உயிரினம் வாழத் தகுந்த இடமாக பூமியை மாற்றியது எது?

.

உயிரினம் வாழத் தகுந்த இடமாக பூமியை மாற்றியது எது?

உயிரினம் வாழத் தகுந்த இடமாக பூமியை மாற்றியது எது?



நாம் வாழும் பூமியை சற்று ஆராயப் புகுந்தால் பல்வேறு ஆச்சரியங்கள் நம்மை சூழ்ந்து கொள்ளும். இந்த பேரண்டத்தில் கோள்கள் அனைத்தும் ஒன்றோடொன்று மோதி பிறகு ஒரு சம நிலைக்கு வந்து இன்று வரை தனது ஓட்டத்தை தொய்வின்றி செய்து வருவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பூகோளம் பல்வேறு முறைகளில் மாறியுள்ளது. ஆரம்பத்தில் பூமி உருவாகும் போது வெப்பத்தாலும், ஈர்ப்புச் சக்தியாலும் கொந்தளிப்புச் சேமிப்புடன் திரண்ட வடிவம் கரடுமுரடாக உருவானது. பரிதி மண்டலத்தின் மற்ற கோள்கள் உண்டான அதே சம காலத்தில்தான் பூகோளமும் சூரியனை மையமாக வைத்துச் சுற்றிக் கொண்டு உருவானது இந்த பேரண்டத்தில் உள்ள அனைத்து கோள்களும் எந்த மாற்றமும் இல்லாமல் சம அளவில் சுழன்று வருகின்றன.


ஆனால் நமது பூமி மட்டும் 23.45 டிகிரி யில் சற்று சாய்வாக சுழல்வதை நாம் அறிவோம். இந்த ஒரு ஏற்பாடு மட்டும் இல்லை என்றால் நீங்களோ நானோ கணிணி முன்னால் அமர்ந்து செய்திகளை பார்த்துக் கெண்டிருக்க முடியாது. ஆம். 23.45 டிகிரி சாய்வாக சுழல்வதால்தான் வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் என்று மாறி மாறி வருகிறது. இந்த சாய்வில் கொஞ்சம் கூடினாலும் குறைந்தாலும் நமது கதி அதோ கதிதான். பூமியின் சாய்வான சுழற்சியினால் காற்று வீசும்போது அதிக அழுத்தத்திலிருந்து குறைந்த அழுத்தத்திற்கு மாற்றப்படுகிறது. பூமியின் கால நிலையை சீராக வைப்பதற்கு காற்றின் பங்கும் இங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சாய்வு இல்லை என்றால் இந்த பூமிப் பந்தானது குளிரில் உறைந்து விடும. அல்லது ஒரேயடியாக வெப்பம் தாக்கி புல் பூண்டுகள் இல்லாமல் கருகி விடும். உயிரினங்கள் வாழ தகுதியற்றதாக இந்த பூமிக் கோளம் மாறி விடும்.





இவ்வாறு இந்த பூமி 23.5 டிகிரி சாய்வில் சுற்றினால்தான் இங்கு மனிதர்கள் வாழ முடியும் என்று தீர்மானித்த சக்தி எது? இதற்கு முதலில் பூமியின் அடர்த்தி என்ன? சூரியனின் ஈர்ப்பு சக்தியின் அளவு என்ன? அதேபோல் புதன், சுக்கிரன், வியாழன், வெள்ளி, சனி, நிலவு போன்ற அனைத்து கோள்களின் அடர்ததி மற்றும் அவற்றின் ஈர்ப்பு தன்மை தெரிந்த ஒரு சக்தியால்தான் இத்தனை மாற்றங்களையும் நிகழ்த்த சாத்தியம் உண்டு..

//Science and technology have indeed given us much information about the physical world, provided us with abundant comforts and conveniences, increased efficiency and discovered remedies for many diseases that used to be fatal. But science does not and cannot tell us about the meaning of life and death. Science tells us "how" but it never answers the question "why"?. Can science ever tell us what is right and what is wrong? What is good and what is evil? What is beautiful and what is ugly? And to whom are we accountable for what we do? Religion does.// -மர்யம் ஜமிலா.

இந்த ஆச்சரியமான விபரங்களை எல்லாம் பல காலம் உழைத்து அறிவியல் அறிஞர்கள் உண்மைகளை கண்டு பிடித்துள்ளனர். ஆம்....இந்த கோள்களின் சஞ்சாரம் இரவு பகல் மாறி வருவது எவ்வாறு என்று அனைத்திற்கும் காரணத்தைக் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால் இவைகளை இவ்வாறு சுழல விட்ட சக்தி எது? இதற்கு என்ன அவசியம் வந்தது? என்பதை அறிவியலால் சொல்ல முடியாது. அதனை ஆன்மீகத்தால்தான் சொல்ல முடியும். இனி ஆன்மீகத்துக்குள் நுழைவோம்.

--------------------------------------------------------------------------

பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்' - குர்ஆன் 7;175

பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். ஆனால் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். குர்ஆன் 7;10

'உங்களுக்கு பூமியில் குறிப்பிட்ட காலம் வாழ்விடமும் வசதியும் உள்ளன.'
-குர்ஆன் 2:36

'அவனது கட்டளைப்படி வானமும் பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.'
-குர்ஆன் 30:25


பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும் என்று மேற் கண்ட வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. வேற்று கிரகத்திலிருந்து மனிதர்கள் வந்தார்கள், பறக்கும் தட்டு வந்தது என்பதெல்லாம் நிரூபிக்கப் படாத செவி வழி செய்திகள். உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் பூமியில் தான் உள்ளது. சந்திரனுக்கு மனிதன் சென்றாலும் நிரந்தர தங்குதல் என்பது பூமி மட்டுமே!மனிதனின் உடலுக்கு ஏற்றவாறு வெப்பமும் குளிரும் அளவோடு இருப்பது பூமியில் மட்டுமே!

சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். இன்னும் சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனை சாம்பலாக்கி விடும்.மேலும் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாக சுழல்கிறது. இப்படி சாய்வாக சுழல்வதால் தான் கோடை, குளிர்,வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் என்று கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. வருடம் எல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.

'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.' - குர்ஆன் 42:29

மேற்கண்ட குர்ஆன் வசனங்களிலிருந்து நமக்கு தெரிய வருவது மனித இனமும் மற்ற பூமியில் உள்ள உயிரினங்களும் பூமியில் மாத்திரமே உள்ளன. வேற்று கிரகங்களிலும் உயிரினங்கள் உள்ளன. ஆனால் அவை பூமியை ஒத்த உயிரினங்களாக இருக்க வாய்ப்பில்லை. அந்த கோள்களின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப அங்குள்ள உயிர்களின் உடல்வாகு அமைக்கப்பட்டிருக்கும். இனி வருங்காலத்தில் செவ்வாயிலோ, புதனிலோ, வியாழனிலோ உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை பூமியில் உள்ள உயிரினங்களை ஒத்து இருக்காது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது. நம் காலத்திலேயே அந்த உயிரினங்கள் கண்டு பிடிக்கப்படலாம். இறைவன் நாடினால் நாமும் அந்த உயிரினங்களை பார்க்கலாம்.

https://sites.google.com/site/earthrotation

http://www.itacanet.org/the-sun-as-a-source-of-energy/part-1-solar-astronomy/

http://www.pveducation.org/properties-of-sunlight/declination-angle

உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது. கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது. ஆனால் கண்டு பிடிக்க முடியாதபடி மாபெரும் உண்மைக் கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது.

ஸர் ஐஸக் நியூட்டன் (1642-1727)

0 comments :

Post a Comment