவன் தொழிலில் மண்ணை போடுவதையும் பார்க்கிறோம்.

உங்களில் சிலர் சிலரது வியாபாரத்தில் குறுக்கிட வேண்டாம். சிலர் (திருமணத்திற்காக) பெண் பேசும்போது வேறு சிலர் அதில் குறுக்கிட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் :- உமர் (ரலி) நூல்:- புகாரி)

கால்நடைகளை அதிக விலைக்கு விற்க வேண்டும் என்பதற்காக, அந்த கால்நடையிடம் (ஆடு, மாடுகளிடம்) பால் கரக்காமல் சில நாட்களுக்கு விட்டுவிட்டு அந்த கால் நடையின் பால் மடு பெரிதாக இருப்பது போல் காட்டி விடுவார்கள்.

பால் மடு பெரிதாக இருப்பதைக் கண்டு அதனை வாங்குபவர் அதிக விலை கொடுத்து வாங்கி விடுவர். இந்த மோசடியையும் நபியவர்கள் தடுத்தார்கள். வணிகக் கூட்டம் (சந்தைக்கு வரும் முன்) எதிர் கொள்ளாதீர்கள். சில நாட்கள் பால் கரக்காமல் விட்டுவிட்டு கால் நடைகளை விற்காதீர்கள். சிலர் சிலருக்கு (உதவுவதற்காக கூறி) விலையை ஏற்றி விடாதீர்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல் – திர்மிதி.)

வாடிக்கையாளரை அச்சுறுத்தல்
 சந்தைக்கு அல்லது துணிக்கடைக்குச் சென்று குறித்த ஒரு பொருளை தொட்டுப் பார்த்து விட்டால் அந்தப் பொருளை தொட்டுபார்த்தவர் வாங்கி விட வேண்டும் என்று வியாபாரிகள் நிர்ப்பந்திப்பதை பார்க்கிறோம். எப்படியாவது அப்பொருளை வாங்கியே ஆகவேண்டும் என்பதற்காக அதை பார்சல் பண்ணி தந்துவிடுவார்கள்.

இந்த வியாபாரத்தை முனாபதா, முலாமஸா என அரபியில் கூறப்படும். இந்த வியாபார முறையை நபி (ஸல்) தடுத்தார்கள் (நூல்: புகாரி)

நுகர்வோர் அல்லது வாடிக்கையாளர் தனக்கு விரும்பிய ஒரு பொருளை தேர்ந்தெடுப்பதற்கும் வேண்டாம் என கூறி விடுவதற்கும் உரிமையுண்டு. பார்த்தப் பொருளை வாங்கியே ஆக வேண்டும் என வியாபாரி நிர்ப்பந்திப்பதை இஸ்லாம் கண்டிக்கிறது.

வியாபாரத்தில் வாங்குபவரும், விற்பவரும் பரஸ்பரம் சுதந்திரமாக கருத்துக்களை பரிமாறி நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டுமென இஸ்லாம் பணிக்கிறது.

ஒருவரது நடத்தையை வைத்துதான் அவரது நம்பகத்தன்மையையும் அவர் சார்ந்திருக்கின்ற சமூகத்தினதும், மார்க்கத்தினதும் நம்பகத்தன்மை உரசிப் பார்க்கப்படுகிறது. இதனை கவனத்தில் கொண்டு முஸ்லிம்கள் செயலாற்ற வேண்டும்.

முஸ்லிம்கள் இதனை நன்கு புரிந்து கொண்டு வியாபாரங்களை நடாத்த வேண்டும். மறுமை நாளை அவர்கள் ஒரு போதும் மறந்து விடக்கூடாது. (தொடரும் இன்ஷா அல்லாஹ்)

Thursday, May 24, 2012

විද්‍යාව ආගමක්ද?




මෑතකදී මා සමග අන්තර්ජාල සංවාදයකට පැමිණි පුද්ගලයෙක්ගෙන් ඔහුගේ අනන්‍යතාවය ගැන ප්‍රශ්න කරන විට තමන්ගේ දහම විද්‍යාව බව ප්‍රකාශ කරන ලදී. ඔහු තම දහම විද්‍යාව ලෙස සඳහන් කර තිබුණද ඔහුගේ ප්‍රතිචාරයන් සම්පූර්ණයෙන් බරව තිබුණේ බුදු දහම දෙසටයි.



අන්තර් ජාලය තුලදී මෙවැනි බොහෝ දෙනෙක් මා දැක තිබේ. ඔවුන් සිය දහම විද්‍යාව බව සඳහන් කළද  ලිපි වල අන්තර්ගත අදහස් ඇත්තේ බුදු දහමට පක්ෂවයි. කාලයක් අන්තර්ජාලයේ මඩ කරත්තයක් වශයෙන් සිටි පෙරමුණේ රාළ නම් බ්ලොග් කරුවාද තම දහම වශයෙන් හැඳින්වුයේ විද්‍යාවයි. නමුත් ඔහු විසින් ලියන ලද ලිපි සියල්ලම පාහේ බුදු දහම උසස් කරමින් ඉස්ලාම් දහම පහත් කළ ඒවාය. මොවුන් මෙසේ තම දහම විද්‍යාව ලෙස හඳුන්වමින් විද්‍යාව දෙසට ඇදෙන්නේ එසේ නොකර බුදු දහම යැයි සඳහන් කළහොත් මා විසින් බුදු දහමේ ඇති අවිද්‍යාත්මක කරුණු පතුරු ගසනු ඇති බැව් ඔවුන්ට සිතුණු නිසා විය හැක. එ‍සේ නැත්නම් මේ විද්‍යා දහම් කාරයන්ට බොදුනුවන්ටවත් නැති කැක්කුමක් බුදු දහම කෙරේ ඇයි? ඇත්තටම මොවුන් වෙන කවුරුන් වත් නොව අන්තර්ජාලයේ බිහිවී සිටින සිංහල බසින් ක්‍රියාත්මක වන ආගමික අන්තවාදීන්ය.



මා විසින් ඉහත කළ ප්‍රකාශය බුදු දහමට එරෙහි එකක් බවට වරදවා වටහා ගන්නට අවශ්‍ය නැත. සිංහල බෞද්ධ සමාජය තුල මෙවැනි අන්තවාදීන් සිටින්නේ ඉතාමත් සුළුතරයකි. නමුත් පසුගිය කාලයේ ඔවුන් අන්තර්ජාලය තුල මහා හඩක් ගෙන ගියේ ඇත්තටම මුස්ලිම් වරුන්ට එරෙහි මහා බලවේගයක් ලෙසයි. නමුත් දැන් එය පුස් වෙඩිල්ලක් වී හමාරය. ඒ ඔවුන්ගේ වෑයම් ලත් තැනම ලොප් කිරීමට අපට හැකි වු නිසාය. බහුතර සිංහල ජනතාව ජාතිබේධ හෝ ආගම්බේධ නැති ජන කොටසකි. වසර දහසකටත් වඩා කාලයක් මේ ලක්බිම සිංහල මුස්ලිම් සංහිදියාවක් පැවතුනේ එහෙයිනි. ඇත්තටම අප බේධ බින්න වීම ඇරඹුනේ යටත් විජිත යුගයෙන් පසු නොවේද? මාතෘකාවෙන් පිටතට මදක් යාම පිළිබදව සමාව අයදිමි.



ඉංග්‍රීසි බසින් Religion යන වචනය සෑදී තිබෙන්නේ ලතින් බසින් Religia නම් වදනයෙනි. එහි අරුත දෙවියන් සමග සම්බන්ධතාවයයි. නමුත් අප ආගම යන වචනය සිංහල බසින් අර්ථ ගන්වන කල ඇදහීම, ලබ්ධිය, අවබෝධය, ශාස්ත්‍රය, පාරම්පරික විශ්වාසය, ශාස්තෘ වදන්, පෙළ දහම, තන්ත්‍රය, තාන්ත්‍රික කෘතිය, පැමිණීම, සම්ප්‍රාප්තිය යන වචන යොදා ගත හැක. නමුත් මේ වචන වලින් ඉතාම වැදගත්, අර්ථාන්විත වචනයන් ලෙස ඇදහීම හෝ විශ්වාසය ලෙස ගැනීම මෙතැනදී වඩා සාධාරණ වනු ඇතැයි සිතුණි. එයට හේතුව ඇදහීම හෙවත් ආගමික විශ්වාසයන් යනු මිනිසාගේ ලෞකික හා ලෝකෝත්තර විමුක්ති මාර්ගය ලෙස භාවිතයට පත්ව ඇති බව පිළිගන්නට සිදුවීමයි. ඉහත දක්වන ලද වචන වලින් වැඩි හරියක ඇත්තෙත් ඇදහීම හෝ ඊට සබඳතාවක් ඇති අර්ථ නිරූපණයක් බව ද පෙනේ.



දැන් අපි විද්‍යාව යනු කුමක්දැයි මදක් සොයා බලමු. මෙහිදී Religion යන වචනය සේම Science නම් වචනයද ඉංග්‍රීසි බසට පැමිණ ‍තිබෙන්නේ ලතින් බසින් බැව් පලමුව කිව යුතුය. ලතින් බසින් Scientia සයන්ටිආ යන වචනයෙන් Science සයන්ස් යන වචනය බිහි වී ඇත. එම වදනයෙහි අරුථ දැනුම යන්නයි. සයන්ස් හෙවත් විද්‍යාව යනු මේ විශ්වය කෙසේ ක්‍රියා කරන්නේද? යන්න පැවසීමයි. එසේත් නැත්නම් විශ්වය පිලිබදව කරන ගවේශණයෙන් ලබාගන්නා දැනුමයි. මෙහිදී දැනුම මගින් විශ්වාසයක් ගොඩ නැගෙන නිසා විද්‍යාව යනුද ආගමක් බවට කෙනෙකුට තර්ක කළ හැක. නමුත් මගේ අදහස නම්  දහමකට තිබිය යුතු බොහෝ ලක්ෂණ විද්‍යාවට නොමැති බවයි.



දහමක් අදහන්නන් විසින් මෙලොව ආරම්භය සහ එහි ක්‍රියාකාරීත්වය සම්බන්ධ සියළු ක්‍රියාකාරකම් මත බලපවත්නේ තම දහමින් පවසන්නාවු ක්‍රියාවලිය බවට විශ්වාස කරයි. එම විශ්වාසය මත පදනම්ව ඔවුන් විසින් තම දහමේ පෙන්වන ආකාරයටම දිවිමග සකස් කර ගැන්මට උත්සාහ දරයි. පොදුවේ ඔවුන් සැමගේ උත්සාහය ලෞකික ජීවිතයේ ක්‍රියාකාරකම් තුලින් ලෝකෝත්තර සැපතක් සෙවීමයි. නමුත් යමෙක් විද්‍යාව දහමක් ලෙස අදහන්නේ නම් එතැන ලෝකෝත්තර සැපතක් ගැන බලාපොරොත්තු තැබිය නොහැක. එයට හේතුව ලෝකෝත්තර කිසිවක් ගැන විද්‍යාව මේ වන තුරු කිසිදු පර්යේෂනයක් පවත්වා නොමැති නිසාවෙනි.



එමෙන්ම විද්‍යාව තුල දහමක මෙන් මිනිසාට කිසියම් පිහිටක් ආධාරයක් ලබා ගැනීමට කිසිදු බලවේගයක් නොමැත. ඇත්ත වශයෙන්ම විද්‍යාව එවැනි ඇදහිලි මිථ්‍යාවන් ලෙස බැහැර කරති. කෙසේ හෝ වේවා පිහිටාධාර නොසෙවීම නිසාද විද්‍යාව දහමක් නොවන බවට සාධක පෙන්වයි.

 Anver Manatunga

Tuesday, May 22, 2012

இளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்?

இளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்?

எழுதியவர் மௌலவி M.S.M. இம்தியாஸ் ஸலஃபி 



-
அன்புக்குரிய பெற்றோர்களே! கல்வி என்பது ஒரு சமூகத்தின் முகவரி. சமூகம் தலை நிமிர்ந்து நிற்பதற்கும் அந்த சமூகத்தின் வரலாற்றுச் சுவடுகளை பாதுகாத்து வைப்பதற்கும் பெற்றோர்களினதும் கல்விமான்களினதும் பணி இன்றியமையாதது.
கல்வியின் அவசியத்தை உணர்ந்து கொண்ட இன்றைய எமது சமூகம் அதனை எப்படி எந்த வகையில் கொடுக்க வேண்டும் என்பதை சரிவர புரிந்து கொள்ள தவறி விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
பிரசித்திப் பெற்ற பாடசாலைகளிலும் International Schools களிலும் பிள்ளைகளை சேர்ப்பதற்காக பெற்றோர்கள் அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றனர். அத்தோடு மேலதிக வகுப்புகளில் (Tution Class) பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து அனுப்பிவைக்கிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகைளின் எதிர்கால முன்னேற்றம் கருதி இரவு பகலாக கஷ்டப்பட்டு இரத்தம் சிந்தி வியர்வை சிந்தி சம்பாதிக்கிறார்கள். பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பிள்ளைகளின் நடவடிக்கைகள் காணப்படுகின்றனவா என்பதை பெற்றோர்கள் ஒரு முறை சிந்திக்கவேண்டும்.
வளர்ந்து வரும் இளம் சமூகத்தினதும் மாணவ மாணவிகளினதும் செயற்பாடுகள் இன்று பலத்த விமர்சனங்களுக்குள்ளாகி வருவதை யாவரும் அறிந்ததே. பாடசாலைக்கும் Tution Class க்கும் செல்வதாக கூறிக் கொண்டு தங்களுடைய காதலன் காதலியுடன் தெரு ஓரங்களிலும் கடற்கரை ஓரங்களிலும் பூங்காக்களிலும் சினிமா அரங்குகளிலும் சுற்றித்திரிகிறார்கள். குறிப்பாக சனி ஞாயிறு தினங்களில் அதிகமாக இக்காட்சி காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக வெளிப்பகுதிகளிலிருந்து கொழும்புக்கு Tution Class வரும் பிள்ளைகளும் இத்தகைய செயல்களில் அதிகமாக ஈடுபாடுகொள்கிறார்கள்.
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய கண்ணியமான ஆடை தான் ஹிஜாப் அபாயா என்னும் ஆடை. அந்த ஆடை இன்று துஷ்பிரயோகம் செய்யப்பட்டு காதல் லீலைகளுக்கு பாதுகாப்பு அரணாக ஆக்கப்படுகிறது. இந்த அபாயா ஆடையை கள்ள உறவுக்காகவும் தங்களை அடையாளம் காணாமல் இருக்கும் பொருட்டும் சிலர் பயன்படுத்துகிறார்கள். Room Services என்ற இடத்திற்கு போய் தவறான செயல்களில் ஈடுபடவும் இவ் ஆடையை (முகமூடி அபாயாவை) பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு நடந்து கொண்ட பல பெண்கள் பிடிக்கப் பட்டிருக்கிறார்கள்.
அபாயா அணிந்து காதலனுடன் எமது பெண்பிள்ளைகள் கடற்கரை ஓரங்களிலும் பூங்காக்களிலும் Bus-லும் Train-லும் செய்யும் அசிங்கங்களையும் சில்மிஷங்களையும் பார்க்க சகிக்க முடியவில்லை. பலரும் காரித் துப்புகின்ற அளவுக்கும் வேதனை படக்கூடிய அளவுக்கும் நிலமை காணப்படுகிறது. ஒருசிலர் இதனை படம் பிடித்து Websites & YouTube களிலும் போட்டிருக்கிறார்கள். அண்மையில் பம்பலப்பிட்டி கடற்கரைபகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஊனுகளாக வெளியிட்டிருந்தார்கள். அது போலவே களுத்துரை கடற்கரை பகுதியில் பொலிஸாரினால் மேற் கொள்ளப்பட்ட தேடுதலின் போது எமது முஸ்லிம் வாலிப பெண்கள் அகப்பட்டிருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பே கருகொள்வதும் கருவை கலைப்பதும் என்ற நிலை தோன்றியுள்ளது. இது எவ்வளவு பெரிய அவமானம் என்று சிந்தித்துப் பாருங்கள்.
பாலினக் கவர்ச்சியில் கட்டுண்டு காதல் மோகத்தில் ஈடுபட்டு கற்பையும் ஈமானையும் இழந்து விட்டு கடைசியில் பெற்றோரையும் எதிர்த்து நின்று மார்க்கத்தையும் தொலைத்து விட்டு போய்விடுகிறார்கள். காதலித்து கைவிடப்பட்ட பெண்களையும் காதல் தோல்வியால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்களையும் அன்றாடம் கேள்விப்படுகிறோம். இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ளமுடியாமல் தலைமறைவாகிப்போன பெற்றோர்களையும் பார்த்திருக்கிறோம். வாலிபர்களின் அட்டகாசமான செயற்பாடுகள் மற்றும் பாவனைகள் மிகுந்த அதிர்சிசியூட்டக்கூடியதாக மாறியுள்ளன. செல்போன் பாவனைகள் இளம் வாலிப ஆண் பெண்களிடம் ஒழுக்கச்சீரழிவுக்கு வழிகாட்டியாக ஆக்கப்பட்டுள்ளது.
அன்புக்குரிய பெற்றோர்களே! இது ஒரு அபாயகரமான சைக்கினை. முன்பு ஒருபோதும் இல்லாத வகையில் ஒழுக்கச் சீரழிவு வேகமாக பரவிவருகிறது.இந்நிலை நீடித்தால் இஸ்லாமிய குடும்ப அமைப்பு மற்றும் சமூக ஒழங்கு உடைந்து சிதறுண்டு விடும். அல்லாஹ்வின் தண்டனையும் இறங்கிவிடும். எனவே இச்சீரழிவுகளை தடுத்து நிறுத்தி இளம் சமூகத்தை பண்படுத்தி வழிநடாத்தும் பொறுப்பை பற்றி முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும். பள்ளிவாசல் கதீப்மார்கள் ஆசிரியர்கள் மற்றும் புத்திஜீவிகள் தங்கள் களத்தை குத்பா மிம்பர்களை பயன்படுத்தவேண்டும் கல்வியை எமது பிள்ளைகளுக்கு கொடுக்கவேண்டும். அதைவிட ஈமான் பற்றிய தெளிவையும் மறுமை பற்றிய அறிவையும் கொடுக்கவேண்டும். பிள்ளைகளின் விடயத்தில் விழிப்பாக இருங்கள்.அனைத்தையும் இழந்த பின் கண்ணீர் விடுவதில் எந்த பலனுமில்லை. எனவே பிள்ளைகள் சகவாசம் வைத்துக் கொள்ளும் நண்பர்கள் போய்வரும் இடங்கள் தூங்கும் நேரங்கள் போன்ற விடயங்களில் கவனம் செலுத்துங்கள். ஒளிவு மறைவின்றி பிள்ளைகளுடன் கலந்துரையாடுங்கள். ஈமானுக்கு பாதகமான எச்செயலும் கூடாது என்ற அறிவுரையை மனதில் பதிய வையுங்கள். இன்ஷாஅல்லாஹ் உங்கள் முயற்ச்சி வெற்றியளிக்கலாம். ஷஷநீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புத்தாரிகள் உங்கள் பொறுப்பை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள் என நபி(ஸல்)கூறினார்கள்.(நூல்:புகாரி)
வெளியீடு:
இம்தியாஸ் ஸலபி
மஸ்ஜிதுர்மான்
38 ebanasior  place Dehiwala

Tuesday, May 22, 2012

இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள்




முதுபெரும் இயற்பியல் அறிஞரும், நோபல் பரிசினை வென்றவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார்: மதத்தினை மெய்ப்பிக்காத அறிவியல் முடமானது; அறிவியலை மெய்ப்பிக்காத மதம் குருடானது.

இஸ்லாத்தினைத் தவிர பிற மதங்கள் அறிவியல் ஆய்வுகளைக் கண்டு கொள்ளுவதில்லை. தங்களுடைய வேதப் புத்தகங்களை தற்கால அறிவியல் உண்மைகளுடன் பொருத்திப் பார்ப்பது இல்லை. அது, அவர்களுக்கு தேவையாகவும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் அல்லாதவர்கள், தங்களுடைய வேதப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் தற்கால அறிவியலுக்கு முரணாக இருப்பதை அறிந்து கொள்ளவும் முற்படுவதுமில்லை. ஆனால், இஸ்லாம் இவைகளுக்கு மாற்றமாக மக்களை நோக்கி சவால் விடுகின்றது.

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190) வானங்களும், பூமியும் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்து குர்ஆனோடு பொறுத்திப் பாருங்கள் என்று அறைகூவல் விடுக்கின்றது.

குர்ஆனில் உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகமான வசனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் கருத்துக்களை உட்பொருளாகக் கொண்டுள்ளன. குர்ஆன் என்பது அறிவியல் புத்தகமல்ல; எனினும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் எவையும் குர் ஆனோடு முரண்படவில்லை என்பதை நடுநிலையான அனைத்து அறிவியலாளர்களும் ஒத்துக் கொள்வர். திருக்குர் ஆனின் உள்ள அறிவியல் உண்மைகள் எதேச்சேயானவை என்று கூறுவதற்கும் வாய்ப்பில்லை அன்ற அளவிற்கு ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன.

திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிவியல் செய்திகளையும் இக்கட்டுரையில் குறிப்பிட முடியாது எனினும் “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதை கீழ்க்கண்ட இரு செய்திகளின் மூலம் அறியலாம்.

பெருவெடிப்புக் கொள்கை:

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)

பெருவெடிப்புக் கொள்கை (‘The Big Bang’) மூலமாகவே, இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதில் வானியற்பியல் வல்லுனர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. பெருவெடிப்புக் கொள்கை என்பது,

1. இந்த முழுப் பிரபஞ்சமும் முன்னதாக மாபெரும் பருப்பொருளாக (Primary Nebula) இருந்தது.

2. பின்னர், பெரு வெடிப்பு ஏற்பட்டு பிரபஞ்சங்கள் உருவாகின.

3. அவை பிறகு நட்சத்திரங்கள், கோளங்கள், சூரியன் – சந்திரன்களாக உருவாகின.

- என்பதாகும்.

அணு சக்தி ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பு (European Organization for Nuclear Research-CERN), இந்த பெருவெடிப்பை ஆய்வுக்கூடத்தில் நடத்தி அணு ஆற்றல் பருப்பொருளாக எவ்வாறு மாறுகின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக, பிரா‌ன்‌ஸ்-சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 ‌மீட்டர் ஆழ‌த்‌தி‌ல் 27 ‌‌கி.‌மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையைப் போன்ற சோதனைக்கூடத்தில் தான் அணுக்களை உடைத்து நொறுக்கும் இயந்திரம் கடந்த செப்டம்பர் மாதத்தில் உருவாக்கியது.


(படம்: புரோட்டான்களின் மோதல் வரைபடம்)

சுமார் 595 கோடி டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பெருவெடிப்பு சோதனை‌யை துவக்கினர். சுரங்கத்தின் 2 இடங்களில் இரு‌ந்து புரோ‌ட்டா‌ன்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மாற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் எவ்வாறு தோன்றியது என்பதைக் கண்டு‌பிடி‌க்க‌ திட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தை கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனர். ஆனால் பெருவெடிப்பு சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏ‌ற்ப‌ட்டது. கு‌ளிரூ‌ட்டு‌ம் கரு‌வி ஒ‌‌ன்‌றி‌ல் இரு‌ந்து ஒரு ட‌ன்‌னி‌ற்கு‌‌ம் மே‌ற்ப‌ட்ட ‌திரவ ‌நிலை‌யிலான ஹீ‌லிய‌ம் வாயு க‌சி‌ந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்ட ஆய்வுகள் அடுத்தாண்டில் நடக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு சிரமப்பட்டு நடத்தப்படும் ஆய்வு உண்மையை திருக்குர்ஆன் எளிதாக 21:30ல் நமக்குக் கூறுகின்றது.


படம்: LHC (Large Hydron Collider) எனப்படும் பெருவெடிப்பு ஆய்வுக்கூடம்

பூமிக்கும் வானிற்கும் இடைப்பட்ட பகுதி:

சில காலத்திற்கு முன்பு வரை, பூமிக்கு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் உள்ள விண்வெளியானது வெறும் வெற்றிடம் என்றே அறிவியலாளர்கள் கூறி வந்தனர். ஆனால், தற்போது விண்வெளியானது திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பருப்பொருளான “பிளாஸ்மா” என்ற அயனிய பொருண்மை பாலங்களால் (bridges of matter) ஆனவை என்பது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வானிற்கும், பூமிக்கும் இடைப்பட்ட பரப்பு வெற்றிடமல்ல என்பது தெளிவாகி உள்ளது.

அவனே (இறைவேனே) வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் படைத்தான். (அல்குர்ஆன் 25:59) என்பதாக அல்லாஹ், தன் இறைவேதத்தில் குறிப்பிடுகின்றான். பூமிக்கும், வானிற்கும் இடைப்பட்ட பகுதி வெற்றிடமாக (vacuum) இருந்தால், இறைவன் பூமியையும், வானங்களையும், “இடைப்பட்ட பகுதியையும்” என்று சேர்த்துக் கூறத் தேவையில்லை.


படம்: பால்வெளி பகுதியில் அயனிய பொருண்மை வெளி (வெற்றிடம் அல்ல என்பதற்கு சான்று)

1400 ஆண்டுகளுக்கு முன்னதாக எந்த ஒரு தனி மனிதனின் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட செய்தியை, அறிவியல் உணமையை இஸ்லாம் எடுத்துக்காட்டுகின்றது.

மேற்கண்ட இரு எடுத்துக்காட்டுகளும், இஸ்லாம் இன்றைய நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு எவ்வாறு ஒத்துள்ளது என்பதை விளக்குகின்றது. தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதையல் போல குர்ஆனை ஆய்வு செய்தால், இஸ்லாம் இவ்வுலகிற்கு வழங்கிய அறிவியல் கொடைகளை அனைவரும் அறிய முடியும்.

அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக (பூமியின்) பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 41:53)

ரியாதிலிருந்து ஃபைசல்

Sunday, May 20, 2012

அறபு மத்ரஸாக்களுக்கு மட்டுமல்ல பாடசாலைகளுக்குக் கொடுத்தாலும் அது ஸதகாதான்



naufal-movமெலளவி எஸ்.எல். நவ்பர், பணிப்பாளர்-நிதாஉல் ஹைர்
மெலளவி எஸ்.எல். நவ்பர் அவர்கள் மாவனல்லை தல்கஸ்பிடியைச் சேர்ந்தவர். 1988ம் ஆண்டு கபூரிய்யா அறபுக் கல்லூரியில் பட்டம் பெற்று வெளியேறினார். 1989ம் ஆண்டு சவூதி மலிக் ஸுஊத் பல்கலைக்கழகத்தில் அறபுத்துறையில் விஷேட பட்டம் பெற்றதோடு ஆசிரியர்களுக்கான அறபுப் பயிற்சி கற்கைநெறியையும் பூர்த்தி செய்தார். 1993ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை சவூதி அறேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சின் தமிழ் பிரிவிற்கும் தஃவா பிரிவிற்கும் பொறுப்பாக இருந்து கடமையாற்றினார்.
1999ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலிருந்து ஐஐகீˆ நிறுவனத்தின் பணிப்பாளராக 2010ம் ஆண்டு வரை பணியாற்றினார். 2010ம் ஆண்டு முதல் நிதாஉல் ஹைர் நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்து வருகிறார். மேலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உப பொருளாளராகவும் செயற்பட்டு வருகிறார். மௌலவி நவ்பர் அவர்கள் இஸ்லாமிய தஃவா துறையிலும் சமூக சேவையிலும் மிகுந்த அனுபவம் கொண்டவர். அவருடன் மீள்பார்வை மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
 சந்திப்பு : இன்ஸாப் ஸலாஹுதீன்
* நீங்கள் தற்பொழுது பணியாற்றுகின்ற நிதாஉல் ஹைர் நிறுவனத்தின் செயற்பாடுகள் பற்றி குறிப்பிட முடியுமா?
நிதாஉல் ஹைர் நிறுவனம் சவூதி அரேபியாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு நிறுவனமாகும். இது பொதுநல சேவைகளை முன்னிறுத்திச் செய்யக்கூடிய ஒரு அமைப்பாகும். அதேநேரம் கல்விக்கான நடவடிக்கைகளையும் அது மேற்கொள்கின்றது. எல்லா அமைப்புக்களையும் இணைத்து செயற்படுவதற்கு ஒரு பொது நிறுவனம் வேண்டும் என்ற அடிப்படையில் நிதாஉல் ஹைர் அமைப்பின் ஒரு கிளையாக இலங்கையில் இந்த நிறுவனம் 2008 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் பாரிய பணிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். சுமார் 50ற்கும் மேற்பட்ட மஸ்ஜித்களைக் கட்டி முடித்திருக்கின்றோம். இன்னும் 10 மஸ்ஜித்களைக் கட்டிக் கொண்டிருக்கிறோம்.
அதேபோன்று 800 ற்கும் மேற்பட்ட தண்ணீர் கிணறுகளை நாம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். சுமார் 230 ற்கும் மேற்பட்ட அனாதைச் சிறுவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கிவருகிறோம். கல்வியைப் பொறுத்தவரையில் அறபு மத்ரஸாக்களின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். உலமாக்களுக்கான 15 இற்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தி இருக்கிறோம்.
மேலும் மத்ரஸாக்களின் நிரந்தர வருமானத்திற்காக பேக்கரிகளை அமைத்துக் கொடுத்திருக்கிறோம். நிதாஉல் ஹைர் நிறுவனம் World Cultural Centre for Development and Training என்ற பிரிவை கல்விக்காக ஆரம்பித்திருக்கின்றது.
* சமூக சேவையில் அதிக அனுபவம் கொண்டவர் என்ற வகையில் எமது சமூகத்தில் பொதுநல சேவைகளுக்கான தேவைப்பாடு எப்படி இருக்கின்றது?
சமூக சேவையில் ஈடுபடுவது என்பது அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்த ஒரு பாக்கியம் எனக்கருதுகின்றேன். அதில் ஈடுபடுகின்றவர்கள் தூய்மையோடும் சுயநலமில்லாமலும் ஈடுபட வேண்டும். இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் சமூக சேவையின் தேவை மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு சகல அமைப்புகளும் ஒத்துழைத்து அவர்களை மீண்டும் தலைநிமிர்ந்து வாழ வைப்பது ஒரு முக்கிய கடமையாகும்.
மற்றது, கொழும்பின் சேரிப்பகுதிகளில் வாழக்கூடிய முஸ்லிம்களின் நிலை மிகவும் கவலைக்கிடமானதாக இருக்கின்றது. கிராமப் புறங்களில் இருக்கும் மக்கள் அனுபவிக்கும் வசதி வாய்ப்புக் களைக் கூட கொழும்பின் சேரிப் புறங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் அனுபவிப்பதில்லை. எல்லா நிறுவனங்களும் கொழும்பில் இருக்கின்றன. ஆனால் கொழும்பு முஸ்லிம்கள் அவற்றால் பயன் பெறுகிறார்களா என்பது கேள்விக்குறிதான். எனவே, இந்த விடயம் குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
அதேபோன்று எமது உலமாக்களின் விடயத்திலும் நாம் பொதுப் பணி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். அவர்களில் ஒரு பகுதியினர் அரசாங்கத் தொழில்களிலும் ஏனைய நிறுவனங்களிலும் இருக்கின்றனர்.
மற்றொரு பிரிவினர் மத்ரஸாக்களிலும் பள்ளிவாயல்களிலும் இருக்கின்றனர். இவர்களை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் உயர்வடையச் செய்வது இந்த நாட்டில் இருக்கக்கூடிய அமைப்புக்களின் பொறுப்பு என நான் கருதுகிறேன்.
அதேபோன்று அனாதைகள், விதவைகளின் தேவைகளும் கவனிக்கப்பட வேண்டும். உதவி செய்யக்கூடிய நிறுவனங்களும் அவர்களுக்கு தாராளமாக பணத்தை அள்ளிக் கொடுக்கின்றனர். ஆனால் அது ஒழுங்குபடுத்தப்படுகின்றதா, வழிகாட்டப்படுகின்றதா என்பதும் கேள்விதான்.
* பொதுப் பணிகளில் ஈடுபடக்கூடிய நிறுவனங்களுக்கிடையிலான பொது இணைப்பு பற்றி என்ன சொல்கிறீர்கள்?
அழகான ஒரு கேள்வி. உண்மையில் சர்வதேச நிறுவனங்களும் உள்நாட்டு நிறுவனங்களும் இந்த நாட்டிலே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவர்கள் ஒன்றுபட்டால் பணிகளை விசாலமாகவும் அழகாகவும் திட்டமிட்டுச் செய்யலாம். ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு நிறுவனம் பொறுப்பெடுத்தாலும் கூட பணிகளைப் பூரணமாகச் செய்ய முடியும். நாங்கள் அத்தகையதொரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினோம். எனவே வருடத்தில் ஒரு தடவையாவது எல்லா நிறுவனங்களும் தமது வேறுபாடுகளை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு பொதுப்பணியில் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய ஒரு கால கட்டத்தில் நாம் நிற்கிறோம்.
* எமது நாட்டைப் பொறுத்த வரை பல இஸ்லாமிய அமைப்புக்கள் இயங்குகின்றன. அவற்றின் பணி எவ்வாறு அமைய வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?
உண்மையில் இங்கு பல அமைப்புக்களில் தஃவாப் பணியிலே ஈடுபடுகின்றனர். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஒரு ஆரோக்கியமான சூழலைத்தான் இங்கு நாம் காண்கிறோம். அத்தோடு தஃவாவில் ஈடுபடுகின்றவர்கள் ஒவ்வொருவரும் சுவர்க்கத்தின் டிக்கட் எனது பொக்கட்டில் தான் இருக்கிறதுஎன்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். ஒவ்வொருவருக்கும் அதிலே இஹ்லாஸ் இருக்க வேண்டும். அதனை அல்குர்ஆன், ஸுன்னா அடிப்படையிலேயே செய்ய வேண்டும்.
அடுத்த சகோதரர்கள் செய்யக்கூடிய பணியை எங்களால் செய்ய முடியாமல் இருக்கலாம். அதனைச் செய்யும் அவர்களை நாங்கள் உற்சாகப்படுத்த வேண்டும். மற்றது, கொள்கையில் சிற்சில கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் கூட அவற்றை ஆரோக்கியமான வார்த்தைகளைக் கொண்டுதான் விமர்சிக்க வேண்டுமே தவிர அவர்கள் நரகவாதிகள் என்றோ, இவர்கள் பாவிகள் என்றோ விமர்சிப்பது ஆரோக்கியமானதல்ல.
மற்றது, தஃவாவில் ஈடுபடக்கூடிய எல்லோரும் மற்ற மதத்வர்களுக்கு இஸ்லாம் குறித்துச் சொல்ல முன்வர வேண்டும். மேலும் பெண்களுக்கான தஃவாவும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். மற்றது, இயக்கங்கள் மஸ்ஜித்களை மையமாக வைத்து பணியாற்றும்போது நிதானமாகவும் நடுநிலை யோடும் தூரநோக்குடனும் பணியாற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன்.
* உங்களது பார்வையில் எமது சமூகத்தில் முதன்மைப்படுத்தப்பட வேண்டிய பணியாக எதனைக் கருதுகிறீர்கள்?
எமது சமூகத்திற்குப் பல தேவைகள் இருந்தாலும் கல்வி ரீதியாக சமூகத்தை உயர்த்தி வைப்பதுதான் எமது முதன்மைப் பணி என நான் நினைக்கிறேன். எமது பாடசாலைகளில் நிறையத்தேவைகள் இருக்கின்றன. அரசாங்கம்தான் அவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை ஒருபுறம் வைக்க வேண்டும். தங்களுடைய ஸதகாக்களை, வக்புகளை அறபு மத்ரஸாக்களுக்கும் மஸ்ஜித்களுக்கும் கொடுத்தால்தான் நன்மை என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார் கள். அரசாங்கப் பாடசாலைகளுக்குக் கொடுப்பதும் வக்பு தான் என்பதை சமூகத்திற்கு விளங்கப்படுத்த வேண்டும்.
எனவே, கல்வி ரீதியாக சமூகத்தை உயர்த்திவிட முடியுமென்றால் ஏனைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் அது தீர்வாக அமைய முடியும் என நான் கருதுகிறேன்.


Thanks to meelpaarvai.net