Sunday, September 16, 2012

விமர்சனங்களை வென்றவர்

விமர்சனங்களை வென்றவர்

Post image for விமர்சனங்களை வென்றவர்
கி பி 571 ம் ஆண்டு ஏபரல் 20 ம் தேதி மக்காவில் அநாதையாக பிறந்த முஹம்மது (ஸல்) அவர்கள் பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த உலகில் மனிதராகப் பிறந்த பிறக்கப் போகிற வேறு எந்த சக்தியும் எட்டிப் பிடிக்க முடியாதது.
சமயம், , சமூகம், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், வரலாறு, அறிவியல், மொழி, தத்துவம், இலக்கணம், இலக்கியம், வாழ்வியல், உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவருக்கு தீர்க்கமான ஒரு இடம் இருக்கிறது. இன்றும் நபிமருத்துவம் என்பது மக்களின் பிணி தீர்க்கும் ஒரு முறையாக இடம்பிடித்திருக்கிறது என்பது மட்டுமல்ல மனித உடல் ஆரோக்கியத்திற்கான அவருடைய வழி காட்டுதல்கள் அனைத்து மருத்துவத்துறையிலும் மேற்கோள் காட்டப்படுபடுகின்றன. சட்டம், நீதி, நிர்வாகம் மற்றும் பதிவுத்துறைகளும் அவர் கோலோச்சுகிற துறைகளாகும். அந்தப் பாலைவனச் செல்வர் விவசாயத்தையும் விட்டு வைக்கவில்லை.
மூன்றாம் உலகம் யுத்தம் ஒன்று வருமென்றால் அதற்கு தண்ணீர் தான் காரணமாக இருக்கப் போகிறது என ஐ நா மன்றம் எச்சரித்துள்ளது. நீர் பங்கீடு மற்றும் நீர்ப்பாசனம் குறித்து முஹம்மது நபியின் வழிகாட்டுதல்கள் ஏற்றுக் கொள்ளப் படுமானால் அந்த அச்சத்திற்கு வழியே இருக்காது.
இந்த துறைகளிலெல்லாம் முஹம்மது (ஸ்ல்) அறிவுரைகள், அல்லது கருத்துக்களை கூறினார் என்று ஒற்றை வரியில் நகர்ந்து விட முடியாது. இத்துறைகள் அத்தனையும் அவர் பரிசோதனை முயற்சிகளை செய்து அதில் பெரும் வெற்றி கண்டார் என்று சொன்னால் அது கூட அவரை பற்றிய முழு அறிமுகமாகிவிடாது. தான் உருக்கொடுத்த அத்தனை சிந்தனைகளையும் வழிவழியாக பின் பற்றி நடக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கிச் சென்றார், அந்த சமூகம் இன்றளவும் மட்டுமல்ல இனி உலகம் வாழும் காலம் வரையும் அவரது சிந்தனைகளை ஆலோசனைகளை உத்தரவுகளாக தலைமேற் கொண்டு செயல்படக் காத்திருக்கிறது.
அவர் மறைந்து இன்றும் அவரைப் பற்றியும் அவர் விட்டுச் சென்ற தத்துவங்கள் நடைமுறைகள் குறித்தும் விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை பத்ரிகைகளும் தொலைக்காட்சிகளும் காட்சிப் படுத்திக் கொண்டிருக்கின்றன.
முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் உலகம் கொண்டாடும் மற்ற தலைவர்களுக்கும் இடையே மிக முக்கியமான ஒரு வித்தியாசம் இருக்கிறது. இயேசு. புத்தர், ஆதி சங்கரர் விவேகானந்தர், காந்தி, போன்ற பலரும் அனைத்து மக்களாலும் பாராட்டப்படுகிறவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவர்கள் இன்றைய நவ நாகரீகத்தின் அழுத்த்தை தாண்டி இவர்களை பின்பற்றுகிற ஆட்கள் உண்டா என்பதும் அப்படியே இருந்தாலும் அவர்களின் சதவீதம் எத்தனை என்பதும் கேளிவிக்குரியதாகும். முஹம்மது நபி (ஸல்) பாராட்டப்படுகிறவராக மட்டுமில்லாது இன்றளவும் கண்டங்கள் அத்தனையிலும் பின்பற்றப்படுகிறார் என்பதை கூர்ந்து யோசிக்க வேண்டும்.
இராக் நகரின் ஒரு வீதியில் திடகாத்திரமான ஒரு இளைஞனை முதியவர் ஒருவர் நியாயமின்றி அடிக்கிறார். அவன் அதை தடுக்காமலும் திருப்பி தாக்காலும் நிற்கிறான். ஏனென்று கேட்டால் பெரியவர்களை மதிக்க்காதவர் என்னை சார்ந்தவர் அல்ல என்று முஹமது கூறியுள்ளார். நான் அந்த பழிக்கு ஆளாக விரும்பவில்லை என்கிறான்.
வாஷிங்டன் தெருக்களில் முகத்தை மறைத்த படி இளம் கல்லூரி மாணவி நடந்து கொண்டிருக்கிறாள். ஏன் இப்படி என்று கேட்டால். இது முஹம்மது நபியின் உத்தரவு என்கிறாள்.
ஆஸ்திரேலியாவின் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு சாக்லேட் வேண்டும் என்று சிறுவன் அடம் பிடிக்கிறான். அதை எடுத்துப் பார்த்த தந்தை இது ஹலால் அல்ல என்கிறார். சிறுவனின் அழுகை நின்றுவிடுகிறது. என்ன என்று விசாரித்தால் முஹம்மது (ஸல்) என்று பெயர் சொல்லப்படுகிறது.
சோவியத் ஆக்ரமித்த பால்டிக் நாடுகளில் ஒன்றில் ஒரு இளைஞன் தொழுகைகான அழைப்பு பாங்கு வாசகங்களை கூறுகிறான். காவலர்கள் அடித்து உதைக்கிறார்கள், அவன் பாங்கை நிறுத்தவில்லை. அவனை சிறையிடைக்கிறார்கள் அங்கும் அவன் பாங்கு சொல்வதை நிறுத்தவில்லை. சொல்லனா தொல்லகளுக்குப் பிறகும் அவன் பாங்கு சொல்கிறான், கிருக்கன் என்று கூறி அவனை விடுதலை செய்கிறார்கள்.எதற்காக இப்படி என்று கேட்டால் முஹம்மது (ஸல்) கற்றுக் கொடுத்த அற்புதமல்லவா அது என்று அவன் பதிலளிக்கிறான்.
காஷ்மீரின் பனிப்பொழிவுகளின் அடர்த்திக்கு இடையேயும் மதுவின்றி வாழும் ஒரு சமுதாயம், வெட்கத்தை விலை பேசி விற்று விட்ட டென்மார்க்கிய நிர்வாணப் பிரதேசத்திலும் வரன்முறைக்கு உட்பட்டு வாழும் ஒரு சமுதாயம். பாரிஸ் நகரின் வீதிகளில் பர்தாக்களுக்களோடு உலாவருகிற ஒரு சமுதாயம். இன்றைய வால்ஸ்ட்ரீட்ளின் சாம்ராஜயத்தில் வட்டிக்கும் முறையற்ற வர்த்தகங்களும் எதிராக எப்போதும் கொடிபிடித்துக் கொண்டிருக்கிற ஒரு சமுதாயம் அமரிக்க விமானங்களில் இன்னும் தாடிகளுடன் பயணம் செய்கிற ஒரு சமுதாயம். நேட்டோ நாடுகளின் ஆக்ரமிப்பு குண்டு வீச்சுக்களுக்கு நடுவேயும் தொழுகைக்காக துண்டுவிரிக்கிற ஒரு சமுதாயம், சர்வதேச அளவில், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அன்றாடம் அணுகுண்டுகளை வீசிக் கொண்டிருக்கிற ஊடகங்களை தாண்டி உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு சமுதாயம் முஹம்மது என்ற பெயரை இன்னும் எத்தகைய உயிர்த்துடிப்போடு உச்சரித்துக் கொண்டிருக்கிறது என்பதை நியாயமாக யோசித்துப் பார்க்க வேண்டியது அறிவாளிகளின் கடமையாகும்.
இத்தகைய ஆகர்ஷணம் கொண்ட ஒரு சக்தி எத்தகைய சத்திய வெளிச்சத்திற்குரியது என்பதை அறிஞர்கள் அளவிட வேண்டும். அற்பத்தனமாக் குற்றச் சாட்டுக்களை அள்ளி வீசுவதை விட்டுவிட்டு அவர் விசயத்தில் நியாயாமான ஒரு பரிசீலனைக்கு மக்கள் தயாராக வேண்டும்.
முஹம்மது நபியை களங்கப்படுத்தும் முயற்சியை அணு அளவிலும் விட்டுவைக்காத முஸ்லிம் சமுதாயம் அவரைப் பற்றிய கருத்து விவாதங்களுக்கு எப்போதும் தயாராக இருக்கிறது.
அவரை தீவிரமாக எதிர்தவர்கள் அந்த சத்திய தரிசனத்தை நேரிட்டுக் கணட நிமிடச் சருக்கில் சரணாகதி அடைந்தனர் என்பதுதான் வரலாறு. உமர் ஒரு உதாரணம் போதாதா? ஒரு கவிஞன் சொன்னது போல் முஹம்மது என்ற நன் மலரை வெட்ட வந்த விரல்களே அந்த மலருக்கு காம்பாக மாறிவிடவில்லையா? எதிர்ப்பு எங்கே வலுவாக இருக்கிறதோ அங்கே பலமான தளத்தை அமைத்துக் கொண்டது தான் முஹம்மது நபியின் தனிச்சிறப்பு.
முஹம்மது நபி (ஸல்) தனது ஊர் மக்களிடம் “உங்களது உறவினன் நான். அந்தக் காரணத்தினாலேனும் என் வழியில் செல்ல என்னை அன்மதியுங்கள் என்று கோரிய போது அதைக் கூட ஏற்க மறுத்தனர் அம்மக்கள். ஆயினும் முஹம்மது நபி (ஸ்ல்) அவர்களது வாழ்வில் குற்றம் கண்டு பிடித்து அவரை தரம் தாழ்த்திட அவர்கள் முறசிக்கவில்லை.
முஹம்மது (ஸல்) தனது பிரச்சாரத்தின் தொடக்க முயற்சியாக கஃபா ஆலயத்தின் அருகே இருந்த சபா குன்றின் மீதேறி சப்தமிட்டு “பஹ்ர் குடும்பமே! அதீ குடும்பமே! கஃபு குடும்பமே ! இந்த மலைகனவாயினூடே உங்களை தாக்குவதற்கு ஒரு படை வரப்ப்போகிறது என்று நான் சொன்னால் அதை நீங்கள் நம்புவீர்களா? என்று கேட்டார். அதற்கு அம்மக்கள் சொன்ன வார்த்தையை வரலாறு பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறது. “நஅம்! மா ஜர்ரப்னா அலைக்க இல்லா சித்கன்” ஆம்! நம்புவோம்! நீர் உண்மையாளர் என்பது தான் எங்களது அனுபவம்” என்று அம்மக்கள் கூறினர். தனது சொல்லை ஏற்கச் செய்வதற்கான பீடிகியை அமைத்துக் கொண்ட பிறகு முஹம்மது ஸல்) தனது பிரச்சாரத்தை எடுத்துரைத்த போது “இதற்குத்தானா எங்களை அழைத்தாயா என்று கடிந்து கொண்ட அம்மக்கள் கடைசி வரை நபிகள் நாயகத்தின் நம்பகத் தன்மையில் குறை பேசவே இல்லை.
வரலாற்றில் ஒரு பேரதிசயமாக முஹம்மது நபியின் பிரதான எதிரியாக இருந்த அபூஜஹ்ல் “ நீ பொய் சொல்கிறாய் என்று கூறமாட்டேன்! ஆனால் உன்னை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. என்று நபிகள் நாயகத்திடம் கூறினான். முஹம்மது நபி வாழ்ந்த காலத்தில் அவரை சூழ்ந்திருந்த சமுதாயம் அவரது வாழ்வின் மீது எந்தப் பழிச் சொல்லையும் சொல்லவில்லை.
இறைத்த்தூதர்களைப் பற்றி அனுபவமின்மை காரணமாக மக்காவின் மக்கள் நபி (ஸல்) பற்றி, கவிஞராக இருப்பாரோ! மந்திரவாதியோ! ஒரு வேலை இதுவும் ஒரு வகை சித்த பிரமையே! என்றெல்லாம் பேச முற்பட்டார்கள் என்றாலும் அப்படிக் கூட அவர்களால உறுதியாக பேச முடியவில்லை.
மக்காவின் செல்வாக்கு மிக்க செல்வந்தர் வலீது பின் முகீரா நபிகள் நாயகத்தை குறை சொல்லும் வார்த்தைய கண்டுபிடிப்பதற்காகவே தன்னுடைய வீட்டில் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். நபிகள் நாயகத்தின் எதிரிகள் ஒன்று கூடினர். “கவிஞர்” “மந்திரவாதி” “சித்தபிரமை பிடித்தவர்” என் ஒன்றன்பின் ஒன்றாக பழிச் சொற்கள் கூறப்பட்டன. வலீது அவை ஒவ்வொன்றையும் மறுத்தார். முஹம்மதுவிடம் இந்தக் குறை இல்லை. இதை சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அனைத்தையும் நிராகரித்தார்.. கருத்துச் சொன்னவர்கள் கடுப்படைந்தனர், நீங்களாவது ஒன்றை சொல்லுங்கள் என்றனர். வலீது சொன்னார். முஹம்மது விசயத்தில் நீங்கள் எதைச் சொன்னாலும் அது எடுபடாது. பொய்யென்று தெரிந்து விடும். “மா அன் தும் பிகாயீலீன பிஸய்யின் பீஹி இல்லா உரிப அன்னஹூ பாதில்)
ஒரு உத்தமரை வார்த்தையால் ஊனப்படுத்தும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அல்ல. தங்கத்தை உரசிப் பார்த்த பொற்கொல்லனின் தீர்ப்பாக – முஹம்மது நபியின் யோக்கியதாம்சத்தை நிறுவும் சான்றாக அமைந்தது.
தங்களது ஊர்கார்ரும் மரியாதையான குடும்பத்தவரும் நாணயமிக்கவருமான முஹம்மது (ஸல்) அவர்களை ஒன்று சேர்ந்து கொன்று விடலாம் என்று தீர்மாணித்தவர்கள் கூட முஹம்மது (ஸல்) வை பழிச் சொல்லுக்கு ஆளாக்கவில்லை.
ரோமப் பேரரசர்சர் ஹிர்கல் பாரசீகத்திடம் பெற்ற வெற்றிக்கு பரிகாரமாக பாலஸ்தீனத்திற்கு நடை பயணம் வந்திருந்த போது, அங்கு முஹம்மது நபியின் கடிதம் அவருக்கு கிடைத்தது. முஹம்மது நபியை பற்றி விசாரிப்பதற்காக அவர் மக்காவிலிருந்து வந்திருக்கும் வியாபாரக் குழுவை அழைத்தார். மக்கத்து எதிர்களுக்கு நபிகள் நாயகத்தை பழி தீர்க்கும் ஒரு முக்கிய வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் கூட அவர்கள் முஹம்மது ஸல் அவர்கள் மீது அவர்கள் பழி கூறி ஒரு வார்த்தை கூறவில்லை.
முஹம்மது என்றால் புகழுக்குரியவர் என்று பொருள், அந்த பொருளுக்கேற்பவே முஹம்மது (ஸல்) வாழ்ந்தார்.
ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்றின் மீதும் களங்கத்தை பூசும் முயற்சியை ஐரோப்பிய கிருத்துவர்களே முதன் முதலாக ஆரம்பித்தனர். சிலுவை யுத்தங்களின் போது இந்த வகையான தூற்றுதல் பெருந்தூரலாக இருந்தது. தம் மனம் போனபடிக்கு நாயகத்தை பழித்துப் பேசினர். அவரைப் போர் வெறியர் என்றனர்- பெண்ணாசை கொண்டவர், மோசடியாளர், என்றனர் சகிப்துத்தன்மை அற்றவர் என்றனர்.
அன்றிலிருந்து இன்றுவரை இந்த குற்ற இயல்புகளை அனைத்திற்கும் ஐரோப்பியர்களே பிறப்பிடமாக இருந்தனர். கீழ்த்தரமான, ஒழுக்கக்கேடு நிறைந்த குரூரமான செயல்களுக்கு இன்று வரை ஐரோப்பிய கிருத்துவ மேற்குலகை தவிர வேறு உதாரணம் இல்லை. இன்னும் சொல்வதானால் உலகிற்கு கொடுப்பதற்கு அவர்களிடம் இவற்றை தவிர வேறு எதுவும் இல்லை. ஐரோப்பிய கிருத்துவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிப் பேசிய கருத்துக்கள் பலவும் அவர்களுடைய மன விகாரத்தின் வெளிப்பாடாக அமைந்ததே தவிர, அதில் ஆத்திரமும் பொறாமையும் பொங்கி வழிந்ததே தவிர அதில உண்மை துளியும் இருக்கவில்லை. இஸ்லாமிற்கு எதிராக கிருத்துவர்களை திருப்புவதற்காக பெரும்பாலும் பாதிரிகளே இக்குற்றச் சாட்டுகளை கூறினார். அதனால் தான் அவர்கள் கூறிய குற்றச் சாட்டுக்கள் எதுவும் காலத்தின் காதுகளில் பதியவே இல்லை.
முஹம்மது நபியின் வரலாற்றின் வழக்கப்படி, அவருக்கு எதிரான குற்றச் சாற்றுகளுக்கு எதிர் தரப்பிலிருந்தே மறுப்புச் சொல்லப்பட்டது. முஹம்மது நபிக்கு எதிரான கருத்துக்களை கருத்து ரீதியில் சந்தித்து நறுக்கான பதில்களை முஸ்லிம் சமூகம் முன்வைக்கத் தவறவில்லை. ஆனாலும் முஸ்லிம் அல்லாத பிற சிந்தனையாளர்களின் தளத்திலிருந்து தரப்பட்ட பதில்கள் முஹம்மது நபியின் வாழ்வில் சத்திய வெளிச்சத்திற்கு சான்றாக அமைந்தன.
முஹம்மது நபிக்காக வாதிட்டு முஸ்லிம்கள் கூறும் பதில்களில் சமய ரீதியான அணுகுமுறை மிகைத்து இருந்தது என்றால் பிற சிதனையாளர்களின் பதில்கள் முஸ்லிம்கள் சிந்திக்காத மற்றொரு கோணத்தில் வாழ்வியல் ரிதியான எதார்த்தமான பதில்களாக அமைந்தன. “இதைக் கூடவா நீங்கள் கவனிக்கவில்லை” என எதிர்ப்பாளர்களை நோக்கி கேள்வி கேட்கிற தொனியில் அவை அமைந்திருந்தன.
மக்காவில் வலீது நட்த்திய கூட்டம் எப்படி நபிகள் நாயகத்தின் வரலாற்றுக்கு எதிர்திசையிலான புதிய பரிமாணத்தை தந்ததோ அதே போல ஐரோப்பியர்களின் குற்றச் சாட்டுகளும் முஹம்மது நபியின் வாழ்வில எதிர்த்திசையிலான வலுப்படுத்தலாக அமைந்தன. அவை ஐரோப்பிய யூத காழ்ப்புணர்வின் குரூரத்தை அம்பலப்படுத்தினவே அன்றி முஹம்மது நபி புகழ் வாழ்வில் ஒரு தூசு அளவுக்கு கூட மாசுபடுத்திடவில்லை.
19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய உலகில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு எதிராக புயல் வீசிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற வீச்சு மிகுந்த சிந்தனையாளரும் அற்புதமான பேச்சாளருமான தாமஸ் Heroes and Hero-Worship என்ற தலைப்பில் உலகின் கதாநாயகர்களைப் பற்றி தொடர் உரைகள் நிகழ்த்தினார். எடின்பரா பல்கலையில் சட்டம் பயின்ற அவரது உரைகளை மக்கள் கட்டணம் செலுத்திக் கேட்டனர். அவர் எழுதிய The Heroes என்ற நூலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. கார்லைல் தனது உரைகளுக்கு கவிதை கதாநாயகர்க்களாக தாந்தே, ஷேக்ஸ்பியர் ஆகிய இருவரையும், கதாநாயக பாதிரியாராக மார்டின் லூதரையும், கதாநாயக இலக்கிய எழுத்தாளராக ஜான்ஸனையும் ரூஸோவையும், ஆட்சியாளராக நெப்போலியனையும் தேர்வு செய்து அவர்கள் குறித்து ஆழமான கருத்துரைகளை வழங்கினார். 1840 ம் மே 8ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கதாநாயகர் – ஒரு தீர்க்க தரிசியாக என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது இந்த தலைப்பிற்கு தீர்க்க தரிசிகளின் பட்டியலிலிருந்து மோஸேவையோ இயேசுவையோ தேர்ந்தெடுக்காமல் யாரும் எதிர்பாரத விதமாக முஹம்மது (ஸல்) அவர்களை தேர்வு செய்தார்.
வெளையர்கள் கருப்பின மக்கள் மீது கொண்டிருந்த வெறுப்பைபோல் அந்த கிருத்துவ சமுதாயம் முஹம்மது (ஸல்) அவர்களின் மீது வெறுப்புக் கொண்டிருந்தது. தலைப்பே அவர்களை திடுக்கிட வைத்தது என்றால் தொடர்ந்து அவர் பேசிய தகவல்களில் ஐரோப்பிய மக்களுக்கு பல அதிர்ச்சிகரமான உண்மைகள் காத்திருந்தன.
“முஹம்மதுவுக்கு எந்த வேதச் செய்தியும் வரவில்லை என்று நையாண்டி பேசிய 17 ம் நூற்றாண்டைச் சார்ந்த Hugo Grotius என்ற டச்சு கவிஞனின் கருத்தை மறுத்து தன்னுடைய உரையை தொடங்கிய கார்லைல், “It is a great shame for anyone to listen to the accusation that Islam is a lie and that Mohammad was a fabricator and a deceiver என்று தொடர்ந்தார்.
இஸ்லாம் பொய்யான ஒரு சமயம்; முஹம்மது ஒரு ஏமாற்றுக்காரர் என்று குற்றச் சாட்டை ஏற்பது எந்த நாகரீகமான பிரஜைக்கும் வெட்கரமானது. என்ற அவரது தொடக்கம் நேயர்களை நிமிர்ந்து உட்கார வைத்தது,
Hugo Grotius கற்பனையாகவும் கிறுக்குத்தனமாகவும் சொன்ன கதைகளில் கிருத்துவ உலகம் அகமகிழ்ந்து கொண்டிருந்த்து. முஹம்மது சில புறாக்களை வளர்த்தார், அந்தப் புறாக்களுக்கு அவர் நல்ல பயிற்சி கொடுத்தார். அவை அவரது தோளில் வந்து உட்கார்ந்து அவரது காதோரம் வைக்கபடுகிற தானியங்களை சாப்பிடும், அதைதான் தனக்கு வஹி இறைச் செய்தி வருவதாக அவர் என முட்டாள்தனமாக கதை கட்டி விட்டிருந்தான். Hugo Grotius. இவன் மட்டுமல்ல கிருத்துவ உலகத்தைச் சார்ந்த புத்திசாலிகள்(?) பலரும் இப்படித்தான் உண்மைக்கு சற்றும் தொடர்பில்லாத அறிவீனமான கற்பனைகளை முஹம்மது (ஸல்) அவர்கள் விசயத்தில் நம்பியிம் பேசியும் வருகிறார்கள். இஸ்லாம் தொடர்பாக தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொண்ட அறிவீனமான கருத்துக்களை நம்பி, பேசி, அதையே விவாதம் செய்து பரப்புவதன் மூலம் அற்பமாக சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த கிருத்துவர்கள் நிறைந்திருந்த அந்த திரளான சபையில் கார்லைல் உரத்துக் கூறினார்.
“இந்த மனிதர் விசயத்தில் இனவெறியோடு திட்டமிட்டு நாம் உருவாக்கிய இந்தப் பொய்களால் நமக்குத்தான் இழிவே தவிர ஒருபோதும் அவருக்கல்ல.”
தொடர்ந்து நபிகள் நாயகம் (ஸல் அவர்களின் நாணயம், உள்ளத்தூயமை ஆகியவற்றை கிலாகித்துப் பேசிய கார்லைல், நபிகள் நாயகத்தின் ஒரு செயலை மிக உவப்போடு குறிப்பிட்டார்.
முஹம்மது (ஸல்) ஒரு முறை மக்காவின் தலைவர்க்களுக்கு இஸ்லாமை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஏழை கண் தெரியாதவரான அப்துல்லாஹ் பின் உம்மி மக்தி இடைமறித்து பேசினார். நபிகள் நாயகம் முகம் சுளித்தார். அப்போது அவ்வாறு செய்ய வேண்டாம் என்ற கருத்தில் “ பார்வையற்றவர் தேடி வந்த போது முகம் கடுகடுத்தார் என்ற கருத்தில் இறைவசன் அருளப்பெற்றது.
அதற்கு பிறகு அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) தன்னிடம் வருகிறபோது அவரை “நான் கண்டிக்கப்பட காரணமாக இருந்தவரே வருக என பாசத்தோடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைப்பார்கள். வெளியூர்களுக்குச் சென்ற நேரங்களில் இரண்டு முறை அவரை மதீனா நகரின் பொறுப்பாளராக நியமித்தார்கள். இந்த இரண்டு நிகழ்வுகளை எடுத்துக் காட்டிய கார்லைல் “கதாநாயக தீர்க்கதரிசியின் உளத்தூய்மையும் நேர்மையும் இந்த அளவுக்கு இருந்தன என்று கூறினார்.
நபிகள் நாயகத்தின் சத்தியத்தன்மையை எடுத்துக்காட்ட கார்லை அற்புதமான – உலக அனுபவத்தின் சத்தாக அமைந்த ஒரு நியதியை எடுத்துவைத்தார்.
“முஹம்மது ஒரு ஏமாற்றுக்கார்ராக இருந்திருந்தால் 12 நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கிற – 18 கோடி மக்கள் நிழல் பெறுகிற ஒரு சமயத்தை அவரால நிறுவி இருக்க முடியாது. சரியான அடித்தளமில்லாத ஒரு கட்டிடம் சீக்கிரம் விழுந்து விடும். மோசடியை நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்க முடியாது. பொய் சீக்கிரமே வெளுத்து விடும்.”
ஐரோப்பிய சமுதாயம் மட்டுமே இன்று வரை நபி (ஸல்) அவர்களது திருமணங்களை கொச்சைப் படுத்தி வருகிறது. அவரை பெண்ணாசை கொண்டவராக சித்தரிக்க முயல்கிறது. வெட்கங்கெட்ட வாழ்கையுடையோர் உயரிய ஒழுக்கம் சார்ந்த திருமண வாழ்வை குறைகூறுவது ஏற்புடையதல்ல.
இருப்பினும், தாமஸ் கார்லை ஐரோப்பியர்களுக்கு அன்றைய பாரசீக மன்னரான கிஸ்ராவின் ஆடம்பர வாழ்வையும் ரோமச் சக்ரவர்த்தியான கைஸைரின் டாம்பீகத்தையும் நினைவு படுத்திக் காட்டுகிறார். வானத்தோடு தொடர்பு கொண்டிருந்த முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பூமியின் மன்னர்கள் சூடிக்கொள்ளும் மகுடங்களில் அக்கறையிருக்கவில்லை என்பதை விவரிக்கிறார். சிற்றின்ப ஆசை அவரது திருமணங்களுக்கு காரணமல்ல என்பதை முஸ்லிம் அறிஞர்கள் பலவகையிலும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
முதல் மனைவி கதீஜா (ரலி) இறந்த பிறகே நபி (ஸல்) 10 திருமணங்களைச் செய்தார். அன்றைய அரபகத்தில் பல பெண்களை திருமணம் செய்வது சர்வசாதாரண வழக்கமாக, குறை காணப்படாததாக இருந்தது. அப்படி இருந்தபோதும் அதுவரை ஒரு மனைவியுடனேயே வாழ்ந்தார்.
நபிகள் நாயகத்தின் 50 வயதுக்குப் பின்னரே இரண்டாவது திருமணம் நடைபெற்றது. மற்ற அதிகமான திருமணங்கள் ஹிஜ்ரி 5 க்குப்பின் நடைபெற்றன. அப்போது பெருமானார் 58 வயதை கடந்து விட்டிருந்தார். இத்தனை திருமணங்களுக்குப் பிறகும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்த பல பெண்களை பெருமானார் நபி (ஸல்) ஏற்க மறுத்ததை வரலாறு காட்டுகிறது.
நபி(ஸல்) கடைசி மனைவி மைமூனா (ரலி). அவரை திருமணம் செய்து கொண்டது முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியாக பல நனமைகளை தந்தது. பிற்காலத்தில் இஸ்லாத்திற்கு மாபெரிய வெற்றிகளை வாரிக்குவித்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் அத்திருமணத்திற்கு பின்னரே இஸ்லாமை தழுவினார். அவருடன் மற்றொரு பிரபலமான அம்ரு பின் ஆஸ் (ரலி) இஸ்லாமைத் தழுவினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) தன்னுடைய தோழர்களிடம் மக்கா தன்னுடைய ஈரல்துண்டுகளை நம்மிடம் வீசி விட்டது என்று கூறினார். இதற்கு ஒருவகையில் காரணமாக இருந்த மைமூனா அம்மையார் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் சித்தியாவார்.
தாமஸ் கார்லைல் மற்றவர்கள் யோசிக்காத புது வகையில் நபி(ஸல்) அவர்களின் புனித்ததை நிரூபிக்கிறார்.
“முஹம்மது, அவர் மீது அக்கிரம்மாகவும் வரம்பு மீறியும் சொல்லப்படுவது போல சிற்றிண்ப ஆசை கொண்டவரல்ல. எளிய உணவு எளிய இருப்பிடம் மற்ற அனைத்திலும் எளியதை கொண்டு திருப்தி கொள்ளும் ஒரு துறவியாக அவர் இருந்தார். பல மாதங்கள் பசியால வாடிய வாழ்க்கை அவருடையது”
சத்தான உணவு, கவர்ச்சியான ஆடைகள், வசதியான தங்குமிடம், வளமான பொருளாதாரம், கவலையற்ற வாழ்க்கை ஆகியவை சிற்றின்ப உல்லாச வாழ்க்கைகு மனிதனை தூண்டுபவை. இவை எதுவும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் கிடைக்கவில்லை என்பது எதார்த்தம்.
முஹம்மது (ஸல்) தனது எதிரிகளை முழு வீரத்தோடு எதிர்த்துப் போராடி வெற்றி கண்டார் என்பதை ஐரோப்பிய கிருத்துவர்களால தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் முஹம்மது (ஸல்) பல யுத்தங்களுக்கு காரணமாக இருந்தார். வாள் முனையில் சமயத்தை பரப்பினார் எனப் புகார் கிளப்பினர். அவர் கற்றுக் கொடுத்த ஜிஹாத் என்ற சொல் மனித சமூகத்தின் நிம்மதியை குலைத்து விட்டதாக இப்போதும் சிலர் புலம்புகின்றனர்.
உயிர்ப்பலியை முஹம்மது (ஸல்) எவ்வளவு வெறுத்தார், அதை தடுப்பதற்க்கு அவர் மேற்கொண்ட முயற்சி என்ன? அவரது வரலாற்றை படித்தால் குறைந்த பட்சம் அவரது பொன்மொழித் தொகுப்பில் இருக்கிற ஜிஹாத் பற்றிய அத்தியாயத்தைப் படித்தால் புரிந்து கொள்ளலாம். நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் திறந்த புத்தகமாக எங்கும் கிடைக்கிறது.
ஒரு அரசியல் தலைவரின் முழு வாழ்வும் அப்பட்டமாக திறந்து காட்டப்படும் அதிசயம் முஹம்மது (ஸல்) அவர்களது வரலாறில் கிடைப்பது போல வேறு எங்கும் காணக்கிடைக்காது. அந்தப் புனித வாழ்வில் மர்மத் திட்டங்கள் இல்லை, இரகசிய உத்தரவுகள் இல்லை. பொறி பறக்கும் விஷம் தோய்ந்த வார்த்தைகள் இல்லை.
யுத்தம் என்பது ஒரு போராட்ட வாழ்வில் தவிர்க்க முடியாதது. சில சந்தர்ப்பங்களில் அது அவசியமானதும் கூட. அத்தகைய நிர்பந்த சந்தர்ப்பங்களிலேயே முஹம்மது (ஸல்) அவர்கள் யுத்தம் செய்தார்.
போர்க்களத்தில் அகிம்சையை வலுயுறுத்தி முதல் வரலாற்றுத் தலைவர் முஹம்மது (ஸல்) ஒருவராகத்தான் இருக்க முடியும். ஹிஜ்ரி 5ல் நடைபெற்ற முரைசிஃ களத்தில் தோழர்களுக்கு அவர் சொன்னார். எதிரிகளை சந்திக்க ஆசைப்படாதீர்கள்! இறைவனிடம் அமைதியை பிரார்த்தியுங்கள். எதிரிகளை சந்தித்தால் முந்திக் கொண்டு வாளை உயர்த்தாதீர்கள். ஒருவேளை நீங்கள் தாமதிக்க அவர்கள் உங்கள் மீது வாள் வீசி விட்டால். அறிந்துகொள்ளுங்கள்! அந்த வாட்களின் நிழ்லில் உங்களது சொர்க்க காத்திருக்கிறது.
இன்றைய முன்னேறிய உலகில் கூட போர் மரபுகள் கடை பிடிக்கப்படுவதில்லை. இராக்கில் நூற்றுக் கணக்கான பெணகளும் குழந்தைகளும் தங்கியிருந்த பதுங்கு குழியின் வாசலை குறி பார்த்து அமெரிக்கா ஏவுகணையை வீசியது. மற்றொரு தடவை ஈரான் நாட்டின் பயணிகள் விமானம் ஒன்றை ஏவுகணை வீசி அழித்தது.
முஹம்மது நபி உலகில் முதன் முறையாக போர் மரபுகளை சட்டமாக்கி அமுல் படுத்தியவர் ஆவார். பெண்கள், சிறுவர், முதியோர், சண்டைக்கு வராது ஆலயங்களிலிம், பதுங்கு குழுகளிலும் அடைக்கலம் தேடியிருப்பவர்களை கொல்லக் கூடாது. யாரிடமும் சண்டையிடுவதற்கு முன் அவர்களிடம் நியாயம் பேச வேண்டும் என்பது மட்டுமல்ல. மரங்களை வெட்டக் கூடாது. விலை நிலங்களுக்கு தீ வைக்க கூடாது என்பதும் முஹம்மது (ஸல்) வரைந்து கொடுத்த போர் நியதிகளாகும்.
முஹம்மது (ஸல்) தன் வாழ்வில் 9 சண்டைகளை சந்தித்தார் என்பதை படிக்கிற நியாயவான்கள். அந்த சண்டைகளின் போது அவர் போட்ட உத்தரவுகளையும் அது கடைபிடிக்கப் பட்ட ஒழுங்கையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
முஹம்மது (ஸல்) ஆயுதங்களின் வழியே சமயத்தை பரப்பினார் என்று புலம்புவோரைப் பார்த்து திலாஸி ஒலேரி கூறுகிறார். “ஆயுத பலத்தால் மக்களை இஸ்லாமை ஏற்க முஹம்மது நிர்பந்தித்தர் என்பது சுத்தமான கற்பனையாகும். சிரிப்பை வரவழைக்க கூடியது. அது உணமையிலிருந்து வெகு தூரம் விலகிய ஆரோக்கியமற்ற வாதமாகும்.” (islam at the cross road By De Lacy O’Leary- london – 1923 )
முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்றை நியாயமாக எடை போடுகிற யாரும், ஓளிவு மறைவோ, சூதுவாதோ அற்ற அந்த மகத்தான வாழ்வை மதிப்பாகவே கருதுவர். அதில் பிரமிக்கவே செய்வர். இது போல தூய வாழ்வு இன்னொன்று இல்லை என்று தாமாகவே கூறுவர். – ஜி.ஜி. கெல்லட் – கூறுவதை கேளுங்கள்!
“ இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.”
முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்றை அவர் யார் என்ற எதார்த்தமான கேள்வியோடு வாசிக்கும் எவருக்கும் இந்த அனுபவச் சிலிர்ப்பு ஏற்படவே செய்யும். ஏனென்றால்
அந்த வாழ்வில்
· கருணைக்கு எதிரான ஒரு பார்வையில்லை
· நீதிக்கு எதிரான் ஒரு செயல் இல்லை
· ஒழுக்கத்திற்கு எதிரான் ஒரு அசைவில்லை
· பெண்களுக்கு எதிரான ஒரு ஒரு வசை இல்லை
· சிறுவர்களுக்கு எதிரான் ஒரு கடுப்பில்லை
· நேர்மைக்கு எதிரான ஒரு சூது இல்லை
· பொது நன்மைக்கு எதிரான ஒரு சிந்தனை இல்லை
· சமத்துவத்திற்கு எதிரான ஒரு சமிக்ஞை இல்லை
· சகிப்புத்தன்மைக்கு எதிரான ஒரு உத்தரவில்லை
· சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு சூழ்ச்சி இல்லை
· மொத்தமாக சொல்வதானால்
· சத்தியத்திற்கு எதிரான ஒரு சொல் இல்லை.
துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள். என்றார் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் புகழ்பெற்ற நூலாசிரியரான – எஸ். எச். லீடர் (-S.H. Leeder – Modern Sons of the Pharaohs

Saturday, September 15, 2012

ஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்

சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தான் ஸாலிஹ் நபி.

சவுதி அரேபியாவில் உள்ள மதாயன ஷாலிஹ் என்ற இடத்தில் பெரும்பாறைகளை குடைந்து அவர்கள் வாழ்ந்த குகை வீடுகள் இப்போதும் உள்ளன. மதீனாவிலிருந்து 405 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் மதாயன ஷாலிஹ் உள்ளது. மக்காவிலிருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அல் ஊலா என்ற ஊரிலிருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. அங்குதான் ஹிஜ்ர் பகுதி உள்ளது. இப்போது அதை ‘மதாயின் ஸாலிஹ்’ -(ஸாலிஹ் (அலை) அவர்கள் வசித்த ஊர்) என்று அழைக்கின்றார்கள்.
இந்த மக்கள் பேசிய மொழி அரபி மொழியாகும். இறைவன் அனுப்பிய தூதர்களில் அரபுகளாக அறியப்படுபவர்கள் நான்கு பேர். 1.நபி ஹூத், 2. நபி ஷூஐப், 3.நபி சாலிஹ், 4.நபி முகமது.




காலை தொழுகையை முடித்துக் கொண்டு நானும் மதுரையை சேர்ந்த நைனார் முஹம்மதும், ஒரு கேரள அன்பரும் சேர்ந்து கம்பெனி வண்டியில் கிளம்பினோம். நாங்கள் நினைத்தது தூரம் 300 கிலோமீட்டரே! ஆனால் அந்த இடம் வர கிட்டத்தட்ட 550 கிலோ மீட்டர் ஆகி விட்டது.



இந்த இடத்துக்கு செல்பவர்கள் முதலில் அல்ஊலாவில் இருக்கும் அரசு அலுவலகத்தில் சென்று அனுமதி பத்திரம் வாங்க வேண்டும். இது தெரியாமல் நாங்கள் நேரிடையாக சென்று விட்டோம். எங்களை உள்ளே விட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. பிறகு நான் அவர்களிடம் 500 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வருகிறேன்: என்று அரை மணி நேரத்துக்கு மேலாக வாதிட்டு அதன் பிறகு அனுமதி வாங்கினோம். அரபி மொழி தெரிந்ததால் அனுமதி பத்திரம் இல்லாமலேலே எங்களுக்கு அனுமதி கிடைத்தது. சிரமத்தை தவிர்க்க இங்கு செல்பவர்கள் முதலில் அல் ஊலா சென்று அனுமதி வாங்கி விட்டு வரவும்.



கடும் பலம் வாய்ந்த சமுதாயமாக படைக்கப் பட்டிந்த ஸமூத் கூட்டத்தினர், சிலைகளை வணங்கிக் கொண்டும், ஆடம்பர வாழ்க்கையில் திலைத்துக் கொண்டும், மலைகளைக் குடைந்து, கோட்டைகள் கட்டி வாழ்ந்தும் வந்தார்கள். தோட்டங்களும் நீரூற்றுக்களும் வேளாண்மைகளும் பேரீத்தத் தோட்டங்களும் அங்கு மிகுந்து காணப்பட்டன.





இவர்கள் வீட்டின் வாயில்கள் மிகவும் உயரமாக உள்ளது. அந்த அளவு உயரமான மக்களாக இருந்துள்ளனர். மலைகளையே குடைந்து வீடு அமைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல. அத்தகைய வலிமை மிக்க சமூகமாக இவர்கள் வாழ்ந்துள்ளார்கள். போகும் வழியெங்கும் அந்த ஊர் இறைவன் சாபத்திற்குரிய ஊர் என்பதை நினைவுபடுத்தும் முகமாக எங்கும் அழிவின் காட்சிகள் காணக்கிடைக்கும்.



நமது நாட்டு கோவில்களை ஒத்து சில இடங்களில் சித்திரங்களும் செதுக்கியுள்ளனர். அழகிய வேலைப்பாடுகள். பல தெய்வ வணக்கம் புரியும் நம் நாட்டு மக்களின் கலாசாரமும் இந்த மக்களிடமும் இருந்ததை இந்த கட்டிடங்கள் இன்றும் நமக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றன.
அவர்களிடம் நபியாக அனுப்பப்பட்ட ஸாலிஹ் (அலை) அவர்களின் ஓரிறைக் கொள்கையையும் தூதுத்துவப் பிரச்சாரத்தையும் ஏற்க மறுத்தனர்.

'ஸாலிஹே! இதற்கு முன் எங்களிடம் நம்பிக்கைக்குரியவராக இருந்தீர். எங்கள் முன்னோர்கள் எதை வணங்கினோமோ அதை நாங்கள் வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா? நீர் எதற்கு எங்களை அழைக்கிறீரோ அதில் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்' என்று அவர்கள் கூறினர்.
-குர்ஆன் 11:62

நீங்கள் இறைத்தூதர் என்பதற்கு ஏதேனும் அத்தாட்சியை கொண்டு வந்தால்தான் உங்களை நபியாக ஏற்போம் என்றனர். இவ்வாறு முறையிடுவது அவர்களுக்கு சோதனையாகவும் தண்டனையாகவும் அமைந்து விடும் என்பதை புரியாத அவர்கள் தம் கோரிக்கையில் பிடிவாதமாகவும் இருந்தனர்.

அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, கண்கூடான அத்தாட்சியாக பெண் ஒட்டகம் ஒன்றை அல்லாஹ் வெளிப்படுத்தினான்.



நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்பதற்கு இதோ நீங்கள் கேட்ட அத்தாட்சி! இதனை எந்த தொந்தரவும் செய்யாமல் பூமியில் மேய விட்டு விடுங்கள்! அதற்கென தண்ணீர் அருந்தும் நாள் ஒன்றை ஒதுக்கிவிடுங்கள்! இதற்கு தீங்கிழைத்தால் அல்லாஹ்வின் தண்டனையை சந்திக்க நேரிடும் என்று ஸாலிஹ் (அலை) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.
அந்த சமுதாயத்தில் மதிப்பும், பலமும் வாய்ந்த, திமிர் பிடித்த ஒருவன் ஸாலிஹ் (அலை) அவர்களின் உபதேசத்தையும், எச்சரிக்கையும் மீறி அந்த அற்புத ஒட்டகத்தை அறுத்து விட்டு, ஸாலிஹே! நீர் உண்மையில் அல்லாஹ்வுடைய தூதராக இருந்தால் நீர் வாக்களித்த தண்டனையை கொண்டு வாரும்! என்றான்.
மூன்று நாட்கள் வரை உங்கள் வீடுகளில் சுகம் அனுபவியுங்கள்! இது பொய்ப்பிக்கப்படாத வாக்காகும் என்றார்கள் ஸாலிஹ் (அலை) அவர்கள். மூன்று நாட்கள் முடிந்தன.

“இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.”
- அல்குர்அன் 11:61


(இவ்வாறே ஸமூது சமூகத்தாரான) மலைப்பாறை வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்.

அச்சமற்றுப் பாதுகாப்பாக வாழலாம் எனக்கருதி, அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டார்கள்.
-அல்குர்ஆன் 15:80-82


பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
-அல்குர்ஆன் 89:9


ஸமூது கூட்டத்தினர் ஒன்பது வன்முறை கூட்டத்தினர்களாக இருந்து பல தெய்வ வணக்கம் செய்தல், கொள்ளை அடித்தல், அக்கிரம செயல்கள் புரிதல் போன்றவைகளில் பரவலாக ஈடுபட்டனர். அப்பொழுது அல்லாஹ் அதிசயமான உருவத்துடன் ஒரு ஒட்டகத்தை படைத்து அவர்களிடையே நடக்க செய்தான். அவ்வொட்டகத்தை எந்த ஒரு துன்பமும் செய்யாமலிருக்க கட்டளையிட்டான்.

அவர்கள் இறையானைக்கு சவால் விட்டு அந்த ஒட்டகத்தை அறுத்து விட்டார்கள். அதிகாலை நேரத்தில் அல்லாஹ்வுடைய தண்டனை இறங்கியது.
“அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்” (என்று கூறினார்).

ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்): “நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சுகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார்.

நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.

அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர்.
-அல்குர்ஆன் 11:64-67





------------------------------------------------------------



இங்கு காட்டப்படும் மனித எலும்புக் கூடுக்ள் சாலிஹ் நபியின் காலத்தில் வாழ்ந்த மனிதர்களுடையது என்று சொல்கிறார்கள். இது உண்மையா என்பது ஆதாரபூர்வமாக எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும்.

ஆனால் பரிணாமவியலாருக்கு இதில் பல கேள்விகள் இருக்கிறது.

பரிணாமத்தின் அடிப்படை நியதியே ஒரு உயிரினம் மாற்றங்களை உள்வாங்கி அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே, அந்த மாற்றங்கள் உயிரினத்தின் தக்க வைத்தலுக்கு நன்மை பயக்கும் போது அது தொடரும், அதே போல மாற்றங்கள் தேவை இல்லாத போது அது நீக்கப்படும். அதே போல மாற்றங்களை நிகழ்த்துவதாலும், மாற்றங்களை உள்வாங்குவதாலுமே இனம் விருத்தியடைந்து வருகின்றது எனலாம். பரிணாமத்தை தூக்கிப் பிடிப்போர் வைக்கும் வாதங்களே இது.

நாம் கேட்பது ஒரு உயிரினத்திலிருந்து மற்ற உயிரனமாக மாற புறத் தோற்றத்தில் அந்த விலங்கு 1,2,3,4 என்று பல நிலைகளை அடைந்து தற்போதய நிலையை அடைந்திருக்க வேண்டும். இதற்கு பல மில்லியன் வருடங்கள் ஆனதாக பரிணாமத் தத்துவம் கூறுகிறது. ஒரு இனம் ஒன்றாவது நிலையிலிருந்து நான்காவது நிலையை அடைவதாகக் கொள்வோம். இதற்கு இடைப்பட்ட இரண்டு நிலைகளை அந்த உயிர் பரிணாமத்தால் அடைந்திருக்க வேண்டும். இப்பொழுது நாம் பார்க்கும் காணொளியில் அனைத்து தாவரங்களும் விலங்குகளும் இன்று நாம் எப்படி பார்க்கிறோமோ அதே போன்ற நிலையில்தான் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் பல லட்ச வருடங்களுக்கு முன்பும் இருந்துள்ளன என்பதை விளங்குகிறோம். இதற்கு இடைப்பட்ட இனமான இரண்டாம் நிலையும், மூன்றாம் நிலையும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை.

ஜீன்களின் மாற்றத்தினால் உயரத்திலும் பருமனிலும் பல வித்தியாசங்கள் நடந்துள்ளது. இதை அனைவரும் ஒத்துக் கொள்கிறோம். தண்ணீரில் நீந்தியது ஊர்வனவாக மாறியதற்கும், ஊர்வன பிறகு பறப்பனவாக மாறியதற்கும் படிம ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை.

மேலும் மனிதன் முன்பு நம்மைவிட உயரமாக இருந்ததற்கும் மனிதனின் எலும்புக் கூடு கிடைத்துள்ளது. அந்த எலும்பும் இப்போது நமக்குள்ள அதே அமைப்பில்தான் உள்ளது. பரிணாம மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. அளவில் தான் சிறிதாகி இருக்கிறது.

------------------------------------------------------------
நபி (ஸல்) அவர்கள் தபூக் யுத்தத்திற்கு செல்லும் போது வாகனத்தில் அமர்ந்தபடியே போர்வையால் தம்மை மறைத்துக் கொண்டு அந்த இடங்களை விட்டும் விரைவாகக் கடந்தார்கள்.

ஹிஜ்ர் பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் அருந்தவோ, தண்ணீர் நிரப்பிக் கொள்ளவோ வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் தோழர்களுக்கு கட்டளையிட்டார்கள். நாங்கள் நீரை நிரம்பிக் கொண்டோம். அந்த தண்ணீரைக் கொண்டு மாவும் பிசைந்து விட்டோமே! என்று நபித் தோழர்கள் கூறியபோது, தண்ணீரை ஊற்றி விடுங்கள்! மாவையும் வீசி விடுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்கு கிடைத்த தண்டனை போன்று உங்களுக்கும் கிடைத்துவிடுமோ என்ற அச்ச உணர்வுடனும் அழுதவாறும் நுழையுங்கள் என்று உபதேசித்தார்கள்.
-புகாரி 3377, -3381)


இந்த இடங்களை பார்க்கும் நமக்கு இறைவனின் தண்டனை எப்படி இருக்கும் என்ற எண்ணம் நம் மனதில் வர வேண்டும். நேரம் கிடைப்பவர்கள் இந்த இடங்களை சென்று பார்வையிடவும்.

Sunday, September 9, 2012

நபிக்குப்பின் நபித்தோழர்கள்

நபிக்குப்பின் நபித்தோழர்கள்


 “என்னுடைய பேச்சை செவியுற்று அதை மனனம் செய்து பாதுகாத்து அதை செவியுற்றது போன்று பிறருக்குச் சொல்லக்கூடியவனுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! எனது செய்தி எத்திவைக்கப்படுகின்ற எத்தனையோ பேர் எத்திவைப்பவரைவிட சிறந்தவராக இருக்கின்றனர்” என நபிஅவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத், திர்மிதீ)
நபி அவர்கள் விட்டுச் சென்ற அமானிதத்தை எல்லா முஸ்லிம்களுக்கும் எத்தி வைப்பது தம்மீது கடமை என நபித்தோழர்கள் உணர்ந்தார்கள். இக்கடமையைச் செயல்படுவதற்காக நபித்தோழர்கள் உலகின் பல பாகங்களுக்கும் பரந்து சென்றுள்ளார்கள். இவர்கள் அவர்களை அடுத்த காலத்தினரான தாபியீன்கள் மத்தியில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றனர். நபித்தோழர்கள் இருக்கும் இடத்தை தேடி தாபியீன்கள் நீண்ட பிரயாணம் சென்றனர். நபி அவர்களின் ஹதீஸ்களை நபித்தோழர்களிடமிருந்து திரட்டலானார்கள். இவ்வாறு நபி அவர்களுடைய ஹதீஸ் எல்லா முஸ்லிம்களிடையிலும் பரவ ஆரம்பித்தது. (நபித்தோழர் என்பவர் நபியைப் பார்த்து நம்பிக்கை கொண்டவர். ‘தாபியீ’ என்பவர் நபித்தோழரைப் பார்த்து நம்பிக்கை கொண்டவர்)
நபிவழியை அறிவிப்பதில் நபித்தோழர்கள் எல்லோரும் ஒரே தராதரத்தில் இருந்ததில்லை. சுபைர்(ரழி), சைது பின் அர்கம்(ரழி) இம்றான் பின் ஹுஸைன்(ரழி) போன்ற நபித்தோழர்கள் மிகக்குறைவாகவே நபிவழியை அறிவித்திருக்கிறார்கள். சுபைர்(ரழி)வின் மகன் அப்துல்லாஹ் என்பவர் தனது தந்தையிடத்தில், சிலர் நபிஅவர்களுடைய ஹதீஸ்களை அறிவிப்பது போன்று தாங்கள் அறிவிக்க நான் கேட்டதில்லையே! என்ன காரணம் என்று கேட்டார்கள். அதற்கு, ‘நான் நபி அவர்களை விட்டுப் பிரியாமலே அருகில் இருந்தேன் என்றாலும், என்மீது யார் பொய் சொல்லுகின்றானோ அவன் ஒதுங்குமிடம் நரகம்தான் என நபி அவர்கள் சொல்ல நான் கேட்டதால் அவர்களைப் பற்றி ஹதீஸ்களை அறிவிக்க நான் அஞ்சுகிறேன்’ என்று சொன்னார்கள். நூல்: புகாரி
சைது பின் அர்க்கம்(ரழி) என்ற நபித்தோழரிடத்தில் எங்களுக்கு நபி அவர்கள் பற்றிய ஹதீஸ்களைச் சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டபோது ‘நாங்கள் முதியவர்களாகி விட்டோம், மறந்து விட்டோம், நபிஅவர்களைப் பற்றி ஹதீஸ்களை அறிவிப்பது சாதாரண விஷயமல்ல’ என்று சொன்னார்கள். நூல்: ஜாமிஉ இப்னு அப்துல்பர்
ஸாயின் இப்னு யஸீது(ரழி) அவர்கள் சொல்கிறார்கள் “நான் மதீனாவிலிருந்து மக்காவரை அபூசயீதில் குத்ரி(ரழி) என்ற நபித்தோழருடன் பிரயாணம் செய்தேன், நபி அவர்கள் பற்றி ஒரு ஹதீஸ்கூட எனக்கு அறிவிக்கவில்லை” நூல் ஜாமிஉ இப்னு அப்துல்பர்
அனஸ் பின் மாலிக்(ரழி) என்ற நபித்தோழர் நபி அவர்களைப் பற்றிய ஹதீஸ்களைக் கூறிவிட்டு, அல்லது நபி அவர்கள் சொன்னது போன்று என்ற வார்த்தையை சொல்லுவார்கள். நபி அவர்கள் மீது பொய்யாக ஏதாவது சொற்கள் தம் நாவிலிருந்து வந்துவிடுமோ என்ற அச்சத்தால்தான் அவ்வாறு சொல்வதாகச் சொன்னார்கள். நூல்: அஸ்ஸுன்னத்து வமகானத்துஹா
இந்த நபித்தோழர்களெல்லாம் நபி அவர்கள் பற்றி மிக அதிகமாக அறிந்திருந்தும் மிகக்குறைவாக அறிவித்திருப்பதின் காரணம், அவர்களை அறியாமலேயே நபி அவர்களைப் பற்றி பொய்யாக ஏதும் தம்மிலிருந்து வந்துவிடுமோ என்ற அச்சம்தான்.
நபிதோழர்களில் சிலர் நபி அவர்கள் பற்றிய ஹதீஸ்களை அறிவிப்பதில் பிரசித்து பெற்றுள்ளனர். அபூஹுரைரா(ரழி) அவர்கள் ஒரு ஹதீஸ் பேழையாகவே விளங்கினார்கள். அவர்கள் வாயிலாக முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏராளமான நபிமொழிகள் கிடைத்திருக்கின்றன. இவ்வாறே அப்துல்லாஹ்பின் அப்பாஸ்(ரழி) அதிகமான ஹதீஸ்களை மூத்த நபித்தோழர்களிடமிருந்து சேகரித்தார்கள். இந்தப் பாதையில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. “ஒரு நபித்தோழரிடம் ஒரு ஹதீஸ் இருக்கிறது என்ற செய்தி எனக்கு கிடைக்குமானால் அவரை என்னிடத்தில் வரவழைத்து அந்த ஹதீஸை நான் தெரிந்துள்ள முடியும் என்றாலும், நானே அந்த நபித்தோழரைத் தேடிச் சென்று அவருடைய வாசலில் காத்திருந்து அந்த ஹதீஸைக் கேட்டுத் தெரிந்ததின் பின்னரே திரும்பி விடுவேன்” என அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள். நூல்: ஜாமிஉ பயானில் இல்மி
இவ்வாறு நபிமொழிகளை தெரிந்து கொள்வதற்காக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் பல சிரமங்களை மேற்கொண்டு நபித்தோழர்களிடமிருந்து நபிமொழிகளை தெரிந்திருந்தார்கள். வேறு சில சஹாபாக்கள் தங்கள் பெயரால் நபிஅவர்களைப் பற்றிப் பொய்யான செய்திகள் பரவ ஆரம்பிப்பது தெரிய வந்ததும் அந்த ஸஹாபாக்களும், இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் ஹதீஸ்களை அறிவிப்பதைக் குறைத்துக் கொண்டார்கள் என அறிவிக்கப்படுகிறது. நூல்: ஜாமிஉ பயானில் இல்ம்

தொடரும்



©2012, copyright Dharulhuda

Wednesday, August 22, 2012

தொழுகையும், ஜக்காத்தும்

பெற்றோர்களே பிள்ளைகளை கண்காணிக்கிறீர்களா?

Sunday, August 5, 2012

பத்ருப் போர் பின்னணியும் படிப்பினையும்


பத்ருப் போர் பின்னணியும் படிப்பினையும்









கோவை எஸ். அய்யூப்

,
©2012, copyright Dharulhuda

பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்

பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்

Post image for பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி-முஸ்லீம்)
மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன்,ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.
மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் ? என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30
நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.
ஆதம்(அலை) அவர்களை அழைத்து வானவர்களின் முன்பாக நிருத்தி அவற்றின் பெயர்களை கேட்டான் வானவர்கள் கூற முடியாத பதிலை ஆதம் (அலை) அவர்கள் கூறினார்கள். திருக்குர்ஆன்.2:33
நீங்கள் அறியாதவற்றை நான் அறிந்தவன் என்று உங்களுக்குக் கூறவில்லையா? என்று வானவர்களிடம் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களுக்குப் பணியும் படிக்கூறினான். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வானவர்கள் அனைவரும் பணிந்தனர். இப்லீஸ் என்ற ஷைத்தான் மட்டும் பணிய மறுத்தான். திருக்குர்ஆன் 2:34
எனது கட்டளையை உனக்கு புறக்கணிக்கச் செய்தது எது ? என்று இப்லீஸை நோக்கி இறைவன் கேட்டதற்கு, நான் உயர்ந்தவனா? அவர் உயர்ந்தவாரா ? என்ற ஏற்றத் தாழ்வுகளை திமிர் தனமாக இறைவனுக்கே விளக்கி (?) விட்டு இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட மறுத்தான் இப்லீஸ் !
”எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை காண்டு விட்டாயா?அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?” என்று (இறைவன்) கேட்டான்.
”நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்” என்று அவன் கூறினான்.
”இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது எனது சாபம் உள்ளது” என்று (இறைவன்) கூறினான்.
38:75 லிருந்து 78 வரையிலான வசனங்கள்.
உயர்ந்தோன், தாழ்ந்தோன் என்ற ஏற்றத்தாழ்வுகளை இறைவனிடமே கற்பிக்க முனைந்த தலைக்கனம் பிடித்த ஷைத்தான் இறைவனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டான். அவ்வாறு வெளியேற்றப்பட்டவன் மனித குலத்தை அழிவில் ஆழ்த்தாமல் விடமாட்டேன் என்றுக் கூறி வெளியேறினான். இப்லீஸினால் ஆதம்(அலை) அவர்களுக்கு ஆபத்து (வழித் தவறுதல்) ஏற்படும் என்பதை முன்கூட்டியே அவர்களுக்குக் கூறி எச்சரிக்கை செய்து, இன்ன மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என்றும் தடை வித்தித்தான் இறைவன். திருக்குர்ஆன் 2:35
தடையை மீறினார் வழி தவறினார்.
எதன் பக்கம் நெருங்காதீர்கள் என்று இறைவன் தடை விதித்திருந்தானோ அதையே சிறந்தது என்றும் அதன் மூலமே நிரந்தர இன்பமும், நிலையான வாழ்வும், இருப்பதாகக் கூறி அவரை இலகுவாக வழி கெடுத்தான் இப்லீஸ்.
(20:120).அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப்பற்றியும்,அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)
(20:121).அவ்விருவரும் அதிரிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார். இன்று வரையிலும் அதே பாணியில் அதிகமான மக்களை வழிகெடுத்து வருகிறான் ஷைத்தான்
அன்று — அந்த மரத்தின் கனி,
இன்று — மது, மாது, சூது ( இறைவனால் தடுக்கப்பட்ட இன்னும் பல)
மது, மாது, போன்றவைகள் இறைவனால் தடைசெய்யப்பட்டவைகள், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவைகள், நரகில் தள்ளக் கூடியவைகள். என்பதை நன்றாக அறிந்திருந்தும் அவற்றில் தான் மன அமைதி கிடைக்கிறது, அழியக்கூடிய உடல் அழிவதற்கு முன் அனுபவித்துக் கொள் என்ற தீய சிந்தனையை விதைத்து இறைவன் தடைசெய்த தீமைகளை மன அமைதிக்கென்று பொய்யாக ஒரு சிலரை தொடங்கச் செய்து இன்று அதிகமான மக்களின் மன அமைதியையும், உடல் நலத்தையும் கெடுத்து உலகையே குழப்பத்தில் ஆழ்த்தி விட்டான் ஷைத்தான் என்ற இப்லீஸ்.
படிப்பினைகள்
ஆகு என்று சொன்னதும் ஆகிவிடக் கூடிய, அழிந்து விடு என்று சொன்னதும் அழிந்து விடக்கூடிய சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு ஆதம்(அலை) அவர்களின் செயல் கோபமூட்டக் கூடியதாகவே இருந்தாலும் கோபம் கொள்ளாமல் அவர் வருந்தித் திருந்தி தனது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வதற்காக இட மாற்றம் மட்டும் செய்து சந்தர்ப்பம் வழங்கினான் கருணையாளன் இறைவன்.
அறிவு கொடுக்கப்பட்ட ஆதம்(அலை) அவர்களும், அவரது மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் இறைவனின் தடையை பகிரங்கமாக மீறியக் குற்றத்திற்காக தங்களை மிகப்பெரிய பிடியாகப் பிடிக்காமல் இடமாற்றம் மட்டும் செய்து வாழ விட்ட தயாளனின் கருணையை நினைத்து தொடர்ந்து அழுது கண்ணீர் வடித்தனர்.
அவர்களது உள்ளம் வருந்தி கண்கள் கண்ணீரை வடிப்பதைத் தவிற வேறொன்றும் அறியாதவர்களாயிருந்ததை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு பாமன்னிப்புக்கோரும் வார்த்தைகளை அறிவித்தான்.
(2:37) (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(7:23)”எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்” என்று அவ்விருவரும் கூறினர்.
படிப்பினைகள்
உயர்ந்த படைப்பு நானா ? அவரா ? என்று ஷைத்தான் அல்லாஹ்விடம் வாக்குவாதம் செய்ததன் பின்னர் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது உயர்ந்தவர் யார் ? தாழ்ந்தவர் யார் ? என்பது தெளிவாகும்.
ஆதம், ஹவ்வா(அலை) அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி பாவமன்னிப்புக்கோரி இறைவனின் மகத்தான மன்னிப்பைப் பெற்று மீண்டும் இறையடியார்களாக நீடித்ததால் இவர்களே உயர்ந்தவர்கள்.
இப்லீஸ் என்ற ஷைத்தானோ தான் செய்த தவறுக்கு ஏற்கமுடியாத காரணத்தை கூறி அதிலேயே நீடித்து இறையருளுக்கு தூரமாகி இறைவனின் சாபத்திற்கும் உள்ளானதால் இவனே தாழ்நதவன்.
நமது அன்னை, தந்தையாகிய ஆதம், ஹவ்வா(அலை) அவர்களின் வழியைப் பின்பற்றி நாம் செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டு அதற்காக வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்ர்புக் தங்களை கோரி சீர்திருத்திக் கொண்டால் இறையருளுக்கு நெருக்கமாகிய ஆதம்(அலை) அவர்களின் வழித்தோன்றலாக இருப்போம்.
இறைவனின் கட்டளையைப புறக்கனித்த குற்றத்திற்கு வருந்தாமல் ஏற்க முடியாத காரணத்தைக் கூறி கொண்டிருந்தால் இறைவனின் சாபத்திற்கு உள்ளான ஷைத்தானின் வழியைப் பின் பற்றியவாராவோம்.
அல்லாஹ் அதிலிருந்தும் அனைத்து மக்களையும் காத்தருள்வானாக !
இறைவன் கோப குணம் கொண்டவனல்ல, கருணையாளன் என்பதற்கு ஆதம்(அலை) அவர்கள் செய்த இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றத்தை மன்னித்தது உலகம் முடியும் காலம் வரைத் தோன்றும் மனித குலத்திற்கு இறைவன் மன்னிப்பவன், கருணையாளன் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும்.
1 — உலகம் முடியும் காலம் வரை,
2 — மனிதனின் தொண்டைக் குழியை உயிர் வந்தடையும் வரை,
பாவமன்னிப்பின் வாசலைத் திறந்தே வைத்திருப்பதாக அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் கூறுகின்றக் காரணத்தினால்,பாவங்கள் அதிகம் மன்னிக்கப்படுவாக வாக்களிக்கப்பட்ட புனித ரமளான் மாதத்தில் கடந்த காலத்தில் செய்தப் பாவங்களைப் பட்டியலிட்டு இறவா! நீ எங்களை மன்னிக்க வில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளியாகி விடுவோம் என்று அழுதுக் கேளுங்கள்.
ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி-முஸ்லீம்)
3:104 நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்

ஒரே சமுதாயம்

Post image for ஒரே சமுதாயம்

ஒரே சமுதாயம்

காலங்கள் தோறும் ஒரே சமுதாயமயமாவதற்கான அனைத்துக் கருத்தியலையும் அல்லாஹ் அருளியிருக்க, ஒரே சமுதாய மயமாவதற்கான சூழல்களை அல்லாஹ் அமைத்துத் தந்திருக்க மக்களே! அதை ஏன் தகர்த்தெறிந்து வருகிறீர்கள்? ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா?
நிச்சயமாக உங்களின் இந்தச் சமுதாயம் (உம்ம(த்)து(க்)கும்) ஒரே ஒரு (ஒன்றுபட்ட) சமுதாயமே! (உம்மத்தவ் வாஹிதா)!
அல்குர்ஆன்: அல்அன்பியா:21:92, அல்முஃமினூன் 23:52
ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் ஆக வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை.
ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் எப்போது, எப்படிச் சாத்தியமாகும்? அதற்குரிய அல்லாஹ் வின் வழிக்காட்டல் ஏதும் உண்டா?
மேலும் நானே உங்கள் அதிபதி(அனரப்பு (க்)கும்). எனவே நீங்கள் எனக்கே அடிமையாகி விடுங்கள். (ஃபஃபுதூனீ) அல்குர்ஆன்:21:92
அல்லாஹ்வுக்கு அடிமையாகிவிடுதல்:
படைப்பினங்கள் முழுவாழ்விலும் அல்லாஹ்வுக்கு அடிமையாகிவிடுவதன் மூலம் அல்லாஹ்வை ஒருமைப்படுத்த வேண்டும். இதுதான் படைப்பின் இலட்சியமும் கூட, அல்லாஹ் ஆகிய- நான் ஜின், மனித இனங்களை எனக்கு முற்றிலும் அடிமையாகி விடவேண்டும். (இல்லாலியஃபுதூன்) என்பதற்காகவேயன்றி, வேறு எதற்காகவும் படைக்கவில்லை. (அல்குர்ஆன்: அஸ்ஸாரியாத்: 51:56)
நபி ஆதம்(அலை) முதல் நபி நூஹ்(அலை) அவர்கள் காலம் வரை அல்லது அதற்கு சற்று முன் வரை பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து வந்த அனைத்து மக்களின் ஒரே மார்க்கம் இஸ்லாம். அம்மக்கள் அனைவரும் முஸ்லிம்கள் (முஸ்லிமீன்) என்ற கூட்டமைப்பில் ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமாய்த் திகழ்ந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
(தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே கொள்கை வழி நடக்கும் சமுதாயத்தவராகவே (உம்மத்தவ் வாஹிதாவாக) இருந்தனர்.
(அல்குர்ஆன்: அப்பகறா: 2:213)
மேலும் (தொடக்கததில்) மக்கள் அனைவரும் ஒரே சமுதாயமாகவே (உம்மத்தவ் வாஹிதாவாக) இருந்தனர். அல்குர்ஆன்: யூனுஸ்: 10:19
துவக்கக்கால மானுட ஒருமைப்பாடு:
மனித சமுதாயம் தோன்றிய துவக்கக் காலம்! அதிலிருந்து சுமார் பல நூறு ஆண்டுகள்! அது வரை மக்கள் ஒரே கொள்கையேற்று ஒழுகினர். இஸ்லாத்தை வாழ்வில் பிரதிபலிக்கும் ஒன்று பட்ட முஸ்லிம் சமுதாயமாய் முஸ்லிம்கள் உயர்ந்தும் நிமிர்ந்தும் நின்றனர். துவக்கக் கால முஸ்லிம்கள் ஏற்றிருந்த ஒரே கொள்கை அல்லாஹ்வின் ஒருமை! அல்லாஹ்வுக்கு மட்டுமே முற்றிலும் அடிமை என்பதை முழு வாழ்விலும் பிரதிபலித்து அல்லாஹ்வை ஒருமைப்படுத்தியவர்கள்; அல்லாஹ்வின் ஒருமையை நிலைநிறுத்தியவர்கள். வாழ்வால் அல்லாஹ்வின் ஒருமைக்குச் சிறப்புச் சேர்த்தவர்கள். மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் ஒருமையை வாழ்வியலாக்கி ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்துக்கு உதாரண புருஷர்களானார்கள்.
இஸ்லாம் மனிதர்களைப் பிரிப்பதற்காக, மனிதர்களைப் பிளப்பதற்காக, மனிதர்களை பிரிவுக்குள் சிக்க வைப்பதற்காக, மனிதர்களை பிரிவுக்குள் தள்ளி விடுவதற்காக மானுடத்துக்கு அல்லாஹ்வால் அருளப்படவில்லை. அன்றி, மானுடத்தை ஒருங்கிணைப்பதற்காக, மானுடத்தை ஒருமைப்படுத்துவதற்காக அல்லாஹ் அருளிய வாழ்வியல் நெறிதான் இஸ்லாம்!
இறை வாழ்வியலால் எண்பித்துக் காட்டிய துவக்கக்கால ஒன்றுபட்ட சமுதாய முஸ்லிம்கள் மீது என்றென்றும் அல்லாஹ்வின் அருள் மழைப் பொழிந்து கொண்டேயிருக்கட்டும்; அல்லாஹ்வின் திருப்பொருத்தம் கிட்டிக் கொண்டேயிருக்கட்டும். மானுட ஒருமைப்பாடுப் பற்றிப் பேசும்போது சாடும் சாடுநர்கள், மானுட ஒருமைப்பாடு ஒருபக்கம் இருக்கட்டும்; முஸ்லிம்களை ஒன்று படுத்தவும் முடியாது. முஸ்லிம்கள் ஒன்றுபடவும் மாட்டார்கள்; என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் மார்க்க அறிஞர்கள், மார்க்க மேதைகள் இவர்களைக் கண்மூடித்தனமாய்ப் பின் தொடரும் கண்மூடிப் பக்தகோடிகள் கூர்ந்த மதிக்கும், ஆழ்ந்த சிந்தனைக்கும் உரித்தாக்குவது யாதெனில், துவக்க கால பல நூற்றாண்டு முஸ்லிம்கள் நிலைநிறுத்தியது ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே! துவக்கக் காலத்தில் ஒருமைப்பாடு கண்ட முஸ்லிம்கள் தான் ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தின் முன் உதாரணங்கள். மானுட ஒருமைப்பாட்டின் சின்னங்களும் துவக்கக்கால முஸ்லிம்கள்தான். மனிதர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பதால், முஸ்லிம்கள் என்ற நிலையில் மானுட ஒருமைப்பாட்டை இஸ்லாம் சாத்தியமாக்கிக் காட்டியது. இதுதான் அல்லாஹ் மானுடத்திற்கருளிய வாழ்வியல் நெறி இஸ்லாத்தின் தனித்துவம்! இஸ்லாத்தின் அதிசயக்கத்தக்க அரிய சாதனையும் கூட. இதை யாரும் எடுத்துக் காட்டாதது ஏன்?
மார்க்க இருட்டடிப்பு:
நடுநிலைக் கண்ணோட்டம், பரந்த மனப்பான்மை, தொலை நோக்குடன் இஸ்லாத்தை இஸ்லாமியக் கண்ணால் கூர்ந்து நோக்குவோர் மட்டுமே இப்பேருண்மையை உணர, உணர்த்த முடியும். பிரிவுக்குள் பிளவுக்குள் சிக்கிக் கொண்டு பிரிதல், பிரித்தல் கறுப்புக் கண்ணாடிக்குள் இஸ்லாம் காட்டும் ஒருமைப்பாடு இருட்டாக்கப்பட்டு விடுகிறது. அதற்குள் இஸ்லாமிய ஒருமைப்பாட்டு ஒளியைப் பாய்ச்சுவது கல்லில் நார் உரிப்பதைக் காட்டிலும் கடினமாகி விடுகிறது.
படைப்பின ஒருமைப்பாட்டில் கறுப்படித்தல் கொடுமை எனில், அதைக் காட்டிலும் கொடுமை மானுட ஒருமைப்பாட்டுக்குக் கறுப்படித்தல்! இவை எல்லாவற்றையும் விட கொடுமை, முஸ்லிம்கள் ஒருமைப்பாட்டுக்குக் கறுப்படித்தல்! எல்லாக் கொடுமையிலும் கடுங்கொடுமை முஸ்லிம்கள் ஒற்றுமைக்காக எடுக்கப்படும் அரிய முயற்சிகளையும் நொறுக்கி விடுதல்! இப்படி மார்க்கத்தை இருட்டடிப்புச் செய்தல், எத்துணைக் கடுங் கண்டனத்திற்குரியது என்றால்.
நாம் இறக்கி அருளிய தெளிவான அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் அவற்றை மக்கள் அனைவர்க்காகவும் நம் அறநூலில் எடுத்துரைத்த பின்னரும், எவர்கள் அவற்றை மறைக்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கிறான். மேலும் சபிப்போர் அனைவரும் சபிக்கிறார்கள். (அல்குர்ஆன்: அல்பகரா: 2:159)
பிரிவு, பிளவுகளின் உடும்புப் பிடியில் சிக்கியோருக்கு மேற்கண்ட அல்லாஹ்வின் கண்டனமும், எச்சரிக்கையும் செவிடன் காதில் ஊதிய சங்கே! அதனால்தான் இஸ்லாம் படைப்பின ஒருமைப் பாட்டோடு மானுட ஒருமைப்பாட்டையும் நடைமுறை சாத்தியமாக்கிக் காட்டிய வாழ்வியல் நெறி. என்று எடுத்துக் காட்டும்போது, முஸ்லிம் அறிவு ஜீவிகளாலும் இதை ஜீரணிக்க முடியவில்லை. பாவம், பாமர மக்கள்! என்ன செய்ய முடியும்?
அல்லாஹ்வின் பொருத்தம்:
காய்தல் உவத்தல் இன்றி அல்லாஹ்வின் பொருத்தம் ஒன்றையே குறிக்கோளாக்கி, அல்லாஹ்விற்கு முற்றிலும் சரணடைந்து, அல்லாஹ்விற்கஞ்சி நடுநிலைக் கண்ணோட்டத்தோடு சிந்திக்கும் சாதாரண சாமான்யர், இஸ்லாம் படைப்பின ஒருமைப்பாட்டுடன் மானுட ஒருமைப்பாடு கண்ட மார்க்கம் எனத் தெளிவாக உணரும்போது, அப்படி உணர்ந்ததை அல்லாஹ்வின் நல்லருளால் இயன்றவரை மற்றவர்க்கு உணர்த்திக் கொண்டிருக்கும் போது, மார்க்க அறிஞர்களுக்கும், மேதைகளுக்கும் இது புரியாத புதிரா? நிச்சயம் இல்லை. அவர்களில் ஒருசிலர் நீங்களாய் இப்பேருண்மை எல்லோர்க்கும் புலனாகி இருக்கும். எனினும், அதை அவர்கள் வெளிப்படுத்த முன்வரவில்லை.
அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ அல்லது நிர்பந்தத்தால் நிர்பந்திக்கப்பட்டு பிரிவு பாதாளத்தில் தள்ளப்பட்டு விட்டதால் அல்லது விழுந்து விட்டதால் உணர்ந்த உண்மையை வெளிப்படுத்தவும் முடியவில்லை; வெளிப்படுத்த முன்வரவும் இல்லை; தடுமாறுகிறார்கள்; தத்தளிக்கிறர்கள்; செய்வதறியாது திகைக்கிறார்கள். குறிப்பாய் அத்தகையவர்களுக்கும் பொதுவாய் அனைவரின் சிந்தனைக்கும் ஈண்டு நபி(ஸல்) அவர்களின் வழிக்காட்டுதல் ஒன்றை நினைவூட்டுதல் பொதுப் பாடமும், படிப்பினையாகவும் இருக்கும். நோக்கம் தவறிய நல்லறங்களால் விளையும் பாதகம்: நல்லறங்களாய் இஸ்லாம் காட்டித் தந்தவை; நோக்கம் தவறாகி விட்டது. அல்லாஹ்விற்காக, அல்லாஹ்வின் பொருத்தம் நாடி, அல்லாஹ்வின் பெயரால் செய்திருக்க வேண்டிய நல்லறங்களை, உலகியல்க் குறியாக்கிச் செய்ததால் நரகிற்குச் செல்லும் இழிநிலை.
கல்லாதவர்க்குக் கல்விக் கொடுத்த கல்வியாளர், இல்லாதோர்க்கு பொருள் ஈந்த ஈகையாளர்/கொடையாளர், மார்க்கத்துக்காக இன்னுயிர் நீத்த வீரத்தியாகி இம்மூன்று சாராரும் அவர், அவர்க்கு உரிய நல்லறங்களைச் செய்து இம்மையில் மக்கள் புகழை வாரிக் கொண்டனர். விளைவு, மறுமையில் இழப்பிற்குள்ளாகி, முகம் குப்புற, தலைகீழாக நரகில் தள்ளப்படுகிறார்கள். நபி(ஸல்) அவர்களின் வாழ்வியல் வழிகாட்டுதல் கருத்துச் சுருக்கம், தகவலாளர்: ஆபூஹுரைரா(ரழி), பதிவாளர்கள்: முஸ்லிம், திர்மிதி.
மார்க்கம் அனுமதித்த மக்களுக்குப் பலன் அளிக்கும் நல்லறங்கள் செய்தோர்க்கு மறுமையில் நரகம். காரணம் திசை தவறிய நோக்கம்; அனைவரும் அறிந்ததே! இதைப் பிரத்யேகமாய்க் காட்ட வேண்டியதில்லை. ஆனால் இது அலட்சியப்படுத்தப்பட்டு விட்டது. இது எல்லோர் நினைவை விட்டும் எப்போதும் அகலாதிருக்க வேண்டும். (செயல்கள் பிரம்மாண்டமானதா? அற்பமானதா? என்பது பொருட்டன்று) அப்போதுதான் செயல்களின் நோக்கத்தைத் தூயதாக்கி அல்லாஹ்வுக்காகச் செய்ய முடியும்.
உள்ளத்துக்குள் அல்லாஹ்வை அஞ்சி அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹ்வுக்காக, அல்லாஹ்வின் பொருத்தம் நாடி காரியங்கள் ஆற்ற முடியும். அந்தச் செயல்கள் அல்லாஹ் அருளியதா? நபி(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான வாழ்வியல் வழிக்காட்டலுக்கு உட்பட்டதா? என்று ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட முடியும். சாதாரண செயல்களையும் கூர்ந்தமதியுடன், கூடுதல் கவனத்துடன் சிரத்தை எடுத்துச் செய்ய வேண்டும் என்று மார்க்கம் பணித்துள்ளது. அப்போதுதான் செய்யும் நல்லறங்கள் அல்லாஹ்வின் அங்கீகாரத்தையும், அல்லாஹ்விடம் நற்பலனையும் பெற்றுத் தரும்.
உள்ளம் நடுநடுங்கி இருக்குமா?
நோக்கம் தவறிய நல்லறங்கள் செய்தோர் நரகில் தள்ளப்படுவதை உணரும்போது, அல்லாஹ்வின் அச்சம் உள்ளோர், உள்ளம் நடு நடுங்கி விடும். ஒரு சிலர் உள்ளங்களாவது நடு நடுங்கி இருக்குமா? அல்லாஹ்வின் அச்சத்தால் …? ஐயம் தான். மேற்காட்டிய நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதலில் இருந்து மிகப் பெரும்பான்மையோர், குறிப்பாய் மார்க்க அறிஞர்கள் பாடமும், படிப்பினையும் பெறத் தவறியது ஏன்?
இதற்கே இப்படி எனில், அல்லாஹ் கடுமையாகத் தடுத்திருந்தும், இம்மையின் இலாபம் கருதி பணம், பட்டம், பதவி, பகட்டு, ரசிகர்கள், சிஷ்யர்களுக்குத் தினம் சின்னத்திரை தரிசனம், கண்மூடிப் பக்த கோடிகளின் கூழைக் கும்பிடுகள், உள்ளம் குளிர வைக்கும் பாராட்டுக்கள்; பதிலுக்குப் பீடத்தின் பக்த கோடிகளை விஞ்சும் கண்மூடிப  பக்தகோடிகளின் மெய்சிலிர்க்க, மெய் மறக்கவைக்கும், ஆசீர்வாதங்கள்.
பீடத்தின் உரை ஓர் அரங்க நாடகம்:
மேடை “மைக்’ கூட உரைக் கேட்டு உருகி விடும். சொக்கி விடும்… கேட்க வேண்டுமா? கண்மூடி பக்தகோடிகள் மது குடித்துப் போதையில் தள்ளாடுகிறவர்களைத் தோற்கடித்து விடுவார்கள். போதையூட்டப்பட்ட உரையில் கண்மூடிப்பக்தக் கோடிகள் தங்களை முழுமையாக இழந்து விடும்போது, பீடம் காத்திருந்த நேரம் வந்துவிட. நேர்வழி, வழிகேடாகவும், வழிகேடு நேர்வழியாகவும் பிரிவு சார்ந்த மார்க்க முரண்கள் மார்க்கமாய், உண்மை மார்க்கம் பிரிவுகளின் கூடாரங்களாய்ச் சித்தரிக்கப்படும்… பிரிவுக் கூடாரங்கள் மேல் போர்த்தப்படும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பிரிவுகள், பிளவுகள் மறைக்கப்படும் ரஸவாத உரை அரங்கேற்றப்படும். கேட்கும் கண்மூடிப் பக்தகோடிகள், அவர்களுக்கு நேரிடையாக வஹி வந்துவிட்டது போன்ற பிரம்மையில் துள்ளிக் குதிப்பார்கள்.
அஸ்தஃபிருல்லாஹ்.
கேட்கும் கண்மூடிப் பக்தகோடிகளுக்கு உரையாளர் சொல்வதெல்லாம் வேதவாக்கு; அவரின் அண்ட, ஆகாசப் புளுகுகள் எல்லாம் அறிவுரை; இதுபோன்ற உரையாளர்கள் முன் கோயபல்ஸ் மண் கவ்வுவது சர்வ நிச்சயம். அங்கு சினிமாவும், சின்னத்திரை நாடகங்களும் வெட்கித் தலைக் குனிந்து விடும். அரசியல்வாதிகளும் அதிர்ச்சிக்குள்ளாகி விடுவார்கள். பீடத்தின் நடிப்பும் கண்மூடிப் பக்தகோடிகளின் உணர்ச்சிப் பெருக்கும் சின்னத் திரையின் கண் கொள்ளாக் காட்சி. எல்லாம் எதற்காக?
பிரிக்கக் கூடாததைப் பிளத்தல்:
*பிரிதல், பிரித்தல்
* பிளவுபடல், பிளவுப்படுத்துதல்
* தேவைக்கேற்பப் புதுப்புது பிரிவுகளையும், அமைப்புகளையும், ஜமாஅத்களையும் தோற்றுவித்தல்.
* விரும்பும்போது விரும்புவோருடன் அவைகளில் அங்கம் வகிப்பது, வெறுக்கும்போது வெறுப்போர் விடுத்து விரும்பியோருடன் வெளியேறுவது. இது பிரிவுகள் சார்ந்த போதனைகள்; ஒரு போதும் உண்மை மார்க்கத்தை உணர்த்தாது என்பதற்கோர் எடுத்துக்காட்டு.
ஓ! இப்போதுதான் ஓர் உண்மை வெளிச்சம் பெறுகிறது. அல்லாஹ்வும், நபி(ஸல்) அவர்களும் கடுங்கண்டனத்தோடு மிகக் கடுமையாகத் தடுத்திருந்தும் புதுப்புதுப் பிரிவுகள், புதுப்புது இயக்கங்கள், புதுப்புது அமைப்புகள், புதுப்புது ஜமாஅத்கள், பிரிவுசார் மவ்லவிகள் அங்கீகாரத்தில் புற்றீசல்களாய்ப் புறப்பட்டு வந்து கொண்டே இருப்பது ஏன் என்று?
வெளிரங்கத்தில் மார்க்கம் காரணமாக்கப்பட்டு பிரிவதும், அதற்காக அப்பாவி முஸ்லிம்களைப் பிளந்தெடுப்பதும் மெகாமாபதகம் தான். உள்ரங்கத்தில் தனி நபர்கள் மீது கொள்ளும் சுய விருப்பு வெறுப்பு, சுயச்சார்பு சுயப்பகை, கசப்பு, காழ்ப்பு கொஞ்சம் கொஞ்சமாய் உச்ச வெறியாக மாறும்போது, அரும் பாடுபட்டு உருவாக்கி, உரமிட்டு வளர்த்த பிரிவு இயக்கம், அமைப்பு, ஜமாஅத், துச்சமாய்த் தூக்கி எறியப்படுகிறது. கண்மூடிப் பக்தர்களுடன் அவைகளை விட்டு சீற்றத்துடன் சட்டென்று வெறியுடன் வெளியேறுவது முற்றுப்பெறாத தொடர் கதையாகிக் கொண்டிருப்பது ஏன்?
தாராளமயமாக்கப்பட்ட இயக்க, அமைப்புத் தாவல்:
பீடத்துக்கு வேண்டாதவைகள், வேண்டாதோரைத் தூற்றென்று தூற்றித் தீர்த்தல்! அவசியப்படின் நேரிடையாக/மறைமுகமாக வேண்டாதோர் பழித்தீர்க்கப்படல்! ஒதுக்கப்பட்ட கண்மூடிப் பக்தகோடிகள் பலர், பீடம் உருவாக்கிய முன்னாள் பிரிவுகள், இயக்கங்கள், அமைப்புக்கள், ஜமாஅத்களில் உடன் தஞ்சமைடந்து விடுவர். அவைகள் பிடிக்காதோர், புதுப்புது இயக்கங்கள், அமைப்புக்கள், ஜமாஅத்கள் காண்பதும் அன்றாட வழக்கமாகி விட்டது. இம்மை நலனுக்காக,
* பிரிவுகளுக்குள் தஞ்சமடைதல்
* சார்ந்துள்ள பிரிவுகளுக்காக வக்காலத்து வாங்குதல்,
* சார்ந்துள்ள பிரிவுகளுக்கு ஆதரவாகவும், மற்ற பிரிவுகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தல்,
* சார்ந்துள்ள பிரிவு கொழுக்க நிதி திரட்டுதல், நிதி கொடுத்தல்,
* பிரிவுகளை நிலைநாட்ட அயராது பாடுபடுதல் இத்யாதி… இத்யாதி….
இன்னும் பிரிவுகள் கொழுப்பதற்காக செய்வது எதுவாயிருப்பினும்… அனைத்தும் மெகாபாதகமே! இதை மற்றவர்களுக்கு உணர்த்துதல் அவசியம். உணர்த்துனர்கள் யார்? மார்க்கம் கற்றோர்….
உணர்த்தினால்தான் மார்க்கம் கற்றோரும் உணர முடியுமா? அவசியமில்லையே! மார்க்கம் கற்றோரில் மிகப் பெரும்பான்மை ஏதோ ஓர் பிரிவுக்குள் மாட்டிக் கொண்டிருப்பது சிக்கிக் கொண்டிருப்பது ஏன்? நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் பிரிவுகள் கொழுத்துக் கொண்டிருப்பதால் அல்லாஹ் இதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டான் என்று அவர்கள் மனப்பாலா குடிக்கிறார்கள்?
மறுமையில் தானே அப்போது பார்த்துக் கொள்ளலாம்… அசட்டுத் துணிச்சலா? எந்த புகலும் கூறித் தப்பிக்க முடியாதே! மறந்து விட்டீர்களா? அல்லாஹ்வின் நினைவூட்டும் எச்சரிக்கை!
காண்க : அல்குர்ஆன் : யூனூஸ்: 10:19
முஹிப்புல் இஸ்லாம்

2011 Baithul Zakath

Baithul Zakath

2011 Baithul Zakaath

."The likeness of those who spend their wealth in Allah's way is as the likeness of a grain which grows seven ears, in every ear a hundred grains. Allah gives increase manifold to whom He will. And Allah is All-Sufficient for His creatures' needs, All-Knower." [Soorah al-Baqarah, 261] 




Purify your wealth
Send your Zakath in favor of
    Dharul huda Trust
      A/c # 1090 1000 4126
Hatton National Bank- Aluthgama
Zakaath Committee 
  •   
  •  
  •  
  •  
  •  
Tel: 0094345686001
 


©2012, copyright Dharulhuda

Sunday, July 29, 2012

மியான்மர் முஸ்லிம்களுக்கான உதவிகளை தடுக்கும் புத்த சாமியார்கள்!


லண்டன்:பர்மாவில் புத்த சாமியார்கள் கூட்டுக் கொலைச் செய்யப்படும் முஸ்லிம்களுக்கு வரும் உதவிகளை தடுப்பதாக பிரிட்டிஷ் பத்திரிகையான இண்டிபெண்டண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. புத்த சாமியார்கள் நேரடியாகவே முஸ்லிம் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.

மனிதநேயமான எவ்வித முன்னுரிமையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்காமல் அவர்களுக்கு வரும் அனைத்து உதவிகளையும் தடுத்து நிறுத்துகின்றனர். மியான்மரில் சிறுபான்மையினரை வேண்டுமென்றே துடைத்தெறிய புத்த சன்னியாசிகள் திட்டம் தீட்டுகிறார்கள். தற்பொழுது மியான்மரில் நடந்து வரும் அனைத்து கூட்டுப் படுகொலைகள் மற்றும் இன அழித்தொழிப்புகளுக்கும் தலைமை தாங்கி ஊக்கப்படுத்துபவர்கள் புத்த சன்னியாசிகள் தாம் என இண்டிபெண்டண்ட் பத்திரிகை குற்றம் சாட்டுகிறது.

கடந்த தினங்களில் புத்த சாமியார்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனைத்து வித மனிதநேய உதவிகளையும் தடுத்துள்ளனர். இதனை அவர்கள் அரசின் ஆதரவுடன் நடத்தி வருகின்றனர் என்று அப்பகுதியில் இயங்கும் அர்கான் என்ற மனித உரிமை அமைப்பின் இயக்குநர் கிறிஸ் லியோ கூறுகிறார்.

முஸ்லிம்கள் அபயம் தேடியிருக்கும் முகாம்களை புத்த சாமியார்கள் சுற்றி வளைத்துள்ளனர். அவர்கள் முஸ்லிம்களுக்கு எந்த உதவிகளும் செல்லாமல் தடுத்து வருகின்றனர் என்று கிறிஸ் லியோ கூறுகிறார்.

மியான்மரில் நடந்து வரும் முஸ்லிம் இனப் படுகொலைகள் குறித்து ஜனநாயகத்தின் பாதுகாவலராக இரட்டை வேடம் போடும் ஆங் சான் சூகி மெளனம் சாதித்து வருகிறார். சமாதானத்தின் தூதர்களாக உலகை வலம் வரும் ஆங் சான் சூகியும், தலாய் லாமாவும் இவ்விவகாரத்தில் வேண்டுமென்றே மெளனம் சாதிக்கின்றனர்.

மேற்கு கரையில் இஸ்ரேல் குடியிருப்புகள் அதிகரிப்பு!

மேற்கு கரையில் இஸ்ரேல் குடியிருப்புகள் அதிகரிப்பு!



ஜெருசலம்:ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் கடந்த ஆண்டு மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். இஸ்ரேலின் மக்கள் தொகையை மேற்கோள்காட்டி பிரிட்டனில் கார்டியன் பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

புதிய புள்ளிவிபரப்படி மேற்கு கரையில் கடந்த ஓரு ஆண்டில் 4.5 சதவீதம் சட்டவிரோத குடியேற்றம் நடந்துள்ளது. மேற்கு கரையில் ஃபலஸ்தீன் வீடுகளுகள், மஸ்ஜிதுகள் மீது சட்டவிரோத யூத குடியிருப்பு வாசிகள் நடத்தும் தாக்குதல் கடந்த ஒரு ஆண்டில் 150 சதவீதம் அதிகரித்துள்ளது என ஃபலஸ்தீன்(மேற்குகரை) பிரதமர் ஸலாம் ஃபயாதை மேற்கோள்காட்டி கார்டியன் கூறுகிறது.

மொத்த யூத குடியிருப்பு வாசிகளின் எண்ணிக்கை 3.5 லட்சமாக உள்ளது. இவ்வெண்ணிக்கை இனி வரும் 12 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என கார்டியன் அறிக்கை கூறுகிறது.

இரு நாடுகள் தீர்வை சாத்தியமற்றதாக்குவதற்கான நடவடிக்கைதான் ஃபலஸ்தீன் பகுதிகளில் இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்பு என கார்டியன் குறிப்பிடுகிறது. மேற்கு கரை, கிழக்கு ஜெருசலம், காஸ்ஸா ஆகியன அடங்கிய நாட்டை நிறுவ ஃபலஸ்தீன் மக்கள் கடுமையாக போராடி வரும் வேளையில் அதனை தடுப்பதற்கு இஸ்ரேல் அரசின் திட்டமிட்ட முயற்சியே மேற்கு கரையிலும், கிழக்கு ஜெருசலத்திலும் சட்டவிரோத குடியேற்றம் ஆகும்.

சர்வதேச சட்டங்களுக்கு எதிராக ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் இஸ்ரேல் குடியிருப்புகளை கட்டி வருகிறது.

Sunday, July 22, 2012

ரமழான் மாத லுஹர் பயான் தொடர் நிகழ்ச்சி Day 2




தாருல்ஹுதாவின் ரமழான் மாத லுஹர் பயான் தொடர் நிகழ்ச்சி
உரையாற்றுபவர்: அஷ் ஷேய்க் மஸீர் அல் அப்பாஸி
தொடர் உரை : வுழுவின் சட்டங்கள் Part 1( பிஃஹ் சட்டங்கள் )
22/07/2012


©2012, copyright Dharulhuda