Showing posts with label Al Muslimah. Show all posts
Showing posts with label Al Muslimah. Show all posts

Saturday, May 5, 2012

பெண்ணுரிமை

பெண்ணுரிமை

முழங்கியது போதும் வழங்குகள் உரிமைமையை!

Post image for பெண்ணுரிமைநாம் மேடையில் நின்று கொண்டு, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தில் பெண்களுக்கு இன்னின்ன உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன என்று முழங்கினால் மட்டும் போதாது. மாறாக, இஸ்லாம் அளித்துள்ள பெண்ணுரிமைகளை நடைமுறையில் செயல்படுத்திக் காட்டவேண்டும்.
பெண்களின் பிரச்னைகளும் அவற்றின் தீர்வுகளும் என்று பேசுவதற்கு முன்பு முதலில் பெண்களின் இருப்பு பற்றி புரிந்து கொள்ளவேண்டும். பெண்ணுரிமை என்ற பெயரில் எவ்வளவோ போராட்டங்கள் நடைபெற்றன. கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப்பட்டன. ஏராளமான முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. அப்படியெல்லாம் இருந்தும் கூட பெண்களின் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நீதி எனும் பெயரில் அநீதிகள்தான் அரங்கேறின. இன்றுவரை அந்த இழு பறியும் போராட்டமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
எல்லாரும் அறிந்த உண்மை என்னவென்றால், இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள உரிமைகள் போன்ற இன்றைய நவீன உலகம் கூட அளிக்கவில்லை. இஸ்லாத்தில் பெண்களுக்கு எல்லாமே உண்டு. உரிமைகள் உண்டு. கண்ணியம் உண்டு. மரியாதை உண்டு. பாதுகாப்பு உண்டு. முஸ்லிம் பெண்களின் இந்த உரிமைகள் குறித்து இன்று அதிகம் பேசப்படுகின்றது. ஆனால் நடைமுறையில் அவை பேணப்படுவதில்லை.
தொடக்கத்திலிருந்தே மேற்கத்தியர்கள் முஸ்லிம் சமுதாயம் பற்றி தவறான கருத்துகளையே கொண்டிருந்தனர்.ஆனால் நாம் கொள்கையை மட்டுமே சமர்ப்பிக்கிறோம். நடைமுறை உதாரணங்கள் தருவதில்லை. பெண்களை மேற்கத்தியப் பிடியிலிருந்து காப்பாற்ற என்ன செய்வது? நாம் மேடையில் நின்று கொண்டு, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தில் பெண்களுக்கு இன்னின்ன உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன என்று முழங்கினால் மட்டும் போதாது. மாறாக, இஸ்லாம் அளித்துள்ள பெண்ணுரிமைகளை நடை முறையில் செயல்படுத்திக் காட்டவேண்டும். அந்த உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக உள்ளவற்றை எல்லாம் தகர்த்தெறியப் போராட வேண்டும்.
பெண்களின் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு இஸ்லாத்தில் இருக்கிறது எனத் தெளிவாகக் குறிப்பிடலாம். இஸ்லாத்தில் பெண்களுக்கு எந்த அளவுக்கு உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன எனில் ஆண்களுக்கும் கூட அந்த அளவுக்கு உரிமைகளை அளிப்பதில்லை. ஆனால் நடைமுறையில் இந்த உரிமை பெண்களுக்குக் கிடைக்கிறதா எனும் கேள்வி எழுகிறது. சாதாரண முஸ்லிம்களை விடுங்கள். நல்ல மார்க்கப்பற்றுள்ள குடும்பங்களில் கூட பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்படுகிறது.
அன்னை கதீஜா (ரலி) அவர்கள் செய்தது போல் சுதந்திரமாக வணிகம் செய்ய அனுமதி தரப்படுவதில்லை. தங்களின் முழுமையான திறமையையும் ஆற்றலையும் பயன்படுத்தி பெண்கள் சமுதாயப் பணி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இஸ்லாத்தில் மட்டுமே பெண்களுக்கான ஈடேற்றமும் அமைதியும் உள்ளன என முஸ்லிம் பெண்கள் இதர பெண்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அநீதிக்கும் கொடுமைக்கும் எதிராகக் குரல் எழுப்புவது ஈமானின் இறைநம்பிக்கையின் தேட்டமாகும். மனிதர்களாய்ப் பிறந்த நாம் சமுதாயத்தில் நடைபிணமாக இருக்கக் கூடாது. உயிர்த்துடிப்புடன் செயலாற்ற வேண்டும். அன்னை ஆயிஷா, அஸ்மா ஆகியோரின் சமூகக் களப்பணிகள் நமக்கு முன்மாதிரிகளாக விளங்க வேண்டும்.
 பெண்கள் தங்களின் வீட்டைப் பராமரித்து நிர்வகிப்பதிலும் திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். அதே சமயம் சமுதாயப் பணிகளிலும் தங்களின் முத்திரையைப் பதிக்க வேண்டும். சமூக சேவையில், சமுதாயப் பணிகளில் இன்று முஸ்லிம் பெண்கள் யாரேனும் சாதனை படைத்திருக்கிறார்கள் எனில், அவர்கள் இஸ்லாத்தைப் புறக்கணித்து விட்டு, அல்லது இஸ்லாத்தைக் குறை சொல்லிக் கொண்டுதான் அந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறார்கள். இஸ்லாமிய வரம்புக்குள் இருந்து கொண்டே, இஸ்லாம் தரும் உந்துசக்தியைக் கொண்டே நாம் சாதனைகள் படைத்துக் காட்டவேண்டும். இந்தியாவில் ஏழுகோடி முஸ்லிம் பெண்கள் இருக்கிறார்கள். இவர்களை வாய்மூடி மௌனிகளாக இருக்கச் செய்துவிட்டு இங்கே எந்தப் புரட்சியையும் நாம் கொண்டுவர முடியாது.
இந்தியப் பெண்கள் மீது இரண்டு விதமான கொடுமைகள் நடைபெறுகின்றன. ஒன்று பாரம்பர்யமாக நடைபெற்றுவரும் கொடுமைகள். குடும்ப வன்முறை, சமத்துவமின்மை, வரதட்சணை போன்றவை பாரம்பர்யக் கொடுமைகளாகும். மற்றொன்று நவீனத்தின் பெயரால் நடைபெறும் கொடுமைகள். பெண் விடுதலை, பெண்ணியம், பாலியல் சுரண்டல் போன்றவை. இந்த இரண்டு வகைக் கொடுமைகளுக்கும் பலியாவது பெண்கள்தாம். இந்தப் பாரம்பரியக் கொடுமைகளையும் நவீனக் கொடுமைகளையும் “கொடுமை’ என்று ஏற்றுக் கொள்ளவே பலர் தயாராக இல்லை.
 முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், நுகர்வியம் போன்றவை தங்களின் சுயலாபத்துக்காகப் பெண்களைச் சுரண்டுகின்றன. இத்தகைய எல்லாவிதமான தீமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் ஒரே தீர்வு இஸ்லாம்தான். ஆனால் நாம் பேசிக்கொண்டே இருக்காமல் களத்தில் இறங்க வேண்டும். ஆந்திராவில் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு பெண், மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கினாள். அவளுடைய இடைவிடாத முயற்சியின் காரணமாக இன்று ஆந்திராவில் 800  மதுக்கடைகள் மூடப்பட்டுவிட்டன. இந்தச் சாதனை புரிய அவள் மாநாடு நடத்தவில்லை. சுவரொட்டிகள் ஒட்டவில்லை. பெரிய பெரிய “பயான்கள்’ எதுவும் செய்யவில்லை. ஆகவே நாமும் அதுபோல் களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும்.
ஃபாகிரா
சமரசம்

©2012, copyright Dharulhuda

Tuesday, April 24, 2012

பெற்றோர்களே எச்சரிக்கை! வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்று சிந்தனை செய்து பாருங்கள் !!!!!!


பெற்றோர்களே எச்சரிக்கை! வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்று சிந்தனை செய்து பாருங்கள் !!!!!!


அதை விட்டு விட்டு தொலைகாட்சி தொடர்களில் பொழுதை கழிப்பது இப்போது தொலை கட்சி தொடர்களிலும் ஆபாசம் கலந்து விட்டது உங்களுடைய குழந்தைகளை தனியாக உங்கள் வீட்டில் வைத்து விட்டு அடுத்த வீட்டுக்கு போய் கதையடித்து கொண்டு இருக்காதீர்கள் அதிகமாக போன் பேசுவதை கண்டியுங்கள் .முடிந்தால் செல் போனை கொடுப்பதை தவிருங்கள் .அதிகமா பெண் சகோதிரிகளிடமும் போனில் பேச்சை குறைக்க சொல்லுங்கள் .வயதிற்கு வந்த பிறகு தான் அவர்களை நீங்கள் கண்ணும் கருத்துமாய் பார்த்து கொள்ளவேண்டும் . உங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் உங்கள் பிள்ளைகள் பக்கத்தில் வைத்து கொண்டு உங்களுடைய கணவருடன் நெருக்கமாக இருப்பதை கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள்
மறுபடி வயதுக்கு வந்த பெண்ணை வீட்டில் வைத்து கொண்டு நீங்கள் அலங்காரம் பண்ணுவதை தவிர்த்து விடுங்கள் . அவர்களுக்கு நல்ல மார்க்க கல்வியே சொல்லி கொடுங்கள் .இஸ்லாம் என்றால் என்ன என்பதை புரியவயுங்கள் நீங்களும் அவர்களுக்கு முன்மாதிரியாக இருங்கள் இன்ஷா அல்லாஹு

இதை ஏற்க மறுத்தால் விளைவு கீழ உள்ள பாடத்தை பார்க்கவும்.உங்கள் பெண்ணுக்கும் இதே நிலை வர வேண்டுமா ?

16 வயது… பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பார்கள்.. வெழுத்ததெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து
விடுகிறார்கள்.

இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். ஓரக்கண்ணால் பார்த்து… தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து… காதல் வளர்த்த காலம் போயே போச்சு.அதுவெல்லாம் அந்த காலம் !

நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை.. உங்க செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான் மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு… 3 மாதம் கழித்து அந்த பையனுடன் ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட நிலை. இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத கொடுமை.

செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்கு 1 ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர். நேற்று இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்து மூச்சை சூடாக்குகிறது.

காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ரன்…

வாரத்திற்கு குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவாகிறது. காணாமல் போன மாணவிகளை தேடி பார்த்தால் ஏதாவது ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் “காதல்”
பட காட்சிதான்.

அவர்களை அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்தமாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை ரணமாக்குகிறது.. வாழ்ந்தால் அவரோடு, இல்லையேல் மண்ணோடு… என்ற சொல்லும் அந்த மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்து
வளர்த்து… வெயில்படாமல், மழைபடாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சு மனது கனப்பதை காணமுடிகிறது. புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை எடுத்து கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போனும்,
டி.வி.யில் காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி அவளது காதலனாகிறான். 14 முதல் 16 வயதில் காதலனுடன்
சுற்றும் நிலை ஏற்படுகிறது.

டி..வி.யில் வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள் இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும் உரையாடி, சிசுகளின் மனதில் நஞ்சை ஏற்றுகின்றனர். எம்.பி.பொண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்வது. போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் அலைபாய ஆரம்பிக்கிறது…

பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை பேசியிலும் மணிக்கணக்கில் காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை அடிப்பது ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது இதுதான் தற்போது அதிகம் நடக்கிறது. இதில் நல்ல குடும்பத்து பெண்கள் விதிவிலக்கு! போலீஸ் நிலையத்திற்கு வாரம் 15 புகார்களும், குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவு செய்யப்படுகிறது.

இதை தடுக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ, தோழிகளுடனோ அதிகமாக வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது. திடீரென புது புது ஆடைகளை அணிவதையும் முகத்தை பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும் செய்யும் பெண்கள் நிச்சயம் காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்.

வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க
அனுமதிக்காதீர்கள். டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும். தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவடிக்கையை தயவு செய்து வாரம் ஒரு முறையாவது கண்காணியுங்கள். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி போய் சீரழிந்த பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும்…

இது கல்லுரி செல்லும் மாணவிகளுக்கும் பொருத்தும். வேதனையோடு முடிக்கிறேன் இன்ஷா அல்லாஹு இனியாவது இந்த மாதிரியான தவறுகள் நடை பெறாமல் அல்லா எல்லா மக்களையும் காபற்றனும் 

©2012, copyright Dharulhuda

செல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்




செல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்

 
                                  

பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம். காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம். யாரேனும்ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள் என்று தகவல் வரும் போது, நம் பிள்ளை அப்படியெல்லாம் போகாது; நம் பிள்ளை தங்கக் கட்டி என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மீது தளராத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
பிள்ளைகள் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருப்பதில் தவறில்லை. இருக்க வேண்டியது தான். ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடுகின்றது.
குறிப்பாக இன்றைய காலத்து சினிமாக் கலாச்சாரம் மாணவ, மாணவியரைப் பல தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றது.
பள்ளி விட்டு வந்ததும் நமது பிள்ளைகள் பாடம் படிப்பதை விட்டு விட்டு, படம் பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சீரியல்களின் பிடியில் கட்டுண்டு இருக்கும் நாம் டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நமது பிள்ளைகளும் சேர்ந்தே பார்க்கின்றனர். நம்மால் அந்தப் பிள்ளைகளைத் தடுக்க முடிவதில்லை.
நம் வீட்டிலோ, வெளியிலோ ஆண், பெண் இருவர் கட்டிப் புரளும் காட்சிகளைப் பார்க்க முடியாது. குளிக்கும் பெண்கள் கூட ஆபாசமாகக் குளிப்பது கிடையாது. ஆனால் இந்த சினிமாக் காட்சிகளில் படுக்கையறைக் காட்சிகள், ஆபாசக் குளியல் காட்சிகள் அப்பட்டமாக அப்படியே காட்டப்படுகின்றன. இந்தக் காட்சிகளைத் தான் டி.வி.களில் பெற்றோர், பிள்ளைகள் என அனைவரும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தையும் டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றன. இதையும் பெற்றோர் சேர்ந்து கொண்டு தான் பார்க்கின்றனர். விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகின்றனர். உடனே பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டுகின்றனர். அவர்கள் தேர்வில் தோற்றதற்குத் தாங்களும் ஒரு காரணம் என்பதைப் பெற்றோர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.


செல்லப் பிள்ளைக்கு ஒரு செல்போன்
பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.
இது பிள்ளைகளின் படிப்பைப் பாழாக்குவதன் காரணத்தால் தான் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் பாட நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை செய்துள்ளனர். செல்போன்களால் படிப்பு பாழாகின்றது என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.
செல்போன்கள் இவ்வாறு படிப்பை மட்டும் பாழாக்கவில்லை. அவர்களுடைய ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.


செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்களின் பட்டியலில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறோம்.
 
1. நீலப்படங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவை நம்முடைய பிள்ளைகளின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பரிமாறவும் படுகின்றன.
2.அழகான மாணவிகள் அவ்வப்போது நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ படம் எடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பல மாணவர்களின் பார்வைக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன.
3. SMS (Short Message Service)  என்பது இப்போது Sex Message Service ஆக மாறி விட்டது. அந்த அளவுக்கு ஆபாசச் செய்திகள் இதில் பரிமாறப்படுகின்றன.
4. தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள்: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.
ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.
ஏற்கனவே வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களும், திருமணமான பெண்களும் செல்போன் செக்ஸில் பலியாகி அந்நிய ஆடவருடன் ஓடிப் போகும் கொடுமை ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும் போது, பள்ளிக்கூடம் செல்லும் பருவ வயதுப் பிள்ளைகள் பற்றிய இந்த அதிர்ச்சித் தகவல் நம்முடைய இரத்தத்தை உறைய வைக்கின்றது.


இந்த அதிர்ச்சித் தகவலைத் தெரிந்து கொள்ளும் பெற்றோர்கள் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் கீழே தருகிறோம்.
தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்காமல் இருத்தல்.
ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம்.
மொபைல் போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது.
பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.
மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.
பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது.(உதாரணம்: வீட்டில் தனி அறை, தனி படுக்கை என,  என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பது)
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான்.  அதை அவன் அடைந்தே தீருவான்.  கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும்.  நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும்.  மனம் ஏங்குகின்றது.  இச்சை கொள்கின்றது.  பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது.  அல்லது பொய்யாக்குகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-), நூல்: புகாரி 6243
இந்த ஹதீஸில் வருகின்ற கடைசிக் கட்ட விஷயத்தைத் தவிர அனைத்து விஷயங்களும் செல்போன்கள் வழியாக நடக்கின்றன.
கடைசிக் கட்டத்தை அடைய வேண்டும் என்று அவர்கள் உறுதி கொள்ளும் போது, ஓடிப் போக ஆரம்பிக்கிறார்கள். அப்போது நாம் கைசேதப்பட்டுப் பயனில்லை.


திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆண் 24:37)
நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)
செல்போன் இல்லாவிட்டாலும் பள்ளி செல்கின்ற ஆண், பெண் பிள்ளைகளின் அனைத்து நடவடிக்கைகளின் மீதும் முழுக் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் கீழ்க்கண்ட ஹதீஸின்படி அல்லாஹ்விடத்தில் நாம் பதில் சொல்லாமல் தப்ப முடியாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளி யாவாள். அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப் படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 893

©2012, copyright Dharulhuda

Thursday, April 19, 2012

இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வரும் பிரிட்டன் மக்கள் – அதிர்ந்து போயுள்ள கிறித்துவ உலகம்


பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும், தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் லட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறித்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்துகொண்டு இருகின்றனர்.
இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன் என்ற தலைப்பில் “The Independent” என்ற பிரிட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது.(பார்க்க http://www.independent.co.uk/news/uk/home-news/the-islamification-of-britain-record-numbers-embrace-muslim-faith-2175178.html)
கிறித்துவ உலகத்தின் அடித்தலமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதை பார்த்து கிறித்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லீம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால் தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில்தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.
2001 – ல் எடுக்கப்பட்ட கணக்கெடுபில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டவர்களின் எண்ணிக்கை 14,000 முதல் 25,000 வரை இருக்கலாம் என கணெக்கடுக்கப்படது, ஆனால் தற்போதைய கணக்கெடுப்பில் ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லீம்களாக மாறியுள்ளார்கள் என “Faith Matters” என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், மசூதிகளில் சென்று எத்தனை முஸ்லீம்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் கணக்கெடுத்துள்ளனர், அதில் தலைநகர் லண்டனில் மட்டும் 1400 முஸ்லீம்கள் கடந்த ஓராண்டில் பள்ளிவாசல்களில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர், (அமைப்புகள் மூலமாக, தனி நபர் மூலமாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் தனி), இப்படி பிரிட்டன் முழுவதும் பள்ளிவாசல்களில் எடுத்த கண்க்கெடுப்பின் படி 5200 நபர்கள் ஓர் ஆண்டில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்).
பிரான்ஸ் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்ற நபர்களில் எண்ணிக்கை ஆண்டு ஒன்ற்றிக்கு 4000. எனவே “The Independent” நடத்திய இந்த புது ஆய்வின் படி ஐரோப்பா கண்டத்தில் பிரிட்டன் மக்கள்தான் இஸ்லாத்தை தழுவுவதில் முன்னனியில் உள்ளனர். இந்த ஆய்வை நடத்திய “Faith Matters” அமைப்பின் இயக்குனர்  கூறுகையில் நாங்கள் இந்த தகவலை பள்ளிவாசலில் திரட்டினோம், முழுவதுமாக எடுக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல, முழுவதும் கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை பன்மடங்காக இருக்கும் என தெரிவித்தார் .
ஏன் முஸ்லீம்களாக மாறினார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், இஸ்லாத்தை பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து வருகின்றது, இந்த பொய் பிரசாத்தை பார்ப்பவர்கள், படிப்பவர்கள் இஸ்லாத்தை அறிய ஆர்வமடைகின்றனர், இந்த ஆய்வில் பலர், இஸ்லாத்தின் உன்னதமிக்க கருத்தினால் ஈர்க்கப்படு, உன்னத பாட்டு போன்ற ஆபாசங்களும், அசிங்கங்களும் நிறைந்த பைபிளை தூக்கி எரிந்துவிட்டு உண்மை மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுகொள்கின்றனர்.
இஸ்லாத்தை அறிவு பூர்வமாகவும், ஆதரபூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் எதிர்க்க முடியாத கிறித்தவ உலகம் பொய் பிரச்சாரங்கள் மூலமாக இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முழுவீச்சில் செயல்பட்டுவருகின்றது. பிரிட்டனை சேர்ந்த இஸ்லாத்தை ஏற்ற இரண்டு இளைஞர்களை சுட்டுகொன்ற CIA இவர்கள் தீவிரவாதிகள் , பயங்கரவாதிகள் என பத்திரிக்கையில் செய்திகளை பரப்பி மக்களை அச்சமுற செய்கின்றனர், “Faith Matters” ஆய்வில் இங்கிலாந்தில் வரும் செய்திகளில் 32 % செய்திகள் இஸ்லாத்தை தீவிரவாத்தோடு சம்மந்தபடுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.
கிறித்துவர்களிடம் இருப்பது, பொய்களும், ஆபாசங்களும், மனிதனுக்கு உதவாத உலரல்களும் நிறைந்த பைபிள் தான் இந்த பைபிளை வைத்து கொண்டு கிறித்துவகளை தக்கவைக்க முடியாது என்பதை கிறித்தவ மிஷினரிகள் நன்றாக உணர்ந்துள்ளன, பொய்களையும் புரட்டுகளையும் சொல்லி கிறித்துவர்களை ஏமாற்றி கிறித்துவத்தை வாழவைத்து கொண்டிருக்கின்றனர் பாதிரிமார்கள். மேற்கத்திய நாடுகள் போடும் பிச்சை டாலருக்காளுக்காக விவாத வேஷம் போடும் சான்(SAN) போன்ற அமைப்புகள் கூட பைபிள் இறைவேதம் என நிரூபிக்க பைபிளிலிருந்து ஒரு ஆதரத்தையும் காட்ட முடியாமல் கண்டபடி உலறி கொட்டியது.
ஒரு காலத்திலும் கிறித்துவர்களால் அறிவுபூர்வமாகவும், ஆதார பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் “கிறித்துவம் இறைவனின் மார்க்கம்” என்பதை நிருபிக்க முடியாது என்பது இவர்களின் இஸ்லாத்திற்க்கெதிரான பொய்பிரசாரங்களிலிருந்து தெளிவாக விளங்குகின்றது.
பொது மேடையில் வாசிக்கும் தகுதி கூட இல்லாத பைபிள் மூலம் இஸ்லாத்தை தழுவும் கிறித்துவர்களை தடுக்க முடியாது என்பதை உணர்ந்துதான் முஸ்லீம்களை பார்த்து “பயங்கரவாதி” “பழமைவாதி” வெற்று கோஷம் போடுகின்றது.
அல்லாஹ்வின் கிருபையால் பிரிட்டனில் வாழும் கிறித்துவர்கள் பைபிளின் தரத்தை அறிந்து சத்திய மார்க்கமான இஸ்லாத்தை தழுவி வருகின்றனர். கேத்தரீன் என்ற கிறித்துவ பெண்மனி இஸ்லாத்தை ஏற்று தற்போது பிரிட்டன் இஸ்லாமிய அமைப்பிற்க்கு தலைவியாக உள்ளார். இவர்களை போன்ற பலர் கிறித்துவர்கள் மத்தியில் தொடர்ந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து பலரை கிறித்துவத்திலிருந்து விடுவித்து நேர்வழியான இஸ்லாத்தின் பக்கம் அழைத்துவருகின்றனர்
பிரிட்டனை சேர்ந்த இஸ்லாத்தை தழுவிய சிலர் கருத்து தெரிவிக்கையில் …
பவுல் மார்ட்டின் : எனக்கு எனது நண்பர்கள் மூலம் குர்ஆன் அறிமுகமானது, குர்ஆனை படிக்கும் போது அதனுடைய அறிவியல் உண்மைகளை பார்த்து வியந்து போனேன், (குர்ஆன் இறை வேதம் என்பதை உணர்ந்து) இஸ்லாத்தை தழுவினேன்.
(குர்ஆன் குறித்த விவாததிற்க்கு வரமால் ஓடி ஒளியுன் சானின் (SAN) தந்திரம் தற்போது விளங்குகின்றது, லண்டனை சேர்ந்த இந்த “பவுல் மார்ட்டின்” போல் கிறித்துவர்கள் குர் னின் அறிவியல் அற்புதங்களை பார்த்து ஆயிரகணக்கில் இஸ்லாத்தை தழுவிவிடுவார்கள் என பயந்து போய் தந்திரங்கள் செய்து தப்பிக்க நினைகின்றது சான்(SAN)).
டென்னிஸ் ஹார்ஸலி : நான் ஒரு கிறித்துவர், கத்தோலிக்க பள்ளியில் படிதேன், நண்பர்கள் மூலம் இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, பின்பு நான் குர்ஆனை படிக்கும் போது ஏசு, மேரி, தோரா பற்றிய பல்வேறு உண்மையான தகவல்கள் குர்ஆனில் இருந்தது. எனவே கிறித்துவத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை ஏற்பது இயற்க்கையானது என கருதுகின்றேன் (அதாவது நீங்கள் உண்மையாக ஏசுவை நம்புவதாக இருந்தால், மேரியை மதிப்பாதாக இருந்தால், தோராவை நம்புவதாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்றுகொள்வதுதான் உண்மையான நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும்)
கதீஜா ரியோபுக் : நான் கிறித்துவ குடும்பத்தில் பிறந்தவள், என் குழந்தையுடன் வார வாரம் சர்ச்சிற்க்கு செல்வேன், இஸ்லாத்தில் இணைந்ததும் கிடைத்த அமைதி சர்ச்சில் கிடைக்கவில்லை, ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்த எனது தாயால் நான் இஸ்லாத்தை ஏற்றதை ஜீரனித்து கொள்ளமுடியவில்லை, நான் இப்போது ஹிஜாப் அணிகின்றேன், நோன்பு வைக்கின்றேன், வாழ்வில் அமைதியை உணர்கின்றேன்
ஹனா தஜீமா : நான் பல மதங்களை ஆய்வு செய்தேன், குர்ஆன் அறிவு பூர்வமாக இருந்தது, பெண்களுக்கு உரிமையை தருவாதக இருந்தது எனவே ஆழ்ந்த மத பற்றுள்ள எனது குடும்பத்திலிருந்து நான் இஸ்லாத்தை தழுவினேன்
இது கிறித்துவத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய சிலரின் கருத்துக்கள், பின்பற்றுவதற்க்கு பைபிளில் ஒன்றும் இல்லை (புரக்கணிப்பதற்க்கு நிறைய உள்ளது), எனவே இந்த மக்களுக்கு உண்மைய எடுத்து சொன்னால் இஸ்லாத்தை ஏற்க்க கோடிகணக்கான கிறித்துவர்கள் இஸ்லாத்தை ஏற்க தயாராக இருகின்றனர் இன்ஷா அல்லாஹ். நாம் சத்திய மார்க்கமான இஸ்லாத்தை இந்த கிறித்துவ மக்களுக்கு எடுத்து சொல்வதுதான் மீதமிருக்கும் வேலை
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர். (அல் குர்ஆன் 5: 83)
கிறித்துவ மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துவைக்கும் இந்த புனித பணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்து செய்து கொண்டு இருகின்றது அல்லாஹ்வின் உதவியுடன் கிறித்துவ பாதிரிமர்களுடன் பல விவாதங்களை செய்து உண்மையை நிலை நாட்டியுள்ளது,
சான் (SAN) மட்டும் குர்ஆன் குறித்த விவாத்திற்க்கு வந்தால் குர்ஆனின் அற்புதங்களை கிறித்தவர்களுக்கு விளக்கி, பைபிளில் மிச்சம் மீதியுள்ள உலரள்களை தோலுரித்து காட்டி “குர்ஆன் தான் இறை வேதம்” என்பதை நிச்சயம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அல்லாஹ்வின் உதவியுடன் நிருபித்து காட்டும் இன்ஷா அல்லாஹ்.
S.சித்தீக்.M.Tech


©2012, copyright Dharulhuda

Monday, February 20, 2012

பெண்களுக்கு திரைக்குப் பின்னால் பிரச்சாரம் ஏன்?

வஹியின் வாழ்வு: பெண்களுக்கு திரைக்குப் பின்னால் பிரச்சாரம் ஏன்?: பெண்களுக்கு திரைக்குப் பின்னால் பிரச்சாரம் ஏன்?   எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. அவனது இறுதித் தூதர் மீது சாந்தியும் சமாதானமும் உண்...
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. அவனது இறுதித் தூதர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.


சமகாலத்தில் மிகவும் தேவையான ஒரு விடயம் பற்றி இக்கட்டுரையில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம். பெண்களுக்குப் பிரச்சாரம் நடைபெறும் எல்லா இடங்களிலும் இதே வினா எழுப்பப்படுவது வழக்கம். இவ்விடயம் இன்று கருத்து வேறுபாடுள்ள ஒன்றாகக் கருதப்படுகிறது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள மார்க்க அறிஞர்கள் ‘பெண்களுக்கு திரையின்றி மார்க்கப் பிரச்சாரம் நடத்தலாம்’ என்ற கருத்தைக் கொண்டுள்ள அதே வேளை, இன்னும் சில அறிஞர்கள் ‘பெண்களுக்கு திரையின்றி பிரச்சாரம் நடத்தக் கூடாது’ என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.


இந்த இரு கருத்துக்களிலும் எது மிகவும் சரியானது என்பதை அல்லாஹ்வும் இறுதித் தூதரும் மாத்திரமே தீர்மானிக்க வேண்டும். எந்தவொரு அறிஞருக்கும் - எந்தவொரு மௌலவிக்கும் எந்தவொரு ஜமாஅத்துக்கும் தமது மனோ இச்சையின் அடிப்படையில் கருத்துக்கள் சொல்வதற்கோ மார்க்கத்தை தீர்மானிப்பதற்கோ மார்க்கத்தில் உரிமை இல்லை.


இப்பொழுது நாங்கள் பார்க்க வேண்டிய விடயம், திரை விடயத்தில் அல்லாஹ் ஆண்களுக்கு என்ன கட்டளையிடுகிறான்? என்பதே. பெண்களுடன் ‘திரைக்குப் பின்னால்’ பேச சொல்கிறானா? அல்லது ‘திரை இன்றி’ பேசச் சொல்கிறானா?


அல்லாஹ் கூறுகிறான்:


“விசுவாசம் கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டாலே தவிர உண்பதற்கு நுழைந்து விடாதீர்கள்! அவரது பாத்திரத்தை பார்த்துக் கொண்டும் இருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் நுழையுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் இலயித்து விடாதீர்கள்! இது நபிக்கு தொந்தரவாக இருக்கும். (இதனை) உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படலாம். எனினும், உண்மையைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்(க நேரிட்)டால் திரைக்குப் பின்னாலிருந்தே கேளுங்கள். இதுவே, உங்கள் உள்ளங்களுக்கும் அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒரு போதும் அவரது மனைவியரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளவும் கூடாது. நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகக் கடுமையான (பாவமான) காரியமாகும்.
((சூரா அல் அஹ்ஸாப் அத்தியாயம்: 33, வசனம் 53))


இவ்வசனத்திற்கு திரையுடைய வசனம் (ஆயதுல் ஹிஜாப்) என்று சொல்லப்படுகிறது. ஹிஜாப் இவ்வசனம் மூலம் தான் கடமையாகியது.


நபியின் மனைவியரிடம் ஏதேனும் ஒரு பொருளை விசுவாசியான ஆண்கள் கேட்கும் போது ‘திரைக்குப் பின்னாலிருந்து’ கேட்குமாறு அல்லாஹ் இங்கே கட்டளையிடுகிறான். பேச்சிலே உள்ள ஒரு வடிவம் தான் கேள்வி (கேட்பது). ‘கேளுங்கள்’ என்ற வார்த்தையில் ‘பேசுங்கள்’ என்ற அர்த்தம் மறைந்துள்ளது. எனவே, நபியின் மனைவியரிடம் மார்க்கம் அனுமதித்த ஏதேனும் ஒரு விடயத்தை விசுவாசியான ஆண்கள் பேசும் போது திரைக்குப் பின்னாலிருந்து தான் பேச வேண்டும் என்பது தெளிவாகிறது.


இதே போன்று, நபியின் மனைவியரல்லாத ஏனைய விசுவாசியான பெண்களிடம் விசுவாசியான ஆண்கள் பேசும் போது எவ்வாறு பேச வேண்டும்? என்ற கேள்வி இங்கே எழுகிறது.


விசுவாசியான ஆண்கள் திரைக்குப் பின்னால் இருந்து பேச வேண்டும் என்ற சட்டம் நபியின் மனைவிமாருக்கு மட்டும் உரியது அல்ல. காரணம்:


1- மேற் கூறப்பட்டுள்ள வசனத்தில் இச்சட்டம் நபியின் மனைவிமாருக்கு மட்டும் எனக் குறிப்பிடப்படவில்லை.


2- பொதுவாகவே ஒரு சாராருடன் சம்பந்தப்பட்டு இறங்குகின்ற ஒரு சட்டம் அச்சாராருக்கு மட்டுமல்லாது இஸ்லாத்தை ஏற்ற அனைவருக்கும் பொருந்தும் என்பது அல் குர்ஆனின் நடைமுறையாகும்.


3- விசுவாசியான ஆண்கள் திரைக்குப் பின்னாலிருந்து ஏன் பேச வேண்டும்? என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்தும் போது, அதே வசனத்தில் ‘இதுவே உங்கள் உள்ளங்களுக்கும் அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது’ எனக் கூறுகிறான்.


மேலுள்ள வார்த்தையில் வரும் ‘உங்கள் உங்களுக்கும்’ என்பது ஸஹாபாக்களில் உள்ள ஆண்களைக் குறிக்கிறது. ‘அவர்களின் உள்ளங்களுக்கும்’ என்பது நபியின் மனைவிமார்களைக் குறிக்கிறது. ஸஹாபாக்களுக்கு தேவைப்படுகின்ற இவ்வுளத் தூய்மை நமது ஆண்களுக்கு தேவைப்படாதா??
நபியின் மனைவிமார்களுக்கு தேவைப்படுகின்ற உளத் தூய்மை நமது பெண்களுக்குத் தேவைப்படாதா??


இவ்வுளத் தூய்மை ஸஹாபாக்களுக்கே தேவையென்றால் நபியின் மனைவியருக்கே தேவையென்றால் அவர்களை விட அதிகம் தப்புகள் செய்ய வாய்ப்புள்ள நமது ஆண்களுக்கும் நமது பெண்களுக்கும் எவ்வளவு உளத் தூய்மை தேவை என்பதை சிந்தித்தாலே விசுவாசியான ஆண்கள் திரைக்குப் பின்னால் இருந்து பேச வேண்டும் என்ற சட்டம் நபியின் மனைவிமாருக்கு மட்டும் உரியதல்ல என்பதை புரிந்து கொள்ளலாம்.


4- அத்துடன், திரையின் (ஹிஜாபின்) ஓர் அம்சம் தான் ஜில்பாப். திரையுடைய வசனத்திற்கு ஐந்து வசனங்களுக்குப் பிறகு ஜில்பாபைப் பற்றி அல்லாஹ் பேசுகிறான். ஆவ்வசனத்தின் மூலம் திரை (ஹிஜாப்) நபியின் மனைவியருக்கு மட்டும் உரியதல்ல அனைத்து விசுவாசியான பெண்களுக்கும் உரியது என்பதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.


அல்லாஹ் கூறுகிறான்:
நபியே! உமது மனைவியருக்கும் உமது புதல்வியருக்கும் நம்பிக்கை கொண்டோரின் பெண்களுக்கும் தமது ‘ஜில்பாப்களை’ தொங்க விடுமாறு கூறுவீராக. அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும் தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்”


இப்போது, விசுவாசியான ஆண்கள் விசுவாசியான பெண்களுக்கு மார்க்கப் பிரச்சாரம் செய்யும் போது எவ்வாறு நடந்து கொள்வது? என்பதைக் கவனிப்போம்.


அல்லாஹ்வின் வசனங்களை சரியான முறையில் விளங்கி, உள்ளத்தால் ஏற்று, வாழ்வில் நடைமுறைப்படுத்த விரும்பும் எல்லா விசுவாசிகளுக்கும் அல்லாஹ் கூறும் ஒரே உபதேசம் திரைக்குப் பின்னாலிருந்து தான் விசுவாசியான பெண்களுடன் பேச வேண்டும் என்பதே.


எனவே, விசுவாசியான ஆண்கள் விசுவாசியான பெண்களுக்கு நடாத்தும் பிரச்சாரமும் திரைக்குப் பின்னாலிருந்து தான் செய்யப்பட வேண்டும் என்பது இங்கே தெளிவாகிறது.
‘திரைக்குப் பின்னாலிருந்து’ எனும் வாசகத்தை அல்லாஹ் மிகத் தெளிவாகப் பயன்படுத்தியிருக்கும் போது அல்லாஹ் பயன்படுத்தாத ‘திரை இன்றி’ என்ற வாசகத்தை நாம் நடை முறைப்படுத்த முடியுமா?


ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையும் பார்க்கலாமா?





ஆண்கள் பெண்களுக்கு திரையின்றி மார்க்கப் பிரச்சாரம் செய்யும் போது ஆண்கள் பெண்களைப் பார்க்க வேண்டிய நிலையும் பெண்கள் ஆண்களைப் பார்க்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
இதனை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

இவ்விடயத்தில் சிலர், இஸ்லாம் அனுமதிக்கிறதா என்ற ஆய்வைப் பார்ப்பதற்கு முன்னரே ‘அனுமதிக்கத் தான் வேண்டும்’ என்ற முடிவை எடுத்து விடுகின்றனர். இதனால் தான் இவ்விடயத்தில் சரியான விளக்கத்தைப் பெற்றவர்களும் கூட இன்னும் நடைமுறைப்படுத்த முன் வரவில்லை. இது உண்மை முஸ்லிமுக்கு பொருத்தமானதல்ல.


இப்போது நாம் ஆண் பெண்ணைப் பார்ப்பதிலும் பெண் ஆணைப்; பார்ப்பதிலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் என்ன முடிவைத் தந்திருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.


அல்லாஹ் கூறுகிறான்:
“(நபியே!) விசுவாசிகளான ஆண்களுக்கு தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தங்கள் மர்மஸ்தானங்களை பேணிக் காத்துக் கொள்ளுமாறும் நீர் கூறுவீராக! அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்து கொள்கிறான்”.
(சூரா அந்நூர் அத்தியாயம்: 24 வசனம்:30)


மேலும் கூறுகிறான்:


“(நபியே) விசுவாசியான பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளவும் தன் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர தங்கள் அலங்காரத்தை வெளிப்படுத்தாது மறைத்துக் கொள்ளவும்……………. (வசனத்தை முழுமையாகப் பார்வையிடுக)
(சூரா அந்நூர் அத்தியாயம்: 24 வசனம்:31)


மேலுள்ள இரண்டு வசனங்களிலும் ஆண்களும் பெண்களும் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு அல்லாஹ்வினால் கட்டளையிடப்படுகின்றனர். அதாவது, ஆண்கள் பெண்களைப் பார்க்கக் கூடாது. பெண்கள் ஆண்களைப் பார்க்கக் கூடாது.


இச்சையின்றி பார்ப்பது கூடுமா?



மனிதர்கள் பெண்கள் மீது இச்சையுள்ளவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். இதுவொரு பொதுவான விதி. இதனை அல்லாஹ் சூரா ஆல இம்ரான் அத்தியாயம்:3 வசனம்: 14 இல் தெளிவு படுத்துகிறான்.
அதே போன்று, பருவ வயதையடைந்த ஆண்களிலும் பெண்களிலும் இச்சையற்றவர்களும் இல்லாமலில்லை. இச்சையற்றவர்கள் யார் என்பதையும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.


- ஆண்களில் இச்சையற்றவர்கள்: ‘அத்தாபி ஈன ஙைரி உலில் இர்பதி மினர் ரிஜாலி’ (பெண்களில் விருப்பமற்ற தங்களை அண்டி வாழும் ஆண்கள்)
(சூரா அந்நூர் அத்தியாயம்: 24 வசனம்:31)


- பெண்களில் இச்சையற்றவர்கள்: ‘அல் கவாஇது மினன் நிஸாஇல்லாதீ லா யர்ஜூன நிகாஹன்’ ((திருமண விருப்பமற்ற (மாத விலக்கு நின்று குழந்தைகள் பெறும் நிலையைத் தாண்டி விட்ட) முதிய வயதுப் பெண்கள்))
(சூரா அந்நூர் அத்தியாயம்: 24 வசனம்:60)


மேல் குறிப்பிடப்பட்டவர்களைத் தவிர மற்றையவர்கள் அனைவரும் இச்சையுள்ளவர்களே. இச்சையுள்ளவர்களின் இச்சை தூண்டப்படுவதே பார்வையின் மூலம் தான். ஓர் ஆண் ஒரு பெண்ணை முதல் தடவையில் காணும் போது இச்சையுடன் காண மாட்டான். காரணம், அவன் அவளை காணுவதற்கு முன் ஒரு பெண்ணைப் பார்க்கிறோம் என்பது அவனுக்குத் தெரியாது. தான் கண்டது ஒரு பெண்ணைத் தான் என்று தெரிந்தவுடன் உடனே பார்வையைத் திருப்பிக் கொள்ள வேண்டும்.


ஜரீர் இப்னு அப்தில்லாஹ் அல் பஜலி என்ற நபித் தோழர் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் திடீர் பார்வை பற்றிக் கேட்ட போது அவர் என் பார்வையைத் திருப்பிக் கொள்ளுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். நூல்: முஸ்லிம்


நபியவர்கள், திடீர் பார்வை பற்றி கேள்வி கேட்ட அந்த நபித் தோழரைப் பார்த்து ‘உனது பார்வையில் இச்சை இருந்தால் பார்வையைத் திருப்பிக் கொள். இச்சையில்லாவிட்டால் தொடர்ந்து பார்’ என்று கூறவில்லை. மாற்றமாக ‘பார்வையைத் திருப்பிக் கொள்’ என்று பொதுவாகத் தான் கட்டளையிடுகிறார்கள். இதிலிருந்து இச்சையின்றி பார்க்கலாம் தானே என்ற அனுமதி இல்லை என்பது நிரூபணமாகிறது.


மேலும், திடீர் பார்வைக்கு ஒரு சில செக்கன்கள் மட்டுமே எடுக்கும். அப்படிப்பட்ட பார்வையையே நபி (ஸல்) அவர்கள் தடுத்திருக்கும் போது 30 நிமிடங்கள், 45 நிமிடங்கள், 60 நிமிடங்கள் என மார்க்கப் பிரச்சாரத்தின் போது ஒரு ஆண் பல பெண்களைப் பார்க்க முடியுமா? பல பெண்கள் ஓர் ஆணைப் பார்க்க முடியுமா? இதற்கு யார் அனுமதி தந்தது?
இன்ஷா அல்லாஹ் தொடரும்…


நஸ்ரி ஜிப்ரி ஸலபி
11.06.2011

Wednesday, February 15, 2012

Words to My Muslim Sister

Words to My Muslim Sister

My Dear Sister,

Know, my dear Muslim sister, that you are man's sister and half of humanity. You are a mother, wife, daughter, sister, aunt, grand daughter or grand mother. The Prophet said, what translated means, Women are, indeed, men's partners. [Abu Dawud]

You are a member of the great nation of Islam, the best nation ever produced for mankind. No other nation on earth has more great men, leaders and conquerors than this nation. It is the nation of guidance and the straight religion, and it leads humanity to righteousness and truth. It transforms people from worshippers of slaves to worshippers of the Lord of slaves, from life's pressures to the pleasures of the Life after, and from the injustice of other religions to the justice of Islam.

Your ancestors, great women of Islam, were one of the main reasons for this great nation to take this great place among all nations. Allah, Who granted Islam to this nation, made a high place for Muslim women, and decreed that they share in the responsibilities of enjoining truth, forbidding evil and raising the flag of Islam. He said, what translated means,

"The believers, men and women, are loyalists of one another, they enjoin righteousness and forbid evil, they offer their prayers perfectly and give the Zakat, and obey Allah and His Messenger. Allah will leave His Mercy on them. Surely Allah is All-Mighty, All-Wise." [Noble Quran 9:71]

Allah has given Muslim women what they can bare of orders and duties. He is the God Who knows His creation,

"Should He not know what He created? And He is the Most Kind, All-Aware (of everything)." [Noble Quran 67:14]

My dear sister, you are called upon today to truly become an active member of the Muslim nation, strive to establish victory for Allah's Word, implement the Quran and help build the generation of Iman.

What Do Your Enemies Want From You?

There are those who want to distract you from doing your duty. They want to distract you from meeting your noble obligation, that is, to defend the religion of Allah and raise His Word high. Those enemies use many methods:

First: They distract you from what Allah created you to perform of worship, belief and Da'wah (propagating Islam). They use this worldly life as their bate: Jewelry stores, fashions that originate in non-Muslim countries, new models all the time, desires raised, hunger that can never be satisfied, pleasures and competition for them and endless ways for joy. Allah did not create us for this. Indulging in these matters is usually accompanied by wasting time and money and igniting enmity and competition between the rich and the poor.

Second: They ignite enmity between you and man. To those sinners, you are a daughter that is put down, a humiliated mother, an abused wife and an oppressed sister! Men are always unjust, hypocrites, dictators, freedom- preventers and suppressers, according to them. There is a fabricated war that those evil ones are starting for no reason other than to direct you to rebel against your father, be arrogant with your brother and disobedient to your husband. They do not call for justice, mercy and unity. They call for hatred, arrogance and destruction.

Third: They do not stop at their call for rebellion against parents, brothers and husbands, rather, they plot against Islam. They call upon you to rebel against the obligations of Islam and the decrees of the All-Knowing King. Islam, to them, is unjust and Islamic laws are imperfect and restrictive. They call upon you, day and night, to rebel and insist on the disobedience of this religion. They try to rid you of your religion. They try to rid you of comfort and safety under generous parenthood, happy marriage and good brotherly relations.

Those devils portray piety and honor as chains on freedom. To them, Hijab does not cover the head, but also covers the mind; prayer, fasting and Zakat are a waste of time and effort; and obedience to husbands is slavery and a return to the stone age. They distorted all facts and changed all truths, all to serve their evil goals.

My Dear Sister,

The goals that your enemies and the enemies of your religion are seeking to achieve are well known. They want you to be available for them to fulfill their evil desires whenever they wish. They want you to be a mistress that has no honor. They want you to be found everywhere, on roads and in places of sin, without honor, religion or manners. They seek for you only what they want you to do.

The Western world has gone through this all. Women of the West are the part of society that is facing injustice and dishonor. They strive to please men who keep changing partners and seek pleasures but with no responsibility and no consideration of the evil consequences of their sinful actions.

O Muslim sister, read and know about those women who discarded shyness and honor and followed their desires, what was the result of their deeds? Was their end honorable and desirable, or was it a shameful and hated end?

Advice For My Sister In Islam

Be proud of your religion and the religion of your ancestors. Be a good example for your sons and daughters and sincere in your belonging to this mighty nation.

Know that honor is an honor to all wise people, and that adultery is dishonorable to all nations, even if some called it freedom. Know that adultery is also done with the eyes by seeing, with the ears by listening, and with the mouth by kissing, as was mentioned in a Hadith related by Imam Muslim.

Your happiness is in being an obedient and believing daughter, a loyal and generous wife and a pious and merciful mother.

Know that prayer is the cornerstone of Islam. Fasting one day, for the sake of Allah, takes your face seventy years away from Hellfire, as the Hadith, related by Al-Bukhari and Muslim, states.

Charity is a major cause for gaining forgiveness and for repentance to be accepted.

Those women who are showing parts of their bodies to men, will not enter Paradise or smell its fragrance and are cursed, as in the Hadith related by Imam Muslim.

Hijab is an honor and protection for you. Hijab must be modest in color and not exotic, wide and thick and not revealing, different from the dress of non-Muslim women and men.

My Dear Sister,

These are words from the heart. These are words of good and sincere advice.

Beware of the loyalists of Satan who want to lead you astray.

Be a slave of Allah, righteous and descendent of righteous women and know your role in building this great nation.

Perform your duty and do not be a cause for destruction. Be a maker of righteous generation that will lead mankind, again, to what is right and proper, to the great religion of Islam.

This article appeared in a recent issue of the "Muslim Creed" [Vol. 3 No. 2, February 1995] a free of charge Islamic Magazine meant for the dissemination of the Islamic creed, knowledge and Methodology of Ahlus-Sunnah wal-Jama'ah in the light of the Quran and the Authentic Sunnah as understood and practiced by the Salaf. It is published by "The Dear of Islamic Heritage."


Monday, February 13, 2012

காதல் முக்கியமா? உறவு முக்கியமா?

காதல் முக்கியமா? உறவு முக்கியமா?

இந்த காதல் நம் இஸ்லாமிய பெண்களையும் விட்டுவைக்கவில்லை, பள்ளிக்கு போய் கல்விக்கு பதிலாக கலவியை தான் கற்றுக்கொண்டு வருகிறார்கள் என்பது சிலரின் கருத்து.

காதலர் தினம் என்ற பெயரிலே எவ்வளவு கூத்து கும்மாளம் நடக்கிறது, மேற்கத்திய நாடுகளிருந்து வந்தது தான் இந்த காதலர் தினம் .நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளிடம் இந்த காதல் நோய் தொற்றிகொண்டது என்பது தான் மிக பெரிய கவலை.

பெற்றோர்கள் தன பெண் பிள்ளைகளை நம்பி பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் இவர்கள் காதல் வலையில் சிக்கி, பெற்றோர்களை தலை குனிய வைக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தவறான வழியில் போவதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. வயதும் மற்றும் சூழ்நிலையும் தவர் செய்வதற்கு வழி வகுக்கிறது என்பது உண்மை.

ஒரு காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் பற்றி தெரிய வாய்ப்பு இல்லை அவர்கள் அதிகமாக வீட்டில்தான் இருப்பார்கள். பொழுதுபோக்கு என்பது ரேடியோ மட்டும்தான் இருக்கும். டிவி இருக்கும் வீடு விரலைவிட்டு எண்ணும் அளவுக்கு தான் இருக்கும். இன்றைய காலத்தில் வீட்டில் இருந்தப்படியே எல்லாம் பார்க்கலாம் ,பேசலாம் எதுவேண்டுமானாலும் செய்யலாம். ஒரு பெண்ணை படிக்கவைத்து, படிப்புக்கு பிறகு அவளுக்கு திருமணம் செய்வதற்கு பேசி முடித்து, பெற்றோர்கள் சந்தோஷமாக இருக்கும் நிலையில், அந்த பெண் திடிரென்று யாரோ ஒருவனுடன் ஓடிவிடுகிறாள் இப்படியெல்லாம் நடக்கிறது என்பது உண்மைதானே?

உறவை விட காதல் தான் முக்கியம் என்று கொஞ்சம் கூட சிந்திக்காமல் சில நாட்கள் பழகிய ஒருவனுடன் இப்படி ஓடும் எதனை பெண்கள் ,அந்த குடும்பத்தின் நிலை என்ன? அந்த குடுபத்தில் இன்னுரு பெண் இருந்தால் அவள் நிலை என்ன? சிந்திக்க வேண்டாமா? அன்பு சகோதரிகளே! அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்! பெற்றோரை கண்ணிய படுத்துங்கள்! ஆசை அறுபது நாள் மோகம் நுப்பது நாள் என்று சொல்வார்கள். வேண்டாம் இந்த காதல். விபரிதம் தெரியாமல் இந்த காதலில் சிக்கி விடாதீர்கள்!

உங்கள் குடும்பத்தை தலை குனிய வைத்துவிடாதீர்கள், உறவு தான் முக்கியம் அது தான் கடைசி வரை வரும் என்பதை மறந்து விடாதீர்கள்!

அந்த காதல் இந்த காதல் கள்ள காதல் சொல்லாத காதல் சுகமான காதல் ஊரை சுற்றும் காதல் இப்படி பலவகை காதல் இருக்கிறது. உண்மையான காதல் என்பது எது என்று புரிந்து கொள்ளுங்கள். திருமணத்திற்குப்பிறகு உங்கள் துணையுடன் கொள்ளும் காதலே உண்மையானது, நிலையானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பள்ளிக்கு போனால் படிப்பை மட்டும் கவனியுங்கள். பெறோர்கள் உங்களை நம்ம்பி அனுப்புகிறார்கள் அவர்களுக்கு மோசம் செய்யாதீர்கள்! மாற்று மத பெண்களுடன் ரொம்ப கவனமாக இருங்கள். யாருக்கு உங்கள் செல் போன் நம்பரை கொடுக்காதீர்கள்! அல்லாஹ் எங்களுக்கும் உங்களுக்கும் நற்கிருபை செய்வானாக, ஆமீன்.

ABDUL RASHEED

Saturday, February 11, 2012

நிக்காஹ் (திருமணம்)

நிக்காஹ் (திருமணம்)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ

“இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்துகின்றது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது. (பார்வை இங்கும் அங்கும் அலைபாய்வதை விட்டும் காம இச்சையினால் சுகந்திரமாகத் திரிவதை விட்டும் பாதுகாக்கிறது) திருமணத்தின் பொறுப்பை சுமக்கச் சக்தியற்றவர் இச்சையின் வேகத்தைத் தணித்திட அவ்வப்போது நோன்பு வைத்துக் கொள்ளட்டும்.” (புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர் : அபூஹ¤ரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ

நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்:

“நான்கு வி\யங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!” (புகாரி, முஸ்லிம்)

விளக்கம் :

இந்த நபிமொழியின் கருத்தாவது: பெண்ணிடம் நான்கு விஷயங்கள் பார்க்கப்படுகின்றன. சிலர் செல்வத்தைப் பார்க்கின்றார்கள், சிலர் குலச் சிறப்பை கவனிக்கின்றார்கள், வேறு சிலர் பெண்ணிண் அழகிற்காக மணம் முடிக்கின்றார்கள், இன்னும் சிலரோ மார்க்கப்பற்றைப் பார்க்கின்றார்கள். ஆனால் நபி صلى الله عليه وسلم அவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்கும் அறிவுரை “ஒரு பெண்ணிடம் பார்க்க வேண்டிய உண்மையான தகுதி அவளுடைய மார்க்கப்பற்றும், இறையச்சமுமேயாகும். இதனுடன் மற்றச் சிறப்புகளும் தகுதிகளும் ஒன்று சேர்ந்து விட்டால் அதுவும் நன்றே! எனினும் மார்க்கப்பற்றைப் பார்க்காமல் புறக்கணித்து விடுவதும், செல்வத்தையும் அழகையும் மட்டும் பார்த்து மணமுடிப்பதும் ஒரு முஸ்லிமின் செயலன்று.”

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ

நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்:

“பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய அழகு அவர்களை அழித்துவிடக் கூடும். பெண்களைச் செல்வந்தர்கள் என்பதற்காக மணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும் அடங்காப் பிடாரித்தனத்திலும் அவர்களை ஆழ்த்திவிடக் கூடும். மாறாக மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள்.

மார்க்கப்பற்று கொண்ட கறுப்புநிற அடிமைப்பெண், அல்லாஹ்வின் பார்வையில் வெண்ணிறமுடைய மார்க்கப்பற்றில்லாக் குடும்பப் பெண்ணைவிடச் சிறந்தவள் ஆவாள்.”(அல்முன்தகா)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ

அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் மொழிந்தார்கள்:

“எவருடைய மார்க்கப் பக்தியையும் நற்குணத்தையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ அத்தகைய மனிதர் உங்களிடம் திருமணம் கேட்டு வந்தால் அவருக்கு மணமுடித்துக் கொடுத்து விடுங்கள். நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும் தீமையும் விளைந்துவிடும்.” (திர்மிதி)

விளக்கம் :

நபி صلى الله عليه وسلم அவர்களுடைய கருத்து இதுதான்: மண விவகாரத்தில் பார்க்க வேண்டிய தகுதி மார்க்கப்பற்றும் நல்லொழுக்கமுமே ஆகும். இவற்றைப் பார்த்திடாமல் சொத்து சுகங்களையும் குலச்சிறப்பையும் மட்டுமே பார்த்தால் முஸ்லிம் சமூக அமைப்பின் அதனால் பெரும் தீமை விளையும். எவருடைய பார்வையில் மார்க்கம் இவ்வளவு தாழ்ந்து போய் சொத்து சுகம் மட்டுமே கவனிக்கத் தகுந்ததாகவும், மதிப்புக்குரியதாகவும் விளங்குகிறதோ அத்தகைய உலகாதயவாதிகளிடம் மார்க்கம் எனும் தோட்டத்தை – தியாக நீரைப் பாய்ச்சி செழிக்கச் செய்திட வேண்டும் எனும் உணர்வு எங்கே பிறக்கப்போகிறது? இத்தகைய நிலையைத்தான் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் சோதனை

(குழப்பம்) என்றும் தீமை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ

எங்களுக்கு நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் ஓதும் தஷஹ்ஹுதை ஓதிக் காட்டியபின், “இது திருமணத்தின்போது ஓதக்கூடிய தஷஹ்ஹது” எனச் சொல்லி அதனையும் ஓதிக்காட்டினார்கள். அதன் பொருள்:

நன்றியும் புகழும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானவை. நாங்கள் அவனிடமே உதவி தேடுகின்றோம். அவனிடத்திலேயே மன்னிப்புக் கோருகின்றோம். எங்கள் மனத்தின் தீமைகளுக்கெதிராக எங்களை நாங்களே அல்லாஹ்விடம் தஞ்சம் தேடி ஒப்படைத்துவிடுகின்றோம். எவருக்கு அல்லாஹ் நேர்வழி அளிக்கின்றானோ (நேர்வழியைத் தேடி வருபவர்க்கே அல்லாஹ் அதனை அளிக்கின்றான்) அவரை எவரும் வழிகெடுக்க முடியாது. அவன் எவனை வழி தவறச் செய்து விடுகின்றானோ (எவன் வழிதவற விரும்புகின்றானோ அவனையே அல்லாஹ் வழிதவறச் செய்கின்றான்) அவனுக்கு யாரும் நேர்வழி அளிக்க முடியாது. மேலும் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் எவரும் இலர் என நான் சாட்சி கூறுகின்றேன். மேலும் முஹம்மத் صلى الله عليه وسلم அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனுடைய திருத்தூதர் என்றும் சான்று பகருகின்றேன்.

பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் மூன்று இறைவசனங்களை ஓதிக் காண்பித்தார்கள். ஸப்ளான் ஸவ்ரி (ரஹ்) அவர்களின் விளக்கப்படி அந்த மூன்று வசனங்களாவன:

1. இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம். (3:102)

2. மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்த பந்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.(4:1)

3. இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் இருங்கள். மேலும் சொல்வதைத் தெளிவாக, நேரடியாகச் சொல்லுங்கள். இப்படிக் செய்தால் அல்லாஹ் உங்கள் செயல்களைச் சீர்திருத்துவான். பாவங்களை மன்னித்துவிடுவான். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் அடிபணிந்து நடப்பவர்கள் பெரும் வெற்றியை அடைவார்கள். (33:70-71)

விளக்கம் :

இது திருமணத்தின் போது ஓதப்படும் ‘குத்பா’ ஆகும். இங்கு அதனைக் கொண்டு வருவதன் நோக்கம் இதுதான் : திருமணம் என்பது வெறும் மகிழ்ச்சியும் குதூகலமும் மட்டுமன்று. மாறாக, இது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே, “நாங்கள் இருவரும் வாழ்க்கை முழுவதும் தோழர்களாகவும், உற்ற துணைவர்களாகவும் விளங்குவோம்” என்று முடிவாகின்ற பொறுப்பு வாய்ந்த ஓர் ஒப்பந்தமாகும். மேலும் இந்த ஒப்பந்தத்தைச் செய்யும் பொழுது படைத்த இறைவனும், படைப்பினங்களான மக்களும் சாட்சிகளாக்கப்படுகின்றனர். திருமண உரையில் பெரும்பாலும் ஓதப்படும் இந்த வசனங்கள் இந்த ஒப்பந்தத்தில் கணவன் அல்லது மனைவியின் தரப்பிலிருந்து கோளாறு ஏதும் உருவாக்கப்பட்டு, அதனை சரிவரச் செப்பனிடாவிட்டால், அந்தக் கோளாறை உருவாக்கியவனின் மீது இறைவனின் சினம் சீறிப்பாய்ந்து அவனை நரகத்திற்குரியவனாக ஆக்கிவிடும் என்பதைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன. திருமறையின் மூன்று இடங்களில் வரும் இந்த வசனங்களில் இறைநம்பிக்கையாளர்களை நோக்கி – இறைவனின் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

Thursday, February 9, 2012

காதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

காதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

மேற்கத்திய கலாசாரம் ஈன்றெடுத்த குழந்தைகள்தான் இன்றைய காதலும் காதலர் தினங்களும் சீரழிந்த இந்த மேற்கத்திய கலாசாரத்தின் வெளிப்பாடுகள்தான் இவைகள். இன்றைய இளவல்களை கவர்ந்திழுக்கின்ற ஒரு காரணியாக நவீன காதல் அமைந்திருக்கின்றது.

தமது திருமண வாழ்வைத் தீர்மானிப்பதில் தம்மை தாலாட்டி சீராட்டி வளர்த்த தமது தாய் தந்தையரின் தலையீடுகள் சிறிதும் இன்றி முழுவதுமாக தமது சுயவிருப்பின் அடிப்படையிலேயே தமது திருமண வாழ்வை அமைத்துக் கொள்ள விரும்புகின்றது இன்றைய இளைஞர் சமுதாயம்.

தற்போதைய சூழற்காரணிகளும் அதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்றது. அந்நிய ஆண்களும் பெண்களும் தனிமையில் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களும் கலந்து பழகுவதற்கான வாய்ப்புக்களும் தாராளமாகவே காணப்படுகின்றன.

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் தனியார் கல்விநிலையங்கள் அலுவலகங்கள் மற்றும் பூங்காக்கள் போன்றவற்றில் அந்நிய ஆண்களும் பெண்களும் எந்தவிதமான தடங்கல்களுமின்றி கலந்து பழகுகின்றனர். பழக்கம் தொடர்ந்து கடைசியில் தம்மை ஈன்றெடுத்த தாய் தந்தையருக்கு தெரியாமலேயே அல்லது அவர்களது விருப்பத்திற்கு மாற்றமாக திருமணம் நடந்தேறுகிறது.

தற்போதைய தகவற் தொழிநுட்ப யுகத்தில் இன்றைய காதலையும் காதல் திருமணங்களையும் ஊக்குவிப்பதில் இணையங்களும் (internet) சினிமாக்களும் பெரும் பங்கு வகிக்கின்றன.

இந்த காதல் திருமணங்கள் ஆற அமர நிதானமாக சிந்தித்து நடப்பவை அல்ல. மாறாக உணர்வுகளின் உந்துதல்களால் நடைபெறுபவை ஆகும். இவ்வாறு நடந்தேறிய திருமணங்கள் சில மாதங்கள் சில வருடங்கள் சந்தோஷமாக கழிகின்றன‌. பின்னர் கோலங்கள் கலைந்து வாழ்வின் யதார்த்தங்கள் புரிகையில் இவர்களால் அதற்கு முகம் கொடுக்க முடிவதில்லை. பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் என்கின்ற தன்மைகள் அஸ்த்தமித்து அற்பப்பிரச்சினைகளும் சுனாமியாய் உருவெடுக்கின்றன.

உறவுகள் சீர்குலைந்து காதல் கசந்து விருப்புக்கள் வெறுப்பாய் மாறி பூகம்பமாய் வெடிக்கின்றது. நிறைகள் அஸ்த்தமனமடைந்து குறைகள் உதயமாகி குறைகளே பூதாகரமாக காட்சியளிக்கத் தொடங்குகின்றன. கடைசியில் இது விவாகரத்தில் சென்று முடிகின்றது.

அண்மைக்கால பத்திரிகைச் செய்திகளும் ஆய்வறிக்கைகளும் உணர்த்தி நிற்கின்ற ஒரு விடயம் விவாகரத்தில் அதிகளவு இடத்தைப் பிடித்திருப்பதும் தற்போதைய திருமணங்களில் மிகக் குறைந்த ஆயுளை கொண்டதுமான திருமணங்கள் தற்போதைய காதல் திருமணங்களேயாகும்.

மேலும் தமிழ் சினிமாக்களில் சித்தரிக்கப்படுவது போன்று தற்போதைய காதலானது தெய்வீகத் தன்மை வாய்ந்ததாயின் அதில் துளியளவு கூட ஏமாற்றம் தோல்வி துரோகம் என்பன இருக்கக் கூடாது. எனவே இன்றைய இந்த காதல் திருமணங்கள் தெய்வீகத் தன்மை வாய்ந்தது புனிதமானது என்ற வாதங்கள் போலித்தனமானவையாகும்.

இன்றைய காதலால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான். தாய் தந்தையரையும் ஏனைய உறவுகளையும் துறந்து ஆரம்பிக்கின்ற இந்த வாழ்வில் காதலனால் கைவிடப்படுகின்ற சந்தர்ப்பத்தில் ஆதரிப்போரின்றி தவிக்கின்றனர். இதற்கு தீர்வாக பலர் தற்கொலையை கையிலெடுத்து நிரந்தர நரகத்தை நோக்கி பயணிக்கின்றனர். தற்கொலை தொடர்பாக நபிகளாரின் பொன்மொழி பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் என்றென்றும் குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரகத்திலும் நிரந்தரமாக விஷத்தைக் கையில் வைத்துக் கொண்டு குடித்துக் கொண்டேயிருப்பார். யார் கூறிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவ்வாயுதம் தமத கையில் இருக்கும் நிலையில் நரகத்தில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் குத்திக் கொண்டேயிருப்பார்.’

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: புஹாரி 5778

இன்றைய காதல் சில நேரங்களில் தற்கொலைக்கும் வழிவகுத்து எம்மை நிரந்தர நரகவாதியாகவும் ஆக்கி விடுகிறது. மேலும் அந்நிய ஆண்களும் பெண்களும் நெருங்கிப் பழகுவதை மார்க்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

கள்ளக்காதல் கொள்வதையும் இஸ்லாம் தடை செய்கிறது. ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.

‘உங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு மணமுடித்துக் கொள்ளுங்கள் – அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும் விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளக் காதல் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால் விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்; தவிர உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ – அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்இ மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான் ‘. (அல்குர்ஆன் 4:25)

மேலுள்ள அருள் மறை வசனம் திருட்டுத் தனமாக காதல் கொள்வதை தடைசெய்கிறது.

திருமணத்திற்கு முன் ஓர் ஆண் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புவது அல்லது ஓர் பெண் ஆணைத் திருமணம் செய்ய விரும்புவதுதான் காதல் என்று சொன்னால் அதனை இஸ்லாம் தாராளமாக அனுமதிக்கின்றது. மாறாக இன்றைய காலகட்டத்தில் காதலின் பெயரால் இடம்பெறுகின்ற வரம்பு மீறிய செயற்பாடுகளைத்தான் தடை செய்கின்றது.

மேலும் திருமணம் செய்ய விரும்புகின்ற பெண்ணை நேரில் நன்கு பார்த்து நாம் எதிர்பார்க்கும் விடயங்கள் பண்புகள் அவளிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகின்றது. இது தொடர்பாக நபிகளாரின் பொன்மொழிகள் பின்வருமாறு எடுத்தியம்புகின்றன.

‘நான் நபி (ஸல்) அவர்களுடன் வீட்டிலிருந்த போது ஒருவர் வந்து தான் அன்சாரி பெண்ணொருத்தியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை நீங்கள் பார்த்தீர்களா? எனக் கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை நாயகமே! நான் அவளைப் பார்க்கவில்லை என்றார். அப்படியானால் முதலில் அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள். மதீனாவாசிகளின் கண்களில் சிறிது கோளாறு இருக்கின்றது என்றார்கள் ‘.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்

‘நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் தூதனுப்பினேன். இதனைக் கேள்வியுற்ற நபி (ஸல்) அவர்கள் நீங்கள் பெண்ணைப் பார்த்தீர்களா? என வினவினார்கள். இல்லை என்றேன். அவ்வாறாயின் அப்பெண்ணை பார்த்துக் கொள்ளுங்கள். இம்முறையைக் கையாள்வதால் உங்களுக்கிடையில் நட்பும் நல்லிணக்கமும் ஏற்பட வழிபிறக்கும் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர்: முகீரா பின் ஹுஃபா(ரழி) நூல்: திர்மிதீ நஸயீ

மேற்படி நபிமொழிகளில் இருந்து ஒருவர் திருமணம் செய்வதாக இருந்தால் கட்டாயம் பெண்ணைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதை அறியலாம். மேலும் திருமணம் செய்து கொடுக்கப்படுவதாக இருந்தால் கட்டாயம் பெண்ணின் விருப்பம் கேட்கப்பட வேண்டும்.

‘பெண்ணின் சம்மதமின்றி செய்யப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் இரத்து செய்துவிட்டார்கள் ‘ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி 5136/ 6968/ 6970

அதே வேளை பெண்ணைப் பொறுத்த வரையில் விரும்பிய ஆண்மகனை தானாக திருமணம் செய்ய முடியாது. மாறாக பொறுப்பாளரே விரும்பிய ஆண்மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என இஸ்லாம் பணிக்கின்றது.

இவ்வாறு செய்கின்ற போது பெண்கள் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றார்கள். இதனால் பெண்ணுடைய வாழ்வுக்கு உரிய உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

அதே சமயம் பெண் ஒருவனை விரும்புகின்ற போது அவன் இஸ்லாமிய அடிப்படையில் சீதனமின்றி மஹர் கொடுத்து திருமணம் முடிக்க முன்வருகின்ற போது பெற்றோர் பெண்ணின் உணர்வினை மதித்து அவளது விருப்பப்படி திருமணம் செய்து கொடுக்க முன் வர வேண்டும்

மேலும் திருமணம் செய்து கொள்வதற்காக ஒருவரை ஒருவர் விரும்புகின்ற போது விரும்புபவரும் விரும்பப்படுபவரும் முஸ்லிமாக இருத்தல் வேண்டும். முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதோரை திருமணம் செய்வதை இஸ்லாம் தடைசெய்கின்றது. முஸ்லிமும் முஸ்லிமல்லாதோரும் விரும்புகின்றபோது முஸ்லிமல்லாதோர் இஸ்லாத்தை ஏற்றதன் பிற்பாடு திருமணம் செய்து கொள்ள முடியும்.

ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.

“(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை -அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும் அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்;. அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும் ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள் உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன் 2:221)

அதே சமயம் ஒரு ஆணோ பெண்ணோ விரும்புகின்ற வாழ்க்கை மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் காணப்படும் போது அதனைத் தடுப்பது குற்றமாகும்.

எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்த வகையில் எமது வாழ்வை அமைத்து ஈருலகிலும் ஏகநாயனின் திருப்தியையும் மன்னிப்பையும் பெறுவோமாக



எஸ்.எல்.எம். – காத்தான்குடி
.

Sunday, January 8, 2012

பேஸ்புக் சகோதரிகளுக்கு எச்சரிக்கை!

பேஸ்புக் சகோதரிகளுக்கு எச்சரிக்கை!







பேஸ்புக் பாவனையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பாவனையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச ஆபத்து உருவாகியுள்ளது. எனவே சகோதரிகளே பேஸ்புக்கில் உங்கள் புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

அன்பின், சினிமா தார‌கைக‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ளையும் த‌ம‌து சொந்த‌ப் புகைப்ப‌ட‌ங்க‌ளையும் பாவிக்கும் ச‌கோத‌ரிக‌ளுக்கு,

ப‌ர‌ந்து விரிந்த‌ இணைய‌த்த‌ள‌த்தில் உங்க‌ளை பிர‌தி நிதித்துவ‌ப்ப‌டுத்துவ‌தே உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் தான்…

அது ஒரு புற‌ம் இருக்க‌ ஒரு சில‌ கேள்விக‌ளை கேட்க‌ நினைக்கின்றேன்.!!

முத‌ல் பார்வையிலேயே உங்க‌ளைப்ப‌ற்றி எந்த‌ வ‌கையான‌ சிந்த‌னையை அடுத்த‌வ‌ர் ம‌ன‌தில் ஏற்ப‌டுத்த‌ விரும்புகின்றீர்க‌ள்????

நீங்க‌ள் விய‌ர்வை சிந்தி தூய்மையாய் உழைக்காம‌ல் த‌ம் உட‌லை வைத்து ச‌ம்பாதிக்கும் ஒரு வெட்க‌ம் கெட்ட‌ கூட்ட‌த்தின் ர‌சிகை என்ப‌தை வெளிப்ப‌டுத்திக்கொள்ள‌ விரும்புகின்றீர்க‌ளா??

உங்க‌ளுக்கு என்ன‌ பெருமை அவ‌ர்க‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ளை பாவிப்ப‌த‌ன் மூல‌ம் வ‌ருகின்ற‌து???

உங்க‌ளையும் அந்த‌ வெட்க‌ம் கெட்ட‌ கூட்ட‌த்தின் ஒருவ‌ராக‌ பிற‌ர் எண்ணிக்கொள்ள‌ அனும‌திப்பீர்களா??

சொந்த‌ப் புகைப்ப‌ட‌ங்க‌ளை பாவிக்கும் நீங்க‌ள், உங்க‌ளை நீங்க‌ளும் விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ முனைகின்றீர்க‌ளா??

நீங்க‌ள் அடுத்தவ‌ரால் விரும்ப‌ப் ப‌ட‌வேண்டும் என்று விரும்புகின்றீர்க‌ளா??

உங்க‌ளைப்ப‌ற்றி மிகையாக‌ எடை போட்டாலும் த‌வ‌றில்லை குறைவாக‌ எடை போட‌க்கூடாது என்று நினைக்கின்றீர்க‌ளா??

உங்க‌ள் குறைக‌ளை சொல்லா விட்டாலும் ப‌ர‌வாயில்லை பிற‌ரால் புக‌ழ‌ப்ப‌ட‌ வேண்டும் என்று எண்ணுகின்றீர்க‌ளா??

அப்ப‌டியும் இல்லை என்றால் இனைய‌த்தின் மூல‌மாக ஆபாச‌மான‌ த‌ள‌ங்க‌ளுக்கு உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ளை அனுப்ப‌ நீங்க‌ளே வ‌ழி செய்கின்றீர்களா?

எது எப்ப‌டியோ.. face book மூல‌ம் உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் வேறு த‌ள‌ங்க‌ளில் உலா வ‌ர‌ வாய்ப்புக்க‌ள் அதிக‌ம் என்ப‌து உண்மையே..

இதோ சில‌ வ‌ழிமுறைக‌ளைச்சொல்கிறேன் முடியுமானால் சிந்தித்துப்பாருங்க‌ள்..

1) உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ளை யாருக்கெல்லாம் காட்ட‌ நினைக்கின்றீர்க‌ளோ த‌னியாக‌க் காட்டிக்கொள்ளுங்க‌ள்.. பொது இட‌ங்க‌ளில் பாவித்து பெண்மையின் மென்மையை காய‌ப்ப‌டுத்தாதீர்க‌ள்…

2)பெண் என்ப‌வ‌ள் காட்சிப்பொருள‌ல்ல‌ என்ப‌தை உண‌ர்ந்து கொள்ள‌ முய‌ற்சி செய்யுங்க‌ள்..
நீங்க‌ள் காட்சிப்ப‌டுத்தும் புகைப்ப‌ட‌ங்க‌ள் உங்க‌ள் எதிர்கால‌த்தையே கேள்விக்குறியாக்க‌லாம் என‌வே சிந்தித்து முடிவெடுங்க‌ள்..

3) நீங்க‌ள் இஸ்லாம் கூறும் வ‌கையில் உடைய‌மைப்பைக் கொண்டிருந்தாலும் அதுவும் தவிர்க்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விட‌ய‌ம் என்ப‌தை நினைவில் வைத்துக்கொள்ளுங்க‌ள்.
ந‌வீன‌ தொழில் நுட்ப‌த்தின் மூல‌ம் எந்த‌ள‌வு ந‌ன்மை விளைகின்ற‌தோ அந்த‌ள‌வு தீமையும் ம‌னித‌ ச‌மூக‌த்திற்கு விளைந்து கொண்டு தான் இருக்கின்ற‌து..
உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் மூல‌ம் நீங்க‌ள் துஷ்பிர‌யோக‌த்திற்கு உட்ப‌ட‌லாம்…

4)உங்க‌ளுக்கு உங்க‌ள் அழ‌கைக்காட்ட‌வே வேண்டும் என்றிருந்தால் இருக்க‌வே இருக்கிர‌து ப‌ல‌ வ‌ழிக‌ள் அதில் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்க‌ளேன்..

1 உங்க‌ள் த‌ந்தையிட‌ம் தாயிட‌ம் காட்ட‌லாம்.
2 ச‌கோத‌ர‌ ச‌கோத‌ரிக‌ளிட‌ம் காட்ட‌லாம்
3 உங்க‌ள் க‌ற்பை ம‌ஹ‌ர் மூல‌ம் ஹ‌லால் ஆக்கிக் கொண்ட‌ உங்க‌ள் க‌ன‌வ‌ரிட‌ம் காட்ட‌லாம்
உங்க‌ளுக்கே உங்க‌ளுக்கென்று ஒரு உற‌வு (க‌ணவ‌ன்)இருக்க‌ யாருக்கோவெல்லாம் உங்க‌ள் உட‌லை, உங்க‌ள் அழ‌கைக்காட்டி ஏன் வீணாக்குகின்றீர்க‌ள்.
க‌ணவ‌னுக்காக‌ அழ‌ங்க‌ரித்து அவ‌ரை ம‌கிழ்விப்ப‌த‌ற்கே ந‌ன்மைக‌ள் கிடைக்கும் என்றிருக்க‌ பாவ‌த்தின் பால் ஏன் விரைகின்றீர்க‌ள்??.

நீங்க‌ள் த‌னித்துவ‌மாக‌ இருக்க‌ வேண்டும் என்று விரும்பினால் உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ளையும், சினிமா ந‌டிகைக‌ளின் ப‌ட‌ங்க‌ளையும் த‌விர்த்து இன்னும் எத்த‌னையோ வ‌கையான ப‌ட‌ங்க‌ள் உள்ள‌ன‌ அவ‌ற்றில் ஒன்றைப் பா‌வித்துக்கொள்ளுங்க‌ள்.

இல்லையெனில் உங்க‌ள் பெய‌ரை புகைப்ப‌ட‌மாக‌ப் பாவியுங்க‌ள்.

த‌ய‌வு செய்து முஸ்லீம் பெய‌ர்க‌ளுட‌ன் + இறை நிராக‌ரிப்பாள‌ர்க‌ளின் புகைப்ப‌டங்க‌ளை இணைத்து இஸ்லாத்தின் புனிதத்துவ‌த்திற்கு க‌ள‌ங்க‌ம் விளைவிக்காதீர்க‌ள்.

இஸ்லாமிய‌ ஆடைக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டு (face book) துஷ்பிர‌யோக‌ம் செய்யாதீர்க‌ள்.

நீங்க‌ள் பாவிக்கும் புகைப்ப‌ட‌த்திற்கு விசுவாச‌மாக‌ ந‌ட‌ந்து கொள்ளுங்க‌ள். உதார‌ண‌மாக‌ ஹிஜாப் அணிந்த‌ பெண்ணை நீங்க‌ள் profile picture ஆக‌ப் பாவிக்கின்றீர்க‌ள்.. ஆனால் நீங்க‌ள் பாவிக்கும் செய்திக‌ளோ சினிமாவும் மார்க்க‌த்திற்கு முற‌னான‌ விட‌ய‌ங்க‌ளும் தான். இது எந்த வ‌கையில் ஒன்றுக்கொன்று ஒன்றிப்போகும்??

உங்க‌ளால் இஸ்லாத்திற்கு எந்த‌க் கெடுத‌லும் ஏற்ப‌ட‌க்கூடாத‌ல்ல‌வா அத‌ற்காத்தான் இந்த‌ ஆலோச‌னைக‌ள்..

“உங்களால் தான் மாற்ற‌ங்க‌ள் நிக‌ழ்கிற‌து என்ப‌தை ம‌ற‌க்க‌ வேண்டாம்”…

இந்த‌ ஆலோச‌னைக‌ள் யார‌து ம‌ன‌தையும் புண்ப‌டுத்துவ‌த‌ற்காக‌ எழுத‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தை அன்புட‌ன் தெரிவித்துக் கொள்கிறோம்…

இது ஆண்களுக்கும் பொருந்தும்.

by-பெண்சாட்சி & Nasreen Fathima


©2012, copyright Dharulhuda

Sunday, January 1, 2012

முஃமினான சகோதரியே!

                               முஃமினான சகோதரியே!   முஃமினான சகோதரியே! உன் முன்னால் உயர்வான பதினோறு உபதேசங்களை வைக்கின்றோம். உன் நலன் கருதிய மார்க்கச் சகோதரனாய். அவற்றை நீ கடைப்பிடித்துக் கொள். நிச்சயமாக அல்லாஹ் நாடினால் நீ பாக்கியசாலியாக வாழ்ந்து, புகழத்தக்க நிலையில் மரணிப்பாய்.மேலும் இவற்றை கடைப்பிடித்தொழுக அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொள்.

1. சங்கை மிகு இறை வேதத்திலும் அவனது திருத்தூதரின் நடைமுறையிலும் வணக்கங்களாக மார்க்கமாக்கப்பட்டவற்றில் அல்லாஹ்வை மட்டுமே நீ வணங்கி வர வேண்டும்.

2. கொள்கைகளிலும் வணக்கத்திலும் அல்லாஹ்விற்கு இணை வைப்பதை விட்டும் நீ தவிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இணை வைப்பது நல்ல செயல்களை அழித்து, நஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.

3. பித்அத்துக்களைத் தவிர்ந்து கொள். அது வணக்க வழிபாடுகளில் இருந்தாலும் அல்லது கொள்கைகளில் இருந்தாலும் சரியே. ஏனெனில் பித்அத் அனைத்தும் வழிகேடுகளாகும். வழிகேட்டைப் பின்பற்றுபவன் நரகத்திற்குச் செல்வான். பித்அத் என்பது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டவையாகும்.

4. தொழுகையில் முழுமையான பேணுதலுடன் இருந்து வா. நிச்சயமாக யார் தொழுகையைப் பேணி பாதுகாத்து வருகிறார்களோ, அவர்கள் மற்றவற்றையும் மிகப் பேணுதலாக செய்து வருவார்கள். யார் தொழுகையைப் பாழாக்கி விடுகிறார்களோ அவர்கள் மற்றவற்றையும் பாழ்படுத்துபவர்களாவார்கள்.

5. உனக்கு கணவனிருந்தால் அவனுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள். அவன் விரும்புகின்ற எதையும் நீ மறுத்து விடாதே. அவன் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறு செய்யாமல் ஏவுகின்ற அவனது ஏவல் விலக்கல்களுக்கு மாறு செய்யாதே.

6. உனது கணவன் ஊரிலிருக்கும் போதும் இல்லாத போதும் உனது கற்பையும் அவனது பொருளையும் பாதுகாத்துக் கொள்.

7. உனது அண்டை வீட்டுப் பெண்களிடம் சொல்லாலும் செயலாலும் அழகிய முறையில் நடந்து கொள்.

8. உனது பெற்றோருக்கு உபகாரம் செய்வது கொண்டு அவர்களிடம் நன்முறையில் நடந்து கொள்ளவும். அவர்கள் இருவரிடத்திலும் சொல், செயலால் வேதனை செய்யாமலிருப்பதற்கும், நன்மையான காரியங்களில் அவர்கள் இருவருக்கும் கட்டுப்பட்டு நடந்து கொள்ளவும். நன்மையல்லாதவற்றை அவர்கள் ஏவினால் அவைகளுக்கு கட்டுப்படாமல் இருப்பதற்கும் பழகிக்கொள். ஏனெனில் படைத்தவனுக்கு மாறு செய்வதில் படைக்கப்பட்டவர்களுக்கு கட்டுப்படுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

10. குழந்தைகள் இருப்பின் சிறந்த முறையில் அவர்களுக்கு உண்மை, ஆரோக்கியம், சிரந்த சொற், செயல்கள், நல்லொழுக்கம், அழகிய குணங்கள் போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க பழகிக் கொள். ஏழு வயதை அடையும் போது தொழும் படியும் ஏவிக்கொள்.

11. திக்ரு செய்து அல்லாஹ்வை தியானிப்பதையும், தர்மம் செய்வதையும் அதிகப்படுத்திக் கொள். உனக்கும், உனது கணவன், குழந்தைகளுக்கும் போக எஞ்சியவை குறைவாக இருப்பினும் ஏழைகளுக்குக் கொடுத்து உதவிக்கொள். ஏனெனில் நிச்சயமாக தர்மம் தீய விபத்துக்களை விட்டும் பாதுகாக்கிறது.


இஸ்லாமிய பெண்ணுக்கு ஒரு நூல்

இஸ்லாத்தில் பெண்கள் நிலை

இஸ்லாத்தில் பெண்கள் நிலை

இஸ்லாத்தில் பெண்களுக்கிருக்கிற உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு முன் பெண்களை மற்ற சமூகத்தினர் எப்படி நடத்திக் கொண்டிருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவது அவசியமாகும்.

கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் கிடையாது. உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே என்றனர். இன்னும் அப்பெண்களுக்குச் சொத்துரிமை, கொடுக்கல், வாங்கல் போன்ற உரிமைகள் தடுக்கப் பட்டிருந்தன. அவர்களில் பிரபல்யமான தத்துவஞானியான சாக்ரடீஸ் என்பவன் பெண்கள் இருப்பது உலகின் வீழ்ச்சிக்கு மிகப்பெரும் மூல காரணமாகும். மேலும் பெண்கள் விஷ மரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத் தோற்றம் அழகாக இருக்கும். எனினும் அதன் கனிகளை சிட்டுக்குருவிகள் தின்றவுடனேயே இறந்துவிடுகின்றன என்று கூறியுள்ளான்.

ரோமானியர்கள் பெண்களை உயிரற்ற ஒரு பொருளாகவே கருதி வந்துள்ளனர். அவர்களிடம் பெண்களுக்கு எந்த மதிப்பும் உரிமையும் இருந்ததில்லை. பெண்கள் உயிரற்ற பொருளாகக் கருதப்பட்டதால்தான் அவர்களைக் கொதிக்கின்ற எண்ணெயை ஊற்றியும், தூண்களில் கட்டியும் வேதனை செய்தார்கள். இதுமட்டுமின்றி குற்றமற்ற பெண்களை குதிரைகளின் வால்களில் கட்டி அவர்கள் மரணித்து போகின்ற அளவிற்கு மிக விரைவாக ஓட்டிவிடுவார்கள்.

பெண்கள் விஷயத்தில் இந்தியர்களின் கண்ணோட்டமும் இவ்வாறுதான் இருந்துள்ளது. அவர்கள் இன்னும் ஒருபடி அதிகமாக கணவன் இறந்துவிட்டால் அவனின் சிதையுடன் மனைவியையும் எரித்து விடுபவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.

சீனர்கள் பெண்களை நற்பாக்கியத்தையும் செல்வங்களையும் அழித்துவிடக்கூடிய தண்ணீருக்கு ஒப்பாக்கினர். அவர்கள் தம் மனைவியரை உயிரோடு புதைத்து விடுவதற்கும் விற்றுவிடுவதற்கும் உரிமை பெற்றிருந்தனர்.

பெண்கள் சாபத்திற்குரியவர்களென யூதர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் அவள் தான் ஆதம்(அலை) அவர்களை வழிகெடுத்து மரக்கனியை சாப்பிடச் செய்துவிட்டாள். மேலும் பெண்ணுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அவள் அசுத்தமானவள், வீட்டையும் அவள் தொடும் பொருளையும் அசுத்தப்படுத்திவிடக்கூடியவள் எனவும் கருதுகிறார்கள். பெண்ணுக்குச் சகோதரர்களிருந்தால் அவள் தன் தந்தையின் சொத்தில் சிறிதும் உரிமை பெறமாட்டாள் எனவும் கருதுகிறார்கள்.

கிறிஸ்தவர்கள் பெண்களை ஷைத்தானின் வாசலாகக் கருதுகிறார்கள். கிறுத்தவ அறிஞர்களில் ஒருவர் பெண் மனித இனத்தைச் சார்ந்தவளல்ல எனக் கூறினார். இன்னும் புனித பூனபெஃன்தூரா என்பவன் கூறினான்: ”நீங்கள் பெண்களைக் கண்டால் அவளை மனி த இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதிவிடாதீர்கள். அது மட்டுமல்ல அவளை ஒரு உயிருள்ள ஜீவனாகக் கூட கருதாதீர்கள். மாறாக நீங்கள் காண்பது நிச்சயமாக ஷைத்தானின் உருவத்தைத்தான். இன்னும் நீங்கள் செவியேற்கும் அவளது சப்தம் பாம்பின் சீற்றம் தான்”"

மேலும் கடந்த(19ஆம்) நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆங்கிலேயே பொதுச் சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாக இருந்தனர். இதுபோன்றே பெண்களுக்கென எந்த தனிப்பட்ட உரிமைகளும் கிடையாது. இன்னும் அவள் அணியும் ஆடை உட் பட எந்தப் பொருளையும் சொந்தப்படுத்திக் கொள்வதற்கும் உரிமையில்லை. 1567 ஆம் ஆண்டு ஸ்காட்லண்ட் பாராளுமன்றம் பெண்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கக்கூடா தென சட்டம் இயற்றியது. இவ்வாறே எட்டாவது ஹென்றியின் காலத்தில் ஆங்கிலேயப் பா ராளுமன்றம் பெண்கள் அசுத்தமானவர்கள் என்பதால் இன்ஜீலைப் படிக்கக் கூடாதென சட்டம் இயற்றியது.

பிரஞ்சுக்காரர்கள் 586 ஆம் ஆண்டில் பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா? இல்லையா? என ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு சபையை அமைத்தனர். அச்சபை பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்கள்தான். எனினும் அவர்கள் ஆண்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்களென முடிவு செய்தது. 1805-ம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் சட்டத்தில் ஒரு கணவன் தனது மனைவியை விற்பது கூடுமென்றே இருந்துள்ளது. மனைவியின் விலை ஆறு பெனி (அரை ஷிலிங்) என நிர்ணயமும் செய்யப்பட்டது.

இஸ்லாத்திற்கு முன்பு வரை அரேபியர்களிடத்தில் பெண்கள் இழிந்த பிறவிகளாக இருந்தனர். அவளுக்கு சொத்துரிமை கிடையாது. அவர்களை ஒரு பொருட்டாகக் கருதப்பட மாட்டாது. அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. மட்டுமல்லாமல் அவர்களில் பெரும்பாலோர் தம் பெண்மக்களை உயிருடன் புதைப்பவர்களாக இருந்திருக்கின்றனர்.

இவ்வனைத்து அநியாயங்களைப் பெண்களை விட்டும் நீக்கவும் நிச்சயமாக ஆண்களும் பெண்களும் சமமானவர்கள்தான் என விளக்கவும்தான் இஸ்லாம் வந்தது. எனவே ஆண்களுக்கு உரிமைகளிருப்பது போல் பெண்களுக்கும் உரிமைகளிருக்கின்றன.

அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், பெண்ணிலிருந்தே படைத்தோம். பின்னர் நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களைப் பல கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் எவர் மிக பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர் தாம் அல்லாஹ்விடத்தில் மிக்க கண்ணிய மானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், யாவற்றையும் சூழ்ந்தறிபவன். (49:13)

ஆண் அல்லது பெண் ஈமான் கொண்ட நிலையில் நற்கருமங்கள் செய்தால் அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதமிழைக்கப்பட மாட்டார்கள்.(4:124)

மனிதன் தன் பெற் றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென நாம் அறிவுறுத்தியுள்ளோம்.(46:15)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஃமின்களில் பூரண ஈமானுடையவர்கள் அவர்களில் அழகிய குணமுடையவர்களே. தனது மனைவியிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து மனிதர்களில் நான் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டியவர் யார்? எனக் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உனது தாய் எனக் கூறினார்கள். பின்பு யார்? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் உ னது தாய் எனக் கூறினார்கள். பின்பு யார்? எனக் கேட்டார். உனது தாய் என்றே கூறினார்கள். பின்பு யார்? எனக் கேட்டார். உனது தந்தை எனக்; கூறினார்கள்.(புகாரி,முஸ்லிம்)

இது பெண்கள் பற்றிய இஸ்லாத்தின் சுருக்கமான கண்ணோட்டமாகும்.

பெண்களுக்குரிய பொதுவான உரிமைகள்

நிச்சயமாக பெண்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய பொதுவான உரிமைகள் உ ள்ளன. அவற்றை அவள் விரும்பும்போது பூரணமாகச் செய்து கொள்வதைச் சமூகம் அங்கீகரிக்கவும் செய்கின்றது. அவ்வுரிமைகள் வருமாறு:

1- சொந்தமாக்கிக் கொள்ளல்: வீடுகள், விவசாய நிலங்கள், தோட்டங்கள், வெள்ளி, தங்கம், கால்நடை வகைகள் இவற்றில் விரும்பியவற்றை ஒரு பெண் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம். அப்பெண் தாயாக அல்லது மகளாக அல்லது சகோதரியாக இருப்பி னும் சரி.

2- திருமணம் செய்வது, கணவனைத் தேர்வு செய்வது, தனக்கு விருப்பமில்லாதவனை ஏற்கமறுப்பது, தனக்கு இடையூறு ஏற்பட்டால் திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள் வது போன்றவற்றிலும் அவள் உரிமை பெறுகிறாள். இவை பெண்களுக்குரிய உரிமைகள் என்பதில் ஏகமனதான முடிவாகும்.

3- தனக்கு அவசியமானவற்றைக் கற்றுக் கொள்தல்: உதாரணமாக அல்லாஹ்வை அறிவது, அவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்களையும் அதை நிறைவேற்றும் முறையையும் அறிவது. இன்னும் தன்னுடைய கடமைகளையும் தனக்குத் தேவையான ஒழுக்கங்களையும் தான் கடைபிடிக்க வேண்டிய சிறந்த பண்பாடுகளையும் அறிவது. ஏனெனில் வண க்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதை நீ அறிந் துகொள்.(47:19) என அல்லாஹ்வும், கல்வியைத் தேடுவது ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும்(இப்னுமாஜா) என நபி(ஸல்) அவர்களும் பொதுவாகவே சொல்லியிருப்பதால்.

4- செலவு செய்தல்: தனது பொருளில் தான் நாடியதைத் தர்மம் செய்து கொள்வதற்கும், தனக்கும் தனது கணவன், பிள்ளைகள், தாய், தந்தையர்கள் இவர்களில் தான் விரும்பியவர்களுக்கு வீண், விரயமில்லாத அளவுக்கு செலவு செய்து கொள்வதற்கும் உரிமை பெறுகிறாள். இவ்விஷயத்தில் இவர்களும் ஆண்களைப் போன்று தான்.

5- விருப்பு, வெறுப்புக் கொள்தல்: அவள் நல்ல பெண்களை விரும்பவும், அவர்களைச் சந்திக்கவும், அன்பளிப்புகள் வழங்கவும் செய்யலாம். இன்னும் அவர்களுக்குத் தபால்கள் அனுப்பி அவர்களின் நிலைமைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கஷ்டகாலங்களில் அவர்களுக்கு ஆறுதலும் சொல்லிக் கொள்ளலாம். அல்லாஹ்விற்காக கெட்ட பெண்களை வெறுத்து, அவர்களை விட்டும் ஒதுங்கி விடுவதும் கூடும்.

6- மரணசாசனம்: அவளின் சொத்தில் மூன்றில் ஒன்றை அவளது ஜீவிதகாலத்தில் மரண சாசனம் எழுதிக்; கொள்வதற்கும் அதை எவ்வித ஆட்சேபணை செய்யாமல் செயல்படுத்து வதும் அவளது உரிமைகளிலுள்ளதாகும். ஏனெனில் மரணசாசனம் எழுதுவதென்பது பொதுவான மனித உரிமைகளைச் சார்ந்ததாகும். எனவே இது ஆண்களுக்கிருப்பது போன்று பெண்களுக்குமிருக்கிறது. ஏனெனில் அல்லாஹ்விடம் நன்மையைப் பெறுவதை விட்டு யாரும் யாரையும் தடுக்க முடியாது. என்றாலும் மரணசாசனம் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாகாமலிருப்பது நிபந்தனையாகும். இதில் ஆண்களும் பெண்களும் சமமே.

7- பட்டாடை, தங்கம் அணிதல்: பட்டையும், தங்கத்தையும் பெண்கள் அணிந்து கொள்வது கூடும். இவ்விரண்டும் ஆண்களுக்கு ஹராமாகும்.

8- அலங்கரித்துக் கொள்ளல்: தனது கணவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்ள உரிமை பெறுகிறாள். எனவே அவள் சுர்மா இட்டுக்கொள்ளவும் விரும்பினால் இரு கன்னங்களிலும் உதடுகளிலும் சிகப்புச்சாயம் வைத்துக் கொள்ளவும் செய்யலாம். மிக அழகிய அணிகலன்கள் அணிந்து கொள்ளலாம். எனினும் முஸ்லிமல்லாத மற்றும் தவறான நடத்தையுள்ள பெண்களுக்கே உரிய ஆடைகளை அணியக்கூடாது. இவற்றை அவள் அணியக் கூடாது என்பது சந்தேகம் தவறுகளிலிருந்து தூரமாகுவதற்காகவே.

9- உண்பது, குடிப்பது: நல்ல, சுவையான பானங்களை பருகவும் அதுபோன்ற உணவுகளை உண்ணவும் அவளுக்கு உரிமையுண்டு. உண்பதிலும் குடிப்பதிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எந்தப் பாகுபாடுமில்லை. இவ்விரண்டில் ஆண்களுக்கு அனுமதி க்கப்பட்டுள்ள அனைத்தும் பெண்களுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிற ன்: உண்ணுங்கள் பருகுங்கள் ஆனால் வீண்விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக வீண்விர யம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை (7:31) இங்கு இருபாலாரையும் நோக்கியே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கணவன் மீது மனைவிக்குரிய கடமைகள்

ஒரு பெண்ணுக்கு அவளது கணவன் செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட கடமைகளிருக் கின்றன. இக்கடமைகள் தனது கணவனுக்கு அவள் செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட கட மைகளுக்குப் பகரமாகிவிடுகின்றன.

அவை அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாற்றமில்லாக் காரியங்களில் கணவனு க்கு கட்டுப்பட்டு நடப்பது, அவன் உண்பதற்கும் பருகுவதற்கும் தயார் செய்து கொடுப்ப து, அவனது படுக்கையைச் சீராக வைத்துக்கொள்வது, அவனது குழந்தைகளுக்குப் பா லூட்டுவது, அவர்களை வளர்ப்பது, அவனது பொருளையும் மானத்தையும் பாதுகாப்பது, தனது கற்பைப் பாதுகாத்துக் கொள்வது, அனுமதிக்கப்பட்ட வகைகளில் அவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்வது, அழகுபடுத்திக் கொள்வது போன்றவைகளாகும். இவை ஒரு பெண் அவளது கணவனுக்குச் செய்ய வேண்டிய கட்டாயக் கடமைகளிலுள்ள வையாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: மனைவியர் மீது கணவர்களுக்கு உள்ள உரிமைகளைப் போல வே முறைப்படி கணவர்கள் மீது மனைவியருக்கும் உரிமையுண்டு (2:228)

முஃமினான பெண் இவற்றை அறிந்து எவ்வித நாணமும் பயமுமின்றி இவ்வுரிமைகளைக் கேட்டுப் பெறவேண்டும் என்பதற்காக இவற்றைக் கூறுகிறோம். இவைகளில் சிலவற்றை அவள் மன்னித்துவிட்டாலான்றி கணவன் இவைகளை முழுமையாக மனைவிக்கு வழங்குவது கடமை. அவள் விட்டுக் கொடுப்பதும் கூடும்.

1- அவன் தனது வசதி, ஏழ்மை நிலையைக் கவனித்து அவளுக்குச் செலவுக்குக் கொடுக்க வேண்டும். ஆடை, உணவு, குடிப்பு, மருத்துவம், தங்குமிடம் இவைகளுக்கான செலவை அவள் பெற்றுக் கொள்வாள்.

2- ஆண், பெண்ணை நிர்வகிக்க வேண்டியவனாகயிருப்பதால் அவளின் மானம், மரியாதை, உடல், பொருள், மார்க்கம் இவை அனைத்திலும் அவளைப் பாதுகாக்க வேண்டும். ஒரு பொருளைப் பாதுகாத்துக் கவனித்து வருவதென்பது அதனை நிர்வகித்து வருபவ னின் பொறுப்பிலுள்ளதாகும்.

3- அவளின் மார்க்க விஷயங்களில் அவசியமானவற்றை அவளுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும். அவனுக்கு இயலாவிட்டால் அல்லாஹ்வின் இல்லங்களிலும், கல்விக்கூடங்களிலும் நடைபெறுகின்ற பெண்களுக்குரிய மார்க்கக் கூட்டங்களுக்குச் சென்றுவர அனுமதியளிக்க வேண்டும். ஆனால் அவ்விடங்கள் குழப்பத்தை விட்டும் பாதுகாப்பானதாக இருப்பதோடு அவனுக்கோ அவளுக்கோ அதில் இடையூறு ஏற்படாமலிருப்பதும் அவசியமாகும்.

4- அவளிடம் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: அவர்களோடு நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள்.(4:119)

நல்ல முறையில் வாழ்க்கை நடத்துதல் எனபதில் உடலுறவில் அவளுக்குரிய உரிமை யைக் குறைத்திடாமலிருப்பது, திட்டுவது, இழிவுபடுத்துவது, கேவலப்படுத்துவது போன்ற வற்றால் அவளுக்கு தொல்லை கொடுக்காமலிருப்பது அகியவை அடங்கும். இன்னும் அவ ள் தனது உறவினர்களைச் சந்தித்து வருவதால் குழப்பம் ஏற்படுமென அவன் பயப்படாத போது அவளைத் தடுக்காமலிருப்பதும், அவளுக்கு முடியாத வேலைகளைச் செய்யும்படி சிரமம் கொடுக்காமலிருப்பதும், சொல்லிலும், செயலிலும் அவளுடன் அழகியமுறையில் நட ந்து கொள்வதும் அதில் அடங்கும்.

ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: தம் மனைவியரிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர். உங்களில் நான் எனது மனைவியரிடத்தில் சிறந்தவராக இருக்கின்றேன்.(திர்மிதி) மேலும் கூறினார்கள்: பெண்களைக் கண்ணியமாக நடத்துபவர்களே நல்லவ ர்கள். அவர்களை இழிவாக நடத்துபவர்கள் தாம் கெட்டவர்கள்.

இஸ்லாம்ஹவுஸ்.காம்