Monday, November 14, 2011

beauti of Islam



converted from hinduism
lecture by bro Abdur Rahman
on the topic of WHY I EMBRACE ISLAM

thableeq

 

Tamil Quran - 78 Surat An-Naba' (The Tidings) - سورة النبإ

 soorah al- nabaa

Saturday, November 12, 2011

திக்ரின் பல்வேறு கோணங்கள்

திக்ரின் பல்வேறு கோணங்கள்

ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற(மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்க செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுப்படுத்த மாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும், அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்துக் கொண்டிருக்கும்;

அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள். (66:8)

“நீங்கள் தவ்பா செய்து, நீங்கள் வெற்றிப் பெரும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்” (24:31)

“நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி அவனிடம் திரும்புங்கள்” (11:3)

இறையுணர்வு, மறுமை நம்பிக்கை, குற்றவுணர்வு, உள்ளுறுத்தல், பாவமன்னிப்புத் தேடல், அதன் பலன் பற்றிய சிந்தனை, அறிவு இருந்தால் மாத்திரமே இவ்வசனங்களின் கருத்தை திக்ரின் ஒரு பக்கமாக செயல்படுத்த முடியும்.
திக்ரு செய்யாதவர்கள் நஷ்டவாளர்கள்:

எவனொருவன் அர்ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நணபனாகி விடுகிறான். (43:36)

இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றான். ஆனால், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள். (43:.37)

எதுவரையென்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும்போது (ஷைத்தானிடம்); “ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும், மேற்கு திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே!” (எங்களை வழிக்கெடுத்த) இந்நண்பன் மிகவும் கெட்டவன், என்று கூறுவான். (43:38)

“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாகவே எழுப்புவோம்” என்று கூறினான். (20:124)

(அப்போது அவன்) “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான். (20:125)

(அதற்கு இறைவன்) “இவ்விதம் தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உம்மிடம் வந்தன; அவற்றை நீ மறந்து விட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய் என்று கூறுவான். (20:126)

எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்துத் தன்னிரு கரங்களும் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனைவிடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கின்றான்? நிச்சயமாக நாம் அவர்களுடைய இருதயங்களின் மீது, இதை விளங்கிக் கொள்ளாதவற்கு திரைகளையும், அவர்களுடைய செவிகளில் செவிட்டுத் தனத்தையும் ஏற்ப்படுத்தியிருக்கிறோம். ஆதலால் நீர் அவர்களை நேர்வழியின் பால் அழைத்தாலும், அவர்கள் ஒருபோதும் நேர்வழியடைய மாட்டார்கள். (18:57)

எனவே, மேற்குறிப்பிட்ட திக்ரு வகைகளை முறையாக, முழுமையாகக் கடைப்பிடிக்காதவர்கள் கண்ணிருந்தும் குருடராக, செவியிருந்தும் செவிடராக, வாயிருந்தும் ஊமையாக, இதயமிருந்தும் உணராதவராக, அறிவிருந்தும் சிந்திக்காதவராக ஆகிவிடுகிறார்கள். இஸ்லாத்தின் பார்வையில் தோல்வி, நஷ்டம் என்பது மறு உலக சம்பந்தப்பட்டதாகும். ஆகையினால் முஸ்லிம்களாகிய நாம் மேற்கண்ட வசனங்களில் எச்சரிக்கைகளைப் புறக்கணிக்காமல் இம்மையை விட சிறந்தது, நித்திய மறுமைச் சுவன வாழ்வைப் பெற இனியாவது திக்ரின் எல்லாக் கோணச் சாரங்களின் அடிப்படையில் வாழ முற்படுதல் வேண்டும்.

கீழ்க்கண்ட கட்டங்களில் தூய துதிச் சொற்களாக திக்ரையும் அதன் கிளைச் சொற்களையும் வணக்கமாகச் செயல்படுத்துகிறோம் என்பதில் ஐயமில்லை.

தூங்கல் – முன்பின் காலைக்கடன் – முன்பின் குளித்தல் – முன்பின் உண்ணல், பருகல்- முன்பின் பிரயாணம் – முன்பின் கல்வியில் – முன்பின் ஒளு – முன்பின் திருமணம் – முன்பின் தொழுகையில் – முன்-உள்ளே-பின் பள்ளியில் – நுழைதல் – வெளியேறுதல் வீட்டில் – நுழைதல் – வெளியேறுதல் புத்தாடை – அணியும் போது இன்ப -துன்ப – வேளையில் சக சகோதரரை – சந்திக்கும் போது /பிரியும் போது நோயாளியை – பார்க்கும் போது ஜனாஷா – பல நிலைகளில்

உண்மையில் இவையணைத்தும் திக்ரின் ஒருப் பக்கம் தான். இதையும் கூட நபி(ஸல்) அவர்கள் போல், நபி வழிப்படி முழுமையாக செயல்படுத்துகிறோமில்லை. அதனால் தான், இதனால் பெற வேண்டிய பலன் பெறாமலிருக்கிறோம். உதாரணத்திற்கு திக்ரின் ஒரு அங்கமான பிரார்த்தனையை எடுத்துக் கொள்வோம் அதில் எந்தளவு கெஞ்சித் தாழ்மையாக, பணிந்து கேட்டல், நடந்ததுப் பற்றி வருந்து உள்ளுறுத்தல் கொள்ளல், ஆர்வத்துடன் இறையுணர்வை நினைவில் வைத்திருத்தல் போன்ற தன்மைகள் கலந்துள்ளன? பின் எப்படி நம் உள்ளக்கிடக்கையை இயல்பாய் நாம் படைத்து, பரிபாலித்து பாதுகாக்கும் இறைவன் முன் வெளிப்படுத்த முடியும்?

அந்த மகத்தான, எல்லாம் வல்லவன் பார்த்துக் கொண்டு. கேட்டுக் கொண்டு இருக்கிறான் என்ற உணர்வ எப்படி ஏற்படும்? அவனின் அளவேயில்லா அருளில், கருணையில் நம்பிக்கை எப்படி ஏற்படும்?

யதார்த்தத்தில் பிரார்த்திக்கும் வேளையில் எந்த சாட்சியுமின்றி அல்லாஹ்வுடன் உரையாடுகிறோம். எந்தளவுக்கு எதற்காக, எப்படி பிரார்த்திக்கிறோமோ அந்தளவுக்கு நமக்கும் அல்லாஹ்வுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது.
இறையுணர்வு அடியானின் உள்ளத்தில் வளர, வளர அவனின் பிரார்த்தனை தன்னிலை விளக்கமாகி விடுகிறது. இதுவே இனியாற்றும் அமல்களுக்கு அடித்தளமாகிறது. அதனால் தான் வணக்கங்களின் தலையாகப் பிரார்த்தனையைச் சொல்லப்படுகிறது.

நபி(ஸல்) அவர்கள், இப்பிரார்த்தனைகளில், வணக்கங்களில் மிக ஆழமான நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள். மிகச் சிரத்தையுடன், ஆர்வத்துடன் வேண்டிக் கொண்டார்கள். வெகு சிலரால் மட்டுமே அவர்களைப் பின்பற்றி அது போன்று பிரார்த்திக்க முடிகிறது.

நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனைகளில் பின்னணி, பாங்கினை ஆயும் போது அல்லாஹ்வின் மீதிருந்த அளப்பரிய அன்பு, அவனின் அருளில், கருணையில் ஆழமான நம்பிக்கை, எதிர்ப்பார்ப்பு, அவனின் ஆளுமையின் மீது அசைக்க முடியாத உறுதி, அவன் திருமுன் தன்னை மிக மிகத் தாழ்த்திக் கொண்ட பாங்கு போன்ற அருங்குணங்களைப் பார்க்கலாம். உண்மையில் நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனைகள் பல வண்ண மலர்களாகன ஓர் அழகிய ஆரம். இஸ்லாத்தில் தனியாகவோ, கூட்டாகவோ பிரார்த்திக்க ஏவப்பட்டுள்ளது. தனித்துப் பிரார்த்திருப்பது தொழுகைக்குப் பின் தான் என்றில்லாமல் தேவையேற்படும் எந்நிலையிலும் பிரார்த்திக்கலாம்.

பொதுவாக பிரார்த்தனை என்பது தன் இயலாமையை, தேவையை, சார்புத் தன்மையை, சுதந்திரமற்ற அடிமைத்தனத்தை உளமாற ஒப்புக் கொண்டு வெளிப்படுத்தும் அதே வேளை தன் எஜமானான எல்லாம் வல்லவனான தேவையற்றவனின் பெயரை அல்லது அவன் சிறப்பியல்புகளை முதலில் ஏற்றிப் போற்றிப் புகழ்தல் கொண்டு தன் பிரார்த்தனையை துவங்குதல் வேண்டும், உண்மையில் எந்நிலையிலும் நாம் ஓர் அடிமைதான் என்ற உள்ளுணர்வு நமக்கு மரணம் வரையில் மேலோங்கி நிற்க வேண்டும்.

நம் அனைத்துத் தேவைகளையும் துன்ப சூழலிருந்து மீளவாகட்டும், பாவ மன்னிப்பு கோரலாகட்டும். இம்மை-மறுமை தேவைகளாகட்டும், அடிமை எஜமானன் என்ற அந்தஸ்திலேயே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிமினின் பிரார்த்தனையில் இன்னுமோர் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் உள்ளது. அது எப்போதும் கேட்பவருக்காக மாத்திரம் செயல்படுவதில்லை.

தனித்து வேண்டும் போது கூட அனைத்தையும் தனக்காக மாத்திரமே கேட்பதில்லை. ஒரு முஸ்லிம் தன் போன்ற பிற முஸ்லிமிலிருந்து தன் குடும்பம், உற்றார், உறவினர், சமுதாயம், நாடு ஏன் ஒட்டு மொத்தமாக மனித குலம் வரையில் அனைத்து தரப்பாரரின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்திக்கிறான். தன் பிரார்த்தனையில் பெரும்பாலான இடங்களில் “நாங்கள்’ -’எங்களுக்கு’ என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நம் குடும்பம், கல்வி, சமூக அரசியல், நீதி நிர்வாகம், பொருளாதார முறைகள், மாற்று இன, மொழி,மத நாட்டவர்கள் மீது திக்ரின் இந்த பரந்த -விரிந்த வட்டத்தில் அதன் செயல்பாடுகளின் முழு தாக்கம், பிரதிபலிப்பு ஏற்படாத வரை நாம் ஈருலக வெற்றியாளர்களாக மாட்டோம்.

வல்ல அல்லாஹ் திக்ரின் எல்லா வகைக் கருத்துக்களையும் விளங்கி. செயல்பட்டு வெற்றி பெற்ற பிரிவினரில் நம்மை ஆக்கி வைக்க அருள்பாலிப்பானாக. ஆமின்.
அபூ முஹம்மத் சாதிக்

நமக்கு உதவியாளன் யார்?

நமக்கு உதவியாளன் யார்?

பரிந்துரை அல்லாஹ்வுக்கே சொந்தம் :

1. அவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா?

(நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்தாலுமா? பரிந்துரை எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள். (39:43,44)

2. அன்றியும். அல்லாஹ்வையன்றி அவர்கள் எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் (அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து பேச அதிகாரமுள்ளவர்கள் அல்லர். (43:86)

3. அவர்களுக்கு, ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. (6:70)

4. (நபியே!) அண்மையில் வரும் (கியாமத்) நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக; இதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக் குழிக்கு வரும் (அவ்) வேளையில் அநியாயக் காரர்களுக்கு இரக்கப்படும் நண்பனோ; அல்லது ஏற்றுக் கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான். (40:18)

5. இன்னும் ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்குச் சிறிதும் பயன்படமுடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக; (அந்நாளில்) எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அதற்காக எந்த பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (2:48,123)

6. அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப் பின் அர்ஷின் மீது அமைந்தான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. எனவே (இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்க வேண்டாமா? (32:4)

7. (மறுமையில்) அவனைத் தவிர அவர்களுக்கு பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. (6:51)

8. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே (அல்லாஹ்வுக்கே) உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (2:255)

9. அவன் எவருக்கு அனுமதிக் கொடுக்கிறானோ அவருக்குத் தவிர அவனிடத்தில் எந்த பரிந்துரையும் பயனளிக்காது. (34:23)

10. அவனது அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சி பொருந்திய) அல்லாஹ்வே உங்களைப் படைத்து பரிபக்குவப் படுத்துபவன். (10:3)

பரிந்துரைக்க அனுமதிப் பெறுபவர்கள்.

11. இன்னும் எவரை அவன் பொருந்தி ஏற்றுக் கொள்கிறானோ அ(த்தகைய)வருக்கின்றி – அவர் (நபி)கள் பரிந்து பேச மாட்டார்கள். இன்னும் அவர்கள் அவன் பால் உள்ளச்சத்தால் நடுங்குபவர்களாகவும் இருக்கின்றார்கள். (21:28)

12. அர்-ரஹ்மானிடம் உடன்படிக்கை செய்துக் கொண்டோரைத் தவிர – எவரும் பரிந்துரை செய்ய அதிகாரம் பெற மாட்டார்கள். (19 :87)

13. அந்நாளில் அர்-ரஹ்மான் எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்து கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவரது பரிந்துரை (ஷஃபாஅத்து)யும் பயனளிக்காது. (20:109)

14. அல்லாஹ் விரும்பி, எவரைப் பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதிக் கொடுக்கிறானோ – அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்த பயனுமளிக்காது. (53:26)

15. …………எவர்கள் சத்தியத்தை அறிந்து (ஏற்றவர்களாக அதற்குச்) சாட்சியம் கூறுகிறார்களோ அவர்கள் (இறை அனுமதியுடன் பரிந்து பேசுவர்) (43 : 86)

பாவிகளின் கூற்றும் பிதற்றலும்

16. தங்களுக்கு (யாதொரு) நன்மையோ, தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவர்களை (இணை வைப்போர்) வணங்குகிறார்கள். இன்னும் அவர்கள்;

இவர்கள் எங்களுக்கு அல்லாஹ்விடம் சிபாரிசு செய்பவர்கள் என்றும் கூறுகிறார்கள். (10:18)

17. அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). (39:3)

18. மேலும் (இறுதி) நேரம் நிலைபெறும் நாளில் குற்றவாளிகள் நம்பிக்கை இழப்பார்கள். அப்போது அவர் இணை வைத்தவர்களில் எவரும் அவர்களுக்காகப் பரிந்து பேசுவதாக இராது; (இணை வைத்த) அவர்களும், தாங்கள் இணை வைத்தவர்களை நிராகரிப்போராகி விடுவார்கள். (30:12,13)

19. அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாம் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருந்தோம்; உங்களை நாங்கள் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாக இருப்பவனுடன் சரிசமானமுள்ளவராக ஆக்கி வைத்தோம்; (அப்போது) இந்த குற்றவாளிகள் தாம் எங்களை வழி கெடுத்தவர்கள்; ஆகவே எங்களுக்காகப் பரிந்து பேசவோர் (இன்று) எவருமில்லை; அனுதாபமுள்ள உற்ற நண்பனும் இல்லை. நாங்கள் (உலகத்துக்கு) திரும்பிச் செல்ல வழி கிடைக்குமாயின், நிச்சயமாக நாங்கள் முஃமின் (இறை விசுவாசி)களாகி விடுவோமே. (எனப் பரிதவித்து புலம்புவார்கள்) (26:97-102)

20. குற்றவாளிகளைக் குறித்து-

உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது? (என்று கேட்கப்படும்) அவர்கள் (பதில்) கூறுவார்கள் :

நாங்கள் தொழுகையாளிகளில் நின்றும் இருக்கவில்லை; மேலும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை; (வீணானவற்றில்) மூழ்கிக் கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக் கிடந்தோம்; இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்; உறுதியான (மரணம்) எங்களிடம் வரும் வரையில் (இவ்வாறாக இருந்தோம் எனக் கூறுவர்).

ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது. (74:41-48)

21. (மறுமையில் அல்லாஹ் பாவிகளை நோக்கி)

நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுப்போன்று நீங்கள் (ஏதுமின்றி) தனியே எம்மிடம் வந்து விட்டீர்கள்; இன்னும், நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களது கூட்டாளிகள், (என்றும்) உங்களுக்கு பரிந்து பேசுபவர் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை; உங்களுக்கிடையே இருந்தத் தொடர்பும் அறுந்து விட்டது; உங்கள் நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன. (என்று கூறுவான்) (6:94)

22. நம்பிக்கைக் கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த (இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர்… நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவு செய்யுங்கள். (2:254)

23. அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா? அர்-ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால் இவர்கள் என்னை (அக்கெடுதியிலிருந்து) விடுவிக்கவும் முடியா! (36:23)

24. எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு பரிந்துரை செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கும் உண்டு; (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு பரிந்துரை செய்தால் அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகம் உண்டு. (4:85)

மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்



மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்

மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் எச்சரிப்பதைக் கண்டு கொள்ளாமல் தங்கள் தங்கள் சுய பெயர்களில் பதிவு செய்து ஆதிக்கம் செய்கின்றனர். அல்லாஹ்வின் தெளிவான இந்தக் கட்டளையைப் புறக்கணித்து ஒவ்வொரு பிரிவாரும் அல்லாஹ்வின் பள்ளிகளைக் கூறுபோட்டுள்ளனர். மற்றவர்களின் சொத்துக்களைப் போலிப் பத்திரங்கள் தயாரித்து தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் படுகிறபாடுகளை இப்போது ஊடகங்களில் பார்த்து வருகிறோம் அல்லவா? இங்கு கூட தங்களின் பண பலம் அரசியல் செல்வாக்குக் கொண்டு தண்டனையிலிருந்து சிலர் தப்பி விடலாம்.

ஆனால் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பள்ளிகளை போலிப் பத்திரங்கள் மூலம் ஆதிக்கம் செய்து, அட்டூழியம் செய்கிறவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் தப்ப முடியுமா? ஒருபோதும் தப்ப முடியாது. அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பள்ளிகளை இந்த அறிவீனர்கள் கூறு போட்டு ஆதிக்கம் செலுத்தி வருவது உண்மை தான். ஆயினும் நேர்வழி நடக்கும் முஸ்லிம்களின் கடமை என்ன? இதற்கு நபி(ஸல்) அவர் கள் 33:21 கூறுவது போல் வழிகாட்டவில்லையா? நிச்சயம் வழிகாட்டி இருக்கிறார்கள். அல்லாஹ்வின் வீடான கஃபதுல்லாஹ் முஷ்ரிக்குகளிலும் மிகக் கொடிய முஷ்ரிக்குகளான தாருந்நத்வா மதகுருமார்கள் கையில் சிக்கி இருந்தது. அங்கு எண்ணற்ற சிலைகளும், சமாதிகளும் நிறைந்து காணப்பட்டன.

இந்த நிலையிலும் நபி(ஸல்) அங்கு சென்று தான் அல்லாஹ்வைத் தொழுதார்கள். அப்போது அந்த தாருந்நத்வா குருகுல மடத்தின் தலைமை இமாமாகவும் அந்த மக்களால் அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட, நபி(ஸல்) அவர்களால் அபூ ஜஹீல்- மடமையின் தந்தை என அடையாளம் காட்டப்பட்டவனும், இந்த அபூ ஜஹீலின் தோழர்களும் நபி(ஸல்) கஃபாவில் அல்லாஹ்வைத் தொழும்போது பெரும் துன்பங்களைக் கொடுத்தார்கள்.

ஒரு சமயம் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் தொழுது கொண்டிருக்கும்போது அவர்கள் மீது அழுகிய ஒட்டகக் குடலை அபூ ஜஹீல் வகையறாக்கள் போட்டதால் நபி(ஸல்) மூச்சுத் திணறி பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். அந்த காஃபிர்களோ கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்தார்கள் என்ற வரலாற்றைப் பார்க்கிறோம்.

இதிலிருந்து நாம் பெறும் படிப்பினை என்ன? கஃபதுல்லாஹ் எண்ணற்ற சிலைகளைக் கொண்டும், சமாதிகளைக் கொண்டும் நிரப்பப் பட்டிருந்தாலும் அது அல்லாஹ்வின் வீடு என்பதில் எவ்வித மாற்றமும் பெறவில்லை. அதனால் தான் நபி(ஸல்) அங்கு சென்று மிகமிக ஆபத்தான, துன்புறுத்தல்கள் நிறைந்த நிலையிலும் அல்லாஹ்வைத் தொழுது தமது உம்மத்திற்கு வழி காட்டி இருக்கிறார்கள். சிலைகளும், சமாதிகளும் இருக்கும் நிலையிலேயே மதீனாவிலிருந்து கஃபாவை நோக்கியே தொழுதார்கள். இது இறைவனின் கட்டளையாகும்.

அதேபோல் அல்லாஹ்வின் பள்ளிகளைக் கூறு போட்டு அவரவர்கள் பெயர்களில் பதிவு செய்து பித்அத், குஃப்ர், ´ஷிர்க் போன்ற அட்டூழியங்களை நடைமுறைப்படுத்தி வந்தாலும் அவை அல்லாஹ்வின் பள்ளிகள் என்ற நிலையிலிருந்து மாறப் போவதில்லை.

எனவே நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த அழகிய முறைப்படி நேர்வழி நடக்க விரும்பும் முஸ்லிம்கள் அப்பள்ளிகளில் சென்று அல்லாஹ்வைத் தொழுவதே சமுதாய ஒற்றுமைக்கு வழி வகுக்கும். அவர்கள் எவ்வளவு பெரிய ´ஷிர்க், பித்அத்களில் மூழ்கி இருந்தாலும், அடிப்படை விஷயங்களில் தொழுகையில் நபி(ஸல்) காட்டித் தந்ததையே பின்பற்றுகின்றனர். ஐங்கால தொழுகைகளில், ரகாஅத்களில், ருகூஃ, சுஜூதுகளில், இருப்பில் நபி(ஸல்) காட்டித் தந்தபடிதான் செய்கின்றனர். 39:17,18 இறைக் கட்ட ளைகள்படி அவர்கள் செய்யும் இந்த அழகானவற்றில் நேர்வழி நடக்க விரும்பும் முஸ்லிம்கள் பின்பற்றுவதில் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட செயல் ஒன்றுமில்லை.

ஒருவருடைய சுமையைப் பிரிதொருவர் சுமக்க மாட்டார் என்று குர்ஆன் 6:164, 17:15, 35:18, 39:7, 53:38 போன்ற பல இடங்களில் அல்லாஹ் நேரடியாகக் கூறியுள்ளான். தொழவைக்கும் இமாமின் பித்அத், குஃப்ர், ´ஷிர்க் காரணமாக அவரின் தொழுகை அவரது முகத்தில் எறியப்பட்டாலும், அவர் பின்னால் தொழும் நேர்வழி நடக்கும் முஸ்லிம்களின் தொழுகையில் அணுவளவு கூட குறைவு செய்ய மாட்டான் அல்லாஹ்.

அவர்கள் பின்னால் நின்று தொழக்கூடாது என்று சட்டம் சொல்லும் மதகுருமார்கள் 9:31, 42:21, 49:16 வசனங்களின் வழிகாட்டல்படி தர்கா, மத்ஹபினரை விட கொடிய ´ஷிர்க் செய்கிறவர்களாகவே இருக்கிறார்கள். காரணம் முன்னவர்கள் அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் முன் சென்ற இமாம்கள், வலிமார்கள் போன்றோரை வசீலாவாக-இடைத்தரகர்களாக மட்டுமே ஆக்குகிறார்கள்.

இவர்களோ அல்லாஹ் விதிக்காத சட்டங்களை விதித்து 42:21 வசனப்படி அல்லாஹ்வுக்கே இணையாளர்களாக ஆகிறார்கள். 21:92, 23:52 இறைக் கட்டளைக்கு முரணாகச் சமுதாயத்தைப் பிளவுபடுத்துகிறார்கள். தீர்ப்பை மறுமைக்கென்று அல்லாஹ் ஒத்தி வைத்திருக்காவிட்டால் இங்கே அவர்களுக்கு மிகக் கடுமையான தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும்; தீர்ப்பு மறுமையில் என்றிருப்பதால் இவ்வுலகில் அவர்கள் விருப்பப்படி 9:34 வசனம் கூறுவது போல் மக்கள் சொத்துக்களைத் தவறான முறைகளில் சாப்பிடுகிறார்கள். 49:16 வசனத்தில் அல்லாஹ் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க முற்படுகிறார்கள்.

குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என வாய் கிழியப் பேசும் இவர்கள் குர்ஆன், ஹதீஸ்படி நடப்பதில்லை என்பதே உண்மை. ஈமானுக்கு அடுத்து அடிப்படையான ஐங்காலத் தொழுகைகளையே உள்ளச்சத்தோடு, பேணுதலோடு அன்றாடம் தவறாமல் ஜமாஅத் தோடு சேர்ந்து தொழாத இவர்கள் வேறு எந்த மார்க்க விஷயங்களில் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றப் போகிறார்கள்?

அல்லாஹ்வுக்குச் சொந்தமான பள்ளிகளை 18:28, 20:16, 25:43, 28:50, 38:26, 45:23, 79:40,41 இத்தனை இறைவாக்குகளில் மனோ இச்சைப் பற்றி எச்சரித்திருந்தும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் நிராகரித்து விட்டு தங்கள் மனோ இச்சை சரிகாணும் பெயர்களில் பத்திரப் பதிவு செய்து அபகரித்துக் கொண்டாலும் அவை அல்லாஹ்வின் பள்ளிகள்தான். இது அன்று குறைஷ் குஃப்பார்கள் அல்லாஹ்வின் வீடான கஃபதுல்லாஹ்வை அபகரித்து வைத்திருந்த செயலுக்கு ஒப்பானதாகும்.

விருந்தோம்பலின் அவசியம்

விருந்தோம்பலின் அவசியம்

விருந்தினரை உபசரிப்பது இஸ்லாத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ள ஒரு வணக்கமாகும். விருந்தோம்பல் ஈமானின் ஒரு அங்கம் என்று இஸ்லாம் கூறுகிறது.

“யார்” அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புகிறாரோ, அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

விருந்தினரை உபசரிக்காதவரிடம் இறை நம்பிக்கையும், மறுமை நம்பிக்கையும் இருக்க முடியாது என்பதிலிருந்து விருந்தோம்பலின் அவசியத்தை உணரலாம்.

யார் விருந்தழைப்பை ஏற்க மறுக்கிறாரோ, அவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

விருந்தழைப்பை மறுப்பவர்கள் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்பட்டவர்களாக இருக்க முடியாது என்பதிலிருந்து விருந்துக்கு பதிலளிப்பதும் கடமை என்பதை உணரலாம்.

உள்ளூர்வாசியும் விருந்தாளியே!
வெளியூரிலிருந்து நம்மை நாடி வருபவர் மட்டுமே விருந்தாளிகள் என்று பலரும் எண்ணியுள்ளனர். இது தவறாகும். உள்@ர்வாசிகளும் கூட விருந்தை நாடிச் செல்லலாம். அவர்களையும் கூட உபசரிக்க வேண்டும்.

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டார்கள். அப்போது அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் வெளியே வந்த நேரத்தில் புறப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். “இந்த நேரத்தில் ஏன் வெளியே புறப்படுகிறீர்கள்?” என்று அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவ்விருவரும் “பசி” என்றனர். “என் உயிரை கைவசப்படுத்தியுள்ளவன் மீது ஆணையாக! நீங்கள் எதற்காகப் புறப்பட்டுள்ளீர்களோ அதற்காகவே நானும் புறப்பட்டுள்ளேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்விருவரையும் நோக்கி “நடங்கள்” என்றார்கள். அவர்களிருவரும் நபியவர்களுடன் நடந்தனர். மூவரும் அன்சார்களைச் சேர்ந்த ஒருவரின் இல்லத்தை அடைந்தனர். அப்போது அவர், வீட்டில் இல்லை. அவரது மனைவி அவர்களைக் கண்டதும் “நல்வரவு” என்று கூறினார். “அவர் எங்கே?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “எங்களுக்காக சுவையான நீர் எடுத்து வரச் சென்றுள்ளார்” என்று அப்பெண்மணி கூறிக் கொண்டிருக்கும் போதே கணவர் வந்து சேர்ந்தார். நபி (ஸல்) அவர்களையும், அவர்களின் இரு தோழர்களையும் கண்டு, “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் சிறந்த விருந்தினர்களைப் பெற்றவர், என்னைவிட யாரும் இல்லை” என்று அவர் கூறினார். வெளியே சென்று செங்காய், கனிந்த பேரீச்சம் பழம் கொண்ட ஒரு குலையைக் கொண்டு வந்தார். இதைச் சாப்பிடுங்கள்! என்று கூறிவிட்டு (ஆட்டை அறுக்க) கத்தியை எடுத்தார். “பால் கறக்கும் ஆட்டைத் தவிர்த்துக் கொள்!” என நபி (ஸல்) அவரிடம் கூறினார்கள். அவர் ஆட்டை அறுத்தார்: அதையும் பழக்குலையையும் அவர்கள் உண்டார்கள்: பருகினார்கள். வயிறு நிரம்பி தாகம் தனிந்ததும், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த பாக்கியம் பற்றியும் மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். பசியோடு வந்தீர்கள்: வயிறு நிரம்பி திரும்பிச் செல்கிறீர்கள்” என்று அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்

விருந்தினரை கண்ணியப்படுத்தல்
கணவர், வீட்டிற்கு விருந்தாளியை அழைத்து வரும்போது வந்த விருந்தாளியை தங்களின் செயல்களின் மூலம் வெறுப்பூட்டி மனதை புண்படுத்தும் பெண்களைப் பார்க்கிறோம். இறைவனையும், மறுமையையும் அஞ்சி விருந்தளிப்பதனால் கிடைக்கும் நன்மையை மனதில் கொண்டு இதுபோன்ற அநாகரீகமாக நடப்பதை விட்டும் பெண்கள் தவிர்ந்து கொள்ளவேண்டும். நம்மை நாடி வரக் கூடியவர்களுக்கு விருந்தளித்து கண்ணியப்படுத்த வேண்டும். நம்மிடம் குறைந்த உணவு இருந்தாலும் அதைக் கொடுத்து விருந்தினரை மகிழ்விக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளை அப்படியே பின்பற்றிய நபித்தோழர்களும், தோழியர்களும் விருந்தோம்பல் விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.

ஒரு முறை மனிதர் கடும்பசியுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து உணவளிக்கும்படி கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் ஆளனுப்பி, “வீட்டில் உண்பதற்கு ஏதேனும் உண்டா?” எனக் கேட்டார்கள். “இன்று எதுவும் இல்லை!” என்று பதில் வந்தது. நபியவர்கள் தோழர்களை நோக்கி, “அல்லாஹ்வின் இந்த அடிமையை அழைத்துச் சென்று விருந்தளிப்பவர், உங்களில் யாரேனும் உண்டா?” எனக் கேட்டார்கள். இதனைக் கேட்டதும் அபூதல்ஹா (ரலி) எழுந்து, “இறைத்தூதரே! இவரை எனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்” என்றார்கள். வீட்டிற்குச் சென்று தமது மனைவி உம்முசுலைம் (ரலி) அவர்களிடம், “ஏதாவது உணவு உள்ளதா?” எனக் கேட்டார். “பிள்ளைகளுக்கான உணவைத் தவிர வேறு உணவு எதுவும் இல்லை! என்று உம்முசுலைம் (ரலி) கூறினார். பிறகு குழந்தைகளைத் தூங்க வைத்துவிட்டு இருந்த உணவை வந்த விருந்தாளிக்கு வைத்து விட்டனர். விருந்தாளி தன்னையும் உண்ணச் சொல்வார் என்பதை அறிந்து விளக்கை அணைத்துவிட்டு, அபூதல்ஹா (ரலி) உண்பது போன்று தனது வாயை அசைத்துக் கொண்டிருந்தார். விருந்தாளியை மகிழ்வித்தோம் என்ற திருப்தியுடன் கணவனும், மனைவியும் இரவைக் கழித்தார்கள். காலையில் அபூதல்ஹா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் இருவரும் நேற்று இரவு விருந்தாளியுடன் நடந்து கொண்ட விதத்தை குறித்து அல்லாஹ் ஆச்சரியப்பட்டான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

அவர்கள் தங்களை விட பிறருக்கே முன்னுரிமை அளிப்பார்கள். தமக்கு தேவை இருப்பினும் சரியே! (அல்குர்ஆன் 59:9) என்ற வசனம் அவர்களுக்காகவே இறங்கியது.

அனஸ் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவர்களை நோய் விசாரிக்க, சிலர் வந்தனர். “பணிப் பெண்ணே! நமது தோழர்களுக்காக ரொட்டித்துண்டையாவது கொண்டுவா!” என்று கூறிவிட்டு “நல்ல பண்புகள் சுவனத்திற்கான அமல்களில் உள்ளவையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்றும் கூறினார்.
அறிவிப்பவர்: ஹுமைத் நூல்: தப்ரானி

நோய் வாய்ப்பட்டிருக்கும் போது கூட, நபித்தோழர்கள் விருந்தினரைக் கவனிக்கத் தவறியதில்லை என்பதிலிருந்து விருந்தோம்பலின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது.

பொது விருந்தினரை உபசரித்தல்
“ஒருவர் தனி நபரின் விருந்தினராகச் செல்லாமல் ஒரு கூட்டத்தாரிடம் விருந்தாளியாகச் சென்றால், அவருக்கு ஏதும் கிடைக்கவில்லையானால், அவருக்கு உதவுவது, எல்லா முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்: அஹ்மத்

விருந்தளித்தல் பிரதி உபகாரம் அன்று
விருந்தளித்தல் என்பது பிரதி உபகாரமாகச் செய்யப்படும் ஒன்றல்ல. நமது நற்பண்பை எடுத்துக்காட்டுவதற்காக செய்யப்படுவதாகும். எனவே விருந்தாளியாக வந்தவர் நம்மிடம் எப்படி நடந்து கொண்டார் என்று பார்க்கக்கூடாது.

“அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு மனிதரிடம் சென்றபோது, அவர் எனக்கு விருந்தளிக்கவில்லை. அதன் பின்னர், அவர் என்னிடம் வருகிறார். நான் அவருக்கு விருந்தளிக்க வேண்டுமா? அல்லது அவர் என்னிடம் நடந்து கொண்டதைப் போல் நடக்கட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவருக்கு விருந்தளிப்பீராக! என்றார்கள்.
அறிவிப்பவர்: அபுல் அஹ்வால் தமது தந்தை வழியாக, நூல்: திர்மிதீ

விருந்தோம்பலின் முறை
விருந்து பரிமாறும்போது வலது புறமாக அமர்ந்திருப்பவர்களிலிருந்து பரிமாறுதலை துவக்க வேண்டும். இடதுபுறம் பரிமாறுவதாக இருந்தால் வலது புறத்திலுள்ளவர்களிடம் அனுமதி பெற வேண்டும்.

ஒருமுறை குட்டிபோட்ட ஆடு நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதன் பாலில் அனஸ் (ரலி) வீட்டிலுள்ள கிணற்றுத் தண்ணீர் கலக்கப்பட்டு குவளை நபி (ஸல்) அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அவர்கள் அந்தப் பாலைக் குடித்தார்கள். அவர்களின் வலதுபுறத்தில் கிராமவாசிகளும், இடது புறம் அபூபக்கர் (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! (முதலில்) அபூபக்கருக்கு வழங்குங்கள்! என்றார்கள். ஆனால் தன் வலது புறமிருந்த கிராமவாசிகளுக்கு (அந்தக் குவளையை) கொடுத்து விட்டு “வலதுபுறம், வலதுபுறமாகவே (வழங்கவேண்டும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

ஒருமுறை நபி (ஸல்) அவர்களின் வலதுபுறம் மக்களில் சிறியவரும், இடது புறத்தில் பெரியவர்களுமாக அமர்ந்திருந்தபோது ஒரு குவளை தரப்பட்டது. அதிலிருந்து நபி (ஸல்) சாப்பிட்டார்கள். பின்பு சிறுவரே (இடது புறத்தில் அமர்ந்துள்ள) பெரியவர்களுக்கு (முதலில்) கொடுக்க அனுமதிக்கிறாயா? எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! உங்களிடமிருந்து எஞ்சியுள்ள உணவை பிறருக்கு கொடுக்க நான் விரும்பவில்லை என்று அச்சிறுவர் கூறியதும் அவரிடமே அதைக் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

வலது புறம் சிறுவர்கள் அமர்ந்திருந்தாலும், வலது புறத்துக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். இடதுபுறம் பரிமாறுவதாக இருந்தால் அவர்களிடமும் அனுமதி பெற வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகிறது. எனவே வலது புறமாகவே பரிமாற வேண்டும்.

விருந்தாளியுடன் சேர்ந்து உண்ணுதல்
விருந்தளிக்கும்போது வீட்டுக்காரரோ, விருந்துக்கு வந்தவர்களில் ஒருவரோ சாப்பிட்டதும், எழுந்துவிடக்கூடாது. அனைவரும் சாப்பிட்டு முடியும் வரையில் சாப்பிடுவது போல் அமர்ந்திருக்க வேண்டும்.

“உணவுத் தட்டு வைக்கப்பட்டால் அது தூக்கப்படும் வரை எவரும் எழக்கூடாது. தனக்கு வயிறு நிரம்பிவிட்டாலும் கூட்டத்தினரின் வயிறு நிரம்பும் வரை தனது கையை தட்டிலிருந்து எடுக்கக் கூடாது. ஏனெனில் அவருடன் சாப்பிடுபவருக்கு உணவு தேவையிருக்கும் நிலையிலே வெட்கப்பட்டு தனது கையை அவர் எடுத்துவிடக்கூடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: இப்னுமாஜா

வாசல் வரை வந்து வழியனுப்புதல்
விருந்தளித்து முடித்ததும், வீட்டுக்காரர் விருந்தாளியை வாசல் வரை வந்து வழியனுப்ப வேண்டும். இது நபிவழி என்பதுடன் தேவையற்ற சந்தேகங்களையும் இதனால் களைய முடியும்.
விருந்தளிப்பவர், விருந்தாளியை தனது வாசல் வரை வந்து அனுப்பி வைப்பது நபிவழியாகும்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா

மூன்று தடவை அழைத்து பதில் இல்லையானால்…
விருந்துக்கு செல்பவரோ, வேறு அலுவலை முன்னிட்டு இன்னொரு வீட்டுக்கு செல்பவரோ ஸலாம் கூறவேண்டும். மூன்று தடவை ஸலாம் கூறியும் பதில் வராவிட்டால் திரும்பி விட வேண்டும்.

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில் அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள். (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும். நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்கு கூறப்படுகிறது)

அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள். திரும்பிப் போய்விடுங்கள் என்று உங்களுக்கு சொல்லப்பட்டால் அவ்வாறே திரும்பி விடுங்கள். அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும். அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்.

(அல்குர்ஆன் 24:27, 28) நபி (ஸல்) அவர்கள் ஸஃத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறி உள்ளே வர அனுமதி கேட்;டார்கள். ஸஃத் அவர்கள் “வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹ்” என்று நபி (ஸல்) அவர்களுக்கு கேட்காதவாறு (சப்தமின்றி) பதில் கூறினார். இவ்வாறு மூன்று தடவை நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கூறினார்கள். அவர் மூன்று தடவையும் நபி (ஸல்) அவர்களுக்கு கேட்காத வகையில் பதில் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் திரும்பினார்கள். ஸஃத் அவர்கள் அவர்களைத் தொடர்ந்து வந்து அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஸலாம் கூறியது, எனக்கு கேட்டது. உங்கள் ஸலாமையும் பரக்கத்தையும் அதிகம் பெறுவதற்காக உங்களுக்கு கேட்காத வகையில் பதில் கூறினேன் என்றார். பின்னார் அவர்கள் நுழைந்தனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: அஹ்மத்

நான் (எதிலும்) சாய்ந்து கொண்டு சாப்பிட மாட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: வஹப் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்கள்: புகாரி, திர்மிதி, அபூதாவூத்

பிஸ்மில்லாஹ் கூறி….
சாப்பிடும்போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்) என்று கூறி வலது கையால் உண்ண வேண்டும். தட்டின் முன்பகுதியிலிருந்து உண்ணவேண்டும். இதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம் உணவு இருந்தது. அன்பு மகனே! நெருங்கி வா! அல்லாஹ்வின் பெயரைக் கூறு! உன் வலது கையால் சாப்பிடு! உனக்கு முன்னால் உள்ள பகுதியிலிருந்து சாப்பிடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் இப்னு அபூ ஸலமா (ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ

உணவில் ஏதேனும் கீழே விழுந்துவிட்டால்..
(சாப்பிடும்போது) உங்களிடமுள்ள (உணவு) ஒரு கவளம் கீழே விழுந்துவிட்டால் அதில் அசுத்தமான பொருள் ஒட்டியிருந்தால் அதை நீக்கிவிட்டு சாப்பிடவும். அதை ஷைத்தானுக்கு விட்டுக் கொடுக்க வேண்டாம். தனது விரல்களை சப்பாமல் கைக்குட்டையால் கையை துடைக்க வேண்டாம். ஏனெனில் எந்த உணவில் பரக்கத் உள்ளது என்று அவன் அறிய முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் தட்டை சுத்தமாக்கிக் கொள்ளும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். உங்களின் எந்த உணவில் பரக்கத் உள்ளது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (எனவே) சுத்தமாக வழித்துச் சாப்பிடுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ

சாப்பிடும் போது கீழே விழும் பொருளை சுத்தம் செய்து உண்ண வேண்டும் என்பதையும், தட்டிலோ, விரல்களிலோ ஒட்டியிருக்கும் உணவை வீணாக்காமல் தட்டை வழித்தும், விரலை சூப்பியும் சுத்தமாகச் சாப்பிட வேண்டும் என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து அறிய முடிகிறது.

சாப்பிட பின்…
நபி (ஸல்) அவர்கள் முன்னாலிருந்த சாப்பாட்டு தட்டு எடுக்கப்படுமானால்….
“அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ஃகைர முவத்தயின் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்புனா” என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி

(துஆவின் பொருள்: தூய்மையான ஏராளமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. இறைவா! நீ உணவின்பால் தேவையுடையவன் அல்ல. உன்னை யாரும் விட்டுவிட முடியாது)

ஒரு அடியான் உணவை சாப்பிடும்போது அந்த உணவுக்காக அவனைப் புகழ்வதையும், நீரைப் பருகும்போது அந்த நீருக்காக அவனை புகழ்வதையும் அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான் என்பதும் நபிமொழி.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, நஸயீ

உணவை குறை கூறக்கூடாது
விருந்துக்கு செல்லும்போது குறைகள் இருந்தால் அதை சகித்துக் கொள்ளவேண்டும். அதை வெளிப்படுத்தும்போது விருந்தளித்தவர் மனது கஷ்டப்படலாம்.

நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை காணமாட்டார்கள். அது (உணவு) விருப்பமானதாக இருந்தால் சாப்பிடுவார்கள். விருப்பமில்லையானால் (சாப்பிடாமல்) விட்டு விடுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

பிடிக்காத உணவு வைக்கப்படும் நேரத்தில் அதை உண்ணாமல் ஒதுக்குவது தவறல்ல.
நபி (ஸல்) அவர்கள் முன்னே உடும்பு (சமைத்து) வைக்கப்பட்டபோது அதை அவர்கள் சாப்பிடவிலலை. இதைக் கண்ட காலித் இப்னு வலீத் (ரலி) இது ஹராமா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “இல்லை” (இது) என் குடும்பத்தில் நான் காணாத உணவாகும். அதனால் என் மனம் விரும்பவில்லை என்று கூறியவுடன் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க தன்னருகே அதை இழுத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்தார்கள்.
அறிவிப்பவர்: காலித் இப்னு வலீத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், முஅத்தா

நின்று கொண்டு நீர் அருந்தக்கூடாது
நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு குடிப்பதை தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), அபூஸயீத் (ரலி)
நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்

தண்ணீரில் மூச்சு விடவோ, ஊதவோ கூடாது
குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடுவதையும் ஊதுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா

இடது கையால் குடிக்கக்கூடாது
உங்களில் எவரும் இடதுகையால் குடிக்கவோ, சாப்பிடவோ வேண்டாம். ஏனெனில் சைத்தான் தான் இடது கையால் குடிக்கிறான். சாப்பிடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ

முஸ்லிமல்லாதவர்களின் பாத்திரங்கள்
முஸ்லிமல்லாதவர்களின் வீட்டிற்கு விருந்திற்கு செல்லும் போது அவர்களின் பாத்திரங்களில் உண்ணலாமா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்களோடு நாங்கள் போரிலிருந்த சமயம் இணை வைப்போரின் பாத்திரங்கள் கிடைத்தன. அதைத்தான் (உண்பதற்கும், பருகுவதற்கும்) நாங்கள் உபயோகித்தோம். அது விஷயமாக நபி (ஸல்) அவர்களால் நாங்கள் குறை கூறப்படவில்லை.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்: அபூதாவூத்

முஸ்லிமல்லாதவர்களின் பாத்திரங்களில் சாப்பிடுவதும், அதில் சமைப்பதும் நபி (ஸல்) அவர்களால் தடுக்கப்படவில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

என்றாலும் தூய்மையான உணவு சமைக்கப்பட்ட பாத்திரங்களையே சாதாரணமாக பயன்படுத்தலாம். பன்றி இறைச்சி போன்றவை சமைக்கப் பயன்படும் பாத்திரங்கள், மது அருந்தப் பயன்படும் குவளைகள் ஆகிய பாத்திரங்களில் உணவு தரப்படுமானால் அதை நன்றாகக் கழுவிய பின் உண்ணலாம்: பருகலாம். இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

அபூஸலபா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் வேதமுடையோரின் அருகில் வசிக்கிறோம். அவர்கள் தங்களின் சமையல் பாத்திரங்களில் பன்றி இறைச்சியை சமைக்கிறார்கள். அவர்களின் பாத்திரங்களில் மது அருந்துகிறார்கள். (அந்தப் பாத்திரங்களை நாங்கள் பயன்படுத்தலாமா?) என்று கேட்டார். அவர்களின் பாத்திரங்கள் அல்லாத (வேறு) பாத்திரங்கள் கிடைத்தால் அதில் உண்ணுங்கள். குடியுங்கள். அவர்களிடம் மட்டுமே பெற்றுக் கொண்டால் தண்ணீரால் கழுவிவிட்டு பின்பு உண்ணுங்கள், பருகுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஷலபா (ரலி) நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ

அழையாத விருந்து
நபி (ஸல்) அவர்களையும் மற்றும் நால்வரையும் ஒரு மனிதர் விருந்துக்கு அழைத்தார். அவர்களுடன் இன்னொரு மனிதரும் பின்தொடர்ந்து வந்தார். வீட்டு வாசலை நபி (ஸல்) அடைந்ததும் விருந்துக்கு அழைத்தவரிடம், “இவர் எங்களைத் தொடர்ந்து வந்துவிட்டார். நீர் விரும்பினால் இவருக்கு அனுமதியளிக்கலாம். நீர் வரும்பாவிட்டால் இவர் திரும்பிச் சென்று விடுவார்” என்று கூறினார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவருக்கு அனுமதியளிக்கிறேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

அகீகா விருந்து
குழந்தை பிறந்த மகிழ்ச்சியைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்காக குழந்தை பிறந்த ஏழாம் நாளில் அகீகா எனும் விருந்தளிக்க மார்க்கத்தில் ஆதாரமுள்ளது. ஆண் குழந்தைக்காக இரண்டு ஆடுகள், பெண் குழந்தைக்காக ஒரு ஆடு அறுத்து விருந்தளிக்கலாம்.
ஒவ்வொரு ஆண் குழந்தையும், அகீகாவுக்கு பொறுப்பாக்கப் பட்டுள்ளது. அதன் சார்பில் ஏழாம் நாளில் அறுத்துப் பலியிடவும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)
நூல்: அஹ்மத்

ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடுகள், பெண் குழந்தைக்கு ஒரு ஆடு (அகீகா கொடுக்க வேண்டும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், இப்னுஹிப்பான்

இந்த ஹதீஸ் மூலம் ஆண் குழந்தைக்கு இரண்டும், பெண் குழந்தைக்கு ஒன்றும் கொடுக்க வேண்டும் என்பதை அறியலாம். ஆனால், ஆண் குழந்தைக்கு ஒன்று மட்டும் கொடுக்கலாம் என்பதை பின்வரும் ஹதீஸ் அறிவிக்கிறது.

எங்களுக்கு அறியாமைக் காலத்தில் ஆண் குழந்தை பிறந்தால், ஆட்டை அறுத்து குழந்தையின் தலைமுடியை நீக்கி ஆட்டின் இரத்தத்தை தலையில் தடவுவோம். இஸ்லாத்தை ஏற்றபிறகு ஒரு ஆட்டை அறுப்போம். குழந்தையின் தலைமயிரை நீக்கி தலையில் குங்குமப்பூவை பூசுவோம்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்கள்: அஹ்மத், நஸயீ

எனவே ஆண் குழந்தைக்கு ஒன்றும், பெண் குழந்தைக்கு ஒன்றும் கொடுக்கலாம் என்பதை அறியலாம். ஆனால் ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடுகள் கொடுப்பதே சிறந்ததாகும்.

அகீகா சம்பந்தமாக இந்த ஹதீஸ்களே போதுமானதாகவுள்ளன. அகீகா சம்பந்தமாக நாம் அறிந்து வைத்துள்ளதையும் நபி (ஸல்) காலத்து நடைமுறையையும் ஒப்பு நோக்க நம்மவர்கள் கடமைப்பட்டுள்ளனர்.

சிலர் தாங்கள் வறுமையில் இருந்தாலும், அகீகா கொடுக்க வேண்டும் என நினைத்து கடனையாவது வாங்கி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். மேற்கூறிய ஹதீஸ்களும், இது அவசியம் கொடுக்க வேண்டும் என்பது போன்றே அறிவிக்கிறது. ஆனால் பின்வரும் ஹதீஸ் அகீகா கட்டாயமானதல்ல, விரும்பினால் செய்யலாம் என்பதை அறிவிக்கிறது.

தன் குழந்தை சார்பில் ஒருவர் (அகீகா கொடுக்க) அறுத்துப் பலியிட விரும்பினால் ஆண் குழந்தைக்கு இரண்டும் பெண் குழந்தைக்கு ஒன்றும் கொடுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஐபு (ரலி)
நூல்கள்: அஹ்மத், நஸயீ

இந்த ஹதீஸில் விரும்பினால் என்ற வார்த்தையே அகீகா கட்டாயமானதல்ல என்பதை உணர்த்துகிறது. இறைவனும் திருமறையில் அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவிற்கும் அதற்கு வழங்காதவற்றில் சிரமத்தை ஏற்படுத்தவில்லை (65:7) என்று கூறுகிறான்.
எனவே நாம் நம்மையே துயரத்தில் ஆக்கிக் கொள்ளாமல் வசதியிருந்தால் அகீகா கொடுக்கலாம்.



அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி

அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா?

அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா?

எல்லாம் வல்ல அல்லாஹ் படைத்த உலகின் முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம்(அலை) முதல் இறுதி நபியான நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய உம்மத்துகளில் கடைசி மனிதனாகப் பிறக்கக்கூடிய அனைத்து உயிர்களையும் அல்லாஹ் கைப்பற்றிவிடுவான் என்பதில் நாஸ்திகர்களைத்தவிர மற்ற எந்த கூட்டாத்தாருக்கோ அல்லது எந்த கொள்கையுடையோருக்கோ எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது என்பது திண்ணம். ஏனென்றால் எந்த ஆத்மாவும் இறை நியதிப்படி மரணத்திலிருந்து தப்பமுடியாது. அனைத்து ஆன்மாவும் மரணத்தை சுகித்தே தீரும். இதில் எந்த ஆத்மாவும் விதிவிலக்கல்ல. ஆனால் இன்றைய மனிதன் தன் உலக இச்சைக்கு அடிமையாகி அற்ப வாழ்வில் மூழ்கி மரணத்தை மறந்தவனாக நிலையில்லா வாழ்வின் விளிம்பில் நின்று இறைக்கட்டளைக்கு மாறாக உலக தேவைகளைப் பூர்த்தி செய்ய பகிரங்க முயற்சி செய்கின்றான்.



மனிதனுடைய இன்றைய வாழ்வின் முழு நோக்கம் காசு, பணங்கள் மட்டும்தான் உலக வாழ்க்கைக்கு முக்கிய அடிப்படை அஸ்திவாரம் என்ற தவறான ஒரு மனக்கணக்கு. இதன் கேட்டை உணராமல் இதற்காக உண்ணாமலும், உறங்காமலும் தினந்தோறும் மனிதனுடைய வாழ்வில் பெரும் போராட்டங்கள் உத்தரவாதமில்லாத தன் உயிரின் இரகசியத்தை எண்ணிப் பார்க்கக்கூட நேரமில்லாத மனித இனம்; படைத்தவன் பறிக்க நாடினால் தடுக்க வழியில்லாத உயிரின் இரகசியம் படைத்தவனுக்கே வெளிச்சம். அவனையும் மறந்து உலக வாழ்வின் ஆடம்பரத்தில் சிக்கி நிராகரிப்பின் பாதையில் தோல்வி நடைபோடும் மனித இனம். இத்தகைய நிராகரிபோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கைதான் கீழ்கண்ட அல்குர்ஆன் வசனங்கள்.

அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்? அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல அவர்கள் (இதை) உணர்வதில்லை.[23:55,56]

இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா? [26:129]

‘‘நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! [4:78]

மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள் ”எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று. இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் [8:50,51]

உடலில் உலவிக் கொண்டிருக்கும் ஆவி அடங்கிப்போனால் எத்தனைப் புகழோடும் வாழ்ந்தவனாகினும், கற்றறிந்த மேதையாகினும், நிபுணனாகினும், கோடிக்கணக்கான செல்வங்களுக்கு அதிபதியாகினும், அல்லது சந்ததிகளை அதிகமாக அடைந்தவனாகினும் அவன் உயிரை மலக்குகள் கைப்பற்றிச் செல்லும்போது அவனது புகழோ, மேதையோ, நிபுணத்துவமோ செல்வங்களோ, சந்ததிகளோ எந்தப்பயனும் அளிக்காது. அவன் உயிரை மீட்டுத்தரவும் முடியாது.

அவனுடைய உடலை மூட வேண்டுமானால் கஃபன் துணி தயாராக இருக்கும். தூக்கிச் செல்ல நாற்சக்கர வண்டியோ அல்லது யாரோ நால்வர் தூக்கிச் சென்று புதைகுழியில் வைக்கத் தயாராய் இருப்பார்கள். உள்ளே வைத்தவுடம் அனைவரும் விலகி விடுவர். அங்கு மலக்குகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல அவன் மட்டுமே தகுதியானவனாக இருப்பான். இறைக்கட்டளைக்கு அடிபணிந்து வாழ்ந்த உண்மை முஸ்லிம் தக்க பதிலைக்கூறி புது மாப்பிள்ளையைப்போல கியாமநாள் வரை நித்திரையில் மூழ்கியிருப்பான். இறைக்கட்டளைகளை நிராகரித்து வாழ்ந்தவனோ பதிலளிக்க முடியாதவனாக கபுரின் அதாபில் (கல்லறை வேதனை) மூழ்கி துன்பத்தை அனுபவிப்பான்.

அதனால்தான் நபி(ஸல்) இரண்டு வஸ்துக்களுக்கு இந்த உம்மத்தார்மீது அதிகமாக பயந்தார்கள். “இச்சைக்கு வழிபடுவதும் நெடுநாள் உயிர்த்திருப்பதிலும் ஆதரவு வைப்பதுமான இந்த இரண்டு குணங்களைப் பற்றி நான் பயப்படுவதுபோல் வேறு எந்த வஸ்துவைப் பற்றியும் உங்கள் மீது நான் அவ்வளவாக பயப்படுவதில்லை” என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் கூற்று உண்மையாக இன்று ஒவ்வொரு மனிதனுடைய இலக்கு எதை நோக்கி செல்கிறது என்று பார்த்தால் இறைவனாலும், இறைத்தூதராலும் அங்கீகரிக்கப்படாத ஹராமான எந்த வழியிலும் இன்று 1000 சம்பாதிப்பவன் நாளை 50000 சம்பாதிக்கத் துடிக்கிறான். இவ்வாறு கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்திலிருக்கும் மனிதன் வரை 2 கோடிக்கு சொந்தக்காரன் அதை 10 கோடியாக்க என்ன வழி? அதற்காக கொடுக்கல் வாங்கலில் துரோகம் செய்வதும், அடுத்தவருக்கு சொந்தமான சொத்தை அல்லது பொதுச் சொத்தை அபகரிப்பதும் அதையும் மிஞ்சி சொத்து சேர்ப்பதில் இடையூராக இருப்பவனைக் கொலை செய்யக்கூட அஞ்சாத உள்ளம். இருண்ட வாழ்க்கையின் இச்சையை நோக்கி செல்லும் மட்டரகமான அறிவு; இறைவன் அளித்ததைக் கொண்டு திருப்தியுறாத உள்ளம்; உலக இச்சையை தெய்வமாக்கிக் கொண்டது. தன்னுடைய அந்திய காலத்தில் தலை ஆடி கால் தடுமாறி சுகம் கெட்டப் பின்பும் மருத்துவரை நாடி உடல் நலம் பேண ஆசை. இதைத்தான் நபி(ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ந்து இந்த ஹதீஸை அறிவித்தார்கள்.

மனிதனுக்கு வயது ஆகஆக அவனில் இரு செயல்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஒன்று பொருள் மீது பேராசையும், இரண்டு வயதின்மீது பேராசையும்தான் அவை. அனஸ்(ரழி) புகாரி, முஸ்லிம், திர்மிதி

இன்றைய முஸ்லிம்கள் உலக வாழ்வில் மூழ்கிப்போய் இஸ்லாத்தின் கடமைகளை முழுமையாக பேணாமல் கலிமாவை உறுதிப்பாடில்லாமல் வாயளவில் ஒப்புக்கொண்டு தொழுகையை சரிவர பேணாமல், வாரத்தில் ஒரு நாள் ஜும்ஆ தொழுகை தொழுதால் போதும் என்றும், நோன்பை பேனாமலும், ஜகாத்தை முறையாக கொடுக்காமலும், ஹஜ்ஜுடைய காலங்களில் வசதி வாய்ப்பையும் பெற்றும் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாதவைகளை மார்க்கமாக எண்ணி ஊரறிய செய்து வழி அறியாதவன் திசைமாறி செல்வதைப்போல் உலக வாழ்வில் மூழ்கி குஃப்ரைத் தேடிக்கொள்கின்றனர்.

அல்லாஹ் மனிதனுடைய உண்ணும் உணவிற்கும், உடுத்தும் உடைகளுக்கும், வசிக்கும் வீட்டைப் பற்றியும் மட்டும் உங்களிடம் கேள்வி கேட்கமாட்டான். ஹராமான வழியில் ஈட்டிய பிற சொத்துகளுக்கு உங்கள் மீது விசாரணை செய்வான். அந்த நேரத்தில் கைசேதப்பட்ட மக்களில் நாமும் ஒருவராகி விட வேண்டாம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

உதாரணமாக நம்ரூத் என்பவன் மிகப்பெரிய அளவில் தேசங்களை ஆண்டான். அவன் அல்லாஹ்விற்கு எதிராக பல சவால்களை விட்டான். மேலும் சுவனபதியின் வருணனைகளை கேள்விப்பட்டு நான் ஒரு சுவர்க்கத்தை அமைத்துக் காட்டுகிறேன் என்று நிறைய செல்வங்களை திரட்டி சொர்க்கத்தை போல ஒன்றை அமைத்தான். ஆனால் அதில் அவன் பிரவேசிக்கும்போது அவனுடைய உயிரை மலக்குகள் வந்து கைப்பற்றி சென்றனர். அவனுடைய ஆடம்பர வாழ்க்கையின் ஆணிவேர் பறிக்கப்பட்டு மாண்டு போனான்.

அவ்வாறே மூஸா(அலை) அவர்களுடைய சமூகத்தில் காரூன் என்பவன் வாழ்ந்தான். அவன் அந்த சமூகத்தாரின் மீது அட்டூழியம் செய்தான். அல்லாஹ் அவனுக்கு ஏராளமான பொக்கிஷங்கள் அளித்ததின் காரணமாக அச்செல்வங்கள் அவன் கண்ணை மறைத்துவிட்டன. அவனுடைய கஜானா சாவியை சிரமத்துடன் சுமந்து செல்லும் அளவில் இருந்தது(28:76) அதனால் அவன் கர்வத்துடம் தனது சமூகத்தாரிடம் நடந்து கொண்டான். இன்னும் இவை அனைத்தும் என்னுடைய அறிவின் வல்லமையால் நான் சம்பாத்தித்தவை என்று கூறி கர்வமடித்தான்.

அவனுடைய சமூகத்தார் இவனை மிகவும் பெரும் அதிஷ்டசாலி என்றும் கூறினர். ஆனால் அல்லாஹ்வின் வேதனையில் அகப்பட்டு அவனும், அவனுடைய செல்வங்களும், வீடுகளும் பாதாளத்தில் சொருகப்பட்டு மாண்டு போனான். அவனைப் பெரும் அதிஷ்டசாலி என்று கூறிய அவனுடைய சமூகத்தார் அவனுடைய பேரழிவை கண்டு அல்லாஹ்வின் கிருபை இல்லாதிருந்தால் நாமும் இவ்வாறே அழிந்திருப்போம் என்று கூறினார்கள்.

இன்று சில பகுதிகளில் தொழுகையப் பேணக்கூடிய முஸ்லிம்களில் சிலர் மறைமுகமாக வட்டித்தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்துகின்றனர். ஆனால் அல்லாஹ் அதை பார்த்துக் கொண்டிருக்கின்றான். வழிதவறி வந்த செல்வங்களை வழிதவறியே வெளியேற்றிவிட அல்லாஹ் வல்லமை படைத்தவனாக இருக்கின்றான். தேடியவனே அனுபவிக்க முடியாமல் செலவத்திரட்டுகள் அழிந்து போவதை நாம் கண்ணால் காணவில்லையா? அல்லது தகப்பன் தேடிய செல்வங்கள் பிள்ளைகளால் அழிவதை நாம் காணவில்லையா?
நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெªடிளியினால் ஆக்கியிருப்போம்.
அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்).

தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக்கொடுத்திருப்போம்) ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்ககையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வெறில்லை ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம். [43:33-35]

அதனால்தான் உலகவாழ்வின் மேல் மனிதன் கொண்ட உவப்பைத் தடுக்க நபி(ஸல்) அவர்கள் இப்னு உமர்(ரழி) அவர்களிடம் ஒரு அறிவுரை கூறினார்கள். “இப்னு உமரே நீர் காலையில் எழுந்திருக்கும்போது உன் மனதில் நான் மாலை வரை உயிரோடிருப்பேன் என்று எண்ணாதே. மாலையானால் நாம் காலையில் உயிரோடிருப்பேன் என்று எண்ணாதே. உயிர்வாழ்தில் மரணத்துக்கு வேண்டிய ஆவணங்களை தயார் செய்துகொள். நாளை கியாமத்தில் அல்லாஹ்விடன் உன் நிலை எப்படியிருக்குமோ உனக்குத் தெரியாது” என்று அறிவுரை கூறினார்கள்.

இந்த அறிவுரையை ம்னதில் கொண்டு ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிய வழியில் பொருளீட்டி செல்வநிலை அடைந்து உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அனாதை மக்களுக்கும் உதவி புரிந்து அழிவில்லா நிலையான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக ஆக்கிக்கொள்ளவும் நம்ரூது, காரூனின் நிலையை விட்டும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை காத்து நல்லருள் புரிவானாக ஆமீன்.

அபூ அப்துர்ரஹ்மான்

Friday, November 11, 2011

பொது நிகழ்சிகள்

x

 

©2013, copyright Dharulhuda

பெண்கள் நிகழ்சிகள்

©2013, copyright Dharulhuda

சுபஹ் பயான் ( நற்சிந்தனைகள் )







©2013, copyright Dharulhuda

ரமழான் மாத லுஹர் பயான் தொடர் உரை2012

2


©2013, copyright Dharulhuda

ஏனைய உரைகள்








 ©2013, copyright Dharulhuda

SaudiSunnahTv


 

قناة السنة النبوية

 

©2012, copyright Dharulhuda

Prayer Times



Today is

Sri Lanka Prayer Times
Time
0:00 am
0:00 am
0:00 pm
0:00 pm
0:00 pm
0:00 pm
Prayer
Fajr
Sun rise
Luhar
Asar
Magrib
Ishah

Tamil Typing Tool


இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக்கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):  

©2013, copyright Dharulhuda

வெள்ளி மேடை





©2013, copyright Dharulhuda

sponsers

©2012, copyright Dharulhuda

Bridges of Islam Forum

©2012, copyright Dharulhuda

Board Of Trusties

©2012, copyright Dharulhuda

Baithul Zakath

2011 Baithul Zakaath

."The likeness of those who spend their wealth in Allah's way is as the likeness of a grain which grows seven ears, in every ear a hundred grains. Allah gives increase manifold to whom He will. And Allah is All-Sufficient for His creatures' needs, All-Knower." [Soorah al-Baqarah, 261] 




Purify your wealth
Send your Zakath in favor of

    Dharul huda Trust
      A/c # 1090 1000 4126
Hatton National Bank- Aluthgama

Zakaath Committee 
  •   
  •  
  •  
  •  
  •  
Tel: 0094345686001

 

©2012, copyright Dharulhuda

Radio test


 Listen with Winamp/iTunes

Listen with Windows Media Player
  
               
     
     
     
   Stream status      



©2012, copyright Dharulhuda

Dharulhuda TV













Tharawih Channel


Share



Iqraa TV Live

Islam Channel Live

Hudha TV International

Madhina Live TV


Makkah Live

>makka live


Saudi Chennel One

hh


©2012, copyright Dharulhuda

Quran Translation Word to Word


Quran Translation

With thabsir

... ©2012, copyright Dharulhuda

Eqtsa TV

jj



©2012, copyright Dharulhuda

සිංහල පොත්

සිංහල පොත්

ඉස්ලාමීය පොත් සිංහලෙන්:

(Right click and ”Save Target as” to Save the book)

මුස්ලිම් ස්ත‍්‍රීයට ග‍්‍රන්ථයක්

SLBC Muslim Sevai


Click here to listen live

if player not start to stream just click this link below
http://windowsupdate.microsoft.com/
To resolve this problem, obtain the latest service pack for Windows


©2013, copyright Dharulhuda

ரமழான் மாத லுஹர் பயான் தொடர் உரை 2013








©2013, copyright Dharulhuda

Thursday, November 10, 2011

முரீது வியாபாரிகள்


முரீது வியாபாரிகள்

பொய்யான ஆன்மீகத்தின் பெயரால் போலி ஷெய்குதார்கள் சிலர், ஏதுமறியா பாமர மக்களை வஞ்சித்து ஏமாற்றி வழிகெடுத்து வருகின்றனர். ஒவ்வொரு ஷெய்கும் தமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கித் தனித்தனிப் பாதையை வகுத்துக் கொண்டு, பாமர மக்களை மூளைச் சலவை செய்து முட்டாள்களாக்கி வைத்திருக்கின்றனர். ‘ஆன்மீகப் பாட்டை’ என்பார்கள், ‘ஆத்மீகப் பக்குவம்’ என்பார்கள், ‘அந்தரங்கக் கல்வி’ என்பார்கள், ‘ரகசிய ஞானம்’ என்று ரீல் விடுவார்கள். இறுதியில் இதெல்லாம் உங்களுக்குப் புரியாது என்பார்கள். எவ்வளவு தான் தொழுதாலும், இறை வணக்கங்கள் புரிந்தாலும், ஏற்கனவே ஆன்மா பக்குவப்பட்ட(?) ஒரு ஆன்மீகக் குருவிடம் சென்று முரீது என்னும் தீட்சை வாங்கினால் தான் மோட்சம் கிடைக்குமாம்.

இஸ்லாத்தில் இல்லாத இந்த கிரேக்க அத்வைத தத்துவத்தை இவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக உருவாக்கி ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்றுகிறார்கள். இவர்களில் பல்வேறு பிரிவினர்கள் உண்டு. சில ஷெய்குகள் தம்மை அண்டி வந்து நெருக்கமானவர்களுக்கு, தனித்தனியாக சில திக்ருகளை சொல்லிக் கொடுப்பார்கள். ஒருவருக்கு சொல்லிக் கொடுத்ததை பிறருக்கு சொல்லக்கூடாது என்பார்கள். இல்லற வாழ்க்கை முதற் கொண்டு தெள்ளத் தெளிவாக பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும் விதத்தில் சொல்லப்பட்ட மார்க்கத்தில் ‘ரகசிய ஞானம்’ என்று ஏமாற்றுகிறார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மார்க்க விஷயத்தில் யாருக்கும் எதையும் ரகசியமாக சொல்லிக் கொடுக்க வில்லை. இறுதி ஹஜ்ஜின் போது அரபாத் பெருவெளியில் கூடி நின்ற ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஸஹாபாக்களின் முன்னர் ‘நான் எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லி விட்டேனா?’ என்று கேட்கிறார்கள். அதற்கு அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் ‘ஆம்! அல்லாஹ்வின் தூதரே’ எனச் சாட்சி பகர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இறைவா! நீயே சாட்சி!’ என்று அல்லாஹ்வை சாட்சியாக்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) ஆதாரம்: புகாரி)

இவ்வளவு தெளிவாக, தாம் எதையும் மறைக்கவில்லை என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிரகடனப் படுத்திய பிறகு – போலி ஷெய்குமார்கள் ரகசிய ஞானம் என்று ரீல் விடுகிறார்கள். ஆன்மா பக்குவப்பட்டதாகச் சொல்லப் படுபவர்கள் ஆடம்பரப் பங்களாக்களில் வசிக்கின்றனர். உல்லாசக் கார்களில் பவனி வருகின்றனர். ஊருக்கு ஊர் வசூல் வேட்டைக்குப் போகும்போது கூடப் பணக்கார முரீத்களின் பங்களாக்களில் தான் தங்குவர். ஆன்மா பக்குவப்பட்ட(?) இந்த அடலேறுகள் ஏழைகளின் குடிசையில் தங்கலாமே! எந்த உழைப்பும் இல்லாமல் பிறரிடம் யாசகம் வாங்கித் தின்றே வயிறு வளர்ப்பவர்களுக்கு ஆன்மா பக்குவப்பட்டு விட்டதாம். ஏழ்மையில் வாழ்ந்துக் கொண்டு தம் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, இந்த ஷெய்குமார்களுக்கு தட்சனையும் கொடுத்துக் கொண்டு, இறை வணக்கங்கள் புரிந்து வாழ்பவர்களுக்கு இன்னும் ஆன்மா பக்குவப்படவில்லையாம். இஸ்லாத்திற்கு விரோதமான குர்ஆனிலும் ஹதீஸிலும் காணப்படாத- புதுப்புது தத்துவங்களைக் கண்டுபிடித்து உளரிக் கொண்டிருப்பவர்கள், மறுமையை மறந்து விட்டார்கள். மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிய இந்த மாபாதகர்கள் நிரந்தர நரகத்தில் வீழ்ந்துக் கிடப்பார்கள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

இந்த போலி ஷெய்குமார்கள் சொன்னதையெல்லாம் வேத வாக்காகக் கருதியவர்கள், திக்ரு என்னும் பெயரில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்லாததையெல்லாம் மந்திரங்களாக மொழிந்துக் கொண்டிருந்தவர்கள், இறைவனுக்கு மட்டுமே செய்யவேண்டிய ஸஜ்தாவை- தம்மைப் போன்ற சக மனிதர்களுக்குச் செய்து- சிரம் தாழ்த்தி வணங்கியவர்கள், அனைவரும் அல்லாஹ்வை அஞ்சவேண்டும். அறியாமையால் பாமர மக்கள் காலில் விழுந்த போது அதனைத் தடுக்காமல் அகம்பாவத்துடன் ரசித்து வேடிக்கை பார்த்தவர்களே!, நாளை மறுமையில், படைத்த இறைவனுக்கு முன்னர் நிறுத்தப் படுவீர்கள் என்பதை எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? தப்பிக்க முடியாத அந்த நாளை மறந்து விடாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்.

தமிழ்முஸ்லிம்.காம்