You are here :
Home
»
Archives for
2013
Sunday, June 9, 2013
புதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது
CHAD
எனும் நாட்டில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட படிம மண்டை ஓடு பரிணாம
வளர்ச்சி கோட்பாட்டை மறுக்கிறது. டார்வின் கொள்கைகளை பின்பற்றும்
விஞ்ஞானிகள் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையை இது ஆட்டங்கான வைத்துள்ளது
என்று கூறுகின்றனர். ‘குரங்கிலிருந்து மனிதன் வந்தான்’ எனும் கட்டுக்கதை
மீண்டும் ஒருமுறை வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய
ஆபிரிக்க நாடான (CHAD) டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய படிம மண்டை ஓடு
மனிதனின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமான கோட்பாட்டிற்கு பெரும் சேதத்தை
விளைவித்துள்ளது. உலக புகழ் பெற்ற விஞ்ஞான பத்திரிக்கைகள் மற்றும்
சஞ்சிகைகளில் இதற்கு பெரும் பகுதி ஒதுக்கப்பட்டன. ‘மனிதன் குரங்கு போன்ற
ஒரு உயிரினத்திலிருந்து தான் பரிணாம வளர்ச்சியடைந்தான்’; என்ற கடந்த 150
வருடங்களாக டார்வினை பின்பற்றுபவர்களால் பிடிவாமாக கூறப்பட்டுவந்த வாதங்களை
இந்த புதிய படிமம் வீழ்த்திவிட்டது. மைகேல் பிரண்ட், என்ற பிரான்ஸ் நாட்டு
விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த படிமத்திற்கு Sahelanthropus tchadensis என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த
படிமமானது டார்வினை பின்பற்றுபவர்களை பொருத்தவரையில் கிளி கூன்டிற்குள்
பூனையை விட்ட கதையாகிவிட்டது. உலக புகழ்பெற்ற நேச்சர் என்ற சஞ்சிகை இவ்வாறு
கூறுகிறது: ‘புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடு மனிதன் சம்பந்தமான எமது
கருத்துகளை அழித்து விட கூடும்’; ஹாவார்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த டேனியல்
லிபர்மேன் இவ்வாறு கூறுகிறார்: ‘இந்த கண்டுபிடிப்பின் தாக்கமானது ஒரு
சிறிய அணுகுண்டின் தாக்கத்தை போன்றதாகும்’.
இவ்வாறு
சொல்ல காரணம் இந்த மண்டை ஓடு சுமார் 7 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
அது மேலும் மனிதனை போனற அமைப்பில் உள்ளது. (ஏனெனில் இது வரை பரிணாம
வளர்ச்சி ஆதரிப்பவர்கள் சுமார் 5 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த Australopithecus என்றழைக்கப்படும் குரங்கு போன்ற ஒரு உயிரினத்தை மனிதனின் மூதாதைகள் என்று அழைத்து வந்தனர்)
1920 ஆண்டிலிருந்து Australopithecus
சில பண்புகள் மனிதனை போன்று இருப்பதால்,; இத்தகைய அழிந்த உயிரினம்
மனிதனின் மிக பழமையான மூதாதையர் என்று பரிணாம வளர்ச்சி ஆதரிப்பவர்கள்
வாதிட்டு வந்தனர். இந்த ஆய்வை மறுக்க கூடிய பல சான்றுகள் தோன்றியுள்ளன.
உதாரணமாக, 1990ம் ஆண்டு நடைபெற்ற Australopithecus
ஆராய்ச்சியில் அவர்கள் வாதிட்டதை போன்று அவை மேலாக நடக்கவில்லை என்றும்,
மாறாக அவை குரங்களை போன்று நடந்தன என்பது தெரியவந்தது.. புதிதாக
கண்டுபிடிக்கப்பட்ட Sahelanthropus tchadensis படிமமானது சுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த குரங்கு போன்ற Australopithecus , உண்மையில் ‘மனிதனை போன்று’ உள்ளது வேறு வகையில் சொல்வதானால், அது பரிணாம கோட்பாட்டை தகர்கிறது
இதில்
முக்கியமாக : முன்பு ஒரு காலத்தில் மிகப்பெரும் அளவில் மிகவும்
வித்தியாசமான குரங்கினங்கள் வாழ்ந்து அழிந்துள்ளன. இதனுடைய மண்டை ஓடு
அல்லது எழும்புகள் மனிதனுடையதை போன்று உள்ளது. இருப்பினும் இவ்வொற்றுமைகளை
கொண்டு அவைகளை மனிதனுடன் தொடர்புபடுத்த முடியாது. பரிணாம வளர்ச்சி
கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் இத்தகைய அழிந்து போன உயிரினங்களின் மண்டை ஓடுகளை
அவர்களது கோட்பாட்டின் அடிப்படையில் அடுக்கி, ‘குரங்கிலிருந்து மனிதன்’
வரையுள்ள ஏணி என்று திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இருப்பினும் இவைகளை
ஆழமாக ஆராய்ந்ததன் விளைவாக, அத்தகைய எந்த ஒரு ஏணியும் கிடையாது என்பதையும்,
முன்பு ஒரு காலத்தில் வெவ்வேறு வகையான குரங்கினங்கள் வாழ்ந்துள்ளன
என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் மனிதன் அவனுக்கு பின்னால் எத்தகைய
பரிணாம வளர்ச்சியும் இன்றி திடீரென தோன்றினான். வேறு வகையில் சொல்வதானால்,
அவன் படைக்கப்பட்டான்.
நேச்சர் என்ற பத்திரிக்கையின், 11 ஜுலை 2002 இதழில், John Whitfield ஜோன்
வில்ட்பீல்ட், ‘மிகவும் பழமை வாய்ந்த மனித குடும்பம்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ என்ற கட்டுரையில், வாஷிங்டன் நகரிலுள்ள
வாஷிங்டன் பல்கலைகழகத்தின் மனிதவியல் ஆராய்சியாளர் பேர்னாட் வுட்டின்
குறிப்புகளை மேற்கோள்காட்டுகிறார்:
நான்
1963ம் ஆண்டு மருத்துவ கல்லூரிக்கு சென்ற போது மனிதனின் பரிணாம வளர்ச்சி
ஏணியை போன்று காட்சியளித்தது. அவர் (பேர்னாட் வுட்) கூறுகிறார் :
குரங்கிலிருந்து மனிதன் வரையான மத்திய தரமானவைகளை கொண்டு வளர்ச்சியடைந்து
செல்லும் ஏணி, இறுதியானதை தவிர ஏனையவைகள் ஒவ்வொன்றும் குரங்கு
போன்றேயுள்ளது.
தற்போது
மனிதனின் பரிணாமம் போன்றுள்ளது. நம்மிடம் பண்டைய படிமங்கள் உள்ளன.
ஒவ்வொன்றும் மற்றயவைகளுடன் எவைகள், எவ்வாறு தொடர்புபட்டுள்ளன. அவ்வாறு
ஒன்று இருந்தால், அத்தகைய மனிதனின் மூதாதையர்கள் இன்றும்
விவாதிக்கப்படுகிறார்கள். (3) நேச்சர் பத்திரிக்கையின் மூத்த பத்திரிக்கை
ஆசிரியரும் ஆராய்சியாளாருமான, ஹென்றி கீ, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட
படிமத்தை மிக முக்கியமானவை என்று குறிப்பிடுகிறார். த கார்டியன் என்ற
பத்திரிக்கைகளில் வெளியான கட்டுரையில் படிமத்துடனான விவாதம் சம்பந்தமான
எழுதுகிறார்:
முடிவு
எவ்வாறிருந்த போதிலும், விடுபட்ட தொடர்பு என்ற பழைய சிந்தனை
.முட்டாள்தமானது என்பதை மண்டை ஓடு காட்டுகிறது. விடுபட்ட தொடர்பானது,
எப்பொழும் ஆட்டங்காணக்கூடியதாகவும், முழுமையாக பாதுகாக்ககூடியதல்ல என்பது
இப்போது உணரப்பட்டுள்ளது.
சுருங்க
கூறுவதானால், நாம் அடிக்கடி பத்திரிக்கைகளிலும் சஞ்சிகைகளிலும் காணும்
‘குரங்கிலிருந்து மனிதன் வரை நீண்டு செல்லும் பரிணாம ஏணிக்கு’ விஞ்ஞான
ரீதியில் எந்த மதிப்பும் கிடையாது. அவை கண்மூடித்தனமாக பரிணாம வளர்ச்சியை
ஆதரிக்கும் ஒரு சிறிய குழுவால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமாகும். இந்த
பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட வேளை, பரிணாம வளர்ச்சிக்கு முரண்படும்
ஆதாரங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 2000ம் ஆண்டு அமெரிக்காவை கலக்கிய (Icons of Evolution: Science or Myth, Why Much of What We Teach About Evolution is Wrong) என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியரான அமெரிக்க உயிரியலாளர் ஜோனதன் வெல்ஸ் பிரச்சார வழிமுறைகளை இவ்வாறு கூறுகிறார்:
மனிதனின்
தோற்றம் சம்பந்தமான ஆழமான சந்தேகங்களை பற்றி பொது மக்களுக்கு அரிதாக
தெரிவிக்கப்பட்டன. இதற்கு மாறாக, மனிதவியல் ஆராய்சியாளர்களாலேயே ஏற்று
கொள்ள முடியாத வேறொவரது கோட்பாட்டின் நவீன வடிவத்தை ஏற்று கொள்ளும் படி
நாம் வற்புறுத்தப்பட்டுள்ளோம். அலங்காரமான குகை மனிதன் அல்லது நடிகர்களின்
பெரும் அலங்காரங்களை கொண்டு இந்த கோட்பாடு காண்பிக்கப்படுகிறது.
டார்வினின்
கட்டுக்கதை தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. டார்வினின் பிழை, 19ம்
நூற்றாண்டின் மூடநம்பிக்கை, விஞ்ஞானத்தின் முன்னேற்றம் காரணமாக
தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விஞ்ஞான உலகம் எல்லாவற்றையும் விட முக்கியமான
உண்மையான நாம் வாழும் பிரபஞ்சம், அதிலுள்ளவைகள் அனைத்தையும் இறைவன் தான்
படைத்தான் என்ற உண்மையின் பக்கம் விரைந்து வருகிறது.
ஹாருன் யஹ்யா
ஆய்வில் உதவிய நூற்கள்
(1) John
Whitfield, “Oldest member of human family found”, Nature, 11 July 2002
(2)D.L. Parsell, “Skull Fossil From Chad Forces Rethinking of Human
Origins”, National Geographic News, July 10, 2002 (3) John Whitfield,
“Oldest member of human family found”, Nature, 11 July 2002 (4) The
Guardian, 11 July 2002 (5) Jonathan Wells, Icons of Evolution: Science
or Myth, Why Much of What We Teach About Evolution is Wrong, Washington,
DC, Regnery Publishing, 2000, p. 225
©2013, copyright DharulhudaMonday, June 3, 2013
கிரிக்கெட்டும் மனித சூதாட்டமும்
![]() |
- காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி
உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை, பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும், நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
அல்குர்ஆன் 6:32
விளையாட்டைக்குறிக்கும் SPORT என்ற ஆங்கிலச் சொல்லிற்கு OXFORD அகராதியில் NOT SERIOUSLY (முக்கியத்துவ மில்லாமல்)என்று பொருள் காணப்படுகிறது ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் விளையாடும் வீரர்களும் பார்க்கும் ரசிகர்களும் வெறி கொண்ட வர்களாக இருப்பதைப் பார்க்க முடிகின்றது இன்று உலகமெங்கும் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படும் ஒரு விளையாட்டு கிரிக்கெட் ஆகும்.
இங்கிலாந்தில் குளிர் காலத்தில் குளிரைப்போக்கி உடலை சூடேற்றுவதற்காக ஒருவர் ஒரு பொருளைப் போடுவார் அதை மற்றொருவர் தட்டி விளையாடுவார் இது தான் காலப்போக்கில் கிரக்கெட் என்று சொல்லப்படுகிறது. குளிரைப் போக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு தற்போது முட்டாள் தனமாக சுட்டெரிக்கும் வெயிலில் மட்டை தட்டுகின்ற விளையாட்டாக மாறியிருக்கிறது.
சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் மூதறிஞர் ஒருவர் (ஜார்ஜ் பெர்னாட்ஷா) இவ்வாறு சொன்னார் “11 முட்டாள்கள் விளையாடுவதை 11 ஆயிரம் முட்டாள்கள் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்” என்று. அந்த அளவிற்கு எவ்வித பயனற்ற ஒரு விளையாட்டு தான் கிரக்கெட் என்பது.
பெர்னாட்ஷா கூறியது என்னவோ இன்று நிதர்சனமாக நடந்து கொண்டிருக்கிறது பார்வையாளர் வீதம் 11 ஆயிரம் என்பது இன்று இலட்சம் மடங்காவது அதிகமாகி இருக்கும் அதாவது கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றவர்கள் குறைவுதான். ஆனால் இதை ஒரு சூதாட்டம் போல் வெறியோடு பார்த்துக் கொண்டிருப்பவர்களின் கூட்டத்திற்கு அளவே இல்லை எனலாம் இவ்விளையாட்டை பார்ப்போருக்கு உடல் ஆரோக்கியமோ, பண வரவோ, வேறு எந்தப்பலனுமோ கிடைப்பதில்லை.
ஆடக்கூடியவர்களுக்கும், அவர்களை வைத்து விளம்பரம் செய்யக்கூடியவர்களுக்கும் தான் எல்லாவித பலனும், இலாபமும் ஏற்படுகிறதே தவிர நாட்டிற்கோ, நாட்டு மக்களுக்கோ, அரசாங்கத்திற்கோ எவ்வித பிரயோஜனமும் ஏற்படப்போவதில்லை.
மாறாக வெறியுணர்வு கிரிக்கெட் விளையாட்டின் ரசிகர்களிடத்தில் மிகைத்துக் காணப்படுகிறது இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடினால் சொல்லவேண்டிய அவசியமேயில்லை இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடப்பது போலவே சித்தரிக்கப்படுகிறது ஏதாவது ஒரு நாட்டு வீரர்கள் தோற்றுவிட்டால் அவர்களின் ரசிகர்கள் அவர்களை கேவலப்படுத்துவதும் அவர்களின் உருவபொம்மைகளை எரிப்பதும் அவர்களின் இல்லங்களை சேதப்படுத்துவதும் வெறித்தனமாக நடந்து கொண்டிருக்கிறது.
இங்குள்ள சிலர் பாகிஸ்தான் ஜெயித்துவிட்டால்; பட்டாசு வெடிப்பதும் இனிப்பு வழங்குதும் அது போன்று இந்தியா ஜெயித்து விட்டால்; இந்து மத வெறியர்கள் பட்டாசு வெடிப்பதும் இனிப்பு வழங்குதும் வெறித்தனத்தின் உச்சகட்டம் என்று சொல்லலாம்.
மேலும் தங்கள் நாடு தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பிரிவினர் கோவில்களில் பேட், ஸ்டம்பு, பந்து இவைகளை வைத்து பூஜைகள் செய்வதும் மற்றொரு பிரிவினர் தர்ஹாக்களில் பிரார்த்தனை செய்து ஃபாத்திஹா ஓதுவதும் மடத்தனத்தின் எல்லை என்று சொல்லலாம்.
ஓவ்வொரு வருடமும் IPL லில் கிரிக்கெட் வீரர்கள் மனித சூதாட்டத்திற்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு வீரரையும் பல கோடிக்கணக்கில் பல விளம்பர நிறுவனங்களும், பல தொழிலதிபர்களும் ஏலம் எடுப்பதை கண்கூடாகக் கண்டுவருகிறோம்.
கடந்த IPL லில் லலித் மோடி மகா ஊழலில் சிக்கி தற்போது வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்து வருகிறார் என்பது வேதனைக்குறிய விஷயம் கிரிக்கெட் ரசிகர்கள் தான் ஐயோ பாவம்.
உலகக்கோப்பை போட்டிகளில் கூட பல நாடுகளைச் சார்ந்த பல வீரர்கள் மேட்ச் பிக்சிங் என்று சொல்லப்படக்கூடிய சூதாட்டத்தில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்டு விளையாட்டிலிருந்தே தூக்கி எறியப்பட்ட தகவல்களை நாம் கேள்விப்படுகிறோம் அதற்கென்று பல சூதாட்டத்தரகர்களும் வேலை செய்வதை நாம் பார்க்கின்றோம்
தற்போது உள்ள HOT NEWS IPL சூதாட்டம்
நடந்து கொண்டிருக்கும் IPL லில் கூட சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் கையும் களவுமாக பிடிபட்டதை கண்கூடாகக் கண்டுவருகிறோம் இன்னும் பல வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் எவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதை பத்திரிக்கைள் தொலைக்காட்சி நிறுவனங்கள் தோலுரித்துக் காட்டுகின்றன தங்கள் அணி தான் ஜெயிக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கும் ரசிகர்களுக்கு வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு எதிரணிக்கு அதிக ரன்களை விட்டுக் கொடுத்து ரசிகர்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போடுவது எவ்விதத்தில் நியாயம் என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கவேண்டும் தங்களின் பணங்களை வீணடித்து ஏமாந்து போகிறார்கள் ரசிகர்கள் என்பது தான் உண்மை.
சூதாட்டத்தில் ஈடுபட்ட விரர்களுக்கு கடுமையான தண்டனையும் விளையாட்டிலிருந்தே அப்புறப்படுத்தவேண்டும் எனவும் கண்டனக்கனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இது தெரியாத அப்பாவி ரசிகர்கள் தங்களின் பொண்ணான நேரங்களை வீணடித்து தங்களின் அலுவல்களை விட்டு விட்டு அவர்கள் ஃபோர் சிக்ஸர் அடிக்கும் போது கரங்களைத் தட்டுவதிலும் அவர்களை உற்சாகப்படுத்துவதிலும் கழித்துக் கொண்டிருக்கின்றனர் அதனால் தங்களுக்கு என்ன லாபம் என்பதை சிந்தித்துப் பார்த்தார்களா?
சூதாட்டத்தை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது
சூதாட்டத்தின் மூலம் ஷைத்தான் மக்களுக்கு மத்தியில் பகைமைத் தீயையும் வெறுப்புணர்வையும் தான் உண்டாக்குகிறான் என்பதை சமீபத்திய சூதாட்ட நிகழ்வுகள் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன.
ஈமான் கொண்டோரே! மதுபானமும் சூதாட்டமும் கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும், ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றி யடைவீர்கள்.
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபானத்தைக் கொண்டும் சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும் வெறுப்பையும் உண்டு பண்ணி அல்;லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்,எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ளமாட்டீர்களா?
அல்குர்ஆன் 5: 90, 91.
ஆபாசத்தின் உச்சகட்டம்
பொதுவாகவே இஸ்லாம் ஆபாசத்தை கடுமையாக எச்சரிக்கை செய்கிறது. ஆபாசம்தான் எல்லாத் தீமைகளுக்கும் ஆணி வேராக இருக்கின்றது அது விளையாட்டிலும் புகுந்து விட்டது என்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. குறிப்பாக ஐ பி எல் கிரிக்கெட்டிலும் (சியர்ஸ் கேர்ள்ஸ்) நடன மங்கைகளின் அரை குறை ஆடையோடு ஆடும் நடனங்கள் பார்வையாளர்களை உள்ளம் கூச வைக்கிறது. ஆடை என்பது மானத்தை மறைப்பதாக இருக்கவேண்டும் ஆனால் இன்று மானம் காற்றில் பறக்கிற அளவிற்கு ஆடைகள் இருக்கின்றன .
ஆதமுடைய மக்களே! மெய்யாகவே நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும் உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதை விட) மேலானது. இது அல்;லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் – (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவீர்களாக. அல்குர்ஆன் 7:26.
பெண்களிடத்தில் இயல்பாகவே இருக்கின்ற வெட்கம், நாணம் அகன்று விட்டது அதனால் தான் இது போன்ற அசிங்கங்கள் ஒழுக்கக் கேடுகள் விளையாட்டிலும் அரங்கேறுகின்றன.
நாணம் என்பது இறைநம்பிக்கையில் ஓரம்சம்
நபி(ஸல்) அவர்கள் (அன்சாரிகளில்) ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது தொடர்பாகத் தம் சகோதரரைக் கண்டித்துக் கொண்டிருந்தார். “நீ (அதிகமாக) வெட்கப்படுகிறாய் (இதனால் உனக்கு வரவேண்டிய நன்மைகள் பாதிக்கப்படுகின்றன) வெட்கத்தால் உனக்கு நஷ்டம் தான்” என்பது போல் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது இறைத் தூதர் (ஸல்) அவர்கள், “அவரைவிட்டுவிடு! நாணம் இறை நம்பிக்கையில் அடங்கும்” என்றார்கள்.
புகாரி 6118.
நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிகக் கூச்ச சுபாவம் உள்ளவர்களாய் இருந்தார்கள். அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
புகாரி 6119
மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது) மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான். “உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்” என்பதும்.” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
புகாரி 2484,6120.
நேர,கால விரயம்
காலம் பொன் போன்றது என்பார்கள் அது வீணாகக் கழிவது கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் தான் நேரத்தையும் காலத்தையும் வீணாகக் கழிப்பது இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற எந்த முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல. இறைவனிடத்தில் அதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்
உன் ஆயுள், இளமை, ஈட்டிய சம்பாத்தியம், அதை செலவழித்தது, கொடுக்கப்பட்ட அறிவு இவைகளுக்கு நாளை மறுமையில் பதில் சொல்லாத வரை தான் நிற்கும் இடத்தை விட்டும் நகர முடியாது என நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள் (திர்மிதீ)
ஆக நேர காலங்களை நல்ல ஆரோக்கிமான பல பயனுள்ள விளையாட்டுக்களிலும் பல பயனுள்ள வழிகளிலும் கழிக்க முன்வரவேண்டும்.
விளையாட்டு என்பது எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை இஸ்லாம் நமக்கு வரையறுத்துத் தருகிறது
ஓட்டப்பந்தயம், அம்பு எறிதல், மல்யுத்தம், குதிரை ஏற்றம், வாள் வீச்சு போன்ற பல தற்காப்புப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள வலியுறுத்துகிற அதே நேரத்தில் சோம்பேறிகளாக கோழைகளாக இருப்பதை வெறுக்கிறது வீரர்களாக இருக்க வலியுறுத்துகிறது இஸ்லாம்.
விளையாட்டிற்கு முக்கியத்துவமில்லாமல் என்ற பொருள் இருந்தாலும் இஸ்லாம் விளையாட்டை முக்கியத்துவமாகத் தான் பார்க்கிறது.
பலவீனமான மூஃமினை விட பலம் வாய்ந்த மூஃமின் தான் அல்லாஹ்விற்கு பிரியத்திற்குறியவனாகவும் அல்லாஹ்விடத்தில் சிறந்தவனாகவும் இருக்கிறான் என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்).
அன்று ஈத் (பெருநாள்) தினமாக இருந்தது. (ஆப்பிரிக்கக்) கருப்பர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (வீர விளையாட்டு) விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரிடம் நான் (விளையாட்டைப் பார்க்க அனுமதி) கேட்டிருக்க வேண்டும் அல்லது அவர்களே என்னிடம், “நீ இவர்களுடைய (வீர விiளாயட்டைப்) பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்டிருக்க வேண்டும். நான், “ஆம்” என்று பதிலளித்தேன். உடனே, அவர்கள் என் கன்னம் அவர்களின் கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்க வைத்தார்கள். “அர்ஃபிதாவின் மக்களே! (எத்தியோப்பியர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். இறுதியில் நான் (விளையாட்டை நன்கு ரசித்து) சலிப்புற்றுவிட்டபோது, “போதுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க நான், “ஆம், போதும்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் நீ போ!” என்று கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.
புகாரி 2901, 2907, 3530, 5236.
ஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ, நான் கேட்டதற்காகவோ “நீ பார்க்க ஆசைப் படுகிறாயா?” எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்கவைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி) “அர்பிதாவன் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்’”
என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்தபோது “உனக்குப் போதுமா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். “அப்படியானால் (உள்ளே) போ!” என்று கூறினார்கள்.ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
புகாரி 950.
பந்தயம் நடத்தப்பட்டிருக்கிறது நபியவர்கள் காலத்தில்
ஒருமுறை நபியவர்களுக்கும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் இடையே ஓட்டப்பந்தயம் நடக்க முதல் முறை அன்னை ஆயிஷா அவர்கள் ஜெயிக்க இரண்டாவது முறை ஆயிஷா அவர்கள் சற்று குண்டானதால் நபியவர்கள் ஜெயித்து விடுகிறார்கள் (ஹதீஸின் கருத்து)
நபி(ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக் கூடிய) தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஒட்டகம் ஒன்றின் மீது வந்தார். அது நபி(ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்தியது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்தது. இதையறிந்தபோது நபி (ஸல்) அவர்கள், “உலகில் உயர்ந்து விடுகிற பொருள் எதுவாயினும் (ஒருநாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்” என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அறிவித்தார்.
புகாரி 2872, 6501.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (பந்தய) தூரம் ‘சனிய்யத்துல் வதா’ விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசல் வரை(யுள்ள தொலைவாக) இருந்தது. நானும் இத்தகைய குதிரைகளுக்கிடையேயான பந்தயங்களில் கலந்து கொள்வேன். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
புகாரி 2869.
மெலிய வைக்கப்பட்ட குதிரைகளுக்கான பந்தய தூரம்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்பட்ட (பயிற்சி அளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றை ‘ஹஃப்யா’ விலிருந்து அனுப்பினார்கள். அவற்றின் (பந்தய) எல்லை ‘சனிய்யத்துல் வதா’வாக இருந்தது”என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.
நான் (அறிவிப்பாளர்) மூஸா இப்னு உக்பா(ரஹ்) அவர்களிடம், ‘அவ்விரண்டுக்குமிடையே எவ்வளவு தொலைவிலிருந்தது?’ என்று கேட்டேன். அவர், “ஆறு அல்லது ஏழு மைல்கள் தொலைவிலிருந்து” என்று பதிலளித்தார் என (மற்றோர் அறிவிப்பாளரான) அபூ இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்.
புகாரி 2870.
விளையாட்டில் நோக்கம் இருக்கவேண்டும். எதிரியை வீழ்த்த வேண்டும் வேட்டைப் பிராணியை கொல்லவும் வேண்டும் அதல்லாத உடலுக்கு தீங்கு தருகின்ற பார்வையை பறிக்கின்ற பல்லை உடைக்கின்ற எந்த விளையாட்டையும் இஸ்லாம் தடை செய்கிறது. கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களும் அதுபோன்றதுதான்; அது எதிரியை வீழ்த்தாது வேட்டைப் பிராணியைக் கொல்லாது.
தடைசெய்யப்பட்ட விளையாட்டுக்களைப்பற்றி நபியவர்கள் கூறும் போது பின்வருமாறு கூறுகிறார்கள்
கல்சுண்டு விளையாட்டிற்கு (‘கத்ஃப்’) நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள், “அது வேட்டைப் பிராணியையும் கொல்லாது; எதிரியையும் வீழ்த்தாது. மாறாக, அது கண்ணைப் பறித்து விடும் பல்லை உடைத்துவிடும்” என்றார்கள்.
புகாரி 6220, 255.
நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன்.அவரிடம், “சிறு கற்களை எறியாதே. ஏனெனில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்” அல்லது “சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்”. மேலும், நபி அவர்கள் “அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம் கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)’என்று கூறினார்கள்” எனக் கூறினேன். அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் “சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்” அல்லது “சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்” என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்” என்று சொன்னேன் என்று அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) கூறினார்.
புகாரி 5479.
தங்களைத் தற்காத்துக் கொள்கின்ற எதிரிகளைத் தாக்குகின்ற எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அதை இஸ்லாம் அங்கீகரிக்கிறது
அல்லாஹ் கூறுகிறான்:
மேலும், அவர்களை எதிர்ப்பதற்காக உங்களால் முடிந்த அளவு வலிமையையும் தயார் நிலையிலுள்ள குதிரைப் படையையும் திரட்டி வையுங்கள். அவற்றின் வாயிலாக, நீங்கள் அல்லாஹ்வின் பகைவர்களையும் உங்கள் பகைவர்களையும் பீதிக்குள்ளாக்கலாம். அல்குர்ஆன் 8:60
பனூ அஸ்லம் குலத்தார் சிலர் அம்பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த போது நபி(ஸல்)அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், “இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல் (அலை) அவர்கள்) அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள். நீங்கள் அம்பெய்யுங்கள். (போட்டியில்) நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்” என்று கூறினார்கள். உடனே, இரண்டு பிரிவினரில் ஒரு சாரார் அம்பெய்வதை நிறுத்தினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கென்ன ஆயிற்று? ஏன் அம்பெய்யாமலிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் எப்படி அம்பெய்வோம்?” என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், “அப்படியானால் நான் உங்கள் அனைவருடனும் இருக்கிறேன். நீங்கள் அம்பெய்யுங்கள்” என்று கூறினார்கள்.ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.
புகாரி 2899.
இப்படி ஆபாசம், சூதாட்டம், நேர கால விரயம், போன்றவற்றின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்ற வணக்கவழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்ற கிரிக்கெட் செஸ் போன்ற எந்த விளையாட்டையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது மாறாக அவற்றை தடை செய்கிறது.
இதுபோன்ற விளையாட்டுக்களில் காலத்தை வீணடிக்காமல் பல பயனுள்ள ஆரேக்கியமான மனதுக்கு இதமளிக்கிற மார்க்கத்திற்கு வணக்கவழிபாடுகளுக்கு ஊறுவிளைவிக்காத வீரவிளையாட்டுக்களை தேர்ந்தெடுத்து அதில் கவனம் செலுத்தவேண்டும்.
ஆக்கம்:
காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி,
பேராசிரியர் JFA கல்லூரி (Al- Jamiathul Firdhousiya Arabic College),
இமாம் IRGT பள்ளிவாசல்
©2013, copyright Dharulhuda
Monday, June 3, 2013
கைக்கூலியின் விபரீதங்கள்
நமது இஸ்லாமிய ஷரீஅத்துச் சட்டமும் பெண்ணுக்கு மஹர்
கொடுத்து மணமுடிப்பதையே கடமையாக்கி இருக்கிறது. நபி(ஸல்) அவர்களின்
அருமைத் தோழர்களான ஸஹாபாக்களில் யாராவது ஒருவர் அல்லது நபி(ஸல்) அவர்களை
முழுக்க முழுக்க பின்பற்றி அல்லாஹ்(ஜல்)வின் அன்பையும் நேசத்தையும் பெற்ற
இமாம்கள், வலிமார்கள் இவர்களில் யாராவது ஒருவர், கைக்கூலி வாங்கி
மணமுடித்ததாக வரலாறு உண்டா என்றால் இல்லவே இல்லை.
அப்படியானால் நம்முடைய முன்னோர்களில்
யாருமே செய்திராத, நமக்குக் காட்டித்தராக ஷரீஅத்துச் சட்டம் அனுமதியாத ஒரு
நவீன பழக்கத்தை நாம் பின்பற்றுகிறோமென்றால், அது அந்நியருடைய
பழக்கமாகத்தான் இருக்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள ஹிந்து
சகோதரர்களிடம் இந்தப் பழக்கம் உண்டு. முன்காலத்தில் ஹிந்து மதச் சட்டப்படி
தகப்பனுடைய சொத்தில் பெண்ணுக்கு வாரிசு உரிமை இல்லை. ஆகவே திருமண
சமயத்தில் கைக்கூலியாகவும், சீராகவும் அந்த பெண்ணுக்குக் கொடுக்க
வேண்டியதைக் கொடுப்பது அவர்களின் பழக்கமாகும்; ஆனால் தகப்பனுடைய
சொத்தில் பெண்ணுக்கு பங்கு உண்டு என்று நமது இஸ்லாமிய ஷரீஅத்துச் சட்டம்
தெளிவாகக் கூறியிருக்கும் போது, இக்கைக்கூலிப் பழக்கத்தை நாம் பின்பற்ற
வேண்டிய அவசியம் என்ன? நபி(ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தராத அந்நிய
சமூகத்தின் பழக்கமான இக்கைக்கூலி, இன்று நம் சமூகத்தில் வேரூன்றி விட்டதால்
ஏற்பட்டுள்ள கெடுதிகள் ஒன்றல்ல. பல; அவைகளில் சிலவற்றை இங்கு
குறிப்பிடுவோம்.
ஒரு சமுதாயத்தின் பொருளாதார அபிவிருத்தி அச்சமூகத்தின்
ஆண்கள் கையில்தான் தங்கி இருக்கிறது என்றால் அது மிகையாகாது. ஆண்கள்
சுறுசுறுப்புள்ளவர்களாகவும், உழைக்கும் ஆர்வமுள்ளவர்களாகவும்,
ஆற்றலுள்ளவர்களாகவும் இருந்தால் சமூக பொருளாதார நிலை உயரும் என்பதில்
ஐயமில்லை. ஆனால் இக்கைக் கூலிப் பழக்கமானது நமது ஆண்வர்க்கத்தை முழுச்
சோம்பேறிகளாகவும், உழைக்கவே லாயக்கற்றவர்களாகவும் ஆக்கிவிட்டது.
“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பது முதுமொழி. ஆண்களின் இளம்
பிராயத்திலேயே உழைக்க வேண்டும். பொருள் தேடவேண்டும் என்ற ஆர்வம் உண்டானால்
தான் அவர்கள் வாலிப பருவத்தில் உழைக்கும் ஆற்றலுள்ளவர்களாக இருப்பார்கள்.
ஆனால் இக்கைக்கூலி பழக்கத்தால் ஆண்கள் சிறுபிராயத்திலிருந்தே
பொறுப்பற்றவர்களாகவும், சோம்பேறிகளாகவும் வளரக் காண்கிறோம்.
பெண் வீட்டாரிடமிருந்து கைக்கூலியாகக் கிடைக்கும்
பணத்தை நம்பியே ஆண்கள் இந்த நிலைக்கு ஆளாகிறார்கள். இன்று நடக்கும்
பெரும்பாலான திருமணங்களை நோட்டமிட்டால், ஒரு வெட்கக் கேடான நிகழ்ச்சியைக்
கண்கூடாகக் காணலாம். கைக்கூலியாகக் கொடுக்கும் ரொக்கத்தையும், கல்யாண
செலவுக்காக வேண்டிய பணத்தையும், பெண் வீட்டார் எப்பாடுபட்டாவது, பிச்சை
எடுத்தாவது சேகரித்து விடும் வேளையில், உழைக்க அருகதையுள்ளவன் நான் என்று
மார்தட்டிக் கொள்ளும் ஆண்கள், வீட்டு ரிப்பேர் வேலை, வெள்ளையடித்தல் தனது
கல்யாண உடுப்பு, இதர கல்யாண செலவுகள் அனைத்திற்கும் பெண்வீட்டார்
கைக்கூலியாகக் கொடுக்கும் பணத்தை எதிர்பார்க்கும் அவல நிலைதான் அது. அவன்
பிறந்த மேனியைத் தவிர இதரவை எல்லாம் இந்தப் பாழும் கைக்கூலிப் பணத்தால்
ஆனவைகளே. திருமணம் வரை இப்படி சோம்பேறியாகப் பழகிவிட்ட இவன்.
திருமணத்திற்குப்பின் உழைப்பாளியாக மாறுவான் என்பது எதிர்பார்க்க முடியாத
ஒன்று.
இதனால்தான் கட்டிய மனைவியைக் காப்பாற்ற முடியாமல்,
திருமணம் நடந்த குறுகிய காலத்திலேயே அவள் கொண்டு வந்த நகைகளையும் விற்றுச்
சாப்பிட்டுவிட்டு, அவளை தாய்வீட்டுக்குத் துரத்தத் துணிந்துவிடுகிறான்.
அல்லது அவளது தந்தையோ பாட்டனோ உழைத்துச் சம்பாதித்து வைத்த சொத்தை
விற்றுக் காலந்தள்ளுகிறான். இக்கைக்கூலி பழக்கமுள்ள ஊர்களை நோட்டமிட்டால்
முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் பெரும்பகுதி, முஸ்லிம்
அல்லாதாருடைய கைகளுக்கு மாறி இருப்பதைக் கண்கூடாகக் காணலாம். இக்கைக்கூலி
பழக்கம் நம் சமூகத்தில் தொடர்ந்து நீடிக்குமானால், நம் சமூகமே பிச்சைக்கார
சமூகமாக மாற நேரிடும் என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். விதிவிலக்காக
ஒருசிலர் உழைக்க முன்வந்தாலும் கூட அவர்களின் வியாபாரங்களில்,
விவசாயங்களில், தொழில்களில் அபிவிருத்தியையும் பார்க்க முடிவதில்லை;
இதற்குக் காரணம் உண்டு.
எவன் சிருஷ்டிகளிடம் கையேந்துகிறானோ அவனுக்கு
கொடுக்கும் வாசலை அல்லாஹ் அடைத்துவிடுகிறான் என்று அல்லாஹ்(ஜல்) அருளியதாக
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இக்கைக்கூலி அதாவது பெண் வீட்டாரிடம்
கையேந்திக் கேட்கும் கெளரவப் பிச்சைக் காசைவிட, மலத்தைச் சுமந்து கூலியாகப்
பெறும் காசு எத்தனையோ மடங்கு உயர்ந்ததாக இருக்கும். கைக்கூலிப் பிச்சை
வாங்கும் நம் சமூக மக்களின் முயற்சிகளில் எப்படி அபிவிருத்தியைக்
காணமுடியும்? அல்லாஹ்(ஜல்) தருவான் என்ற நம்பிக்கையில் முயற்சி செய்பவர்களை
அவன் வீணாக்குவதுமில்லை; அல்லாஹ்மீது நம்பிக்கை இழந்து படைப்புகளிடம்
கையேந்துபவர்களை அவன் உருப்படச் செய்வதுமில்லை. ஆகவே கைக்கூலிப் பிச்சை
வாங்கும் மனிதர்களுடைய முயற்சிகளை அல்லாஹ்(ஜல்) உருப்படச் செய்வதில்லை.
எந்த அளவு என்றால் கைக்கூலி வாங்குவதற்கு முன் மிகவும் சிறந்த முறையில்
நடந்து கொண்டிருக்கும் வியாபாரம் கைக்கூலியாக வாங்கிய பணத்தில், கல்யாண
செலவுகள் போக ஒரு சிறிய தொகை வியாபார முதலீட்டில் போய்ச் சேரும்.
அவ்வளவுதான்! அச்சிறிய தொகை ஏற்கனவே உள்ள பெரிய தொகையையும்
அழித்துவிடும். இப்படி ஒட்டாண்டியான பலரை நாம் கண்ணாரப் பார்த்துக்
கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே கைக்கூலிப் பழக்கம் நம் சமுதாயத்தில்
தொடர்ந்து நீடிக்கும் வரை சமூக பொருளாதாரம் நிலை ஒருபோதும் உயரப்
போவதில்லை என்பது திண்ணம்.
அடுத்து கைக்கூலி பழக்கம் சமூகப் பண்பாடுகளில் ஏற்படுத்தியுள்ள கெடுதிகளைப் பார்ப்போம்.
சமூகப் பொருளாதார நிலை எப்படி ஆண்கள் கைகளில் தங்கி
இருக்கிறதோ, அதே போல் அச்சமூகத்தின் ஒழுக்கப் பண்பாடுகள் பெண்களின்
கைகளில் தங்கி இருக்கின்றது. சமூகப் பெண்கள் எப்பொழுது
ஒழுக்கமுள்ளவர்களாக, பண்பாடுள்ளவர்களாக, கற்புடையவர்களாகத்
திகழ்கிறார்களோ, அப்பொழுதுதான் சமூகத்தின் பண்பாடுகளும் சிறப்புடையதாக
இருக்கும். ஆனால் இக்கொடிய கைக்கூலிப் பழக்கம், நம் சமூகப் பெண்களுக்கு
மத்தியில் பல ஒழுக்கக் கேடுகளை உண்டாக்கிவிட்டது என்பதையும் சொல்லித்தான்
ஆக வேண்டும். திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண்களில் பலர் தங்கள்
கணவன்மார்களால் தங்கள் பிறந்தகங்களுக்கு விரட்டப்பட்டு வாழ்விழந்து வழி
தவறுவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இக்கைக்கூலி பழக்கத்தால் அழகிருந்தும்,
குணமிருந்தும் எல்லாம் இருந்தும், பணம் இல்லாத ஒரே காரணத்தால் திருமணம்
செய்து கொடுக்கப்படாது பல வருடங்கள் பல குமர்கள் வீட்டினுள்
அடைபட்டிருந்து சீரழிவதையும் நாம் பார்த்துச் சகித்துக் கொண்டுதான்
இருக்கிறோம். இப் பெண்களின் தவறு அவர்களுடைய குற்றமல்ல. சமுதாயத்திலுள்ள
ஒவ்வொரு ஆணுடைய குற்றமாகும்.
ஒரு மனிதனை ஒரு அறையில் சில நாட்கள் அடைத்து வைத்துக்
கொண்டு, உள்ளே மலம் ஜலம் கழிக்கக்கூடாது என்று சொல்லப்பட்டால் அவன் அதை
மீறி மலம் ஜலம் கழிப்பது அவனுடைய குற்றம் என்று எப்படிச் சொல்ல முடியும்?
அது நிச்சயமாக அடைத்து வைத்தவனுடைய குற்றமாகத்தான் இருக்க வேண்டும். ஆகவே
சமுதாய ஆண்களால் அநியாயஞ் செய்யப்பட்டு பல வருடங்கள் வீட்டினுள் அடைபட்டுக்
கிடக்கும் பெண்கள் தவறு செய்கிறார்களென்றால் அதற்கு நாளை
அல்லாஹ்(ஜல்)வுடைய சந்நிதானத்தில் ஆண்கள்தான் பதில் சொல்லியாக வேண்டும்.
அது மாத்திரமல்ல. அநியாயஞ் செய்யப்பட்ட பெண்களின் பதுஆவிற்கும் ஆண்கள்
இவ்வுலகிலேயே ஆளாகித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அநியாயம்
செய்யப்பட்டவர்களுடைய பதுஆவிற்கும் அல்லாஹ்வுக்கும்(ஜல்) இடையில் திரை
இல்லை என்பது நபி(ஸல்) அவர்களின் வாக்காகும். ஆண்களால் அனியாயஞ்
செய்யப்பட்ட பெண்களின் அவர்களுடைய பெருமூச்சுகளினால் ஏற்படும் அழிவுகளை
இந்தக் கைக்கூலி பழக்கமுள்ள ஊர்களின் அவலநிலைகளை நோட்டமிடுபவர்கள்
சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
இன்று பெண்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள ஒழுக்கக்
கேடுகளை நோக்கும்போது, அன்று நபி(ஸல்) அவர்களுடைய காலத்துக்கு முன்
வாழ்ந்த அந்த அய்யா முல்ஜாகிலியா காலத்தின் மக்கள் தங்கள் பெண் மக்களை
உயிரோடு புதைத்த கொடுஞ்செயலை நாமும் நெருங்கிவிட்டோம் என்றுதான் சொல்ல
வேண்டும் இக்கைக் கூலி பழக்கம் இன்னும் சில காலம் தொடர்ந்து
நீடிக்குமானால், கருச்சிதைவை ஆதரிக்கும் இந்திய நாட்டிலிருக்கும் நாம்,
நமக்குப் பிறக்கும் பொன் மக்களை பிறந்த மாத்திரத்தில் கழுத்தை நெரித்துக்
கொன்றுவிட துணிந்து விடுவோம் என்பதில் ஐயமில்லை.
K.M.H
©2013, copyright Dharulhuda
Thursday, April 18, 2013
“ வானத்திலிருந்து ஒரு துண்டை எறிந்து……”
“ வானத்திலிருந்து ஒரு துண்டை எறிந்து……”
அல் குர்ஆன் வழியில் அறிவியல்..
அல்லாஹ் தன் அருள்மறை குர் ஆனில், மனிதர்கள் நேர்வழி பெறுவதற்காக ஏராளமான வசனங்களை இறக்கி அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றான். ஆனால் பெரும்பான்மையான மனிதர்கள் அவ்வசனங்களை வெறும் கதை, கற்பனை என்று அலட்சியப்படுத்தி மனோ இச்சையை பின்பற்றி வாழ்கிறார்கள்.
முன் சென்ற சமுதாயங்கள் இறைக்கட்டளையை புறக்கணித்ததன் காரணமாக பல்வேறு வழிகளில் அவர்கள் அழித்தொழிக்கப்பட்டர்கள். கடும் புயல். பூகம்பம், பெருவெள்ளம், கொடும் சுழல்காற்று, கல் மாரி என அல்லாஹ்வின் வேதனை அவர்களை பிடித்தது.
இன்றைய நவீன அறிவியலை கையில் வைத்துள்ள மனிதன் தன்னைக் காக்க பல்வேறு அறிவியல் நுட்பங்களை கையாளுகிறான். ஆனால் இறைவனின் கட்டளை வந்துவிடும் போது அவனால் ஒன்றும் செய்யமுடியாமல் கை சேதப்படுகிறான். கடந்த பிப்ரவரி 15 வெள்ளிக்கிழமை ரஷ்யாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் உலக மக்களையும் அறிவியல் சமுதாயத்தையும் அச்சமடைய செய்தது.
கடந்த நூறு வருடங்களில் மனித சமூதாயம் பார்த்திராத ஒரு மாபெரும் சம்பவம். வானிலிருந்து வந்து வீழ்ந்த ஒரு விண்கல் துண்டு அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. பூமிப் பந்தின் தலைக்கு மேலே லட்சக்கணக்கான மலைகள், பாறைகள், கற்கள் படு வேகத்தில் சுழன்று திரிகின்றன. இவைகளை ஆஸ்டிராய்ட் (Asteroid) குறுங்கோள் அல்லது முரண்கோள் என்று அழைக்கப்படுகிறது.
இப்படி அவர்கள் கண்டுபிடித்து முன் அறிவித்ததுதான் ஆஸ்ட்ராய்ட் 2012 DA14. இவ் விண்கல் துண்டானது சுமார் 150 அடி அகலமும் 130,000 மெட்ரிக் டன் எடையும் உள்ளது. வினாடிக்கு 8 கி. மீ வேகத்தில் 17200 மைல் நெருக்கத்தில் பூமியைக் பிப்ரவரி 15 ல் கடக்கும் என்று அறிவித்தனர். அகில உலக விஞ்ஞானிகளும் இந்த விண்கல் வரும் தெற்கு வடக்கு பாதையை உற்று கவனித்தனர். யாரும் எதிர் பாராத நிலையில் அதே பிப்ரவரி 15 ல் காலை 9:20 மணியளவில் மத்திய ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் நகரில் 56 அடி
குறுக்களவும் 10,000 மெட்ரிக் டன் எடை நிறைந்த அடையாளம் காணாத புதிய விண்கல் (Meteor) ஒன்று வடக்கு தெற்காக பயணம் செய்து வெடித்துச் சிதறியது. இதன் வேகம் மணிக்கு 40,000 மைல் (64,374 கி.மீ). நமது நவீன அறிவியல் இது வருவதை முன் அறிவிக்க முடியவில்லை.
இது நேரடியாக பூமியை தாக்கியிருந்தால் நகரமே அழிந்திருக்கும். ஆனால் வானிலேயே 15-25 கி.மீ உயரத்தில் வெடித்து சிதறிய துண்டுகள்தான் நெருப்புப்பிழம்பாக பூமியை தொட்டன. இவ்வெடிப்பினால் ஏற்ப்பட்ட அதிர்ச்சி அலைகளின் தாக்குதலால் 4500 கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறி 1500 மக்களுக்குமேல் காயமடைந்தனர். ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணு குண்டைப்போல் 30 மடங்கு சக்தியை இவ்வெடிப்பு வெளியிட்டது.
படைத்த இறைவனை மறந்து, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழும் மனித இனத்திற்கு ஒரு எச்சரிக்கை மணிதான் வானத்திலிருந்து வந்த துண்டுச் செய்தி. அல்லாஹ் கூறுகிறான்.
“ நாம் விரும்பினால் அவர்களைப் பூமிக்குள் சொருகி விடுவோம், அல்லது வானத்திலிருந்து ஒரு துண்டை (Meteor) அவர்கள் மேல் எறிந்து (அவர்களை) அழித்து விடுவோம்.” –அல்குர்ஆன். 34:9
மற்றொரு வசனத்தில் மக்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கை,
“ அவன் உங்களை பூமியில் ஒரு புறத்தில் புதையும்படி செய்துவிட மாட்டான் என்றோ,அல்லது உங்கள் மீது கல்மாரியை ( Meteorites ) அனுப்ப மாட்டான் என்றோ அச்சம் தீர்ந்து இருக்கிறீர்களா?” –அல் குர்ஆன்.17:68.
அல்லாஹ்வின் வேதனை பூகம்பமாக வந்து பூமியில் மனிதர்கள் புதையுண்டு போகும் சம்பவங்கள் உலகெங்கும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் மனிதன் திருந்தவில்லை. மற்றொரு அடையாளமான, வானிலிருந்து நெருப்புக்கற்கள் வீழ்ச்சி லூத் (அலை) மக்களின் ஓரினப் புணர்ச்சியாளர்களை அழிப்பதற்காக இறக்கினான்.
“சுடப்பட்ட கற்களை மழைபோல் பொழிய வைத்தோம்” –அல் குர்ஆன்.11:82.
இன்றைய நவீன நாகரிக உலகில் ஓரினப் புணர்ச்சியாளர்கள் கூட்டம் பெருக ஆரம்பித்துள்ளது. இன்றைய ஜனநாயக அரசுகள் இச்சமூகத் தீமையை சட்டபூர்வமாக்கிவிட்டனர். ஆகவே இனி அல்லாஹ்வின் வேதனையை இவர்கள் சுவைப்பதற்காக இனி வானிலிருந்து தீக்கற்க்களை தொடர்ந்து எதிர்ப்பார்க்கலாம்.
“ அவனுடைய வேதனை உங்களுக்கு இரவிலோ பகலிலோ வந்துவிடுமானால்—(அதைத் தடுத்துவிட முடியுமா? என்பதை) கவனித்தீர்களா? குற்றவாளிகள் எதை அவசரமாகத் தேடுகிறார்கள்?”
“அது வந்ததன் பின்னரா அதை நீங்கள் நம்புவீர்கள்?இதோ! நீங்கள் எது வர வேண்டும் என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது வந்து விட்டது” —அல்குர்ஆன்.10:50,51.
அல்லாஹ் கூறுகிறான்,
“ பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து,அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்.” –அல் குர்ஆன்.29:20
“ பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து,அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்.” –அல் குர்ஆன்.29:20
மனிதனுக்கு முன்பு படைக்கப்பட்ட டைனாசராஸ் அழிந்தது எப்படி?
எழுபதுகளில் மெக்சிகோவிலுள்ள யுகடான் தீபகற்ப பகுதியில் பெட்ரோலியம் தேடுதல் ஆய்வு நடத்திய கிளென் பென் பீல்ட் (Glen Pen Field) எனும் ஆய்வாளர், சீஷாலூப் (Chicxulub) என்னும் இடத்தில் 180 கி.மீ விட்டமுடைய பெரும் பள்ளம் ஒன்றைக் கண்டு ஆய்வுகள் மேற்கொண்டார்.
10 கி.மீ அகலமுடைய கல் விழுந்த இடத்தை சுற்றி 2000 கி.மீ தூரத்திலிருந்த அத்தனை உயிர்களும் அழிந்துபட்டன. விண்கல் மோதலில் ஏற்பபட்ட புழுதியும், எரி மலை வெடித்ததால் எழும்பிய சாம்பலும் வளி மண்டலத்தை மூடியது. அவை பூமியின் மீது பெரும் குடையை கவிழ்த்தியது போன்று மூடியது. எனவே சூரிய ஒளிக் கதிர்கள் தடுக்கப்பட்டு பூமி குளிர்ந்தது.
இந்நிலை ஏறத்தாள பத்து ஆணடுகள் தொடந்தபோது, அன்று இருந்த பருவநிலை மாற்றத்திற்கும், பஞ்சத்திற்க்கும் ஈடு கொடுக்க முடியாமல் டைனாசராஸ் இனம் முற்றாக அழிந்தன. முந்தைய படைப்பான டைனாசரசை அழிக்க காரணம் பிந்திய படைப்பான மனிதன் வாழ்வதற்கு உகந்த சூழலை பூமியில் ஏற்படுத்தவே.
இவ்விண்கல் வானில் 5-10 மைல் உயரத்திலேயே வெடித்து சிதறியதால் பெரும் பள்ளம் ஏற்படவில்லை.ஆனால் இதன் அதிர்ச்சி அலைகள் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. இதன் சக்தி ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டைப்போல் 1000 மடங்கு என ஆய்வுகள் கூறுகின்றன.
மேலோகத்திலிருந்து வரும் தாக்குதலை தடுப்பதற்காக பூலோக மனிதன் பெரும் முயற்சி எடுக்கின்றான். உடனடியாக 5 மில்லியன் டாலர் செலவில் அதி சக்தி வாய்ந்த 8 டெலஸ்கோப் பொருத்திய வானோக்கு கருவியை (ATLAS—Atlas Terrestrial Impact Alert System ) தயாரித்து, இதனை ஹவாய் தீவுகளில் நிறுவி வானத்தை கண்காணிக்கப் போவதாக நாஸா அறிவித்துள்ளது. நியூயார்க் நகரில் ஒரு சிறு தீக்குச்சியை பற்றவைத்தாலும் அதை சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து பார்க்கும் அளவு மிக நுட்பமான கருவி என்று கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் கட்டளை வந்து விட்டால் அதை எந்தக்கருவியும் தடுக்க முடியாது.அல்லாஹ் கூறுகிறான்.
“நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை.
(நிராகரிப்போரே!) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம் நிச்சயமாக அழித்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? -அல் குர்ஆன். 54:50,51.
எஸ்.ஹலரத் அலி-ஜித்தா.
©2013, copyright Dharulhuda
Thursday, April 18, 2013
மண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்
அல்லாஹ் இம்மாபெரும் பிரபஞ்சத்தை படைத்தது வெறும் வீண் விளையாட்டு வேடிக்கைக்காக அல்ல.தக்க காரணத்துக்காகவே அன்றி வேறில்லை,என்று பல வசனங்களில் குறிப்பிடுகிறான். வானம், பூமி,சூரியன்,சந்திரன் கோள்கள், நட்சத்திரங்கள் அனைத்தும் காரண காரியங்களுடன் படைப்பினங்களுக்காகவே சிருஷ்டிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக,
-அல்குர்ஆன்.16:12.
நட்சத்திரங்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்,
“அவனே உங்களுக்காக நட்சத்திரங்களை உண்டாக்கினான்; அவற்றைக்கொண்டு நீங்கள் தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் நீங்கள் வழி அறிந்து செல்கிறீர்கள் – அறியக்கூடிய மக்களுக்கு வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.” -அல்குர்ஆன்.6:97.
“அவனே உங்களுக்காக நட்சத்திரங்களை உண்டாக்கினான்; அவற்றைக்கொண்டு நீங்கள் தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் நீங்கள் வழி அறிந்து செல்கிறீர்கள் – அறியக்கூடிய மக்களுக்கு வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.” -அல்குர்ஆன்.6:97.
பல கோடிக்கணக்கான நட்சத்திரங்களை வானில் பரப்பி அல்லாஹ் பார்ப்பவர்களுக்கு அலங்காரமாக்கி உள்ளான்.சுமார் 6000 நட்சத்திரங்கள் நம் கண்களால் அடையாளம் காண முடியும். நன்கு பிரகாசமுள்ள 58 நட்சத்திரங்கள் இருப்பிடத்தை அடையாளமாக வைத்து கடலில் மாலுமிகள் கப்பலை செலுத்துகின்றனர். இதனை “Celestial Navigation” என்று அழைக்கிறார்கள்.
இன்றும் அமெரிக்காவில் வருடந்தோறும், வானில் நட்சத்திரங்கள் இருக்கும் இடத்தை அட்டவணைப்படுத்தி “Nautical Almanac” என்ற பெயரிலும் இங்கிலாந்தில் “Her Majesty’s Nautical Almanac Office” என்ற வழிகாட்டும் விண்மீன் பஞ்சாங்கத்தை வெளியிடுகிறார்கள். நிலம்,நீர்,ஆகாயம் இம்மூன்றிலும் பயணம் செய்யும் மனிதர்களுக்கு இந்நட்சத்திர வழி காட்டி பெரிதும் பயன்படுகிறது.
இன்றைய நவீன அறிவியலில் வழி அறிவதற்கு GPS போன்ற பல நுட்பமான சாதனங்களை மனிதன் பயன்படுத்தினாலும்,இன்றும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் கப்பல்,விமானப்படைகளில் பயிற்சி பெரும் பைலட்,மற்றும் மாலுமிகள் அடிப்படை நட்சத்திர வழிகாட்டும் (Celestial Navigation Test) தேர்வில் வெற்றி பெறாமல் பணியில் சேரமுடியாது.
தரைப்பயணிகளுக்கும் கடல் பயணிகளுக்கும் பகலில் நமது சூரிய நட்சத்திரமும் இரவில் பிரபலமான துருவ நட்சத்திரமும் (Polaris-North Star) வழி காட்டின. இவை இரு பரிமாண பயணம் (2 Dimensional Space) அதாவது இடது/வலது,அல்லது முன்னால்/பின்னால் மட்டுமே செல்லக்கூடியவை. மண்ணிலிருந்து மேலெழும்பி உயரே விண்ணை தாண்டிச்செல்லும் ராக்கெட் விண்வெளி பயணம் முப்பரிமாணத்தில் (3 Dimensional Space) அமைந்துள்ளது.
1400 ஆண்டுகளுக்கு முன்பு பாலை வனத்தில் ஒட்டகத்தில் பயணம் செய்த மனிதர்கள் மத்தியில் இறங்கியதே அல் குர்ஆன் வசனங்கள். மனிதன் விண்ணில் பயணம் செய்வான், சந்திரனில் இறங்குவான் என்று எவரும் கற்பனை கூட செய்திராத காலத்தில் விண்வெளி பயணத்தை பற்றி குர்ஆன் பேசுகிறது. முன்னறிவிக்கிறது ஆர்வமூட்டுகிறது.
“மனித,ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் பூமியின் எல்லையைக் கடந்து சென்று விட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும் மிகப்பெரும் பலத்தைகொண்டே தவிர நீங்கள் செல்லமுடியாது.” -அல்குர்ஆன்.55:33.
ஆம்! இன்று வானம்,பூமியின் எல்லையை தாண்டிச்செல்லும் பலத்தை மனிதன் பெற்று விட்டான். பூமியின் ஈர்ப்பு சக்தியை மீறிச் செல்வதற்கு 1 வினாடியில் 11 கி.மீ.வேகம் செல்லக்கூடிய உந்து சக்தி (ராக்கெட்) ஆற்றலை மனிதன் பெற்றுவிட்டான். வானத்தில் வழி அறிவது எப்படி?
விண்வெளி வீரர்களுக்கு வழி காட்டுவது யார்? ஆதி மனிதனுக்கு வழி காட்டிய அல்லாஹ் படைத்த நட்சத்திரங்கள்தான் விண்வெளி வீரர்களுக்கும் வழி காட்டுகின்றன. சந்திரனில் காலடி வைத்த அப்போலோ பயணத்திலும் (Apollo Mission) நட்சத்திரத்தை அடையாளமாக வைத்தே (Celestial Navigation) வழி அறிந்தனர்.
பூமியிலுள்ள இலக்குகளை துல்லியமாக தாக்குவதற்கு கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் செல்லும் அமெரிக்காவின் “TRIDENT” ஏவுகணைகளும் ஒரு நட்சத்திரத்தை நிலையான அடையாளமாக வைத்தே செயல்படுகின்றன. அமெரிக்காவின் அதிவேக உளவு விமானமான SR-71, 11 நட்சத்திரங்களை (பகலிலும்) வழிகாட்டியாக வைத்தே பறக்கின்றன. ரஷ்யாவின் நீர் மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் இரண்டு நட்சத்திரங்களை வழிகாட்டியாகக்கொண்டே இலக்கை அடைகிறது.
ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையை (Theory of Relativity) அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய 2004 ஏப்ரல் 4 ல் Gravity Probe-B என்னும் செயற்கைகோளை நாஸா ஏவியது. இது பூமியிலிருந்து 400 மைல் உயரத்தில் GYROSCOPE கருவி உதவியுடன் IM-Pegasi என்னும் ( HR 8703) நட்சத்திரத்தை நிலையான அடையாளமாக வைத்து பூமியின் சுழற்சியை ஆய்வு செய்து சார்பியல் கொள்கையை நிரூபித்தது.
விண்வெளியில் பறந்து கொண்டே பிரபஞ்சத்தை ஆய்வு செய்யும் ஹப்பிள் தொலை நோக்கி, (Hubble Space Telescope-HST) தொலைதூர விண்மீன் கூட்டங்களை புகைப்படம் எடுக்க இரண்டு கைடு நட்சத்திரங்களை (Guide Stars) வைத்து தன்னை நிலைப்படுத்திக்கொள்கிறது. இதன் கம்ப்யூட்டர் நினைவகத்தில் சுமார் 20 மில்லியன் விண்மீன்கள் இருப்பிடம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பூமியிலே வசிக்கும் மனிதர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழி காட்டவில்லை.அனைத்து ஜீவராசிகளுக்கும் அல்லாஹ்வுடைய வழி காட்டுதல் உள்ளது.ஏனெனில் மற்ற உயிரினங்களும் நம்மைப்போன்ற ஒரு இனமே! அல்லாஹ்வுடைய படைப்பில் அனைத்து உயிர்களும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த சங்கிலித் தொடரின் கண்ணிகளே! அல்லாஹ் கூறுகிறான்.
“பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும்,தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப்போன்ற இனமேயன்றி வேறில்லை.” அல்குர்ஆன்.6:38.
Dung beetles guided by Milky Way
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உயிரியல் ஆய்வாளர் எரிக் வாரன்ட் ஸ்வீடன் லேன்ட் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். பூச்சிகளின் சிறப்புத் தன்மைகள் குறித்து பல ஆய்வுகள் நடத்தி புகழ்பெற்றவர். இரவில் இரை தேடும் சிறு பூச்சி போன்ற உயிரினங்கள் சந்திரன்,மற்றும் நட்சத்திரங்களை வைத்து வழி அறிவதாக முன்பு கண்டறிந்தார்.
இவரது சமீபத்திய ஆய்வில் சாணத்தை தன் உணவுக்காக உருட்டிச் செல்லும் வண்டு இரவில் தொலை தூர பால் வீதி நட்சத்திர மண்டல (Milky Way Galaxy) ஒளியை வைத்து திசை அறிவதாக அறிவித்தார். செயற்கையான கோளரங்கத்தில் (Planetarium) வைத்து பல்வேறு சோதனை நடத்தியும் இவ்வண்டுகள் மிகச் சரியாக நட்சத்திர மண்டல ஒளியை பின்பற்றி நேர்கோட்டில் சாணத்தை உருட்டிச் சென்றன.
இதுபோல் சில பறவைகள்,விலங்குகள்,ரெயின்டீர் மான்கள்,கடலில் உள்ள சீல் மீன்கள் போன்றவை நட்சத்திரங்களின் ஒளியின் மூலம் தங்கள் திசைகளை வழி அறிவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அல்லாஹ் கூறுகிறான்,
அல்லாஹ் கூறுகிறான்,
“ (வழி காட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்); நட்சத்திரங்களைக் கொண்டும் அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள்.” -அல் குர்ஆன்.16:16.
“(இறைவன்) ஒவ்வொரு படைப்பினங்களுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழி காட்டியிருக்கிறான்.” -அல்குர்ஆன்.20:50.
“(இறைவன்) ஒவ்வொரு படைப்பினங்களுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழி காட்டியிருக்கிறான்.” -அல்குர்ஆன்.20:50.
எஸ்.ஹலரத் அலி-ஜித்தா.
©2013, copyright Dharulhuda
Thursday, April 18, 2013
ஊக்கமளிக்கும் உலர் திராட்சைகள்
விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு தேவை உடல் வலிமை. அதிலும் குறிப்பாக தொலை தூர ஓட்டப்பந்தயங்கள் போன்றவற்றில் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கத்தக்க உடல்வலிமை மிக மிக அவசியம். இப்படியான தாக்குப்பிடிக்கத் தக்க உடல்வலிமையை பெறுவதற்காக போட்டியாளர்கள் பலவகையான வழிமுறைகளை கடைபிடிப்பார்கள். கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் செயற்கையான இனிப்பு மிட்டாய்களை மெல்வது போட்டியாளர்கள் பலரும் செய்யும் விடயம்.
ஆனால் அப்படியான செயற்கை இனிப்புக்களை மெல்வதை விட, இயற்கையான முறையிலேயே இப்படியான தாக்குப்பிடிக்கத்தக்க வலிமையை பெறமுடியும் என்று கலிபோர்னிய பல்கலைக்கழகத்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது உலர் திராட்சைப்பழங்களை மென்று சாப்பிடுவதன் மூலம் விளயாட்டுப் போட்டிகளில் தேவைப்படும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கத்தக்க உடல் வலிமையை பெற முடியும் என்று இவர்கள் தங்கள் ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதற்காக இவர்கள் செய்த ஆய்வுக்காக ஐந்து கிலோமீட்டர் தூர ஓட்டப்பந்தயத்தை நடத்தினார்கள். இதில் கலந்து கொண்டவர்களில் சிலர் வெறும் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு ஓடினார்கள். வேறு சிலர் கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் இனிப்புகளை சாப்பிட்டு ஓடினார்கள். மற்றவர்கள் உலர் திராட்சைப்பழங்களை சாப்பிட்டு விட்டு ஓடினார்கள்.
போட்டியின் இறுதியில் வெறும் தண்ணீர் குடித்துவிட்டு ஓடியவர்களை விட, இனிப்புகளையும் உலர் திராட்சைகளையும் சாப்பிட்டுவிட்டு ஓடியவர்கள் ஐந்து கிலோமீட்டர் தூரத்தை ஒரு நிமிட நேரம் முன்னதாக ஓடி முடித்தார்கள்.
இதிலிருந்து, கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் இனிப்புக்களுக்கு சமமாக உலர் திராட்சைகளும் நீடிக்கத்தக்க உடல் வலிமையை தருவதாக தெரிவித்திருக்கும் ஆய்வாளர்கள், உலர் திராட்சைகள், இயற்கையான ஊக்கசக்தியாக விளங்குவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
உலர் திராட்சைகளில் காணப்படும் அதிகமான பொட்டாஷியம் மற்றும் இரும்புசத்து, விளையாட்டு போட்டிகளுக்கு தேவைப்படும் நுண்ணிய சக்தியாக செயற்படுவதால் இவை போட்டியாளர்களுக்கு இயற்கையான ஊக்கமருந்தாக பயன்படுவதாகவும், செயற்கையான இனிப்புகளில் இருக்கும் கூடுதல் சர்க்கரை இதில் இல்லாமலிருப்பது கூடுதல் நன்மை பயக்கும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல் நிபுணர் கவுசல்யாநாதன்.
உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இந்த உலர் திராட்சையில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும், அமினோ அமிலங்களும் உடலுக்கு நல்ல சக்தியை அளிக்கின்றன. மேலும் பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.
மேலும் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் தொடர்ந்து உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
உலர் திராட்சை பழத்தில் 50 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும். உலர் திராட்சையில் உள்ள கால்சியத் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
குழந்தைக்கு பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் தேக புஷ்டி உண்டாகும். குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக வளருவார்கள். தொண்டைக்கட்டு பிரச்சினையை தீர்க்கும். மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர் திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.
©2013, copyright Dharulhuda
Tuesday, April 16, 2013
அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத்
“இப்புவியிலிருப்போரில் அநேகரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து திருப்பி விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத் தவிர (உண்மையை) அவர்கள் பின்பற்றுவதில்லை. அன்றி (வெறும் பொய்யான) கற்பனையில் தான் அவர்கள் மூழ்கியிருக்கிறார்கள். அல்குர்ஆன் 6 : 116
என்று சொல்வது போல் (மெஜாரிட்டி) அதிகமான மக்கள் பொதுவாக வழிகேட்டிலும், சொற்பமான எண்ணிக்கையினர் நேர் வழியிலும் இருந்து வருகின்றனர். ஆனால் அதிகமான மக்கள் அடிக்கடி சொல்லி வருவதே மக்களிடையே எடுபடும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆகவே, வழிகேட்டில் இருக்கும் அதிகமான மக்களாகிய தாங்கள் நேர்வழியிலும், நேர்வழியில் இருக்கும் சொற்பமான மக்கள் வழிகேட்டிலும் இருப்பதாக அடிக்கடி மக்களிடையே பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கும்போது, அந்தத் தவறான எண்ணமே மக்களிடையே பரவும் என்பதில் சந்தேகமே இல்லை.
அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத்:
“அஹ்ல சுன்னத்” என்று அரபியில் சொல்லும்போது “சுன்னத்தை உடையவர்கள்” என்ற பொருளைத் தருகின்றது. இஸ்லாமிய நடைமுறையில் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இந்த மூன்றுக்கும் “சுன்னத்” என்று சொல்லப்படுகின்றது. இதிலிருந்து நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தை மட்டும் பின்பற்றி நடப்பவர்கள் மட்டுமே “அஹ்ல சுன்னத்” அதாவது சுன்னத்தை உடையவர்கள் என்பது விளங்கும்.
“அஹ்ல சுன்னத்” என்று அரபியில் சொல்லும்போது “சுன்னத்தை உடையவர்கள்” என்ற பொருளைத் தருகின்றது. இஸ்லாமிய நடைமுறையில் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இந்த மூன்றுக்கும் “சுன்னத்” என்று சொல்லப்படுகின்றது. இதிலிருந்து நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தை மட்டும் பின்பற்றி நடப்பவர்கள் மட்டுமே “அஹ்ல சுன்னத்” அதாவது சுன்னத்தை உடையவர்கள் என்பது விளங்கும்.
நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இந்த மூன்றும் ஹதீதுகளைக் கொண்டு நிலை நாட்டப்படுபவை மட்டுமே. ஹதீதில் வராதது நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தில் வர முடியாது. ஆகவே, ஹதீஸ் ஆதாரமில்லாதவற்றை மார்க்கமாக எடுத்து நடப்பவர்கள் நிச்சயமாக அஹ்ல சுன்னத்தை விட்டு வெளியேறி விடுகிறார்கள். நான்கு மத்ஹபு பிரிவுகளுக்கு குர்ஆனிலும் ஆதாரமில்லை. ஹதீதுகளிலும் ஆதாரமில்லை.
அடுத்து இங்கு “ஜமாஅத்” என்று குறிப்பிடப்படுவர் இஸ்லாமிய நடைமுறையில் நபித்தோழர்களை மட்டுமே. இதற்கு ஆதாரம்.“எனது உம்மத் 73 பிரிவினர்களாகப் பிரிவார்கள். 72 பிரிவினர் வழி தவறியவராவார்கள். ஒரே ஒரு பிரிவே நேர்வழி நடப்பவர்கள்’, என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள், “அவர்கள் யார்”? என்று வினவினர், அதற்கு நபி(ஸல்) அவர்கள் ما أنا عليه اليوم وأصحابي“மாஅனா அலைஹில் யவ்மவ வஅஸ்ஹாபீ” என்று தெளிவாக அறிவித்து விட்டார்கள். அதாவது “இன்றைய தினம் நானும், என் தோழர்களும் எவ்வாறு இருக்கிறோமோ, அவ்வாறு இருக்கிறவர்கள்,” என்று விளக்கம் தந்துள்ளனர்.
இந்த ஹதீதின் மூலம் நபி(ஸல்) அவர்களும், நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்ற நபித்தோழர்களின் ஜமாஅத்தும் “அஹ்ல சுன்னத் – வல் – ஜமாஅத்” என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்றினார்கள். அவர்களில் யாரும் எந்த இமாமையும் பின்பற்றியதாக எந்த ஆதாரமும் இல்லை. “முஸ்லிம்” அல்லாத பெயரால் கொள்கை அளவில் அழைத்துக் கொண்டதற்கும் ஆதாரம் இல்லை. எந்த மத்ஹபுகளின் பேராலும் அழைத்துக் கொண்டதாகவும் இல்லை. அப்படி இருக்கவும் முடியாது. காரணம் இமாம்களின் காலம் ஹிஜ்ரி 80 முதல் 241 வரையாகும். இந்தக் காலகட்டத்தில் எந்த இமாமும் தன் பெயரால் ஒரு மத்ஹபு அமைத்துக் கொண்டதாகவோ, முஸ்லிம்களிடம் தன்னைத் தக்லீது செய்யச் சொன்னதாகவோ, ஆதாரப்பூர்வமாக அவர்களின் எந்தக் கிதாபுகளிலும் காணப்படவில்லை. மாறாக “எங்களைத் தக்லீது செய்யாதீர்கள்: குர்ஆன், ஹதீதையே பின்பற்றுங்கள். நாங்களும் மனிதர்களே, எங்களிலும் தவறுகள் ஏற்படலாம். நாங்கள் சொல்பவற்றை குர்ஆன், ஹதீது ஆதாரம் பார்க்காமல், நீங்கள் எடுத்து நடப்பது ஹராமாகும். என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன.
ஆக, நான்கு மத்ஹபு பிரிவினர் நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்ற ஜமாஅத்திலிருந்தும் வெளியேறி, வழி தவறிய பிரிவுகளில் ஐக்கியமாகி விட்டார்கள் என்பது தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளக்கூடிய விஷயமாகும். உண்மையான அஹ்ல சுன்னத் வல்ஜமாஅத்தினர் இமாம்களைப் பின்பற்றுவதாகக் கொள்கை கொள்ளாமல் இஸ்லாமிய சமுதாயத்தை நான்கு பிரிவினர்களாகப் பிரிக்காமல், குர்ஆன், ஹதீஸை மட்டும் பின்பற்றி நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்தது போல் சமுதாயத்தை ஒரே ஐக்கியப்பட்ட ஜமாஅத்தாக வைத்திருக்கப் பாடுபடுபவர்களே ஆகும். நபி(ஸல்) அவர்கள் மறைவுக்குப் பிறகு கொள்கை அடிப்படையில் தோன்றிய எந்தப் பிரிவாக இருந்தாலும், அது நபி(ஸல்) அவர்களின் கூற்றுப்படி, வழிகெட்டுச் செல்லும் 72 பிரிவுகளில் ஒரு பிரிவாக மட்டுமே இருக்க முடியும். நேர்வழி நடக்கும் ஒரே பிரிவில் ஒரு போதும் இருக்க முடியாது.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: “நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம் குர்ஆன்; மற்றொன்று எனது வழிமுறை”.
அறிவிப்பவர் : மாலிக் இப்னு அனஸ்(ரலி) நூல் : முஅத்தா
அறிவிப்பவர் : மாலிக் இப்னு அனஸ்(ரலி) நூல் : முஅத்தா
என்ற நபி(ஸல்) அவர்களின் உத்தரவுப்படி குர்ஆனையும், ஹதீதையும் பின்பற்றுபவர்களாக இருக்க முடியுமே அல்லாது வேறு யாராக இருக்க முடியும் என்பதை முஸ்லிம் சமுதாயம் சிந்திக்கக் கோருகிறோம்.
“அல்லாஹ் (ஜல்) என்னைக் கற்றுக் கொடுப்பவனாகவும், எளிதாக்குபவனாகவும் அனுப்பி இருக்கிறான்”, என்று நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளனர். (அறிவிப்பவர் : ஜாபிர்(ரழி) , நூல் : முஸ்லிம்)
“இன்றைய தினம் நான் உங்களுக்கு, உங்களது மார்க்கத்தை நிறைவு செய்து விட்டேன். எனது அருட்கொடைகளை உங்கள் மீது சம்பூர்ணமாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கு மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன்”. (அல்குர்ஆன் 5 :3)
என்ற அல்லாஹ்வின் சொல்லும்,
“நான் உங்களை வெள்ளை வெளெர் என்ற நிலையில் விட்டுச் செல்கிறேன், அதன் இரவும் பகலைப் போன்றது, அழிந்து நாசமாகக் கூடியவர்களைத் தவிர வேறு யாரும் அதில் வழி தவறவே மாட்டார்கள்.
(அறிவிப்பவர் : இர்பாழ் இப்னு ஸாரியா(ரழி) நூல் : இப்னுமாஜா
என்ற நபி(ஸல்) அவர்களின் தெளிவான அறிவிப்புகளும் இந்த மத்ஹபுவாதிகளிடத்தில் மதிப்புடையவையாகத் தெரியவில்லை. குர்ஆனையும், ஹதீதையும் விட மனித அபிப்பிராயங்களே இவர்களிடத்தில் முக்கிய அந்தஸ்தைப் பெறுகின்றன. இதற்கு மேலும் இவர்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறோம், நபி(ஸல்) அவர்கள் மீது அளவு கடந்த பிரியம் வைத்து, அவர்களைப் பின்பற்றுகிறோம் என்று சொல்வது வெறும் வாய்ப்பந்தலே அல்லாமல் உண்மையாகவே இருக்க முடியாது. இவர்களின் இந்த வழி கேட்டை உணர்ந்துதான் நபி(ஸல்) அவர்கள் தனது விடைபெறும் ஹஜ்ஜில் மக்களை நோக்கி, “அல்லாஹ்விடமிருந்து அறிவிக்க வேண்டியபை அனைத்தையும் நான் அறிவித்து விட்டேனா? என்று மூன்று முறை சொல்ல வைத்து, அது மட்டுமின்றி மூன்று முறை அல்லாஹ்வையும் அதற்குச் சாட்சியாக ஆக்கி இருக்கிறார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)
மார்க்கம் என்பது நபி(ஸல்) அவர்களால் கற்பிக்கப்பட்டவை மட்டுந்தான். அதற்குமேல் மார்க்கத்தில் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. கூடாது என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் குர்ஆனிலும், ஹதீதுகளிலும் தெளிவாக உள்ள நிலையிலும், வழிகெட்டுச் செல்வது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயமாகும்.
நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் தோன்றிய கொள்கை அடிப்படையிலான நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றி நடப்பவர்கள் நபி(ஸல்) அவர்களின் தெளிவான அறிவிப்பின்படி அஹ்ல_சுன்னத்-வல்-ஜமாஅத்தை விட்டு அவர்களாகவே வெளியேறி விட்டார்கள். அவர்கள் நபி(ஸல்) அவர்கள் மீது உண்மையில் அன்பு வைக்கவும் இல்லை. அவர்களை பின்பற்றவுமில்லை. ஆனால் நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் ஹிஜ்ரி 80 முதல் 241 வரை வாழ்ந்து மறைந்த நான்கு இமாம்களைக் குருட்டுத்தனமாக பின்பற்றுகிறார்கள். இது தெளிவான வழி கேடேயாகும். இவர்கள் கலீபாக்களையும், நபித் தோழர்களையும் இமாம்களையும், அவுலியாக்களையும் முறையாக அவரவர்களின் அந்தஸ்தில் மதிக்கவுமில்லை. மரியாதை செய்யவுமில்லை. மாறாக கூட்டியோ, குறைத்தோ மரியாதை என்ற பெயரால் உண்மையில் அவமரியாதை செய்கிறார்கள் என்ற முடிவிற்கே வரமுடிகின்றது. அல்லாஹ்(ஜல்) இந்த வழிகேடுகளை விட்டும் நம்மைக் காத்தருள்வானாக!
K.M.H
©2013, copyright Dharulhuda
Tuesday, April 16, 2013
முஸ்லிம்களின் அறிவியல் புரட்சியும்,......
முஸ்லிம்களின் அறிவியல் புரட்சியும், அது கைநழுவிச் சென்றமைக்கான காரணிகளும் (ஆராய்ச்சிக் கட்டுரை)

எழுதியவர் : எம். ஜே. எம். ரிஸ்வான் (மதணி)
குளியல் அறைகளில் குளிப்பது பாவம், குஷ்டரோக நோய் இறை தண்டனை, எனவே, குஷ்டநோயாளர்களை தீயிட்டுக்கொழுத்த வேண்டும் என்ற மூடநம்பிக்கையில் ஐரோப்பா வாழ்ந்து கொண்டிருந்தது. மேலும் படிக்க..
Download e-book
©2013, copyright Dharulhuda
Monday, February 25, 2013
இஸ்லாத்திற்கான எனது நீண்ட பயணம்..!
(தமிழாக்கம்: அபூ அய்மன்)
லொறன் பூத், பிரபல தொலைக்காட்சி நிருபர் மற்றும் செய்தியாளர், இவர் ஐக்கிய இராஜ்யத்தின் மாஜிப் பிரதமர், டோனி பிளையரின் மனைவியின் தங்கையும் ஆவார். இவர் 2010ல் இஸ்லாத்தில் இணைந்து வல்ல நாயனுக்கு நன்றி செலுத்தினார். இஸ்லாத்திற்கான நீண்ட பயணம் எனும் கலந்துரையாடலில் அவருக்கும் அவர் குடும்பத்திலும் ஏற்பட்ட மனதிற்கிதமான மாற்றங்களும்.
இந்த உன்னதமான முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில், எனக்கு ஒரு மாத காலத்தைச் செலவிட வாய்ப்பளித்த அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
அன்று, ரமழானின் கடைசிப்பகுதி, ரபா என்னும் இடத்திலுள்ள ஒரு அகதி முகாமிற்குள் இருந்த வீட்டுக்குச் சென்று மெதுவாகக் கதவு தட்டி அழைத்தேன். அக்குடும்பத் தலைவி, கூடாரத்தின் நுழைவாயிலில் வந்து, முகம் முழுக்க புன்னகை நிரப்பி வடிவான வாழ்த்துக்களுடன் வரவேற்றார்.
“அஸ்ஸலாமு அலைக்கும்”! என்றார்! அவ்வாழ்த்தும் அதோடு கூடிய செழிப்பான அவரின் முகத்தாலும் அப்பகுதியே பிரகாசமானது. வரவேற்போ ஒரு தாஜ்மஹாலுக்குள் என்னை அழைப்பது போல் உணர வைத்தது. நெகிழ்ந்து போனேன். இக்குடும்பத்துடன் “இப்தாரில்” கலந்து கொண்டேன்.
இக்குடும்பம் இருக்கும் இடமோ காஸா பள்ளத்தாக்கின் அருவருக்கத்தக்க, மிக மட்டமான இடம்! மட்டுமன்றி, உலகத்திலேயே அதிக சனநெரிசலானது! வறுமையிலும் வறுமையானது! வெறுமையும், பொறுமையும் மட்டுமே அக்குடும்பத்திலும், அப்பகுதியிலும் மீதமாய் இருந்தது.
“ரபா”வில் உணவுப் பற்றாக்குறை இருக்கிறதே உங்கள் ரமழான் எப்படி? என வினவினேன்.
“அல்ஹம்துலில்லாஹ்” என்று சிரித்த முகத்தோடு பதில் தந்தார். அவர்கள் நிலை தெரிந்தும் உதவி செய்ய முடியவில்லையே!
என்ற ஆதங்கத்தோடு பதிலுக்கு, என்னால் புன்னகை மட்டுமே கொடுக்க முடிந்தது. இவர்களோடு நானும் தரையில் அமர்ந்து உள்ளவை கொண்டு பசியாறினேன். சிறிதளவு ‘ஹும்முஸ்’ எனும் தொட்டுக்கொள்ளும் கழியும், சில துண்டு ரொட்டிகளுமே இப்தாரக அமைந்தன. இவர்கள் துயர் நிலை கண்டு இதயம் இருண்டு கோபம் மின்னலாய் வந்தது.
மலர்களைப் போன்ற அத்தாயின் குழந்தைகளின் வயிறுகள் பசியாலும், பட்டினியாலும் குழிவாயிருந்தன.
அத்தாயின் முகத்திலும், உடலிலும் பசியின் பதிவுகள் பளிச்சென்று தெரிந்தது. இவ்வனுபவம் என்னை நிலைகுலையச் செய்தது. இறைவனை நிந்தித்தேன். என்ன இறைவனிவன்? என்று சலித்துக்கொண்டேன்.
உண்ண இல்லை! உண்ண இடமும் இல்லை! இரு கைகள் இருந்தும், இருக்கைகள் இல்லை! தூக்கமும் இல்லை! தூங்க இடமும் இல்லை! யஹூதி இவர்களைத் தூங்க விடவுமில்லை! மலிவாக அங்கு எதுவுமே இல்லை, ஆனால்;
யஹூதிக் கொடுமையால் அவர்களின் உயிர்களையும், உடமைகளையும் மலிவாய் ஆயின, யஹூதிகள் என்பதால் மனிதம் பேசுவோர் மௌனம் ஆயினர்.
வெளிஉலகம் தெரிவிக்கப் படாமல், ஒடுக்கப்பட்டு, முடக்கப்பட்டு,
இந்த வாழ்வுக்குப் பழக்கப்பட்டு, வாழ்வா? சாவா? என்பதில் சுதியற்று, அல்லாஹ் ரசூலில் மட்டும் கதி என்றிருந்த இம்மக்களையா இன்னும் இறைவன் பசி பட்டினிக்குள் தள்ளிவிடுகிறான்? என்றெண்ணினேன்.
உலகத்திலேயே ஏழைகளுக்குள் ஏழைகள் இவர்கள், ஒடுக்கப் பட்டவர்களுக்குள் ஒடுக்கப்பட்டவர்கள் இவர்கள். இவர்களுக்கா நோம்பைக் கடமையாக்குவது?
என்று வருந்தினேன். அவ்வலியோடு; முழு மரியாதையுடன் கேட்டேன்,
சகோதரியே! நீங்காளோ பட்டினியில் வாடுகிரீர்கள்! ஏன் உங்கள் இறைவன் உங்களை ரமழானில் இன்னும் பட்டினியில் போடுகிறான்? உதவியற்று இருக்குறீர்கள்!
ஏன் பரிதவிக்க வைக்கிறான்? ஏன் ரமழானில் நோன்பிருக்கிறீர்கள்? சற்று எனக்கு தெளிவு படுத்துங்கள்,
எனக்கேட்டேன்.
ஒரு கைப்பை கூட வாங்க வசதியற்ற, தன் குழந்தைகளுக்கு காலணிகள் கூட வாங்க வருவாயற்ற, குழந்தைகள் சித்திரம் தீட்ட பேனாவோ, பேப்பர்கூட இல்லாத, வறுமையே வாழ்க்கையும், வாழ்க்கையை வெறுமையுமாகவும் கொண்ட, அத்தாய் சொன்னாள்:
சகோதரியே! நாங்கள் ஏழைகளை ஞாபகப்படுத்திகொள்ளவே ரமழானில் நோன்பிருக்கிறோம். என்றார்.
இதைக்கேட்டதும், நிலைதடுமாறினேன்,
எனது அறிவு, அனுபவம், எல்லாம் ஒரு கணப்பொழுதில் செயலிழந்ததை உணர்ந்தேன். அவ்வார்த்தைகள் திறவுகோலாகி என் இதயத்தினுள் சென்று திறந்திராக் கதவைத் திறந்து வைத்தது.
இஸ்லாம் பற்றிய என் கருத்து எப்போதுமே எதிர்மறையாகவே இருந்ததால், இஸ்லாம் எவ்வளவு மகத்துவமானது என்ற எண்ணம் புறம் தள்ளப்பட்டது,
என் கவலையெல்லாம் பாலஸ்தீன மக்களின் துயர் மட்டுமே! அதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இல்லை என நானே எனக்கு சமாதானம் செய்து கொண்டேன். இச்சம்பவத்தோடு காஸாவில் இருந்து வெளியேறி லண்டனுக்குச் சென்று விட்டேன்.
அதற்குப்பின் கடந்த வருடம் ரமழான் மாதத்தில் ஒரு பத்திரிக்கையாளராக மீண்டும் ஈரானுக்குச் சென்றேன். அங்கே ஒரு பள்ளிக்குள் நுழைந்தேன், அது பீபி பாத்திமா பள்ளி என்று அழைக்கப்படுகிறது.
இம்மஸ்ஜித் அதிக மக்கள் வந்து போகும் ஒரு சிறப்பிடமாகவும் இருக்கக்கண்டேன்.
வுழூச் செய்தேன் -எனக்கு அது தெரிந்திருந்தது-
தலையை மறைத்துக்கொண்டு எனக்குத்தோன்றிய ஒரு எளிமையான வணக்கத்தை (துஆவை) நிறைவேற்றினேன்.
நான், அல்லாஹ்! என்றே அழைத்தேன். – “இந்தப் பயணத்தை ஏற்படுத்தித் தந்ததற்கு உனக்கு நன்றி செலுத்துகிறேன்”.
அல்லாஹ்!!! “அல்லாஹ் எனக்கு எதையும் தந்துவிடாதே! என்னிடம் எல்லாம் இருக்கிறது.. ஆனால் அல்லாஹ்வே! பாலஸ்தீன மக்களை மட்டும் மறந்துவிடாதே!”
என்று மன்றாடிய பின் தரையில் அமர்ந்து கொண்டேன் அல்லது அமர்த்தப்பட்டேன்.
மஸ்ஜிதுக்குள், அவ்விடம் பெண்கள் தம் குழந்தைகளுக்கு உணவூட்டும் இடமாக இருந்தது. யாத்திரிகர்கள் வந்துபோய்க் கொண்டிருந்தனர்;
ஆனால் நான் அமர்ந்ததும், வார்த்தைகளுக்குள் அடங்காத, இதமான சாந்தி என்மீது பரவப்படுவதை, உணர்ந்து கொண்டிருந்தேன்.
அப்படியான ஒரு சாந்தியையும், அமைதியையும் என் வாழ் நாளில் நான் தெரிந்திருக்கவோ, அனுபவித்திருக்கவோ, இல்லை. என் மன உளைச்சல்கள் உதிர்ந்து, மனதினுள் சாந்தி, பரவிச் சென்று தடவிக்கொண்டிருந்தது..
பருவம் அடைந்ததில் இருந்து நான் அறியா ஒரு நிசப்தம் என் தலைக்குள் நிலைகொண்டதும் அன்றுதான்.... உண்மையான ஆழம்! ஆழம் கடந்த பெருமகிழ்ச்சி! அழகான அமைதி! இந்த இதமான தெய்வீகச் சூழலில் என் மனம் என்னை அதிக நேரம் அமரவைத்தது. மட்டுமன்றி இப்பிரபஞ்சத்தில் எங்கயோ ஓரிடத்தில் எல்லாமே இவ்வழகான இதமான உணர்வோடுதான் இருக்கிறது என, என் உளம் ஊன்றிச் சொன்னது.
இப்படி இருக்கையில் அவ்வந்திப்பகல் முழுவதும் அங்கே வந்த பெண்கள் என்னருகே வந்து என்தோள் தொட்டு “ஐ லவ் யு” என்றார்கள். ஒரு குழந்தையும் ஓடி வந்து, ஈரானியப் பாஷையில் “ஐ லவ் யு” என்றது. உர்ரென்று அம்மழலை வார்த்தைகள் மனதினுள் சென்றது ஆனந்தப் பட்டாம்பூச்சிகள் பரவிப் பறந்தன.
“பள்ளிக்குள் இப்படித்தானா” என, எனது சகநண்பி நாதியாவிடம் கேட்டேன். “அப்படியென்று சொல்வதற்கில்லை”
என்றார். எதோ ஒன்று நடப்பதாக உணர்ந்தேன்.
பள்ளிக்குள்ளேயே இருந்தேன். அன்றிரவு அதிகளவு யாத்திரிகர்களுடன் நானும் தரையில் கண்ணுறங்கினேன்.
மறுநாள் அதிகாலை பஜ்ர் அதான் என்னை எழுப்பியது. எல்லோரும் தொழுதார்கள் நானும் தொழுதேன்.
அதற்குப் பின் வெளியே வந்து தேநீர் பருகினேன். சூரியன் வந்து கொண்டிருந்தது. என்மனத்தினுள்; மிகவும் குறிப்பாக ஒரு எண்ணம் மட்டுமே அலைமோதித் திரிந்தது. அதுவோ;
நான் இந்த மார்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? இல்லையா? அசலாகவும், அழகாகவும் இருக்கிறதே. இஸ்லாம் ஒரு காட்டிமிராண்டித்தனமான மதமாகவே அறிந்திருந்த எனக்கு, அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்தாலும் இஸ்லாத்தை ஏற்க மனம் சங்கடப்பட்டது.
“ஓ! இல்லை! இஸ்லாம்!!! இல்லவே இல்லை!!! தயவுசெய்து இஸ்லாம் இல்லை”!!! என்ற எண்ணம் முட்டிமோதிற்று. அதற்குப்பின் எனக்கு ஏற்பட்ட புதுமையான ஒரு சில விடயங்களை சொல்ல ஆசைப்படுகிறேன்.
தெஹ்ரானில் இருந்து மீண்டும் லண்டன் பயணமானேன். ஆகைய விமானம் லண்டனை நெருங்கியவுடன், விமான ஓட்டி சொன்னார்; “தெஹ்ரான் விமானத்தில் பயணித்ததற்கு நன்றி – இன்னும் இருபது நிமிடங்களில் விமானம் லண்டனை சென்றடையும்.”
இதைக்கேட்டவுடன் ஈரானியப் பெண் ஒருத்தி அவளின் ஹிஜாபை கழைந்தாள். நகரத்தில் உள்ள விலைமாது போல் இறுக்கமாகவும், நெருக்கமாகவும், அணிந்திருந்தாள்.
இஸ்லாத்தின் வரம்பு அவளை நிச்சயம் சபித்திருக்கும்.
என் நரம்பு மண்டலமே செயலிழந்ததாய் உணர்ந்தேன். அல்ஹம்துலில்லாஹ்! எனது கைகள் ஹிஜாபை இறுகப்பற்றிக்கொண்டது.
இப்படியான பல மனப் போரட்டத்துகுப்பின்; அதாவது,
ஏழு நாட்களுக்குப்பின் லண்டனில் உள்ள பெரிய பள்ளியில் எனது ஷஹாதாவை மொழிந்தேன். அதுவே நான் குர்ஆனுக்கு திரும்பவேண்டிய நேரமாக இருந்தது.
குர்ஆனைத் திறந்தேன், சூரா அல்-பாதிஹா (ஆரம்ப அத்தியாயம்): அல்பாத்திஹா என்னோடு பேசுவது போல் உணர்தேன்;
“ஹலோ சாரா இவ்வளவு நாளும் எங்கே இருந்தீர்கள்,
சாந்தி, சமாதானம், பெருமகிழ்சி உள்ள மார்கத்துக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும்,”
என அஸ் சூறா ஞானத்தின் வழி திறந்து வரவேற்றது.
வாசித்தேன் வைக்க முடியவில்லை!
“வாசிக்கத் தொடங்கினால் வைக்க முடியாது என்று யாரோ ஒருவர் ஒருமுறை சொல்லியும் இருந்தார். --- இஸ்லாத்திற்கு வருமுன் அதிகம் அப்படி உணர்ந்தும் இருக்கிறேன்.
இறைவனை நான் மறந்து, லௌகீக மயக்கத்தில் இருந்திருக்கிறேன், ஆனால், இறைவன் என்னை ஒருபோதும் கைவிடவில்லையே! அல்ஹம்துலில்லாஹ்!
எல்லோரும் அறிய விரும்பும் ஒரு கேள்வி என் மத மாற்றத்தினால் என் குடும்பம் அல்லது குழந்தைகளின் கருத்து பற்றியது.
எனது இரண்டு பெண்பிள்ளைகளும் யதார்த்தமானவர்கள். ஒருவருக்கு எட்டு வயது மற்றவருக்கு ஒன்பது வயது. மூன்று கேள்விகள் கேட்டார்கள்.
1. மமி நீங்கள் முஸ்லிமாய் இருப்பதால் இன்னும் எங்கள் மமியாக இருப்பீர்களா?
முஸ்லிமாக இருந்தால்தான் நல்ல மமியாக இருக்க முடியும்.
ஹுரே... என்று குதூகலித்தார்கள்
2. மமி மது அருந்துவீர்களா?
முஸ்லிமாக இருந்தால் ஒருபோதும் முடியாது என்றேன்.
அதற்கும் ஹுரே... என்று குதூகலித்தார்கள்.
3. நீங்கள் முஸ்லிமாக இருக்கும்போது உங்கள் மார்பு தெரிய அணிவீர்களா?
ஏன் அப்படிக் கேட்குறீர்கள் என்றேன்.
அவர்கள் சொன்னார்கள் நீங்கள் பாடசாலைக்கு வரும்போது அணியும் ஆடைகளால் மார்பு தெரிகிறது இதனால் நாங்கள் தர்மசங்கடத்துக் குள்ளாகிறோம், இன்னும், அதை வெறுக்கிறோம், நீங்கள் அதை நிறுத்தவேண்டும். என்றார்கள்.
நான் முஸ்லிம் என்றால் எல்லாம் மறைக்கப்பட்டுவிடும் என்றேன்.
“வி லவ் இஸ்லாம்” என்றார்கள்.
இம்மூன்று கேள்விகளையும் நீங்கள் உற்று நோக்கினால் அதில் பெண்மையின் அடிப்படை சுருங்கக் கூறப்பட்டுள்ளது. (அதாவது இப்படியான ஒரு கருத்தது அதனுள் அமைந்திருக்கிறது.)
கேள்வி இலக்கம் 1:
நீங்கள் நம் குடும்ப அமைப்பின் மத்தியமாக இருப்பீர்களா? எங்களுக்கு முன் உங்கள் வேலை, உங்கள் சஹாக்கள்/ நண்பர்கள், மதுச்சாலைகளை வைக்காமல் எங்களுக்கேயான ஒரு தாயாக உங்களை நம்பலாமா?
கேள்வி இலக்கம் 2:
அல்லாஹ் கூறிய நடத்தைகளின் வரம்புக்குள் நீங்கள் நிலைத்திருப்பீர்களா?
கேள்வி இலக்கம் 3:
நாணமுள்ள, மதிக்கப்படும் ஒரு இஸ்லாமியப் பெண்ணாக இருப்பீர்களா?
அல்ஹம்துலில்லாஹ்! மட்டுமே என்னால் சொல்ல வேண்டி இருக்கிறது.
“தாய் மதிக்கப்படுபவளாக இருக்க வேண்டும். ஒரு சராசரிப் பெண் உண்மையான தாயாக முடியாது” என்பதே குழந்தைகளின் விருப்பம் என்பதை இக்கேள்விகளில் இருந்து அறிய முடிகிறது.
ஒரு முஸ்லிமாக இவ்வருடத்தில் நான் கற்றுக் கொண்டது என்னவெனில்; நமக்கு ஒரு பிரச்சினை இருந்தால் அதை உங்கள் குடும்பத்திடமோ,
நண்பர்களிடமோ கூற வேண்டியதே இல்லை ---- குர்ஆன் ஓதத் தெரிந்தால் போதும் ஒவ்வொரு இரவும் ஓதுங்கள் அல்லது 10 நிமிடம் ஓதுங்கள். எவ்வொரு நாளும் உங்கள் ஈமான் உயர்ந்துகொண்டே போவதை பலப்படுவதை உணர்வீர்கள். நாம் குர்ஆனை வாசிக்க வேண்டும், அதன் வழி நடக்கவேண்டும்.
துன்பங்கள் தூரவே நிற்கும்.
என்னைப்போல் இஸ்லாத்தின் பாதையில் இல்லாமல் இஸ்லாத்திற்கு வந்தவர்களும், அல்லது நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்து அதே பாதையில் இருப்பவர்களும் உங்கள் ஒவ்வொரு நாள் வாழ்கையிலும் சாந்தி, சமாதானம் நிலைபெற்று தொலைந்து போகவிடாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே! (எல்லாம் வல்லவன்)
அரபு நியூஸ் பத்திரிகையில் இருந்து பெறப்பட்டது.
ARAB NEWS - Friday 4
January 2013 - Last Update 8 January 2013 7:49 pm
Courtesy of
www.islamicbulletin.com
©2013, copyright Dharulhuda
Subscribe to:
Posts
(
Atom
)