Thursday, April 18, 2013

“ வானத்திலிருந்து ஒரு துண்டை எறிந்து……”

Post image for “ வானத்திலிருந்து ஒரு துண்டை எறிந்து……”

“ வானத்திலிருந்து ஒரு துண்டை எறிந்து……”

அல் குர்ஆன் வழியில் அறிவியல்..
அல்லாஹ் தன் அருள்மறை குர் ஆனில், மனிதர்கள் நேர்வழி பெறுவதற்காக ஏராளமான வசனங்களை இறக்கி அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றான். ஆனால் பெரும்பான்மையான மனிதர்கள் அவ்வசனங்களை வெறும் கதை, கற்பனை என்று  அலட்சியப்படுத்தி மனோ இச்சையை பின்பற்றி வாழ்கிறார்கள்.
முன் சென்ற சமுதாயங்கள் இறைக்கட்டளையை புறக்கணித்ததன் காரணமாக பல்வேறு வழிகளில் அவர்கள் அழித்தொழிக்கப்பட்டர்கள். கடும் புயல். பூகம்பம், பெருவெள்ளம், கொடும் சுழல்காற்று, கல் மாரி என அல்லாஹ்வின் வேதனை அவர்களை பிடித்தது.
இன்றைய நவீன அறிவியலை கையில் வைத்துள்ள மனிதன் தன்னைக் காக்க பல்வேறு அறிவியல் நுட்பங்களை கையாளுகிறான். ஆனால் இறைவனின் கட்டளை வந்துவிடும் போது அவனால் ஒன்றும் செய்யமுடியாமல் கை சேதப்படுகிறான். கடந்த பிப்ரவரி 15  வெள்ளிக்கிழமை ரஷ்யாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் உலக மக்களையும் அறிவியல் சமுதாயத்தையும் அச்சமடைய செய்தது.
கடந்த நூறு வருடங்களில் மனித சமூதாயம் பார்த்திராத ஒரு மாபெரும் சம்பவம். வானிலிருந்து வந்து வீழ்ந்த ஒரு விண்கல் துண்டு அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. பூமிப் பந்தின் தலைக்கு மேலே லட்சக்கணக்கான மலைகள், பாறைகள், கற்கள் படு வேகத்தில் சுழன்று திரிகின்றன. இவைகளை ஆஸ்டிராய்ட் (Asteroid) குறுங்கோள் அல்லது முரண்கோள் என்று அழைக்கப்படுகிறது.
குறிப்பாக வியாழன் கோளுக்கும் செவ்வாய் கோளுக்கும் இடையில் இவை பெரும் கூட்டமாக வளையமாக (Asteroid  Belt) சூழ்ந்து மிதக்கின்றன. பூமிக்கு அருகில் சுற்றிவரும் சிறிய விண்கற்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்திற்கும் அதிகம். இவற்றுள் சுமார் 1% அளவே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நாஸாவின் நியோ திட்ட விஞ்ஞானிகள் ( NEO-NASA-  Near Earth Object Observation Program ) பூமிக்கருகே வரும் முரண்கோள்களை தொடர்ந்து கண்காணித்து எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
இப்படி அவர்கள் கண்டுபிடித்து முன் அறிவித்ததுதான் ஆஸ்ட்ராய்ட் 2012 DA14. இவ் விண்கல் துண்டானது சுமார் 150 அடி அகலமும் 130,000 மெட்ரிக் டன் எடையும் உள்ளது. வினாடிக்கு 8 கி. மீ வேகத்தில் 17200  மைல் நெருக்கத்தில் பூமியைக் பிப்ரவரி 15 ல் கடக்கும் என்று அறிவித்தனர். அகில உலக விஞ்ஞானிகளும் இந்த விண்கல் வரும் தெற்கு வடக்கு பாதையை உற்று கவனித்தனர். யாரும் எதிர் பாராத நிலையில் அதே பிப்ரவரி 15 ல் காலை 9:20 மணியளவில் மத்திய ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் நகரில் 56 அடி குறுக்களவும் 10,000 மெட்ரிக் டன் எடை நிறைந்த அடையாளம் காணாத புதிய  விண்கல் (Meteor) ஒன்று  வடக்கு தெற்காக பயணம் செய்து வெடித்துச் சிதறியது. இதன் வேகம் மணிக்கு 40,000 மைல்  (64,374  கி.மீ). நமது நவீன அறிவியல் இது வருவதை முன் அறிவிக்க முடியவில்லை.
இது நேரடியாக பூமியை தாக்கியிருந்தால் நகரமே அழிந்திருக்கும். ஆனால் வானிலேயே 15-25 கி.மீ  உயரத்தில் வெடித்து சிதறிய துண்டுகள்தான் நெருப்புப்பிழம்பாக பூமியை தொட்டன. இவ்வெடிப்பினால் ஏற்ப்பட்ட அதிர்ச்சி அலைகளின் தாக்குதலால் 4500 கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறி 1500 மக்களுக்குமேல் காயமடைந்தனர். ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணு குண்டைப்போல் 30 மடங்கு சக்தியை இவ்வெடிப்பு வெளியிட்டது.
 படைத்த இறைவனை மறந்து, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழும் மனித இனத்திற்கு ஒரு எச்சரிக்கை மணிதான் வானத்திலிருந்து வந்த துண்டுச் செய்தி. அல்லாஹ் கூறுகிறான்.
“ நாம் விரும்பினால் அவர்களைப் பூமிக்குள் சொருகி விடுவோம், அல்லது வானத்திலிருந்து ஒரு துண்டை (Meteor) அவர்கள் மேல் எறிந்து (அவர்களை) அழித்து விடுவோம்.”  –அல்குர்ஆன். 34:9
மற்றொரு வசனத்தில் மக்களுக்கு  அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கை,
“ அவன் உங்களை பூமியில் ஒரு புறத்தில் புதையும்படி செய்துவிட மாட்டான் என்றோ,அல்லது உங்கள் மீது கல்மாரியை ( Meteorites ) அனுப்ப மாட்டான் என்றோ அச்சம் தீர்ந்து இருக்கிறீர்களா?”   –அல் குர்ஆன்.17:68.
அல்லாஹ்வின் வேதனை பூகம்பமாக வந்து பூமியில் மனிதர்கள் புதையுண்டு போகும் சம்பவங்கள் உலகெங்கும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் மனிதன் திருந்தவில்லை. மற்றொரு அடையாளமான,  வானிலிருந்து நெருப்புக்கற்கள் வீழ்ச்சி  லூத் (அலை) மக்களின் ஓரினப் புணர்ச்சியாளர்களை அழிப்பதற்காக இறக்கினான்.
“சுடப்பட்ட கற்களை மழைபோல் பொழிய வைத்தோம்” –அல் குர்ஆன்.11:82.
இன்றைய நவீன நாகரிக உலகில் ஓரினப் புணர்ச்சியாளர்கள் கூட்டம் பெருக ஆரம்பித்துள்ளது. இன்றைய ஜனநாயக அரசுகள் இச்சமூகத் தீமையை சட்டபூர்வமாக்கிவிட்டனர். ஆகவே இனி அல்லாஹ்வின் வேதனையை இவர்கள் சுவைப்பதற்காக இனி  வானிலிருந்து தீக்கற்க்களை தொடர்ந்து எதிர்ப்பார்க்கலாம்.
“ அவனுடைய வேதனை உங்களுக்கு இரவிலோ பகலிலோ வந்துவிடுமானால்—(அதைத் தடுத்துவிட முடியுமா? என்பதை) கவனித்தீர்களா? குற்றவாளிகள் எதை அவசரமாகத் தேடுகிறார்கள்?”
“அது வந்ததன் பின்னரா அதை நீங்கள் நம்புவீர்கள்?இதோ! நீங்கள் எது வர வேண்டும் என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது வந்து விட்டது”   —அல்குர்ஆன்.10:50,51.
பூமியில் மனித இனம் படைக்கப்பட்டு சில லட்சம் வருடங்கள் தான் ஆகின்றன. மனிதன் இப்பூமிக்கு வருவதற்கு முன்பு இவ்வுலகை ஆண்ட உயிரினங்கள் டைனாசராஸ் எனும் இராட்சத விலங்குகள். இன்று இவைகள் இல்லை. ஆனால் உலகெங்கும் கண்டெடுக்கப்பட்ட இம்மிருகங்களின் எலும்புகள், முன்பு இவை இவ்வுலகில் உலவின என்பதற்கு சான்றாய் விளங்குகின்றன. இவை எப்படி அழிந்தன?
அல்லாஹ் கூறுகிறான்,
“ பூமியில் நீங்கள் பிரயாணம் செய்து,அல்லாஹ் எவ்வாறு (முந்திய) படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப் பாருங்கள்.”   –அல் குர்ஆன்.29:20
மனிதனுக்கு முன்பு படைக்கப்பட்ட டைனாசராஸ் அழிந்தது எப்படி?
எழுபதுகளில் மெக்சிகோவிலுள்ள யுகடான் தீபகற்ப பகுதியில் பெட்ரோலியம் தேடுதல் ஆய்வு நடத்திய கிளென் பென் பீல்ட் (Glen Pen Field) எனும் ஆய்வாளர், சீஷாலூப் (Chicxulub) என்னும் இடத்தில் 180  கி.மீ  விட்டமுடைய பெரும் பள்ளம்  ஒன்றைக் கண்டு ஆய்வுகள் மேற்கொண்டார்.
வானிலிருந்து வந்து வீழ்ந்த ஒரு விண் கல் (Asteroid)  ஏற்பபடுத்திய தாக்கமே அப்பள்ளம் என்று அறிவித்தார். சுமார் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு 10  கி.மீ  அகலம் கொண்ட விண்கல் துண்டு ஒன்று மணிக்கு  50,000  கி.மீ  வேகத்தில் பூமியில் மோதியது. விழுந்த அதிர்ச்சியில் உருவான பள்ளத்திலிருந்து உடைந்து  சிதறிய பாறைத் துண்டுகள் வானுயரத்திற்க்கு வீசி எறியப்பட்டன.  அவை மீண்டும் வளி மண்டலத்தில் நுழைந்து மோதல் அழுத்தத்தால் (ram pressure) எரிகற்களாக விழுந்து எங்கும் தீயை பற்றவைத்தன. விண்கல் விழுந்த ஒரே இடத்தில் 2,000,00 அணுகுண்டுகள் வெடித்தது போன்ற தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. உலகம் முழுவதும் நில நடுக்கம் ஏற்ப்பட்டது. பல ஆயிரம் மீட்டர் உயரமான மெகா சுனாமி அலைகள் எழுந்தன. கரீபிய கடற்க்கரை 600  கி.மீ  நிலத்திற்குள் வந்தது.
10 கி.மீ அகலமுடைய கல்  விழுந்த இடத்தை சுற்றி 2000 கி.மீ தூரத்திலிருந்த அத்தனை உயிர்களும் அழிந்துபட்டன. விண்கல் மோதலில் ஏற்பபட்ட புழுதியும், எரி மலை வெடித்ததால் எழும்பிய சாம்பலும் வளி மண்டலத்தை மூடியது. அவை பூமியின் மீது பெரும் குடையை கவிழ்த்தியது போன்று மூடியது. எனவே சூரிய ஒளிக் கதிர்கள் தடுக்கப்பட்டு பூமி குளிர்ந்தது.
இந்நிலை ஏறத்தாள பத்து ஆணடுகள் தொடந்தபோது, அன்று இருந்த பருவநிலை மாற்றத்திற்கும், பஞ்சத்திற்க்கும் ஈடு கொடுக்க முடியாமல் டைனாசராஸ் இனம் முற்றாக அழிந்தன. முந்தைய படைப்பான டைனாசரசை அழிக்க காரணம் பிந்திய படைப்பான மனிதன் வாழ்வதற்கு உகந்த சூழலை பூமியில் ஏற்படுத்தவே.
கடந்த ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் 1908  ஜூன் 30  காலை 7:14 மணியளவில்  இதே ரஷ்யாவின்  சைபீரியா  துங்குஷ்கா (Tunguska) காட்டுப்பகுதியில் 130 அடி  (40 மீட்டர்) விட்டமுடைய ஒரு விண்கல் விழுந்து சுமார் 80 மில்லியன் மரங்கள் எரிந்து அழிந்தன. சுமார் 750  சதுர மைல் பரப்பளவு தரை மட்டமானது.
இவ்விண்கல் வானில் 5-10 மைல் உயரத்திலேயே வெடித்து சிதறியதால் பெரும் பள்ளம் ஏற்படவில்லை.ஆனால் இதன் அதிர்ச்சி அலைகள் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. இதன் சக்தி ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டைப்போல் 1000 மடங்கு என ஆய்வுகள் கூறுகின்றன.
50,000 வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவின் அரிசோனா பாலைவனப்பகுதியில் வீழ்ந்த ஒரு விண்கல் சுமார் 4000 அடி விட்டமும்   570 அடி ஆழமுடைய பெரும் பள்ளத்தை ஏற்படுத்தியது.
 மேலோகத்திலிருந்து வரும் தாக்குதலை தடுப்பதற்காக பூலோக மனிதன் பெரும் முயற்சி எடுக்கின்றான். உடனடியாக 5 மில்லியன் டாலர் செலவில் அதி சக்தி வாய்ந்த 8 டெலஸ்கோப் பொருத்திய வானோக்கு கருவியை (ATLAS—Atlas Terrestrial Impact Alert System ) தயாரித்து, இதனை ஹவாய் தீவுகளில் நிறுவி வானத்தை கண்காணிக்கப் போவதாக நாஸா அறிவித்துள்ளது. நியூயார்க் நகரில் ஒரு சிறு தீக்குச்சியை பற்றவைத்தாலும் அதை சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து பார்க்கும் அளவு மிக நுட்பமான கருவி என்று கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் கட்டளை வந்து விட்டால் அதை எந்தக்கருவியும் தடுக்க முடியாது.அல்லாஹ் கூறுகிறான்.
“நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை.
(நிராகரிப்போரே!) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம் நிச்சயமாக அழித்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?      -அல் குர்ஆன். 54:50,51.
எஸ்.ஹலரத் அலி-ஜித்தா.


©2013, copyright Dharulhuda

Thursday, April 18, 2013

மண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்

Post image for மண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்அல் குர்ஆன் வழியில் அறிவியல்..
அல்லாஹ் இம்மாபெரும் பிரபஞ்சத்தை படைத்தது வெறும் வீண் விளையாட்டு வேடிக்கைக்காக அல்ல.தக்க காரணத்துக்காகவே அன்றி வேறில்லை,என்று பல வசனங்களில் குறிப்பிடுகிறான். வானம், பூமி,சூரியன்,சந்திரன் கோள்கள், நட்சத்திரங்கள் அனைத்தும் காரண காரியங்களுடன் படைப்பினங்களுக்காகவே சிருஷ்டிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக,
“இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப்படியே வசப்படுத்தப்பட்டுள்ளன. நிச்சயமாக இதிலும் ஆய்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.”
-அல்குர்ஆன்.16:12.
நட்சத்திரங்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்,
 “அவனே உங்களுக்காக நட்சத்திரங்களை உண்டாக்கினான்; அவற்றைக்கொண்டு நீங்கள் தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் நீங்கள் வழி அறிந்து செல்கிறீர்கள் – அறியக்கூடிய மக்களுக்கு வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.” -அல்குர்ஆன்.6:97.
நட்சத்திரங்களை படைத்ததின் ஒரு நோக்கம் இருளில் பயணிப்பவர்கள் வழி அறிந்து கொள்வதற்காக. இருள் சூழ்ந்த இரவுகளில் பயணிப்பதற்கு வழி காட்டியாக ஆதி காலத்திலிருந்தே நட்சத்திரங்கள் திசையை வைத்து பயணப்பாதையை மனிதன் அறிந்து கொள்கிறான். குறிப்பாக நான்கு பக்கமும் நீர் சூழ்ந்த கடற்பயணத்தில் அவனுக்கு இரவில் வழி காட்டுவது விண்மீன் விளக்குகளே!
பல கோடிக்கணக்கான நட்சத்திரங்களை வானில் பரப்பி அல்லாஹ் பார்ப்பவர்களுக்கு அலங்காரமாக்கி உள்ளான்.சுமார் 6000 நட்சத்திரங்கள் நம் கண்களால் அடையாளம் காண முடியும். நன்கு பிரகாசமுள்ள 58 நட்சத்திரங்கள் இருப்பிடத்தை அடையாளமாக வைத்து கடலில் மாலுமிகள் கப்பலை செலுத்துகின்றனர். இதனை “Celestial Navigation” என்று அழைக்கிறார்கள்.
இன்றும் அமெரிக்காவில் வருடந்தோறும், வானில் நட்சத்திரங்கள் இருக்கும் இடத்தை அட்டவணைப்படுத்தி “Nautical Almanac” என்ற பெயரிலும் இங்கிலாந்தில் “Her Majesty’s Nautical Almanac Office” என்ற வழிகாட்டும் விண்மீன் பஞ்சாங்கத்தை வெளியிடுகிறார்கள். நிலம்,நீர்,ஆகாயம் இம்மூன்றிலும் பயணம் செய்யும் மனிதர்களுக்கு இந்நட்சத்திர வழி காட்டி பெரிதும் பயன்படுகிறது.
இன்றைய நவீன அறிவியலில் வழி அறிவதற்கு GPS போன்ற பல நுட்பமான சாதனங்களை மனிதன் பயன்படுத்தினாலும்,இன்றும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் கப்பல்,விமானப்படைகளில் பயிற்சி பெரும் பைலட்,மற்றும் மாலுமிகள் அடிப்படை நட்சத்திர வழிகாட்டும் (Celestial Navigation Test) தேர்வில் வெற்றி பெறாமல் பணியில் சேரமுடியாது.
Global Positioning System –GPS என்னும் செயற்கைக்கோள் வழி காட்டி சாதனம் எந்நிலையிலும் பழுதாகக்கூடும். அவசர காலங்களில் பயன் தருவது விண்மீன்கள் வழி காட்டுதலே. கடந்த காலங்களில் மனிதனின் பயணம் நீரிலும் நிலத்திலும் மட்டுமே நடந்தது. நவீன மனிதன் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் பயணம் செய்கின்றான்.
தரைப்பயணிகளுக்கும் கடல் பயணிகளுக்கும் பகலில் நமது சூரிய நட்சத்திரமும் இரவில் பிரபலமான துருவ நட்சத்திரமும் (Polaris-North Star) வழி காட்டின. இவை இரு பரிமாண பயணம் (2 Dimensional Space) அதாவது இடது/வலது,அல்லது முன்னால்/பின்னால் மட்டுமே செல்லக்கூடியவை. மண்ணிலிருந்து மேலெழும்பி உயரே விண்ணை தாண்டிச்செல்லும் ராக்கெட் விண்வெளி பயணம் முப்பரிமாணத்தில் (3 Dimensional Space) அமைந்துள்ளது.
1400  ஆண்டுகளுக்கு முன்பு பாலை வனத்தில் ஒட்டகத்தில் பயணம் செய்த மனிதர்கள் மத்தியில் இறங்கியதே அல் குர்ஆன் வசனங்கள். மனிதன் விண்ணில் பயணம் செய்வான், சந்திரனில் இறங்குவான் என்று எவரும் கற்பனை கூட செய்திராத காலத்தில் விண்வெளி பயணத்தை பற்றி குர்ஆன் பேசுகிறது. முன்னறிவிக்கிறது ஆர்வமூட்டுகிறது.
“மனித,ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் பூமியின் எல்லையைக் கடந்து சென்று விட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும் மிகப்பெரும் பலத்தைகொண்டே தவிர நீங்கள் செல்லமுடியாது.” -அல்குர்ஆன்.55:33.
ஆம்! இன்று வானம்,பூமியின் எல்லையை தாண்டிச்செல்லும் பலத்தை மனிதன் பெற்று விட்டான். பூமியின் ஈர்ப்பு சக்தியை மீறிச் செல்வதற்கு 1 வினாடியில் 11 கி.மீ.வேகம் செல்லக்கூடிய உந்து சக்தி (ராக்கெட்) ஆற்றலை மனிதன் பெற்றுவிட்டான். வானத்தில் வழி அறிவது எப்படி?
விண்வெளி வீரர்களுக்கு வழி காட்டுவது யார்? ஆதி மனிதனுக்கு வழி காட்டிய அல்லாஹ் படைத்த நட்சத்திரங்கள்தான் விண்வெளி வீரர்களுக்கும் வழி காட்டுகின்றன. சந்திரனில் காலடி வைத்த அப்போலோ பயணத்திலும் (Apollo Mission) நட்சத்திரத்தை அடையாளமாக வைத்தே (Celestial Navigation) வழி அறிந்தனர்.
விண்வெளி ராக்கெட்டின் முன்பகுதியில் (Star Tracker) “விண்மீன் காட்டி” எனும் கருவி பொருத்தப்பட்டிருக்கும். இதிலுள்ள கேமரா, தொலை தூர நட்சத்திரங்களை நிலையாக நோக்கியவாறு இருக்கும் (Fixed Reference Point) இரு நட்சத்திரத்தின் திசை,தூரம் இவைகளை கணக்கிட்டு ராக்கெட் செல்லும் திசையையும், பூமியிலிருந்து இருக்கும் உயரத்தையும் அறிந்து கொள்வார்கள். இதில் உள்ள கம்ப்யூட்டரில் 50 நட்சத்திரங்களின் அமைவிடம் பதிவு செய்யப்பட்டிருக்கும். இவைகளை வழி காட்டியாகக் கொண்டு விண்வெளி ஓடம் பயணிக்கும்.
பூமியிலுள்ள இலக்குகளை துல்லியமாக தாக்குவதற்கு கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் செல்லும் அமெரிக்காவின் “TRIDENT” ஏவுகணைகளும் ஒரு நட்சத்திரத்தை நிலையான அடையாளமாக வைத்தே செயல்படுகின்றன. அமெரிக்காவின் அதிவேக உளவு விமானமான SR-71, 11 நட்சத்திரங்களை (பகலிலும்) வழிகாட்டியாக வைத்தே பறக்கின்றன. ரஷ்யாவின் நீர் மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் இரண்டு நட்சத்திரங்களை வழிகாட்டியாகக்கொண்டே இலக்கை அடைகிறது.
ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையை (Theory of Relativity) அறிவியல் ரீதியாக ஆய்வு செய்ய 2004 ஏப்ரல் 4 ல் Gravity Probe-B என்னும் செயற்கைகோளை நாஸா ஏவியது. இது பூமியிலிருந்து 400 மைல் உயரத்தில் GYROSCOPE  கருவி உதவியுடன் IM-Pegasi என்னும் ( HR 8703) நட்சத்திரத்தை நிலையான அடையாளமாக வைத்து பூமியின் சுழற்சியை ஆய்வு செய்து சார்பியல் கொள்கையை நிரூபித்தது.
விண்வெளியில் பறந்து கொண்டே பிரபஞ்சத்தை ஆய்வு செய்யும் ஹப்பிள் தொலை நோக்கி, (Hubble Space Telescope-HST) தொலைதூர விண்மீன் கூட்டங்களை புகைப்படம் எடுக்க இரண்டு கைடு நட்சத்திரங்களை (Guide Stars) வைத்து தன்னை நிலைப்படுத்திக்கொள்கிறது. இதன் கம்ப்யூட்டர் நினைவகத்தில் சுமார் 20 மில்லியன் விண்மீன்கள் இருப்பிடம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பூமியிலே வசிக்கும் மனிதர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழி காட்டவில்லை.அனைத்து ஜீவராசிகளுக்கும் அல்லாஹ்வுடைய வழி காட்டுதல் உள்ளது.ஏனெனில் மற்ற உயிரினங்களும் நம்மைப்போன்ற ஒரு இனமே! அல்லாஹ்வுடைய படைப்பில் அனைத்து உயிர்களும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த சங்கிலித் தொடரின் கண்ணிகளே! அல்லாஹ் கூறுகிறான்.
 “பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும்,தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப்போன்ற இனமேயன்றி வேறில்லை.”  அல்குர்ஆன்.6:38.
கடந்த ஜனவரி 24  2013 , BBC யில் வந்த ஒரு ஆய்வுச் செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மலத்தை உருட்டிச் செல்லும் வண்டு (Dung Beetle) தன் பொந்திற்கு போகும் பாதையை தொலை தூரத்தில் உள்ள பால்வீதி நட்சத்திர மண்டல (Milky way Galaxy) ஒளியின் மூலம் வழி அறிவதாக ஆய்வுகள் கூறுகின்றன.  
Dung beetles guided by Milky Way
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உயிரியல் ஆய்வாளர் எரிக் வாரன்ட் ஸ்வீடன் லேன்ட் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார். பூச்சிகளின் சிறப்புத் தன்மைகள் குறித்து பல ஆய்வுகள் நடத்தி புகழ்பெற்றவர். இரவில் இரை தேடும் சிறு பூச்சி போன்ற உயிரினங்கள் சந்திரன்,மற்றும் நட்சத்திரங்களை வைத்து வழி அறிவதாக முன்பு கண்டறிந்தார்.
இவரது சமீபத்திய ஆய்வில் சாணத்தை தன் உணவுக்காக உருட்டிச் செல்லும் வண்டு இரவில் தொலை தூர பால் வீதி நட்சத்திர மண்டல (Milky Way Galaxy) ஒளியை வைத்து திசை அறிவதாக அறிவித்தார். செயற்கையான கோளரங்கத்தில் (Planetarium) வைத்து பல்வேறு சோதனை நடத்தியும் இவ்வண்டுகள் மிகச் சரியாக நட்சத்திர மண்டல ஒளியை பின்பற்றி நேர்கோட்டில் சாணத்தை உருட்டிச் சென்றன.
இதுபோல் சில பறவைகள்,விலங்குகள்,ரெயின்டீர் மான்கள்,கடலில் உள்ள சீல் மீன்கள் போன்றவை நட்சத்திரங்களின் ஒளியின் மூலம் தங்கள் திசைகளை வழி அறிவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அல்லாஹ் கூறுகிறான்,
“ (வழி காட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்); நட்சத்திரங்களைக் கொண்டும் அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள்.” -அல் குர்ஆன்.16:16.
                   
“(இறைவன்) ஒவ்வொரு படைப்பினங்களுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழி காட்டியிருக்கிறான்.” -அல்குர்ஆன்.20:50.
எஸ்.ஹலரத் அலி-ஜித்தா.


©2013, copyright Dharulhuda

Thursday, April 18, 2013

ஊக்கமளிக்கும் உலர் திராட்சைகள்


Post image for ஊக்கமளிக்கும் உலர் திராட்சைகள்உலர் திராட்சைகள் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியின் மத்தியில் சாப்பிடக்கூடிய ஊக்க உணவாக பயன்படுத்துவது நன்மை பயக்கும் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு தேவை உடல் வலிமை. அதிலும் குறிப்பாக தொலை தூர ஓட்டப்பந்தயங்கள் போன்றவற்றில் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கத்தக்க உடல்வலிமை மிக மிக அவசியம். இப்படியான தாக்குப்பிடிக்கத் தக்க உடல்வலிமையை பெறுவதற்காக போட்டியாளர்கள் பலவகையான வழிமுறைகளை கடைபிடிப்பார்கள். கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் செயற்கையான இனிப்பு மிட்டாய்களை மெல்வது போட்டியாளர்கள் பலரும் செய்யும் விடயம்.
ஆனால் அப்படியான செயற்கை இனிப்புக்களை மெல்வதை விட, இயற்கையான முறையிலேயே இப்படியான தாக்குப்பிடிக்கத்தக்க வலிமையை பெறமுடியும் என்று கலிபோர்னிய பல்கலைக்கழகத்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது உலர் திராட்சைப்பழங்களை மென்று சாப்பிடுவதன் மூலம் விளயாட்டுப் போட்டிகளில் தேவைப்படும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கத்தக்க உடல் வலிமையை பெற முடியும் என்று இவர்கள் தங்கள் ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதற்காக இவர்கள் செய்த ஆய்வுக்காக ஐந்து கிலோமீட்டர் தூர ஓட்டப்பந்தயத்தை நடத்தினார்கள். இதில் கலந்து கொண்டவர்களில் சிலர் வெறும் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு ஓடினார்கள். வேறு சிலர் கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் இனிப்புகளை சாப்பிட்டு ஓடினார்கள். மற்றவர்கள் உலர் திராட்சைப்பழங்களை சாப்பிட்டு விட்டு ஓடினார்கள்.
போட்டியின் இறுதியில் வெறும் தண்ணீர் குடித்துவிட்டு ஓடியவர்களை விட, இனிப்புகளையும் உலர் திராட்சைகளையும் சாப்பிட்டுவிட்டு ஓடியவர்கள் ஐந்து கிலோமீட்டர் தூரத்தை ஒரு நிமிட நேரம் முன்னதாக ஓடி முடித்தார்கள்.
இதிலிருந்து, கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் இனிப்புக்களுக்கு சமமாக உலர் திராட்சைகளும் நீடிக்கத்தக்க உடல் வலிமையை தருவதாக தெரிவித்திருக்கும் ஆய்வாளர்கள், உலர் திராட்சைகள், இயற்கையான ஊக்கசக்தியாக விளங்குவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
உலர் திராட்சைகளில் காணப்படும் அதிகமான பொட்டாஷியம் மற்றும் இரும்புசத்து, விளையாட்டு போட்டிகளுக்கு தேவைப்படும் நுண்ணிய சக்தியாக செயற்படுவதால் இவை போட்டியாளர்களுக்கு இயற்கையான ஊக்கமருந்தாக பயன்படுவதாகவும், செயற்கையான இனிப்புகளில் இருக்கும் கூடுதல் சர்க்கரை இதில் இல்லாமலிருப்பது கூடுதல் நன்மை பயக்கும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல் நிபுணர் கவுசல்யாநாதன்.
உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இந்த உலர் திராட்சையில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும், அமினோ அமிலங்களும் உடலுக்கு நல்ல சக்தியை அளிக்கின்றன. மேலும் பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.
மேலும் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் தொடர்ந்து உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
உலர் திராட்சை பழத்தில் 50 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும். உலர் திராட்சையில் உள்ள கால்சியத் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
குழந்தைக்கு பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் தேக புஷ்டி உண்டாகும். குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக வளருவார்கள். தொண்டைக்கட்டு பிரச்சினையை தீர்க்கும். மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர் திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.


©2013, copyright Dharulhuda

Thursday, April 18, 2013

ஆழ் கடலுக்குள் உருவாகும் உள் அலைகள் (INTERNAL WAVES)

Post image for ஆழ் கடலுக்குள் உருவாகும் உள் அலைகள் (INTERNAL WAVES)

Tuesday, April 16, 2013

அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத்


Post image for அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத்

“இப்புவியிலிருப்போரில் அநேகரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து திருப்பி விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத் தவிர (உண்மையை) அவர்கள் பின்பற்றுவதில்லை. அன்றி (வெறும் பொய்யான) கற்பனையில் தான் அவர்கள் மூழ்கியிருக்கிறார்கள். அல்குர்ஆன் 6 : 116
என்று சொல்வது போல் (மெஜாரிட்டி) அதிகமான மக்கள் பொதுவாக வழிகேட்டிலும், சொற்பமான எண்ணிக்கையினர் நேர் வழியிலும் இருந்து வருகின்றனர். ஆனால் அதிகமான மக்கள் அடிக்கடி சொல்லி வருவதே மக்களிடையே எடுபடும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆகவே, வழிகேட்டில் இருக்கும் அதிகமான மக்களாகிய தாங்கள் நேர்வழியிலும், நேர்வழியில் இருக்கும் சொற்பமான மக்கள் வழிகேட்டிலும் இருப்பதாக அடிக்கடி மக்களிடையே பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கும்போது, அந்தத் தவறான எண்ணமே மக்களிடையே பரவும் என்பதில் சந்தேகமே இல்லை.
அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத்:
“அஹ்ல சுன்னத்” என்று அரபியில் சொல்லும்போது “சுன்னத்தை உடையவர்கள்” என்ற பொருளைத் தருகின்றது. இஸ்லாமிய நடைமுறையில் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இந்த மூன்றுக்கும் “சுன்னத்” என்று சொல்லப்படுகின்றது. இதிலிருந்து நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தை மட்டும் பின்பற்றி நடப்பவர்கள் மட்டுமே “அஹ்ல சுன்னத்” அதாவது சுன்னத்தை உடையவர்கள் என்பது விளங்கும்.
நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இந்த மூன்றும் ஹதீதுகளைக் கொண்டு நிலை நாட்டப்படுபவை மட்டுமே. ஹதீதில் வராதது நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தில் வர முடியாது. ஆகவே, ஹதீஸ் ஆதாரமில்லாதவற்றை மார்க்கமாக எடுத்து நடப்பவர்கள் நிச்சயமாக அஹ்ல சுன்னத்தை விட்டு வெளியேறி விடுகிறார்கள். நான்கு மத்ஹபு பிரிவுகளுக்கு குர்ஆனிலும் ஆதாரமில்லை. ஹதீதுகளிலும் ஆதாரமில்லை.
அடுத்து இங்கு “ஜமாஅத்” என்று குறிப்பிடப்படுவர் இஸ்லாமிய நடைமுறையில் நபித்தோழர்களை மட்டுமே. இதற்கு ஆதாரம்.“எனது உம்மத் 73 பிரிவினர்களாகப் பிரிவார்கள். 72 பிரிவினர் வழி தவறியவராவார்கள். ஒரே ஒரு பிரிவே நேர்வழி நடப்பவர்கள்’, என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள், “அவர்கள் யார்”? என்று வினவினர், அதற்கு நபி(ஸல்) அவர்கள் ما أنا عليه اليوم وأصحابي“மாஅனா அலைஹில் யவ்மவ வஅஸ்ஹாபீ” என்று தெளிவாக அறிவித்து விட்டார்கள். அதாவது “இன்றைய தினம் நானும், என் தோழர்களும் எவ்வாறு இருக்கிறோமோ, அவ்வாறு இருக்கிறவர்கள்,” என்று விளக்கம் தந்துள்ளனர்.
இந்த ஹதீதின் மூலம் நபி(ஸல்) அவர்களும், நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்ற நபித்தோழர்களின் ஜமாஅத்தும் “அஹ்ல சுன்னத் – வல் – ஜமாஅத்” என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்றினார்கள். அவர்களில் யாரும் எந்த இமாமையும் பின்பற்றியதாக எந்த ஆதாரமும் இல்லை. “முஸ்லிம்” அல்லாத பெயரால் கொள்கை அளவில் அழைத்துக் கொண்டதற்கும் ஆதாரம் இல்லை. எந்த மத்ஹபுகளின் பேராலும் அழைத்துக் கொண்டதாகவும் இல்லை. அப்படி இருக்கவும் முடியாது. காரணம் இமாம்களின் காலம் ஹிஜ்ரி 80 முதல் 241 வரையாகும். இந்தக் காலகட்டத்தில் எந்த இமாமும் தன் பெயரால் ஒரு மத்ஹபு அமைத்துக் கொண்டதாகவோ, முஸ்லிம்களிடம் தன்னைத் தக்லீது செய்யச் சொன்னதாகவோ, ஆதாரப்பூர்வமாக அவர்களின் எந்தக் கிதாபுகளிலும் காணப்படவில்லை. மாறாக “எங்களைத் தக்லீது செய்யாதீர்கள்: குர்ஆன், ஹதீதையே பின்பற்றுங்கள். நாங்களும் மனிதர்களே, எங்களிலும் தவறுகள் ஏற்படலாம். நாங்கள் சொல்பவற்றை குர்ஆன், ஹதீது ஆதாரம் பார்க்காமல், நீங்கள் எடுத்து நடப்பது ஹராமாகும். என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன.
 ஆக, நான்கு மத்ஹபு பிரிவினர் நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்ற ஜமாஅத்திலிருந்தும் வெளியேறி, வழி தவறிய பிரிவுகளில் ஐக்கியமாகி விட்டார்கள் என்பது தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளக்கூடிய விஷயமாகும். உண்மையான அஹ்ல சுன்னத் வல்ஜமாஅத்தினர் இமாம்களைப் பின்பற்றுவதாகக் கொள்கை கொள்ளாமல் இஸ்லாமிய சமுதாயத்தை நான்கு பிரிவினர்களாகப் பிரிக்காமல், குர்ஆன், ஹதீஸை மட்டும் பின்பற்றி நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்தது போல் சமுதாயத்தை ஒரே ஐக்கியப்பட்ட ஜமாஅத்தாக வைத்திருக்கப் பாடுபடுபவர்களே ஆகும். நபி(ஸல்) அவர்கள் மறைவுக்குப் பிறகு கொள்கை அடிப்படையில் தோன்றிய எந்தப் பிரிவாக இருந்தாலும், அது நபி(ஸல்) அவர்களின் கூற்றுப்படி, வழிகெட்டுச் செல்லும் 72 பிரிவுகளில் ஒரு பிரிவாக மட்டுமே இருக்க முடியும். நேர்வழி நடக்கும் ஒரே பிரிவில் ஒரு போதும் இருக்க முடியாது.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: “நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம் குர்ஆன்; மற்றொன்று எனது வழிமுறை”.
அறிவிப்பவர் : மாலிக் இப்னு அனஸ்(ரலி) நூல் : முஅத்தா
என்ற நபி(ஸல்) அவர்களின் உத்தரவுப்படி குர்ஆனையும், ஹதீதையும் பின்பற்றுபவர்களாக இருக்க முடியுமே அல்லாது வேறு யாராக இருக்க முடியும் என்பதை முஸ்லிம் சமுதாயம் சிந்திக்கக் கோருகிறோம்.
“அல்லாஹ் (ஜல்) என்னைக் கற்றுக் கொடுப்பவனாகவும், எளிதாக்குபவனாகவும் அனுப்பி இருக்கிறான்”, என்று நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளனர். (அறிவிப்பவர் : ஜாபிர்(ரழி) , நூல் : முஸ்லிம்)
“இன்றைய தினம் நான் உங்களுக்கு, உங்களது மார்க்கத்தை நிறைவு செய்து விட்டேன். எனது அருட்கொடைகளை உங்கள் மீது சம்பூர்ணமாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கு மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன்”. (அல்குர்ஆன் 5 :3)
என்ற அல்லாஹ்வின் சொல்லும்,
“நான் உங்களை வெள்ளை வெளெர் என்ற நிலையில் விட்டுச் செல்கிறேன், அதன் இரவும் பகலைப் போன்றது, அழிந்து நாசமாகக் கூடியவர்களைத் தவிர வேறு யாரும் அதில் வழி தவறவே மாட்டார்கள்.
(அறிவிப்பவர் : இர்பாழ் இப்னு ஸாரியா(ரழி) நூல் : இப்னுமாஜா
என்ற நபி(ஸல்) அவர்களின் தெளிவான அறிவிப்புகளும் இந்த மத்ஹபுவாதிகளிடத்தில் மதிப்புடையவையாகத் தெரியவில்லை. குர்ஆனையும், ஹதீதையும் விட மனித அபிப்பிராயங்களே இவர்களிடத்தில் முக்கிய அந்தஸ்தைப் பெறுகின்றன. இதற்கு மேலும் இவர்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறோம், நபி(ஸல்) அவர்கள் மீது அளவு கடந்த பிரியம் வைத்து, அவர்களைப் பின்பற்றுகிறோம் என்று சொல்வது வெறும் வாய்ப்பந்தலே அல்லாமல் உண்மையாகவே இருக்க முடியாது. இவர்களின் இந்த வழி கேட்டை உணர்ந்துதான் நபி(ஸல்) அவர்கள் தனது விடைபெறும் ஹஜ்ஜில் மக்களை நோக்கி, “அல்லாஹ்விடமிருந்து அறிவிக்க வேண்டியபை அனைத்தையும் நான் அறிவித்து விட்டேனா? என்று மூன்று முறை சொல்ல வைத்து, அது மட்டுமின்றி மூன்று முறை அல்லாஹ்வையும் அதற்குச் சாட்சியாக ஆக்கி இருக்கிறார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)
மார்க்கம் என்பது நபி(ஸல்) அவர்களால் கற்பிக்கப்பட்டவை மட்டுந்தான். அதற்குமேல் மார்க்கத்தில் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. கூடாது என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் குர்ஆனிலும், ஹதீதுகளிலும் தெளிவாக உள்ள நிலையிலும்,  வழிகெட்டுச் செல்வது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயமாகும்.
நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் தோன்றிய கொள்கை அடிப்படையிலான நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றி நடப்பவர்கள்  நபி(ஸல்) அவர்களின் தெளிவான அறிவிப்பின்படி அஹ்ல_சுன்னத்-வல்-ஜமாஅத்தை விட்டு அவர்களாகவே வெளியேறி விட்டார்கள்.  அவர்கள் நபி(ஸல்) அவர்கள் மீது உண்மையில் அன்பு வைக்கவும் இல்லை. அவர்களை பின்பற்றவுமில்லை. ஆனால் நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் ஹிஜ்ரி 80 முதல் 241 வரை வாழ்ந்து மறைந்த நான்கு இமாம்களைக் குருட்டுத்தனமாக பின்பற்றுகிறார்கள். இது தெளிவான வழி கேடேயாகும். இவர்கள் கலீபாக்களையும், நபித் தோழர்களையும் இமாம்களையும், அவுலியாக்களையும் முறையாக அவரவர்களின் அந்தஸ்தில் மதிக்கவுமில்லை. மரியாதை செய்யவுமில்லை. மாறாக கூட்டியோ, குறைத்தோ மரியாதை என்ற பெயரால் உண்மையில் அவமரியாதை செய்கிறார்கள் என்ற முடிவிற்கே வரமுடிகின்றது. அல்லாஹ்(ஜல்) இந்த வழிகேடுகளை விட்டும் நம்மைக் காத்தருள்வானாக!
K.M.H


©2013, copyright Dharulhuda

Tuesday, April 16, 2013

முஸ்லிம்களின் அறிவியல் புரட்சியும்,......


முஸ்லிம்களின் அறிவியல் புரட்சியும், அது கைநழுவிச் சென்றமைக்கான காரணிகளும் (ஆராய்ச்சிக் கட்டுரை)
ஐரோப்பியர்களால் இருண்ட யுகம் என்று வர்ணிக்கப்படும் கி.பி. 500-1500க்கும் இடைப்பட்ட காலத்தில் முஸ்லிம்களின் அறிவியல் புரட்சியை விளக்கி, அது அவர்களை விட்டும் கைநழுவிச் சென்றமைக்கான காரணிகளை மதிப்பீடு 
எழுதிவர் : எம். ஜே. எம். ரிஸ்வான் (ணி)

குளியல் அறைகளில் குளிப்பது பாவம், குஷ்டரோக நோய் இறை தண்டனை, எனவே, குஷ்டநோயாளர்களை தீயிட்டுக்கொழுத்த வேண்டும் என்ற மூடநம்பிக்கையில் ஐரோப்பா வாழ்ந்து கொண்டிருந்தது. மேலும் படிக்க..

Download e-book

©2013, copyright Dharulhuda