மேற்கு கரையில் இஸ்ரேல் குடியிருப்புகள் அதிகரிப்பு!
ஜெருசலம்:ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் கடந்த ஆண்டு மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். இஸ்ரேலின் மக்கள் தொகையை மேற்கோள்காட்டி பிரிட்டனில் கார்டியன் பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
புதிய புள்ளிவிபரப்படி மேற்கு கரையில் கடந்த ஓரு ஆண்டில் 4.5 சதவீதம் சட்டவிரோத குடியேற்றம் நடந்துள்ளது. மேற்கு கரையில் ஃபலஸ்தீன் வீடுகளுகள், மஸ்ஜிதுகள் மீது சட்டவிரோத யூத குடியிருப்பு வாசிகள் நடத்தும் தாக்குதல் கடந்த ஒரு ஆண்டில் 150 சதவீதம் அதிகரித்துள்ளது என ஃபலஸ்தீன்(மேற்குகரை) பிரதமர் ஸலாம் ஃபயாதை மேற்கோள்காட்டி கார்டியன் கூறுகிறது.
மொத்த யூத குடியிருப்பு வாசிகளின் எண்ணிக்கை 3.5 லட்சமாக உள்ளது. இவ்வெண்ணிக்கை இனி வரும் 12 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என கார்டியன் அறிக்கை கூறுகிறது.
இரு நாடுகள் தீர்வை சாத்தியமற்றதாக்குவதற்கான நடவடிக்கைதான் ஃபலஸ்தீன் பகுதிகளில் இஸ்ரேலின் சட்டவிரோத குடியிருப்பு என கார்டியன் குறிப்பிடுகிறது. மேற்கு கரை, கிழக்கு ஜெருசலம், காஸ்ஸா ஆகியன அடங்கிய நாட்டை நிறுவ ஃபலஸ்தீன் மக்கள் கடுமையாக போராடி வரும் வேளையில் அதனை தடுப்பதற்கு இஸ்ரேல் அரசின் திட்டமிட்ட முயற்சியே மேற்கு கரையிலும், கிழக்கு ஜெருசலத்திலும் சட்டவிரோத குடியேற்றம் ஆகும்.
சர்வதேச சட்டங்களுக்கு எதிராக ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் இஸ்ரேல் குடியிருப்புகளை கட்டி வருகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment